Author Topic: ~ குட்டிக்கதை: ~  (Read 20182 times)

Offline MysteRy

Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #15 on: January 23, 2013, 10:16:20 PM »


ஒரு நேரத்தில் ஒன்றை மட்டும் சொல்லித் தந்த குருநாதர்மேல் சீடனுக்குக் கோபம்.

தன் நேரம் விரைவதாய் வருந்தினான். கூண்டில் அடைக்கப்பட்ட பத்து கோழிகளைத் திறந்து விட்ட குருநாதர் பத்தையும் பிடிக்கச் சொன்னார்.

பத்தும் பத்துத் திசைகளில் ஓடின. துரத்தித் துரத்திக் களைத்தான்.

கழுத்தில் சிகப்பு நாடா கட்டப்பட்ட கோழியை மட்டும் பிடிக்கச் சொன்னார் குருநாதர்.

சில நிமிடங்களிலேயே பிடித்தான். குருநாதர் சொன்னார்

“ஒரு நேரத்தில் ஒன்றை மட்டும் பின்பற்று.

பலவற்றையும் பிடிக்க நினைத்தால் எல்லாவற்றையும் இழந்து நிற்பாய்!!

Offline MysteRy

Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #16 on: January 23, 2013, 10:39:18 PM »


( இந்த கதை பதிமூன்று வயது சிறுமி எழுதியதாக ராஜேஸ்குமார் நாவலில் பலவருடங்கள் முன்னால் படித்த ஞாபகம் )

ஒரு கோயிலின் உச்சியில் ஒரு புறாவும் அதன் குஞ்சும் கூடு கட்டி வாழ்ந்து வந்தது ..ஒருநாள் கோயிலில் திருவிழா வரவே வெள்ளையடிக்க ஆரம்பித்தார்கள்..எனவே புறாவும் அதன் குஞ்சும் பறந்து சென்று ஒரு மாதாகோயிலின் உச்சியில் கூடுகட்டி வாழ்ந்தது..

மாதா கோயிலிலும் திருவிழா வரவே அங்கேயும் வெள்ளையடிக்க ஆரம்பித்தார்கள்..மீண்டும் அந்த புறாவும் அதன் குஞ்சும் பறந்து சென்று ஒரு மசூதியின் உச்சியில் கூடுகட்டி வாழ்ந்து வந்தது..அந்த சமயத்தில் ஊருக்குள் மதக்கலவரம் வெடிக்க ஆரம்பித்தது...ஒருவரையொருவர் வெட்டிக்கொண்டு சாய்ந்தார்கள்..

அதைப் பார்த்துக்கொண்டிருந்த குஞ்சு புறா , தாய் புறாவிடம் கேட்டது ,
" ஏம்மா மனிதர்கள் ஒருத்தொருக்கொருத்தர் வெட்டிக்கொண்டு சாகிறார்கள்.."என்று.
அதற்கு தாய் புறா சொன்னது..." மனிதர்களுக்கு மதம் பிடித்துவிட்டது..அதனால்தான் அவர்கள் வெட்டிக்கொண்டு சாய்கிறார்கள் .."

" அப்படியானால் நமக்கு ஏன் மதம் பிடிப்பதில்லை..?" என்று குஞ்சு புறா கேட்டது..
உடனே தாய் புறாவும் ," நாமெல்லாம் பறவைகள் நமக்கு மதம் பிடிக்காது..அது மனிதர்களுக்கு மட்டுமே பிடிக்கும்.." என்றது..

மறுபடியும் குஞ்சு புறா , " அப்படியானால் மனிதர்களைவிட நாம் தானே உயர்ந்தவர்கள்.." என்று கேட்டது..
அதற்கு தாய் புறா சொன்னது, " அதிலென்ன சந்தேகம் அதனால்தான் நாம் மனிதர்களைவிட உயர்ந்த இடத்தில் இருக்கிறோம் .." என்று

Offline MysteRy

Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #17 on: January 23, 2013, 10:58:16 PM »
ஒரு நாள் ஒரு குட்டி Rat, ஒரு பெரிய Cat கிட்ட மாட்டிகிச்சு. Ok யா!



Rat சொல்லுச்சு “Cat அண்ணா, Cat அண்ணா! நான் எங்க அப்பா அம்மாக்கு ஒரே பையன். என்னிய சாப்டாதீங்க. விட்டுடுங்க ப்ளீளீளீஸ்”னு சொல்லிச்சு. அதுக்கு Cat என்ன சொல்லுச்சு தெரியுமா?

