Author Topic: ~ குட்டிக்கதை: ~  (Read 20246 times)

Offline MysteRy

Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #45 on: January 30, 2013, 03:08:34 PM »



அவன் மனைவி ஒரு பேரழகி.
ஊரே அவனைப் பொறாமையாகப் பார்த்தது.
அவனுக்கு ஊர் மீதும் நம்பிக்கையில்லை, மனைவி மீதும் நம்பிக்கை இல்லை.
ஒரு சமயம் அவன் படைக்குத் தலைமை ஏற்று போருக்குப் போக வேண்டியிருந்தது. மனைவியைத் தனியாக விட்டுப் போக வேண்டியிருப்பது உறுத்தலாக இருந்தது. மனைவியின் இடையை இரும்புத் தகடுகளால் மூடிப் பூட்டினான்.

சாவியை உயிர் நண்பனிடம் கொடுத்தான்.

“நண்பா, இந்த உலகத்தில் உன்னைத் தவிர யார் மீதும் எனக்கு நம்பிக்கை இல்லை. என் மனைவி மேல் கூட நம்பிக்கை இல்லை. இந்த சாவியை வைத்துக் கொள். ஒருவேளை போரில் நான் இறக்க நேரிட்டால் இவளது அழகும் இளமையும் வீணாகக் கூடாது என்பதால்தான் சாவியை உன்னிடம் ஒப்படைக்கிறேன்.” என்று நாத்தழுதழுக்க சாவியை ஒப்படைத்தான்.
நண்பனும் கண்களில் நீர் முட்ட விடை கொடுத்தான்.

அவன் குதிரையில் ஏறிப் புறப்பட்டான்.

வீதியின் கோடியை அடைவதற்குள், பின்னால் யாரோ அழைக்கிற சப்தமும், ஓடி வருகிற சப்தமும் வந்தது.
திரும்பினான்.

மூச்சிரைக்க ஓடி வந்தது அவன் நண்பன்.
“என்ன நண்பா?”
“தப்பான சாவியைக் கொடுத்து விட்டாய்”

Offline MysteRy

Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #46 on: January 30, 2013, 03:10:06 PM »
முயலும் ஆமையும்




முயல் ஒரு நாள் ஆமையைச் சீண்டிக்கொண்டிருந்தது. தன்னிடமுள்ள ஐ பேட் பற்றியும் விலையுயர்ந்த கணினி பற்றியும் பீத்திக்கொண்டிருந்தது. தன்னால் தன்னிருப்பிடத்திலிருந்தே எதையும் சாதிக்க முடியும் என்று அதனுடைய பெருமைகளை எல்லோருக்கும் பறை சாற்றிக்கொண்டிருந்தது.

ஒரு நாள் முயலும் ஆமையும் ஊர் செல்லவேண்டிய காரணத்தால் ஆமை டிக்கெட் பதிவு செய்ய கிளம்பியது. வழக்கம் போல முயல் "நீ திரும்பி வருதற்குள் நான் ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்து விட்டு வேறு வேலை கவனிக்கப் போய் விடுவேன்" என்று கிண்டலடித்தது.

ஆமை தனது நேரத்தை நொந்து கொண்டு தனது சைக்கிளை எடுத்துக்கொண்டு மிதிமிதியென்று ரயில் நிலையத்திற்கு சென்று வரிசையில் நின்று சில்லரை கொடுதது டிக்கெட் வாங்கிக் கொண்டு திரும்பியது. முயல் என்ன செய்கிறது என்று பார்க்க அதனுடைய அறைக்குள் நுழைந்தது. முயல் அதனுடைய ஐடியையும் பாஸ்வார்ட்டையும் கொடுத்து விடடு வெயிட் பண்ணி பண்ணித்துாங்கிப் போயிருந்தது. கணினியில் பச்சை வட்டம் சுழன்றுகொண்டேயிருந்தது.

Offline MysteRy

Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #47 on: January 30, 2013, 03:12:21 PM »
''பெரியவர்களின் உலகத்துக்கும் குழந்தைகளின் உலகத்துக்கும் என்ன வித்தியாசம்?''




