Author Topic: இளையராஜா இசை ஹிட்ஸ்  (Read 19191 times)

Offline Global Angel

இளையராஜா இசை ஹிட்ஸ்
« on: November 08, 2012, 06:27:54 PM »
படம் : கடலோர கவிதைகள் (1986)
இசை : இளையராஜா
பாடியவர்கள்: பாலசுப்பிரமணியம், ஜானகி
பாடல்வரி : வைரமுத்து


போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே
போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே
நானும் சேர்ந்து போகவும் சிறகு இல்லையே
உறவும் இல்லையே
போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே

சுதி சேரும் போது விதி மாறியதோ
அறியாத ஆடு வழி மாறியதோ

அலைகள் அங்கு அடிக்கும் துளிகள் இங்கு தெறிக்கும்
பள்ளி பாடம் ஒப்பித்தே நான்
காதல் பாடம் கற்பித்தேனா
மாயம் தானா?

போகுதே போகுதே என் பைங்கிளி வானிலே...
                    

Offline Global Angel

Re: இளையராஜா இசை ஹிட்ஸ்
« Reply #1 on: November 08, 2012, 06:29:07 PM »
படம் : கண்ணுக்குள் நிலவு (2000)
இசை : இளையராஜா
பாடியவர்கள் : உன்னி கிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம்,
பாடலாசிரியர்: பழனி பாரதி



ரோஜா பூந்தோட்டம்....
காதல் வாசம்... காதல் வாசம்...

ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்
பூவின் இதழ் எல்லாம் மௌன ராகம் மௌன ராகம்
ஒவ்வொரு இலையிலும் தேன்துளி ஆடுதே
பூவெல்லாம் பூவெல்லாம் பனி மழை தேடுதே
நம் காதல் கதையை கொஞ்சம் சொல் சொல் சொல் என்றதே

ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்
பூவின் இதழ் எல்லாம் மௌன ராகம் மௌன ராகம்

விழியசைவில் உன் இதழ் அசைவில்
இதயத்திலே இன்று ஒரு இசை தட்டு சுழலுதடி

ஓ... ஓ... ஓ...

புதிய இசை ஒரு புதிய திசை
புது இதயம் என்று உன் காதலில் கிடைத்ததடி

ஓ... ஓ... ஓ...
காதலை நான் தந்தேன் வெட்கதை நீ தந்தாய்
காதலை நான் தந்தேன் வெட்கதை நீ தந்தாய்
நீ நெருங்கினால் நெருங்கினால் இளமை சுடுகிறதே

ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்
பூவின் இதழ் எல்லாம் மௌன ராகம் மௌன ராகம்


உன்னை நினைத்து நான் விழிந்திருந்தேன்
இரவுகளில் தினம் வண்ண நிலவுக்கு துணையிருந்தேன்

ஓ... ஓ... ஓ...

நிலவடிக்கும் கொஞ்சம் வெயில் அடிக்கும்
பருவ நிலை அதில் என் மலருடன் சிலிர்திருந்தேன்
ஓ... ஓ... ஓ...

சூரியன் ஒரு கண்ணில் வெண்ணிலா மறு கண்ணில்
சூரியன் ஒரு கண்ணில் வெண்ணிலா மறு கண்ணில்
என் இரவையும் பகலையும் உனது விழியில் கண்டேன்

ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்
பூவின் இதழ் எல்லாம் மௌன ராகம் மௌன ராகம்

ஒவ்வொரு இலையிலும் தேன்துளி ஆடுதே
பூவெல்லாம் பூவெல்லாம் பனி மழை தேடுதே
நம் காதல் கதையை கொஞ்சம் சொல் சொல் சொல் என்றதே

ரோஜா பூந்தோட்டம் காதல் வாசம் காதல் வாசம்
பூவின் இதழ் எல்லாம் மௌன ராகம் மௌன ராகம்...
                    

Offline Global Angel

Re: இளையராஜா இசை ஹிட்ஸ்
« Reply #2 on: November 08, 2012, 06:29:48 PM »
படம் : பூவிலங்கு (1984)
இசை : இளையராஜா
பாடியவர் : இளையராஜா
பாடல் வரி : வைரமுத்து


ஆத்தாடி பாவாட காத்தாட
காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட
காத்தாட நெஞ்சு கூத்தாட
குளிக்குது ரோசா நாத்து
தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து
ஏ... குளிக்குது ரோசா நாத்து
தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து
ஆத்தாடி பாவாட காத்தாட
காத்தாட நெஞ்சு கூத்தாட....