.

.

.

.

.

.

.

.
.

.

“ம்யாவ்”னு சொல்லிச்சு.

கதை கேக்குற வயசா இது. போய் வேலையாப் பாருங்கப்பா!!!

Offline MysteRy

Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #18 on: January 23, 2013, 11:06:44 PM »
ஒரு நாள் ஒரு காட்டுப் பகுதியில் கழுதை ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது.



கழுதையை கவனித்த ஓநாய் ஒன்று அதை அடித்துத் தின்னும் நோக்கத்துடன் அதன் மீது பாய்ந்தது. தனக்கு வந்த ஆபத்தைக் கண்டு பயந்தது கழுதை.

ஓநாயை எதிர்த்து சண்டை போடுவது கஷ்டம். அதனால் ஏதாவது ஒரு தந்திரம் செய்து தான் சமாளிக்க வேண்டும் என கழுதை தீர்மானித்தது.

ஓநாயின் பாய்ச்சலின் போது சற்று விலகிக் கொண்டு, ""ஓநாயாரே, உம்முடைய வலிமையின் முன்னால் நான் எம்மாத்திரம்... நான் இன்று உமக்கு இரையாகப் போவது உறுதி. இதை யாராலும் தடுக்க. முடியாது நானும் உமக்கு இரையாகத் தயாராக இருக்கிறேன். அதற்கு முன்னால் நான் சொல்லக் கூடிய விஷயத்தைத் தயவு செய்து கேட்க வேண்டும்,'' என வேண்டிக் கொண்டது.

"நீ என்ன சொல்ல விரும்பினாய். சொல்வதை சீக்கிரம் சொல்". என உறுமியது ஓநாய்.

""ஓநாயாரே என் காலில் பெரிய முள் ஒன்று குத்தி விட்டது. முள்ளை எடுக்க நான் எவ்வளவோ முயற்சி செய்தும் முடியவில்லை. காலில் முள் உள்ள நிலையில் நீ என்னை அடித்துச் சாப்பிட்டால் அந்த முள் உன் தொண்டையில் மாட்டிக் கொள்ளும். அது உமக்குக் கடுமையான வேதனையைத் தருவதுடன் உன் உயிரையும் வாங்கி விடும். அதற்கு தயவு கூர்ந்து முதலில் என் காலில் இருக்கும் முள்ளை எடுத்துவிடு. அதற்குப் பிறகு நீ என்னை அடித்துத் தின்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை,'' என கழுதை கூறிற்று.

ஏமாந்த ஓநாய் ஒத்துக் கொண்டது.

கழுதை தனது பின்னங் கால்களைத் திருப்பிக் காண்பித்து,

ஓநாய் கழுதையின் பின்னங்கால்களில் முள் இருக்கிறதா என தேடும் வேலையில், அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கழுதை பின்னங் கால்களால் ஓநாயைப் பலமாக உதைத்தது.

கழுதையின் உதை தாங்காமல் ஓநாய் துடிதுடித்து சரிந்தது. அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு கழுதை வேகமாக ஓடி தப்பித்துக் கொண்டது.

Offline MysteRy

Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #19 on: January 23, 2013, 11:11:28 PM »


ஏழை ஒருவன் தெய்வ வரம் பெற்ற தன நண்பன் ஒருவனைச் சந்தித்தான்.வரம் பெற்ற நண்பன் எழைக்குஉதவும் பொருட்டு

,ஒரு செங்கல்லை எடுத்து தன சுட்டு விரலால் தொட்டான்.அது தங்கமாக மாறியது.அதை ஏழைக்குக் கொடுத்தான்.
ஏழைக்கோதிருப்தி ஏற்படவில்லை

.இன்னொரு கல்லை எடுத்து த்தன்சுட்டு விரலால் தொட்டு தங்கமாக்கி அவனிடம் கொடுத்தான்.அப்போதும் எழைக்கு திருப்தி ஏற்படவில்லை.'

'உனக்கு என்ன தான் வேண்டும்?''என்று நண்பன் கேட்டான்.'

'உன் சுட்டு விரல்''என்று பதில் வந்தது.