''சீனக் கதை இது. ஐந்து வயதுச் சிறுவன் ஒருநாள் தன் அம்மாவிடம் கேட்டான், 'அம்மா, வாழ்க்கையின் ரகசியம் என்ன?’ அம்மா சொன்னாள், 'எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பதுதான் கண்ணா!’

அன்று அவன் பள்ளிக்குச் சென்றபோது, ஆசிரியை 'நீங்கள் வளர்ந்து என்ன ஆகப்போகிறீர்கள்?’ என்று கேட்டார். ஒரு பையன் டாக்டர் என்றான். இன்னொரு பையன் இன்ஜினீயர் என்றான். விதவிதமான பதில்களில் விதவிதமான விருப்பங்கள் தொனித்தன.

ஆனால், அந்தச் சிறுவன் மட்டும் 'நான் மகிழ்ச்சியாக இருக்கப்போகிறேன்’ என்றான்.

ஆசிரியை கோபமாக, 'உனக்குக் கேள்வி புரியவில்லை’ என்றார். சிறுவனோ, 'டீச்சர், உங்களுக்கு வாழ்க்கை புரியவில்லை’ என்றான்!''

Offline MysteRy

Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #48 on: February 02, 2013, 01:19:57 PM »

ராமசாமிக்கு தீடிரென தலைவலி..

அவரது வீட்டருகே டாக்டர் சேகர் எனபுதியபோர்டு பார்த்திருந்தார்..

அவரிடம் சிகிச்சை பெறலாம் என்று அங்கு சென்று அவர் முன் அமர்ந்தார்.

''டாக்டர் எனக்கு காலையிலிருந்து..''என்று ஆரம்பித்தவுடன் டாக்டர் வழி மறைத்தார்..

''உங்கள் பெயர் என்ன ''என்றார்..டாக்டர்

''ராமசாமி'' என்றார்..

''உடனே ராமசாமி க்கு எல்லாம் வைத்தியம் செய்வதில்லை ''என்றார்..டாக்டர்

''நீங்கள் ஒரு டாக்டர்..யார்வந்தாலும் வைத்தியம் செய்யவும்.இது உங்கள் கடமை ''என்றார் ராமசாமி

''உங்களுக்கு வைத்தியம் செய்யவே முடியாது..''எனகிறார் டாக்டர்

ராமசாமிக்கு கோபம் தலைக்கு எறியது..

''இந்த பிரசினையை இந்தியன் மெடிக்கல் அசோசியசன் எடுத்து செல்லப்போகிறேன்..நான சும்மா விடப்போவதில்லை..உங்கள் முகவரியைசொல்லுங்கள் '''என்றார் ராமசாமி..

அவரும் அமைதியாக ''டாக்டர் சேகர்..கால்நடைமருத்துவர்..நம்பர் 12..பத்தாவது கிராஸ்..சிவசாமி நகர் ''என்றார்...

இப்படியும் சத்தம் போட்டு மாட்டி கொள்கிறவர்களும் இருக்கிறார்க்ள.

Offline MysteRy

Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #49 on: February 02, 2013, 01:21:11 PM »

அப்பாவும், மகளும் உணவு மேஜையில் உட்கார்ந்திருந்தார்கள்.

அம்மா சுட்டு வந்த தோசை தீய்ந்திருந்தது.

“நல்ல முறுகலா இருக்கே” என்று ரசித்துச் சாப்பிட்டார் அப்பா.

அடுத்த தோசை சுட அம்மா அடுக்களைக்கு போனதும், மகள் கேட்டாள்,

“அப்பா தோசை தீய்ந்து போயிருக்கிறது, முறுகல் என்கிறீர்களே?”.

அப்பா சொன்னார், “உன் அம்மாவுக்கு இன்று களைப்பாக இருந்திருக்கும்,


கவனக்குறைவால் நிகழ்ந்திருக்கும்.

ஒரு தோசை தீய்ந்து போனதை சுட்டிக்காட்டி அவள் மனம் தீய்ந்து போவதை நான் விரும்பவில்லை”.

அடுத்த தோசை நிஜமாகவே முறுகலாக வந்தது.