அடி நாள் பார்த்து நான் வந்தேன் வீம்பாக
உன் பாவாட பூவில் நான் காம்பாக
காம்பாக வந்தேன் வீம்பாக
உன் வீட்டில் இந்நேரம் ஆள் இல்லையே
ஓடாதே பெண்ணே நான் தேள் இல்லையே
அடி செவ்வாழையே...யே.. யே
உன் வீட்டு செவ்வாழை என் கைகள் பட்டாலே
குலை ரெண்டு தள்ளாதோ வா முல்லையே


ஆத்தாடி பாவாட காத்தாட
காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட
காத்தாட நெஞ்சு கூத்தாட
குளிக்குது ரோசா நாத்து
தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து
ஏ... குளிக்குது ரோசா நாத்து
தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து


மலர் மூடும் நிலை கொஞ்சம் விலகாதோ
அடி நாளெல்லாம் தவம் செய்தேன் நழுவாதோ
நழுவாதோ வந்து தழுவாதோ
நீர் சொட்ட நின்றாலே ஜலதோஷம் தான்
நீ இங்கு போடாதே பகல் வேஷம் தான்
இளம் பூஞ்சோலையே...யே...யே
உன் பூமேனி நான் பார்க்கும் கண்ணாடி ஆகாதோ
ஆனாலும் நீ ரொம்ப தாராளம் தான்


ஆத்தாடி பாவாட காத்தாட
காத்தாடி போல் நெஞ்சு கூத்தாட
காத்தாட நெஞ்சு கூத்தாட
குளிக்குது ரோசா நாத்து
தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து
ஏ... குளிக்குது ரோசா நாத்து
ஏ... தண்ணி கொஞ்சம் ஊத்து ஊத்து
ஆத்தாடி பாவாட காத்தாட
காத்தாட நெஞ்சு கூத்தாட...
                    

Offline Global Angel

Re: இளையராஜா இசை ஹிட்ஸ்
« Reply #3 on: November 08, 2012, 06:31:03 PM »
படம் : நிழல்கள் (1980)
இசை : இளையராஜா
பாடியவர் : S.P. பாலசுப்பிரமணியம்
பாடல் வரி : வைரமுத்து



தன நன.... தன நன..நன....

மடை திறந்து தாவும் நதியலை நான்
மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்
இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்
நினைத்தது பலித்தது ஹோ...
தன நன... நா... தன நன..நன.... நா...
தன நன... நா... தன நன..நன.... நா...


ஹேய்... ஹோ... பபப.... பபபப.....
காலம் கனிந்தது கதவுகள் திறந்தது
ஞானம் விளைந்தது நல்லிசை பிறந்தது
புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே


புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே
விரலிலும் குரலிலும் ஸ்வரங்களின் நாட்டியம்
அமைத்தேன் நான்


மடை திறந்து தாவும் நதியலை நான்
மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்
இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்
நினைத்தது பலித்தது ஹோ.....

லல... லா... லல... லலலா....
நேற்றேன் அரங்கிலே நிழல்களின் நாடகம்
இன்றேன் எதிரிலே நிஜங்களின் தரிசனம்
வருங்காலம் வசந்த காலம் நாளும் மங்கலம்


வருங்காலம் வசந்த காலம் நாளும் மங்கலம்
இசைகென இசைகின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம்
எனக்கே தான்...

மடை திறந்து தாவும் நதியலை நான்
மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்
இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்
நினைத்தது பலித்தது ஹோ...
லல... லா... லல... லலலா....லல... லா... லல... லலலா...



                    

Offline Global Angel

Re: இளையராஜா இசை ஹிட்ஸ்
« Reply #4 on: November 08, 2012, 06:32:05 PM »
படம் : முத்துகாளை (1995)
இசை : இளையராஜா
பாடியவர்கள : S.P. பாலசுப்ரமணியம், S. ஜானகி
பாடல் வரி: வாலி



ம்ம்ம்ம்... ம்ம்ம்... ம்ம்ம் ம்ம்ம்..
ம்ம்ம்ம்... ம்ம்ம்... ம்ம்ம் ம்ம்ம்..