Offline MysteRy

Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #20 on: January 23, 2013, 11:16:43 PM »


ஒரு ஏழை விவசாயி இருந்தான். அவனிடம் கொஞ்சம் நிலம் இருந்தது. அதை அவன் கரிசனத்தோடு உழுது பயிரிட்டு விளைத்து வந்தான். அப்படி விளைந்த தானியத்தை மூட்டையாக கட்டி தூக்கி வர ஒரு கழுதையை பயன்படுத்தி வந்தான். கழுதையும் எஜமானருக்கு விசுவாசமாக உழைத்து வந்தது. அந்தக் கழுதைக்கும் வயசானது. ஒரு நாள் கழுதை வழி தவறி ஒரு பாழுங் கிணற்றினுள் தவறி விழுந்து விட்டது.

கிணற்றுக்குள் விழுந்த கழுதை குய்யோ முறையோ என கூச்சல் போட்டது. எஜமான் எட்டிப் பார்த்தான். என்ன செய்வதென்று அறியாமல் பரிதவித்தான். கழுதையை மீட்க முடியாமல் கண் கலங்கினான். பின் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் சென்று கழுதையை மீட்க உதவி கோரினான்.

அவர்களும் வந்தார்கள். கிணறோ பாழும் கிணறு , பயன்படாதது. கழுதையோ வயதாகி போனது. இனி அதனால் உழைக்க முடியாது. இனி அது இருந்தும் என்ன பயன் என ஊரார் அவனிடம் கூறினார்கள். மண், கல், செடி செத்தைகளைப் போட்டு கிணறையும் மூடி விடுவோம், மாட்டிக்கொண்ட கழுதையும் இறந்து விடும் என கூறி அதற்கான செயல்களில் இறங்கினார்கள்.

தன் மேலே ஊரார் கற்களையும், மணலையும் செடி செத்தைகளையும் போடும் போதெல்லாம் வலி தாங்காமல் துடிதுடித்து அழுதது கழுதை. அப்படிப்பட்ட சூழ்நிலையில் கழுதைக்கு ஒரு யோசனை உதித்தது. அது என்னவெனில், இவர்கள் போடும் பொருட்களின் மேல் நாம் ஏறிக் கொள்ள வேண்டும். வலித்தாலும், காயம்பட்டாலும் பரவாயில்லை. இந்த வலிகளை எல்லாம் நாம் தப்பிக்கும் வழிகளாக மாற்றிக் கொள்வோம் என எண்ணியது. அதன் படியே மண், கல், செடி, செத்தைகள் மேலே வலியையும் பொறுத்துக் கொண்டு ஏறி ஏறி நின்றது. தன் உடம்பை உலுப்பி உலுப்பி கிணறு நிறையும் வரை இப்படியே செய்தது. ஒரு கட்டத்தில் கிணறும் நிரம்பியது. கழுதையும் மேலே வந்தது. அனைவரும் அதிசயத்துடன் மகிழ்ந்தார்கள்.

நீதி: வெற்றியின் ரகசியம் என்பது பொறுமையில், சகிப்புத் தன்மையில், வலி தாங்கி வாழ்வதிலும் இருக்கிறது.

Offline MysteRy

Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #21 on: January 24, 2013, 11:48:57 AM »
யார் முட்டாள்...யார் புத்திசாலி...?



விலையுர்ந்த கார்...உயர்ந்த விலையுள்ள சுத்தமான ஆடை...மிகுந்த பணமுள்ளவர்,,அவர் காரில் வந்து இறங்குகிறார்.. ஒருவர்..

அங்கே அழுக்கான ஆடை...கையில் எதும் பணமில்லாதவர்...கைவண்டி இழுக்கிறவர்
அந்த வண்டியில் உட்கார்ந்துகொண்டு அந்த இரவு வேளையில் ஆனந்தமாக பழைய பாடலை பாடிக்கொண்டு இருக்கிறார்..

அவனைஅந்த பணக்காரர் பார்த்த்தும்.. ''எதுவுமே இவனிடம் கிடையாது..இப்படி மகிழ்ச்சியாக இருக்கிறானே...ஓருவேளை முட்டாளாக இருப்பானோ.. ''என எண்ணுகிறார்...

இதில் யார் புத்திசாலி..?
.எதுவுமே இல்லாமல் மகிழ்ச்சியாய் இருப்பவன் புத்திசாலியா
.
பணம் இருந்தால்தான் மகிழ்ச்சி என்று நினைப்பவன் புத்திசாலியா..