குறைகளை நிறைகளாய்க் கொள்ளும்போது குறைகள் தாமாகவே மறைகின்றன.

Offline MysteRy

Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #50 on: February 02, 2013, 01:22:31 PM »

ராமசாமிக்கு தீடிரென தலைவலி..

அவரது வீட்டருகே டாக்டர் சேகர் எனபுதியபோர்டு பார்த்திருந்தார்..

அவரிடம் சிகிச்சை பெறலாம் என்று அங்கு சென்று அவர் முன் அமர்ந்தார்.

''டாக்டர் எனக்கு காலையிலிருந்து..''என்று ஆரம்பித்தவுடன் டாக்டர் வழி மறைத்தார்..

''உங்கள் பெயர் என்ன ''என்றார்..டாக்டர்

''ராமசாமி'' என்றார்..

''உடனே ராமசாமி க்கு எல்லாம் வைத்தியம் செய்வதில்லை ''என்றார்..டாக்டர்

''நீங்கள் ஒரு டாக்டர்..யார்வந்தாலும் வைத்தியம் செய்யவும்.இது உங்கள் கடமை ''என்றார் ராமசாமி

''உங்களுக்கு வைத்தியம் செய்யவே முடியாது..''எனகிறார் டாக்டர்

ராமசாமிக்கு கோபம் தலைக்கு எறியது..

''இந்த பிரசினையை இந்தியன் மெடிக்கல் அசோசியசன் எடுத்து செல்லப்போகிறேன்..நான சும்மா விடப்போவதில்லை..உங்கள் முகவரியைசொல்லுங்கள் '''என்றார் ராமசாமி..

அவரும் அமைதியாக ''டாக்டர் சேகர்..கால்நடைமருத்துவர்..நம்பர் 12..பத்தாவது கிராஸ்..சிவசாமி நகர் ''என்றார்...

இப்படியும் சத்தம் போட்டு மாட்டி கொள்கிறவர்களும் இருக்கிறார்க்ள.

Offline MysteRy

Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #51 on: February 02, 2013, 01:24:50 PM »


அவ்வளவு அறிவு கூர்மை இல்லாத ஒருவன் காவல் துறை அதிகாரி வேலைக்கான நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டான்.

அவனிடம் "காந்தியைச் சுட்டுக் கொன்றது யார்?"

என்று கேள்வி கேட்கப் பட்டது.

சிறிது நேரம் அமைதியாக இருந்த அவனைப் பார்த்து
"நீங்கள் போகலாம்" என்றனர்.

வெளியே வந்து அவனைப் பார்த்த நண்பன் ஒருவன்

"என்ன வேலை கிடைத்து விட்டதா?" என்று கேட்டான்.

அதற்கு அவன் "நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.

ஒரு கொலை வழக்கில் குற்றவாளியைக் கண்டுபிடிப்பது பற்றி

என்னிடம் பேசினார்கள்" என்றான்.

Offline MysteRy

Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #52 on: February 02, 2013, 01:26:26 PM »

ஒரு ஏழை விவசாயி இருந்தான். அவனிடம் கொஞ்சம் நிலம் இருந்தது. அதை அவன் கரிசனத்தோடு உழுது பயிரிட்டு விளைத்து வந்தான். அப்படி விளைந்த தானியத்தை மூட்டையாக கட்டி தூக்கி வர ஒரு கழுதையை பயன்படுத்தி வந்தான். கழுதையும் எஜமானருக்கு விசுவாசமாக உழைத்து வந்தது. அந்தக் கழுதைக்கும் வயசானது. ஒரு நாள் கழுதை வழி தவறி ஒரு பாழுங் கிணற்றினுள் தவறி விழுந்து விட்டது.

கிணற்றுக்குள் விழுந்த கழுதை குய்யோ முறையோ என கூச்சல் போட்டது. எஜமான் எட்டிப் பார்த்தான். என்ன செய்வதென்று அறியாமல் பரிதவித்தான். கழுதையை மீட்க முடியாமல் கண் கலங்கினான். பின் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் சென்று கழுதையை மீட்க உதவி கோரினான்.