அந்த கஞ்சி கலயத்த வஞ்சி சுமக்கயிலே
இந்த நெஞ்சம் தவிப்பது கொஞ்சமல்ல மயிலே
வெள்ளி மிஞ்சி அணிஞ்சவ கொஞ்சி நடக்கையிலே
அந்த அன்ன நடய நான் என்ன சொல்ல மயிலே.. யே... யே..
தொங்கும் மணி கட்டும் தேரா
தொங்கும் மணிமுத்து ஆறா
மச்சான் மனசள்ளி ஜோரா
மின்னல் இடை வெட்டி போறா
கஞ்சி கலயத்த வஞ்சி சுமக்கயிலே
இந்த நெஞ்சம் தவிப்பது கொஞ்சமல்ல மயிலே.. யே... யே..


புது வெள்ளம் வத்தி போகும் நெஞ்சில் கொண்ட பாசம் வத்தாதம்மா
பொழுதெல்லாம் கைய போட்டு அன்பு கத பேசு விஸ்தாரமா


கதையெல்லாம் சொல்ல சொல்ல தக்கப்படி கூலி தந்திடனும்
அதை நானும் அள்ளி கொடுக்க நேரம் காலம் கூடி வந்திடனும்

உலையும் வச்சி இலையும் வச்சி வாயத்தான் கட்டுறியே

வளையல் கைய வலச்சி போட வாய் ஜாலம் காட்டுறியே

நெஞ்ச துருவி துருவி துளைய போட்டு பருவ பசிய ஊட்டுறியே

இந்த கஞ்சி கலயத்த வஞ்சி சுமக்கயிலே
உந்தன் நெஞ்சம் தவிப்பத கண்டதிந்த மயிலே ஹே.. ஹே.. ஹே

மண் வீடு கட்டி விளையாடும் பருவம்
போனது போனது போனதடி
அது போனது போனது போனதடி
நிஜ வீடு கட்டி குடியேறும் தருணம்
வந்தது வந்தது வந்ததடி
அது வந்தது வந்தது வந்ததடி
இது சரியான் ஜோடி
விலகாது கூடி... இனியும்
ஓஓ...... ஓஓ.... ஓஓ....

மனசுக்குள் உன்னத்தானே சித்திரமா மாட்டி வச்சிருக்கேன்

உசுருக்குள் உன்னத்தானே பத்திரமா பூட்டி வச்சிருகேன்

இரவெல்லாம் சேதி சொல்ல வெண்ணிலவ தூது விட்டுருக்கேன்

உந்தன் சேதியெல்லாம் அறிஞ்சி நானும் பாடுபட்டுருக்கேன்

காத்திருக்கேன் சேதி சொல்லு பேசாத ஆசை மனம்

கழுத்தில் முணு முடிய போடு பேசாது சாதிசனம்

இந்த உலகம் அறிய உறவும் புரிய விரகம் தணிய வேளை வரும்

இந்த கஞ்சி கலயத்த வஞ்சி சுமக்கயிலே
உந்தன் நெஞ்சம் தவிப்பது கண்டதிந்த மயிலே
தொங்கும் மணி கட்டும் தேரு
தொங்கும் மணிமுத்து ஆறு
பதியம் போட்டாலே பாரு
இங்கு உன விட்டா யாரு

கஞ்சி கலயத்த வஞ்சி சுமக்கயிலே
இந்த நெஞ்சம் தவிப்பது கொஞ்சமல்ல மயிலே ஹே.. ஹே... ஹே...
                    

Offline Global Angel

Re: இளையராஜா இசை ஹிட்ஸ்
« Reply #5 on: November 08, 2012, 06:35:27 PM »
படம் : முதல் வசந்தம் (1986)
இசை : இளையராஜா
பாடியவர் : இளையராஜா
பாடல் வரி : வைரமுத்து




ஆறும் அது ஆழமில்ல அது சேரும் கடலும் ஆழமில்ல
ஆறும் அது ஆழமில்ல அது சேரும் கடலும் ஆழமில்ல
ஆழம் எது அய்யா அந்த பொம்பள மனசுதான்யா
ஆழம் எது அய்யா அந்த பொம்பள மனசுதான்யா
அடி அம்மாடி அதன் ஆழம் பார்த்ததாரு?
அடி ஆத்தாடி அத பார்த்த பேர கூறு நீ
ஆறும் அது ஆழமில்ல அது சேரும் கடலும் ஆழமில்ல
ஆழம் எது அய்யா அந்த பொம்பள மனசுதான்யா
ஆழம் எது அய்யா அந்த பொம்பள மனசுதான்யா