பணக்காரனாய் இருப்பவனுக்கு மகிழ்ச்சி இருந்தால்கூட
எதோ ஒன்று குறைந்தால் மகிழ்ச்சி போய்விடும்..

ஆனால் அவனுக்கு எப்போதும் மகிழ்ச்சியே

Offline MysteRy

Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #22 on: January 24, 2013, 11:55:02 AM »


ஒரு மரவெட்டி மரத்தின் கிளைமீது அமர்ந்து கொண்டு அந்தக் கிளையையே வெட்டினானாம்.

உமாதேவியார் பார்த்துவிட்டு, இவன் என்ன முட்டாளாக இருக்கிறானே, கீழே விழுந்து சாக அல்லவா போகிறான் என்று சிவபெரிமானிடம் சொன்னாராம். அதற்கு அவர் சொன்னாராம், சரி அவன் உதவிக்கு உன்னைக் கூப்பிட்டால் நீ போய் காப்பாற்று; என்னைக் கூப்பிட்டால் நான் காப்பாற்றுகிறேன் என்றாராம்.

இருவரும் மிகவும் கவனமாக அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று ஆவலோடு பார்த்துக்கொண்டிருந்தார்களாம்.

அவன் இருந்த கிளை இறுதியாக முறிந்து விழுந்தது. அவன் “ஐயோ” என்று கதறிக்கொண்டே கீழே விழுந்தான். விழுந்த வேகத்தில் செத்துப்போனான்.

உமாதேவியார் என்ன இறந்துபோனானே என்றாராம். அதற்கு சிவன் சொன்னாராம், அவன் எமனின் மனைவி “ஐயோ” வை அல்லவா கூப்பிட்டான். அதான், ஐயோ வந்து அவன் உயிரை எடுத்துக்கொண்டு போய்விட்டார் என்றாராம்.

அதான் “ஐயோ” என்று ஏன் சொல்லக்கூடாது என்பதற்காக ஒரு சின்ன கதை.....

நன்றி பாபு நடேசன்...

Offline MysteRy

Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #23 on: January 24, 2013, 11:57:31 AM »


புதிதாக கல்யாணமான ஒரு கணவனும் மனைவியும் புதிய ஒரு நகரத்துக்கு குடியேறினார்கள்.

அடுத்த நாள் காலையில் இருவரும் ஹாலில் அமர்ந்து காபி குடிக்கும் போது, பக்கத்துக்கு வீட்டு பெண் துணிகளை துவைத்து

காயப்போட்டுக்கொண்டிருப்பது ஜன்னல் வழியாக தெரிந்தது. அதை பார்த்த மனைவி கணவனிடம் ‘அங்க பாருங்க, அந்த பொண்ணுக்கு துவைக்கவே தெரியல. துணியெல்லாம் கருப்பு புள்ளிகளா இருக்கு’ அப்படின்னு சொன்னா.

ஜன்னல் வழியே பார்த்த கணவன் ஒண்ணுமே சொல்லல.

பக்கத்துக்கு வீட்டு பொண்ணு தொவைச்சு காய போடறதும் அத ஜன்னல் வழியா பாத்து மனைவி துவைக்க தெரியலன்னு சொல்றதும், கணவன் அதுக்கு ஒண்ணுமே சொல்லாம இருக்குறதும் ரொம்ப நாளா நடந்துச்சு.

திடீர்னு ஒரு நாள் மனைவி ரொம்ப ஆச்சரியமா சொன்னா: இங்க பாருங்க! கடைசியில நம்ம பக்கத்து வீட்டு பொண்ணு துணி துவைக்க படிச்சுட்டா. இன்னைக்கு துணிகளை சுத்தமா துவைசுருக்கா.

அதுக்கு அந்த கணவன்’அது வேற ஒன்னும் இல்ல.

இன்னைக்கு காலையில சீக்கிரமா எழுந்து நம்ம வீடு ஜன்னல் கண்ணாடிகளை எல்லாம் நான் துடைச்சேன்’ அப்படின்னு சொல்லிட்டு காபி குடிக்க ஆரம்பிச்சான்.

இதனால் நான் சொல்ல வர்ற மெசேஜ் என்னானா: அடுத்தவனோட குறைகளா நாம நெனைக்கிறது சில நேரங்களில் நம்மளோட பார்வை பிரச்சினையா கூட இருக்கலாம்.