அவர்களும் வந்தார்கள். கிணறோ பாழும் கிணறு , பயன்படாதது. கழுதையோ வயதாகி போனது. இனி அதனால் உழைக்க முடியாது. இனி அது இருந்தும் என்ன பயன் என ஊரார் அவனிடம் கூறினார்கள். மண், கல், செடி செத்தைகளைப் போட்டு கிணறையும் மூடி விடுவோம், மாட்டிக்கொண்ட கழுதையும் இறந்து விடும் என கூறி அதற்கான செயல்களில் இறங்கினார்கள்.

தன் மேலே ஊரார் கற்களையும், மணலையும் செடி செத்தைகளையும் போடும் போதெல்லாம் வலி தாங்காமல் துடிதுடித்து அழுதது கழுதை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் கழுதைக்கு ஒரு யோசனை உதித்தது. அது என்னவெனில், இவர்கள் போடும் பொருட்களின் மேல் நாம் ஏறிக் கொள்ள வேண்டும். வலித்தாலும், காயம்பட்டாலும் பரவாயில்லை. இந்த வலிகளை எல்லாம் நாம் தப்பிக்கும் வழிகளாக மாற்றிக் கொள்வோம் என எண்ணியது. அதன் படியே மண், கல், செடி, செத்தைகள் மேலே வலியையும் பொறுத்துக் கொண்டு ஏறி ஏறி நின்றது. தன் உடம்பை உலுப்பி உலுப்பி கிணறு நிறையும் வரை இப்படியே செய்தது. ஒரு கட்டத்தில் கிணறும் நிரம்பியது. கழுதையும் மேலே வந்தது.

Moral: சூழ்நிலைகளை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்பவனே வெற்றி பெறுவான்.

Offline MysteRy

Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #53 on: February 02, 2013, 01:39:30 PM »

அந்த விருந்தில் எளிய ஆடைகளுடன் நுழைந்தார் ஒரு கவிஞர்.

பலரும் கண்டுகொள்ளவில்லை.

பகட்டான ஆடையணிந்து வந்தார்.

பலரும் எதிர்கொண்டு வரவேற்றனர்.

அவர் கவிதைகளைப் படிக்காமலேயே புகழ்ந்தனர்.

உணவுண்ண அழைத்ததும்,

உணவு வகைகள் ஒவ்வொன்றாய் எடுத்து உடைகளில் தெளித்துக் கொண்டார்.

அதிர்ந்து நின்றவர்களிடம் அமைதியாகச் சொன்னார்,

“ஆடைகளை வைத்துத்தானே ஆளை மதிக்கிறீர்கள்.

எனவே, பகட்டான ஆடைகளுக்குப் பந்தி வைக்கிறேன்.”

அவர்தான் கவிஞர் ஷேக் சாதி.

Offline MysteRy

Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #54 on: February 02, 2013, 01:46:41 PM »

யோகவாசிஷ்டத்தில் உள்ள கதை ஒன்று...

அபூர்வமான சிந்தாமணி வைரக்கல் ஒன்றை தேடி காட்டுக்கு புறப்படுகிறார் ஒருவர்.

யாருக்கும் எளிதில் கிடைக்காது..விதி உள்ளவர்களுக்கு மட்டுமே கிடைக்கும்..

அதுவும் எளிதில் கிடைக்காது..
அப்படியே இருந்தாலும் பல மாதங்கள் வருடங்கள்கடுமையாக தேடினால் தான் கிடைக்கும்..எனகிற எச்சிரிக்கை அறிவுறுத்தல்படி தேடி புறப்படுகிறார்..

ஆனால் காட்டில் நூழைந்த சில நிமிடங்களிலே கிடைத்துவிடுகிறது..அந்த சிந்தாமணி வைரக்கல்

ஆனால் நிச்சயமாக இருக்கமுடியாது என்றுநழுவ விடுகிறார்..

கடைசி வரை அவரால் திரும்பஅந்த கல்லை கண்டுபிடிக்கவில்லை..

இதுபோல் தான் எல்லோரும் அபூர்வமாக கிடைக்கும் எல்லாவாற்றையும் இழந்து நிற்கிறோம்...

