Author Topic: திருக்குறளை கண்டுபிடி  (Read 139458 times)

Offline Lakshya

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #495 on: March 10, 2025, 05:51:46 PM »
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்

புயல் என்று அழிக்கும் வெள்ளபெருக்கு தனது தன்மையை இழந்தால் உழவர்கள் உழுவதை நிறுத்துவார்கள்.


அடுத்த குறள்:-
_____வண்பயன் _____ இசையிலா
யாக்கை ______ நிலம்

Offline Jithika

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #496 on: March 11, 2025, 03:52:36 AM »
வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்

புகழ் இல்லாதவனுடைய உடம்பைத் தாங்கிக் கொண்டிருந்த பூமியுங் கூட, வசையில்லாத வளமான பயனைத் தருவதில் குறைபாடு அடையும் 

..........தோன்றும்......... நல்லளி
வாடினும் ........ .........

Offline Lakshya

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #497 on: March 11, 2025, 08:52:29 AM »
ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி
வாடினும் பாடு பெறும். 

அவரோடு ஊடுதலாலே உண்டாகின்ற சிறு துன்பம், அந்தப் பொழுதிலே அவர் செய்யும் நல்ல அன்பை வாடுவதற்குச் செய்தாலும், பின்னர்ப் பெருமை பெறும்.


அடுத்த குறள்:-
 _______ பெருங்கடல் ______ நீந்தார்
________ அடிசேரா தார்

Offline Jithika

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #498 on: March 11, 2025, 11:07:42 AM »
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது

ஊடுக ........ ஒளியிழை.......
நீடுக ........ இரா

Offline KS Saravanan

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #499 on: March 11, 2025, 11:32:13 AM »
ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப
நீடுக மன்னோ இரா


ஒளிமிகும் அணிகளை அணிந்த இவள் இன்னும் என்னோடு ஊடட்டும், அப்போது அதிக நேரம் இருக்கும்படி நான் வேண்டிக்கொள்ள, இந்த இரவு விடியாது நீளட்டும்.

அடுத்த குறள்:

அன்பிலார்___________ தமக்குரியர் ___________
என்பும் __________ பிறர்க்கு


Offline Lakshya

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #500 on: March 11, 2025, 04:30:58 PM »
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு

அன்பு இல்லாதவர் எல்லாப்பொருள்களையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வார்,அன்பு உடையவர் தம் உடமையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர்.


அடுத்த குறள்:-
_______கெட்டார்க்குச் ________றாங்கே
_________ எல்லாம் _____

Offline Jithika

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #501 on: March 11, 2025, 05:36:43 PM »
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.   

காலத்தால் பெய்யாது உலகில் வாழும் உயிர்களைக் கெடுப்பதும் மழை; அப்படி கெட்டவற்றைப் பெய்து வாழச் செய்வதும் மழையே ஆகும்.


பெறாஅமை .......பெறினபிரி ......
அறாஅ ........ நெஞ்சு

Offline RajKumar

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #502 on: March 11, 2025, 07:09:22 PM »
பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும்
அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு

அவரைப் பெறாத போதும் அஞ்சும்; பெற்ற போதும் பிரிவாரோ என்று அஞ்சும்; இவ்வாறு என் நெஞ்சம் நீங்காத துயரையே உடையதாகின்றது




அடுத்த குறள்
🪷   எண்-----------  ஏனை ------------ இவ்------------
---------ணென்ப ----------- உயிர்க்கு..   🪷

Offline Lakshya

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #503 on: March 11, 2025, 09:42:53 PM »
எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு

எண்ணும் எழுத்தும் எனப்படும் அறிவுக் கண்களைப் பெற்றவர்களே, உயிர் வாழ்வோர் எனக் கருதப்படுவார்கள்.


______ என்ப _____ மருங்கோடித்
தீவினை ______ ______

Offline Jithika

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #504 on: March 12, 2025, 07:43:39 AM »
அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்.

ஒருவன் தவறான நெறியில் சென்று தீயசெயல் செய்யாதிருப்பானானால் அவன் கேடு இல்லாதவன் என்று அறியலாம்.

............துப்பாய.........துப்பார்க்குத்
துப்பாய...........

Offline Vethanisha

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #505 on: March 12, 2025, 07:54:52 AM »
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை.

உண்பவர்க்குத் தக்க உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, பருகுவோர்க்குத் தானும் ஓர் உணவாக இருப்பது மழையாகும்

அடுத்து
பொறிவாயில் ____________ பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் _________   _______

Offline Jithika

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #506 on: March 12, 2025, 01:37:11 PM »
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.   

ஐம்பொறி வழியாக எழுகின்ற ஆசைகளை அவித்தவனின் பொய்ம்மை இல்லாத ஒழுக்க நெறியில் நின்றவரே நிலையான வாழ்வினர் ஆவர்

விசும்பின்.......அல்லால்மற் .......
பசும்புல் ........பரிது

Offline RajKumar

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #507 on: March 12, 2025, 06:59:02 PM »
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே பசும்புல் தலைகாண்பு அரிது


வானத்திலிருந்து மழை பெய்யாவிடில், அவ்விடத்து பசும் புல்லின் தலையையும் காண்பது அரிது.


அடுத்த குறள்
🪷   [நெடு-------- -----நீர்மை ----------- தடிந்தெழிலி
--------- நல்கா ------ விடின்.   🪷


Offline Jithika

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #508 on: March 13, 2025, 05:35:30 PM »
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.

மேகமானது கடல் நீரை முகந்து சென்று மீண்டும், மழையாகப் பெய்யாவிட்டால் அப்பெரிய கடலும் தன் வளமையில் குறைந்து போகும் 

....... பூசனை ........வானம்
வறக்குமேல் .........ஈண்டு

Offline Vethanisha

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #509 on: March 15, 2025, 04:54:26 PM »
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.



 மு.வரதராசன் விளக்கம்:
மழை பெய்யாமல் போகுமானால் இவ்வுலகத்தில் வானோர்க்காக நடைபெறும் திருவிழாவும் நடைபெறாது; நாள் வழிபாடும் நடைபெறாது.



கண்ணின்று _________சொல்லினும் _________
முன்னின்று ___________ சொல்