Offline MysteRy

Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #24 on: January 24, 2013, 12:08:08 PM »
"கொஞ்சம் குசும்பான கதை"



நாட்டை ஆண்டு கொண்டிருந்த
மன்னருக்குத் திடீரென
ஒரு சந்தேகம் உதித்தது!.

உடனடியாக
அமைச்சரை வரவழைத்தார்.
“நான் இந்த நாட்டை இவ்வளவு நன்றாகவும்,
புத்திசாலித்தனத்துடனும் ஆண்டு வருகிறேன்,

ஆனால் இந்த
நாட்டிலும் முட்டாள்கள்
இருப்பார்கள் அல்லவா?

“ஆம் மன்னா!”

“அப்படியானால் அவர்களில் முதல்
5 முட்டாள்கள் யார்??
அவர்களைத் தேடிக்
கண்டுபிடித்துக் கூட்டிக்
கொண்டு வருவது உம் பொறுப்பு”
என்றார்.

அமைச்சருக்கு ஒன்றுமே புரியவில்லை,
புத்திசாலியைக் கொண்டு வரச்
சொன்னால்
ஏதாவது போட்டி வைத்து வெற்றியாளரைக்
கொண்டு வரலாம்.

முட்டாளைக்
கொண்டு வரச் சொன்னால்??
என்ன செய்வது சொன்னது மன்னராயிற்றே,
“சரி மன்னா” என்று ஒத்துக்
கொண்டார்.

ஒரு மாதம்நாடு முழுவதும் பயணம் செய்து 2 பேரை மட்டும் கூட்டிக்கொண்டு வந்தார்.அதைப்
பார்த்ததும் மன்னர்,

“அமைச்சரே உமக்குக் கணிதம் மறந்து விட்டதோ?”

“இல்லை மன்னா! முதலில்
நடந்ததை விளக்க அனுமதிக்க
வேண்டும்!” என்றார் அமைச்சர். “தொடரும்”என்றார் மன்னர்.

“மன்னா! நான் நாடு முழுவதும்
சுற்றும்போது, இவன்
மாட்டு வண்டியின் மேல்
அமர்ந்து கொண்டு தன்
துணி மூட்டையைத் தலைமேல்
வைத்து, பயணம் செய்து கொண்டிருந்தான், ஏன்
அவ்வாறு செய்கிறாய்? எனக்
கேட்டதற்கு

என்னைச்
சுமந்து செல்லும்
மாடுகளுக்கு வலிக்கக்கூடாதல் லவா?
அதற்குத்தான் என்றான் – இவன்தான் நம் நாட்டின் 5வது மிகப்
பெரிய முட்டாள்.”’ என்றார்
அமைச்சர்.

“சரி அடுத்து”

“இதோ இவன் தன் வீட்டுக் கூரைமேல்
வளர்ந்த புல்லை மேய்க்க,
எருமையைக் கூரைமேல்இழுத்துக்
கொண்டிருந்தான், இவன்தான் நம்
நாட்டின் 4வது மிகப்
பெரிய முட்டாள்”

களிப்படைதோம் அமைச்சரே!
களிப்படைதோம்! சரி,
எங்கே அடுத்த முட்டாள்?

“அரசவையில் தீர்க்கப்பட வேண்டிய
பிரச்சினைகள்
எவ்வளவோ இருக்கும்போது,

அதையெல்லாம்
விட்டுவிட்டு முட்டாள்களைத்
தேடி, கடந்த ஒரு மாதமாய் அலைந்துகொண்டிரு ந்த நான்தான்
3வது முட்டாள்.”

மன்னருக்குச்
சிரிப்பு தாங்கவில்லை,
விழுந்து விழுந்து சிரித்தார்.

பின்னர் “அடுத்தது” என்றார். ””நாட்டில்
எவ்வளவோ பிரச்சினைகள்
இருக்கும்போது அதைக்
கவனிக்காமல் முட்டாள்களைத்
தேடிக் கொண்டிருக்கும்
நீங்கள்தான் 2வது” என்றார்அமைச்சர்.

ஒரு நிமிடம்
அரசவையே ஆடிவிட்டது. யாரும்
எதுவும் பேசவில்லை.

“உமது கருத்திலும் நியாயம்
உள்ளது. நான் செய்ததும்
தவறுதான்” என ஒத்துக் கொண்டார்
மன்னர்.

“சரி எங்கே முதலாவது முட்டாள்?” அமைச்சர் சொன்னார்.”

