Author Topic: திருக்குறளை கண்டுபிடி  (Read 139321 times)

Offline Vethanisha

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #480 on: February 28, 2025, 03:59:49 PM »
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை


எண் வகைக் குணங்களில் உருவான இறைவன் திருவடிகளை வணங்காத தலை, கேளாக் காதும் காணாக் கண்ணும் போலப் பயனில்லாதது .
— புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)



என்பி லதனை __________ காயுமே
அன்பி ______ ______&

Offline RajKumar

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #481 on: March 02, 2025, 11:39:16 AM »
என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்

எலும்பு இல்லாத உடம்போடு வாழும் புழுவை வெயில் காய்ந்து வருத்துவது போல் அன்பு இல்லாத உயிரை அறம் வருத்தும்.




அடுத்த குறள்
🪷 இனிய -----------இன_____ கூறல்
-------இருப்ப ---------- தற்று 🪷

Offline Lakshya

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #482 on: March 02, 2025, 12:21:20 PM »
“இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று”


இனிமையான சொற்களை விட்டுவிட்டு கடுமையாகப் பேசுவது தீயது...

அடுத்த குறள்:

எப்பொருள் ________கேட்பினும் அப்பொருள்
______ காண்ப _____  

Offline RajKumar

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #483 on: March 02, 2025, 12:52:19 PM »
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு”

இந்தக் குறளின் விளக்கம்:
எந்தக் கருத்தை எவர் சொன்னாலும், அக்கருத்தின் உண்மையைக் காண்பது அறிவு.
பொருளைப் பற்றியும், எவரெவரிடமிருந்து கேட்பதானாலும், அப் பொருளினது மெய்யான தன்மைகளைக் காண்பதுதான் அறிவு.
அப்பொருளின் உண்மையான பொருளைக் காணவல்லது அறிவு.


அடுத்த குறள்
 🪷 கேட்பினுங்  ---------தகையவே
------யால் தோட்கப் --------படாத

Offline Lakshya

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #484 on: March 03, 2025, 06:05:34 AM »
கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி.

பொருள்:
இயற்கையாகவே கேட்கக்கூடிய காதுகளாக இருந்தாலும் அவை நல்லோர் உரைகளைக் கேட்க மறுத்தால் செவிட்டுக் காதுகள் என்றே கூறப்படும்... 


அடுத்த குறள்:
நிலவரை _______ ஆற்றின் ______
போற்றாது ________உலகு
« Last Edit: March 03, 2025, 06:07:14 AM by Lakshya »

Offline Jithika

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #485 on: March 04, 2025, 08:43:18 AM »
நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு. 


உலகத்தின் எல்லைவரை பரவி நிற்கும் புகழுக்குரிய செயலை ஒருவன் செய்தால், வானுலகமும் தேவரைப் போற்றாது; அப் புகழாளனையே விரும்பிப் போற்றும் 

NEXT 🌹........... ஊறுஓசை .......... ஐந்தின்
வகைதெரிவான் ....... உலகு🌹

Offline Lakshya

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #486 on: March 04, 2025, 02:20:37 PM »
சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு"


ஐம்புலன்களின் இயல்பை உணர்ந்து அவற்றை அடக்கியாளும் திறன் கொண்டவனையே உலகம் போற்றும்

அடுத்த குறள்:
______ நஞ்சுண் _______ நயத்தக்க
நாகரிகம் _______  ____.
« Last Edit: March 04, 2025, 02:23:06 PM by Lakshya »

Offline Vethanisha

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #487 on: March 04, 2025, 05:48:54 PM »
பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்


மு.கருணாநிதி
கருணை உள்ளமும் பண்பாடும் உள்ளவர்கள், தம்முடன் பழகியவர்கள் நஞ்சு கொடுத்தாலும் அதை அருந்திக் களிப்படைவார்கள்


மனத்துக்கண் ________  ஆதல் ________
ஆகுல நீர ____

Offline Jithika

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #488 on: March 04, 2025, 10:34:59 PM »

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற

தன் மனத்திடத்துக் குற்றம் இல்லாதவனாகுதல் என்னும் அவ்வளவே அறம் எனப்படும்; பிற ஆரவாரத் தன்மை கொண்டவை

NEXT 🌹........ அவாவெகுளி.......... நான்கும்
இழுக்கா........ அறம்🌹

Offline Lakshya

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #489 on: March 05, 2025, 01:10:08 PM »
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம்.

பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைக் கடித்து ஒழுகுவதே அறமாகும்.


அடுத்த குறள்:-
______ ருரைப்பவை யெல்லாம் _______
றீவார்மேல் _____ புகழ்.
 


Offline RajKumar

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #490 on: March 05, 2025, 05:42:09 PM »
உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று
ஈவார்மேல் நிற்கும் புகழ்


புகழ்ந்து சொல்கின்றவர் சொல்பவை எல்லாம் வறுமையால் இரப்பவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவுகின்றவரின் மேல் நிற்கின்ற புகழேயாகும்




அடுத்த குறள் 
🪷 ------- அறவறிந்து ----    -----பொருள்
போற்றி -----------நெறி 🪷

Offline Jithika

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #491 on: March 09, 2025, 09:51:30 PM »
ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கு நெறி.

தன்னிடமுள்ள பொருளின் அளவைத் தெரிந்து, அதற்குத் தகுந்த அளவே கொடுத்து உதவுக; அது பொருளைப் போற்றி வழங்குவதற்குரிய நெறியா

NEXT 🌹நீரின்....... துலகெனின் ..........
வானின் ........ தொழுக்கு

Offline Lakshya

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #492 on: March 10, 2025, 07:40:44 AM »
நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும் வானின் றமையா தொழுக்கு

எத்தனை பெரியவரானாலும் நீர் இல்லாமல் வாழமுடியாது, அந்த நீரோ மழை இல்லாமல் கிடைக்காது


அடுத்து:-
________ இல்வாழ்வ _______ விருந்தோம்பி
________ செய்தற் பொருட்டு.

Offline Jithika

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #493 on: March 10, 2025, 08:15:34 AM »
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு

இவ்வுலகில் இருந்து, பொருளைப் பேணி, இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினரைப் போற்றி உதவுதலின் பொருட்டே ஆகும் 


[🌹.......பொய்ப்பின் ....... வியனுலகத்து
உள்நின்...... பசி🌹

Offline RajKumar

Re: திருக்குறளை கண்டுபிடி
« Reply #494 on: March 10, 2025, 05:22:49 PM »
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து உள்நின்று உடற்றும் பசி


மழை பெய்யாமல் பொய்த்துப் போனால், கடல் சூழ்ந்த அகன்ற உலகிலும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வாட்டும்

அடுத்த குறள்
🪷  ஏரின் -------- உழவர் ------- வாரி
வள-------கு கால். 🪷