மாடி வீட்டு கன்னி பொண்ணு மனசுகுள்ளே ரெண்டு கண்ணு
 ஏழ கண்ண ஏங்க விட்டு இன்னும் ஒன்ன தேடுதம்மா
 கண்ணுகுள்ளே மின்னும் மையி உள்ளுகுள்ளே எல்லாம் பொய்யி
சொன்ன சொல்லு என்ன ஆச்சு சொந்தமெல்லாம் எங்கே போச்சு
 நேசம் அந்த பாசம் அது எல்லாம் வெளி வேஷம்
திரை போட்டு செஞ்ச மோசமே
 
ஆறும் அது ஆழமில்ல அது சேரும் கடலும் ஆழமில்ல
ஆழம் எது அய்யா அந்த பொம்பள மனசுதான்யா
ஆழம் எது அய்யா அந்த பொம்பள மனசுதான்யா


தண்ணியிலே கோலம் போடு ஆடி காத்தில் தீபம் ஏத்து
ஆகாயத்தில் கோட்ட கட்டு அந்தரத்தில் தோட்டம் போடு
ஆண்டவனை கூட்டி வந்து அவனை அங்கே காவல் போடு
அத்தனையும் நடக்குமய்யா ஆசை வச்சா கிடைக்குமய்யா
ஆனா கிடைக்காது நீ ஆச வைக்கும் மாது
அவ நெஞ்சு யாவும் வஞ்சமே

 ஆறும் அது ஆழமில்ல அது சேரும் கடலும் ஆழமில்ல
ஆழம் எது அய்யா அந்த பொம்பள மனசுதான்யா
ஆழம் எது அய்யா அந்த பொம்பள மனசுதான்யா
அடி அம்மாடி அதன் ஆழம் பார்த்ததாரு?
அடி ஆத்தாடி அத பார்த்த பேர கூறு நீ
ஆறும் அது ஆழமில்ல அது சேரும் கடலும் ஆழமில்ல
ஆழம் எது அய்யா அந்த பொம்பள மனசுதான்யா
ஆழம் எது அய்யா அந்த பொம்பள மனசுதான்யா...
                    

Offline Global Angel

Re: இளையராஜா இசை ஹிட்ஸ்
« Reply #6 on: November 08, 2012, 06:36:06 PM »
படம்: கண்ணுகொரு வண்ணக்கிளி
இசை: இளையராஜா
பாடியவர்: இளையராஜா


யார் அழுது யார் துயரம் மாறும்
யார் பிரிவை யார் தடுக்கக் கூடும்
உன் காதில் விழாதோ
என் கண்ணே என் நெஞ்சின் சோக ராகம்
யார் அழுது யார் துயரம் மாறும்
யார் பிரிவை யார் தடுக்கக் கூடும்


நீ தந்த பாசம் என் காதல் நேசம்
எல்லாமும் இன்று மாயங்களா
நீ தந்த பாசம் என் காதல் நேசம்
எல்லாமும் இன்று மாயங்களா
கங்கை நீர் கூட தீயாகும்
எங்கே என் சோகம் மாறும்
கங்கை நீர் கூட தீயாகும்
எங்கே என் சோகம் மாறும்
நீ போன பாதை நான் தேடும் வேளை
என் கண்ணே என் நெஞ்சின் சோக ராகம்
யார் அழுது யார் துயரம் மாறும்
யார் பிரிவை யார் தடுக்கக் கூடும்


இன்பங்கள் என்று நாம் தேடிச் சென்று
துன்பங்கள் என்னும் ஊர் சேர்கிறோம்
இன்பங்கள் என்று நாம் தேடிச் சென்று
துன்பங்கள் என்னும் ஊர் சேர்கிறோம்
பாசம் நாம் போட்ட நீர்க்கோலம்
பந்தம் தான் வாழ்வின் துன்பம்
பாசம் நாம் போட்ட நீர்க்கோலம்
பந்தம் தான் வாழ்வின் துன்பம்
தாய் என்னும் தெய்வம் சேய் வாழத்தானே
என் கண்ணே என் நெஞ்சின் சோக ராகம்
யார் அழுது யார் துயரம் மாறும்
யார் பிரிவை யார் தடுக்கக் கூடும்
உன் காதில் விழாதோ
என் கண்ணே என் நெஞ்சின் சோக ராகம்
யார் அழுது யார் துயரம் மாறும்
யார் பிரிவை யார் தடுக்கக் கூடும்...
                    