அல்லது மதிப்பு தெரியாமல் இருக்கிறோம்..

ஆம்..நமது...மனைவி..மக்கள்..நண்பர் உட்பட..

Offline MysteRy

Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #55 on: February 02, 2013, 01:48:33 PM »

ஒரு மருத்துவ வகுப்பின் முதல் நாள் ஆசிரியர் ஒரு பிணத்தை வைத்து பாடம் நடத்த ஆரம்பித்தார்.

"ஒரு மருத்துவனுக்கு மிக முக்கியமானது மூன்று விஷயங்கள் ஒன்று நோயாளியின் உடலை தொடவோ, பார்க்கவோ கூச்சப்படக்கூடாது அடுத்தது எதையும் நன்றாக கவனிக்க வேண்டும்"
என்று சொல்லிவிட்டு தன் விரலை பிணத்தின் வாய்க்குள் விட்டு பின் வெளியே எடுத்து விரலை முத்தமிட்டார்.பிறகு மாணவர்களிடம்,"சரி எல்லோரும் நான் செய்தது போல செய்யுங்கள்" என்றார்.
மாணவர்கள் மிகவும் தயங்கினர் ஆனால் நேரம் ஆக ஆக எல்லோரும் செய்ய ஆரம்பித்தார்கள்.
ஒரு கட்டத்தில் எல்லோரும் செய்து முடித்திருக்க ஆசிரியர்,

"எல்லோரும் முடித்தாயிற்றா? நான் பிணத்தின் வாய்க்குள் விட்டது ஆள் காட்டி விரல், முத்தமிட்டது நடு விரல்....இனியாவது நன்றாக கவனியுங்கள்"

இதிலிருந்து நீங்கள் கற்கும் நீதி " எப்போவும் அலர்ட் ஆறுமுகமா இரு".

Offline MysteRy

Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #56 on: February 02, 2013, 01:55:31 PM »
கல்லூரியில் கணித வகுப்பு.


உலகின் பெரிய கணித மேதைகளால்தீர்க்க முடியாத

இரண்டு கணக்குகளை பலகையில் எழுதிய ஆசிரியர்

, அவை இன்றும் புரியாத புதிர் என்றார்.

சற்று தாமதமாய் அந்த மாணவன் வந்தான்.

அதற்குள் வகுப்பு முடிந்திருந்தது.

அந்தக் கணக்குகளை வீட்டுப்பாடங்கள்

என்று நினைத்து குறித்துக்கொண்டு போனான்.

மறுநாள் விடையுடன் வந்தான்.

அந்த சம்பவத்தாலேயே உலகப் புகழ்பெற்ற அந்த மாணவன்தான்

ஜார் ஜ்டாந்த்ஸிக்.

அந்த சம்பவத்துக்கு அவர் தந்த விளக்கம்,

“அது யாராலும் முடியாது என்று எனக்குத் தெரியாது.

எனவே என்னால் முடிந்தது”.

Offline MysteRy

Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #57 on: February 02, 2013, 01:56:34 PM »

நர்சரி பள்ளி ஒன்றின் உணவறையில் ஒரு கூடை நிறைய ஆப்பிள்கள் வைக்கப்பட்டிருந்தன.
அந்தக் கூடையின் மேல், "ஒன்றுக்கு மேல் எடுக்காதீர்கள்;
கடவுள் பார்த்துக்கொண்டிருக்கிறார்" என எழுதி இருந்தது.

சற்று தொலைவில் ஒரு பெட்டி நிறைய சாக்லேட்டுகள் வைக்கப்பட்டிருந்தன.
அந்தச் சாக்லேட் பெட்டியின் மீது ஒரு குழந்தை பின்வருமாறு எழுதியது:
'எவ்வளவு வேண்டுமோ எடுத்துக்கொள்ளுங்கள்; கடவுள், ஆப்பிளைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்!'