மன்னா!
அலுவலகத்திலும், வீட்டிலும்
எவ்வளவோ வேலைகள் இருந்தாலும்
அதையெல்லாம்
விட்டுவிட்டு ஃபேஸ்புக்கே குடியேன்
வாழ்ந்து இந்த மொக்கையான கதைக்கு வந்து நாட்டின் மிகப்
பெரிய முட்டாள்
யாரென்று தேடிக்
படித்துகொண்டிரு க்கிறாரே இவர்தான்
அந்த முதல் முட்டாள்!”:

Offline MysteRy

Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #25 on: January 24, 2013, 01:46:41 PM »


இரவில் தங்குவதற்கு ஒரு லாட்ஜூக்கு வந்து அறை காலியாக இருக்கிறதா என்று கேட்டான் ஒருவன்.தனி அறை எதுவும் இல்லை. இரண்டு பேருக்கான ஓர் அறையில் ஒரு பெண் மட்டும்தான் இருக்கிறாள். அவள் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறாள். உங்களுக்கு ஆட்சேபணை இல்லையென்றால் இன்னொரு கட்டிலில் நீங்கள் ஓசைப்படுத்தாமல் போய் படுத்து தூங்கலாம்” என்றார் விடுதிக்காரர்.வேறு வழியில்லாததால் வந்தவனும் அதற்கு சம்மதித்து அந்த அறைக்குப் போனான்.அடுத்த பத்தாவது நிமிடம் அவன் அலறியடித்துக் கொண்டு கீழே வந்தான். ‘அந்தப் பெண் செத்தல்லவா போய்விட்டாள் என்றான்.

“அது எனக்கு தெரியும். உனக்கு எப்படி அது தெரிய வந்தது?

Offline MysteRy

Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #26 on: January 24, 2013, 05:01:36 PM »


ஒரு குரு தனது சீடர்களுக்கு போதனை செய்து கொண்டிருந்தார்.

அப்போது,
பாவம் செய்பவர்களை நரகத்தில் கொதிக்கும் எண்ணெயில்

எப்படிப் போட்டு வாட்டுவர் என்பது பற்றி விபரமாகச் சொல்லிக் கொண்டிருந்தார்

.பின் அவர்களிடம்,''நீங்கள் சொர்க்கம் போக விரும்புகிறீர்களா,நரகம் போக விரும்புகிறீர்களா?''என்று கேட்டார்.

சீடர்கள்,''குருவே,நீங்கள் எங்கே செல்ல விரும்புவீர்கள்?''என்று கேட்டனர்.

குரு மிகுந்த வருத்தத்துடன் சொன்னார்,'' நான் சிறு வயதில் நிறைய தவறுகள் செய்துள்ளேன்

.எனவே நான் நரகம்தான் செல்வேன்

,''உடனே சீடர்கள் அனைவரும் ஒரே குரலாய்,'

'அப்படியானால் நாங்களும் நரகம் தான் வர விரும்புகிறோம்.'' என்றனர்

.குரு திகைத்துப் போனார்

.கண்களில் நீர் மல்க.''என்மீது உங்களுக்கு அவ்வளவு பக்தியா?''என்று கேட்டார்

.சீடர்கள் சொன்னார்கள்

,''நரகத்தில் உங்களை எண்ணெய்க் கொப்பரையில் எப்படி போட்டு வாட்டுவார்கள் என்று நாங்கள் பார்க்க வேண்டாமா?''

Offline MysteRy

Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #27 on: January 24, 2013, 05:10:43 PM »


ஒரு பலசரக்கு வியாபாரி,ஒரு ஆசிரியர்,ஒரு அரசியல்வாதி மூவரும் ஒரு காட்டுக்குள் சென்ற போது வழிதவறிப் போயிற்று.

மிகுந்த அலைச்சலுக்குப் பின் ஒரு விவசாயியின் வீட்டைக் கண்டு பிடித்தனர்.

விவசாயியிடம் ஒரு இரவு தங்குவதற்கு அனுமதி கேட்க,விவசாயி சொன்னார்,

''உங்களில் இருவர் தங்க அறை கொடுக்க முடியும்.மூன்றாவது நபர் ஆடு,பசு,பன்றி இவை தாங்கும் கொட்டகையில் தான் தூங்க

வேண்டும்,''ஆசிரியர் ,''நான் போய் அங்கு படுத்துக் கொள்கிறேன்.''என்றார்.மற்ற இருவரும் அறையில் போய் படுத்துக் கொண்டனர்.