Offline Global Angel

Re: இளையராஜா இசை ஹிட்ஸ்
« Reply #7 on: November 08, 2012, 06:36:56 PM »
படம்: அலைகள் ஓய்வதில்லை
இசை: இளையராஜா
பாடியவர்: S ஜானகி
பாடலாசிரியர்: வைரமுத்து



புத்தம் புது காலை
பொன்னிற வேளை
என் வாழ்விலே
தினந்தோறும் தோன்றும்
சுகராகம் கேட்கும்
எந்நாளும் ஆனந்தம்
(புத்தம்...)

பூவில் தோன்றும் வாசம்
அதுதான் ராகமோ
இளம் பூவை நெஞ்சில் தோன்றும்
அதுதான் தாளமோ
மனதின் ஆசைகள்
மலரின் கோலங்கள்
குயிலோசையின் பரிபாஷைகள்
அதிகாலையின் வரவேற்புகள்
(புத்தம்....)

வானில் தோன்றும் கோலம்
அது யார் போட்டதோ
பனி வாடை வீசும் காற்றின்
சுகம் யார் தந்ததோ
வயதில் தோன்றிடும்
நினைவில் ஆனந்தம்
வளர்ந்தாடுது இசைபாடுது
வழிந்தோடுது சுவைகூடுது...
                    

Offline Global Angel

Re: இளையராஜா இசை ஹிட்ஸ்
« Reply #8 on: November 08, 2012, 06:38:33 PM »
படம்: கோபுர வாசலிலே
இசை: இளையராஜா
பாடியவர்: ஜானகி



தாலாட்டும் பூங்காற்று நானல்லவா
நீ கேட்டுப் பாராட்டு ஓ மன்னவா
வருவாயோ வாராயோ
ஓ நெஞ்சமே ஓ நெஞ்சமே
என் நெஞ்சமே உன் தஞ்சமே

நள்ளிரவில் நான் கண்விழிக்க
உன் நினைவில் என் மெய்சிலிர்க்க
பஞ்சணையில் நீ முள் விரித்தாய்
பெண் மனதை நீ ஏன் பறித்தாய்
ஏக்கம் தீயாக ஏதோ நோயாக
காணும் கோலங்கள் யாவும் நீயாக
வாசலில் மன்னா உன் தேர் வர ஆடுது பூந்தோரணம்

எப்பொழுதும் உன் சொப்பனங்கள்
முப்பொழுதும் உன் கற்பனைகள்
சிந்தனையில் நம் சங்கமங்கள்
ஒன்றிரண்டா என் சஞ்சலங்கள்
காலை நான் பாடும் காதல் பூபாளம்
காதில் கேட்காதோ கண்ணா எந்நாளும்
ஆசையில் நாள்தோறும் நான் தொழும் ஆலயம் நீயல்லவா...
                    

Offline Global Angel

Re: இளையராஜா இசை ஹிட்ஸ்
« Reply #9 on: November 08, 2012, 06:40:05 PM »
படம்: அன்புள்ள ரஜினிகாந்த்
இசை: இளையராஜா
பாடியவர்: K.J. யேசுதாஸ்



ரஜினி அங்கிள்...

முத்து மணி சுடரே வா
முல்லை மலர் சரமே வா

முத்து மணி சுடரே வா
முல்லை மலர் சரமே வா
கண்ணுரங்க நேரமானதே
கண்ணே என் பொண்ணே தாலேலோ

ம்ஹ்ஹூஊம் நான் தூன்க மாட்டேன்
அங்கிள் நான் ஒளிஞ்சுக்கிறேன்.. என்ன புடிங்க பாக்கலாம்

ஆயிரம் பூவோடு பாடிடும் வண்டே
ஆசைகள் பூத்தாடும் தேன்மொழி எங்கே
அழகாய் நாள் தோறும்
புதுமை கொண்டாடும்
மலரே நீ பேசு...அவளைக் கண்டாயோ
தானாக தள்ளாடும் பூவண்ணமே
தானாக தள்ளாடும் பூவண்ணமே
உடைகள் அணிந்து கனவு சுமந்து
நடந்த நிலவை நீயும் தேடுவாய்

ரஜினி அங்கிள்...நான் இங்க இருக்கேன்...இங்க...இங்க...