Offline MysteRy

Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #58 on: February 04, 2013, 10:28:16 AM »


தன்னை மகா ஞானியாக கருதிக் கொண்ட ஒருவர் முல்லாவிடம் விவாதம் புரிந்து,தனது மேதாவித்தனத்தைப் பறைசாற்ற விரும்பினார்.தனது விருப்பத்தை முல்லாவிடம் தெரிவித்துக் கொண்டார் முல்லாவும் ஒப்புக்கொண்டார்.முல்லாவின் இல்லத்திலேயே ஒரு குறிப்பிட்ட நாளில் இருவரும் சந்திப்பது என்று முடிவு செய்யப்பட்டது.


குறிப்பிட்ட நேரத்தில் அந்த மஹா ஞானி முல்லாவின் இல்லத்திற்கு வந்தார். அனால் முல்லா வேண்டுமென்றே அந்த நேரத்தில் வேறெங்கோ சென்றுவிட்டார். வெகு நேரம் முல்லாவிற்காக காத்திருந்த ஞானி பொறுமை இழந்து எரிச்சலுடன் வெளியேற முடிவு முடிவு செய்தார்.

அப்போது ஒரு சுண்ணக் கட்டியால் முல்லாவின் வீட்டுக் கதவில் "அறிவு கெட்ட கழுதை" என்று எழுதிவிட்டு சென்றார்.அவர் சென்ற பின் முல்லா வீடு வந்து சேர்ந்தார் வாசற்கதவை பார்த்தார் தம்மோடு விவாதிக்க வந்தவர்தான் கோவத்தில் எப்படி எழுதி இருக்கிறார் என்று புரிந்து கொண்டார் .

முல்லா சிறிது நேரத்தில் அந்த ஞானியின் வீட்டிற்கு சென்றார்.அவரிடம் முல்லா "அறிஞர் பெருமானே தாங்கள் என்னை பொருத்தருள வேண்டும் தங்களை நன் வர சொன்ன நேரத்தில் வேறொரு வேலையாக வெளியே சென்று விட்டேன். வீடு திரும்பியதும் தான் தாங்கள் வந்து சென்றதை தெரிவிக்கும் வகையில் வாசற் கதவில் உங்கள் பெயரை எழுதி விட்டு சென்றதை அறிந்து தங்களிடம் மன்னிப்பு கேட்க ஓடோடி வந்தேன் "என்று அடக்கமாக கூறினார்.இதற்க்கு அந்த ஞானியால் பதில் ஏதும் கொடுக்க முடியாமல் அந்த மகா ஞானி அசடு வழிந்தார்.

Offline MysteRy

Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #59 on: February 04, 2013, 10:29:48 AM »
(எப்போது நினைவுக்கு வந்தாலும் சரி ..சிரிப்பு வரும்)



அந்த அரசனுக்கு தீடிர் ஆசை..

பழச்சுவையின் மீது தீடிர் மோகம்..

தான் சுவைக்காத அரிய பழத்தை கொண்டு வந்தால் ஆயிரம் பவுன் பரிசு..

மக்கள் முன் அறிவித்தான்..

மக்கள் தங்களுக்கு கிடைத்த பழங்களை எடுத்து கொண்டு வரிசையில் நின்றனர்..

ஆனால் அதில் ''கண்டிஷன் அப்ளை'' இருந்தது..

இம்சை அரசர்களும் உண்டல்லாவா..

அரசருக்கு தெரிந்த பழமாக இருந்தால் அவர் வாயிலே திணித்து அனுப்பிவைக்கப் படுவாகள்..

ஒருவன்அன்னாசி எடுத்து வந்தான்...அது அரசனுக்கு தெரிந்த பழாமாய் இருந்த்தால் வாயில் திணித்து அனுப்ப வீரர்களுக்கு உத்திரவிடப்பட்டது..

அவன்சிரிக்க ஆரம்பித்தான்

வீரர்களுக்கு புரியவில்லை..''ஏன் சிரிக்கிறாய்'' என்றார்கள்..

''பின்னாடி ஒருவன் பலா பழத்தை தூக்கிவருகிறான்..அவனுக்கு எற்ப்படும் கதியை நினைத்து சிரித்தேன்''
என்றான் அவன்

நீதி...அடுத்தவன் துன்பபடுவதை பார்த்தால் எந்தநிலையிலும் சிரிப்பு வரும்..