கொஞ்ச நேரம் ஆனவுடன் கதவு தட்டப்பட்டது.கதவைத் திறந்த போது அங்கு ஆசிரியர் நின்று கொண்டிருந்தார்.''என்னால் அந்த

நாற்றத்தைத் தாங்க முடியவில்லை.''உடனே பலசரக்கு வியாபாரி,''சரி,சரி,நான் அங்கு போய் தூங்குகிறேன்,''என்று கூறி கொட்டகைக்குச் சென்றார்.

ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் கதவு தட்டப்பட்டது.

திறந்து பார்த்தால் வியாபாரி வாந்தி எடுத்துக் கொண்டே நிற்கிறார்

.இறுதியாக அரசியல்வாதி ,தான் அங்கு போவதாகக் கூறிச் சென்றார்.

ஐந்து நிமிடத்தில் கதவு தட்டப்பட்டது.

ஆசிரியரும்,வியாபாரியும் கதவைத் திறந்து பார்த்தனர்.

இப்போது ஆடு,பசு,பன்றி இவையெல்லாம் நின்று கொண்டிருந்தன.

Offline MysteRy

Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #28 on: January 24, 2013, 06:44:04 PM »


நான்கு மெழுகுவர்த்திகள் எரிந்து கொண்டு இருந்தன.மெலிதாய் காற்று
வீசிக்கொண்டு இருந்தது. காற்றை கண்டதும்‘ அமைதி ‘ என்ற முதல்
மெழுகுவர்த்தி ‘ ஐயோ காற்று வீசுகின்றது,நான் அணைந்துவிடுவேன் என்று பலவீனமாக சொன்னது.காற்று பட்டதும் அணைந்துவிட்டது.
‘அன்பு ‘ என்ற அடுத்த மெழுகுவர்த்தியும் காற்றை எதிர்க்க முடியாது’
என்று அணைந்துவிட்டது.அறிவு ‘ என்ற மூன்றாவது மெழுகுவர்த்தியும் காற்றை எதிர்க்க முடியாமல்அணைந்தது.
நான்காவது மெழுகுவர்த்தி மட்டும் காற்று வீசிய சில நொடிகள்
போராடி ஜெயித்துவிட்டது. அப்போது அந்த அறையில் ஒரு சிறுவன் நுழைந்தான்.‘அடடா மூன்று மெழுகுவர்த்திகளும் அணைந்துவிட்டதே என்று கவலையுடன் சொன்னான். அதற்கு எரிந்துகொண்டு இருந்த நான்காவது மெழுகுவர்த்தி சொன்னது,வருத்தப்படாதே நான் இருக்கின்றேன். என்னை வைத்து மற்ற மூன்றையும் பற்ற
வைத்துகொள்’ என்றது.
சிறுவன் உடனே …… ‘ நான்காவது மெழுகுவர்த்தியை பார்த்து ” உன் பெயர் என்ன ?”என்று கேட்டான் . நம்பிக்கை என்றது மெழுகுவர்த்தி.

நாம் எப்பொதும் வாழ்வில் நம்பிக்கையை மட்டும் இழக்கக் கூடாது.

Offline MysteRy

Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #29 on: January 24, 2013, 06:45:44 PM »


ஓர் அடர்ந்த காடு தீடிரென தீப்பற்றி கொண்டுவிடுகிறது..

ஓரு குருடனும் முடவனும் இதில் மாட்டிக்கொள்கிறார்க்ள..

அவசரமாக தீயில் இருந்து தப்பித்தாக வேண்டும்..
ஒருவருக்கு பார்வை கிடையாது..ஓருவரால் நடக்க முடியாது..

இருவரும் ஒர் ஒப்பந்த்திருக்கு வருகிறார்கள்..

குருடர் முதுகில் முடவரை சுமப்பது என்றது..
முடவர் வழிசொல்ல குருடர் நடப்பது என்று..

தீயில் கருகமால் காட்டில் இருந்து வெளியேறிவிடுகிறார்கள்..
பத்திரமாக..

குருடர் என்று சொல்லப்படுவர் நமது மனது..

வழி சொல்லும் முடவர் நமது அறிவு..உள்ளுணர்வு.

மனது ...அறிவு..உள்ளுணர்வை சரியாக கேட்டு நடந்தால் நாமும் வாழ்க்கையில் பத்திரமாக செல்லலாம் ..செல்லவேண்டிய இடத்துக்கு.