முத்து மணி சுடரே வா
முல்லை மலர் சரமே வா
கண்ணுரங்க நேரமானதே
கண்ணே என் பொண்ணே தாலேலோ

காற்றினில் தேர் போல ஓடிடும் மானே
தன் வழி போனாளே...கனிமொழி எங்கே
அலை போல் பாய்ந்தோடும் முயலே நீ சொல்லு
தனியே பார்த்தாயோ...அவளும் வந்தாளோ
நான் தேடும் பொன்மாலை கண்டேனடி
நான் தேடும் பொன்மாலை கண்டேனடி
அசைந்து குலுங்கி சிரித்து சிரித்து
ஒளிந்த பதுமை நேரில் வந்தது...
                    

Offline Global Angel

Re: இளையராஜா இசை ஹிட்ஸ்
« Reply #10 on: November 08, 2012, 06:41:20 PM »
படம்: தூறல் நின்னு போச்சு
இசை: இளையராஜா
பாடியவர்: s.J.ஜானகி, மலேசியா வாசுதேவன்
பாடலாசிரியர்: வைரமுத்து



தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி தானே கொஞ்சியதோ
இனி தஞ்சம் மல்லிகை மஞ்சம் என்றிவன் தோழில் துஞ்சியதோ...

மலர்மாலை தலையணையாய்
சுகமே பொதுவாய்
ஒருவாய் அமுதம் மெதுவாய் பருகியபடி

காவல் நூறு மீறி
காதல் செய்யும் தேவி
உன் சேலையில் பூ வேலைகள்
உன் மேனியில் பூஞ்சோலைகள்

அந்திப் பூ விரியும்
அதன் ரகசியம் சந்தித்தால் தெரியும்
இவளின் கணவு கனியும் வரையில்
விடியாது திருமகள் இரவுகள்


ஆடும் பொம்மை மீது
ஜாடை சொன்ன மாது

லாலா லாலலாலா லால லால லாலா

கண்ணோடு தான் போராடினாள்
வேர்வைகளின் நீராடினாள்

ராராரரா ராராரரா ராராரரா ராராரரா

அன்பே ஆடை கொடு
எனை அனுதினம் அள்ளி சூடிவிடு

இதழில் இதழால் கடிதம் எழுது
ஒரு பேதை உறங்கிட மடி கொடு...
                    

Offline Global Angel

Re: இளையராஜா இசை ஹிட்ஸ்
« Reply #11 on: November 08, 2012, 06:42:11 PM »
படம்: முள்ளும் மலரும்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: யேசுதாஸ்
பாடலாசிரியர்: கண்ணதாசன்



செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்
என் மீது மோதுதம்மா

பூ வாசம் மேடை போடுதம்மா
பெண்போல ஜாடை பேசுதம்மா
அம்மம்மா ஆனந்தம்

வளைந்து நெளிந்து போகும்பாதை மங்கை மோக கூந்தலோ
மயங்கி மயங்கி செல்லும் வெள்ளம் பருவ நாண ஊடலோ
ஆலங்கொடி மேலே கிளி தேன் கனிகளை தேடுது
ஆசை குயில் பாஷை இன்றி ராகம் என்ன பாடுது
காடுகள் மலைகள் தேவன் கலைகள்

அழகு மிகுந்த ராஜகுமாரி மேகமாக போகிறாள்
ஜரிகை நெளியும் சேலை கொண்டு மலையை மூட பார்க்கிறாள்
பள்ளம் சிலர் உள்ளம் என ஏன் படைத்தான் ஆண்டவன்
பட்டம் தர தேடுகின்றேன் எங்கே அந்த நாயகன்
மலையின் காட்சி இறைவன் ஆட்சி

இளைய பருவம் மலையில் வந்தால் ஏகம் சொர்க்க சிந்தனை
இதழில் வருடும் பனியின் காற்று கம்பன் செய்த வர்ணனை
ஓடை தரும் வாடை காற்று வான் உலகை காட்டுது
உள்ளே வரும் வெள்ளம் ஒன்று எங்கோ என்னை கூட்டுது
மறவேன் மறவேன் அற்புத காட்சி...
                    

Offline Global Angel

Re: இளையராஜா இசை ஹிட்ஸ்
« Reply #12 on: November 08, 2012, 06:42:57 PM »
படம்: ரிக்ஷா மாமா
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், S ஜானகி



எண்ணம் எனும் ஏட்டில்
நான் பாடும் பாட்டில்
நீ வாழ்கிறாய்..
நித்தம் வரும் ஊஞ்..

ஐயய்யே.. கொஞ்சம் இருங்க
கொஞ்சம் இருங்க..
என்னாங்க பாடுறீங்க?
அப்படியில்லை..
நான் பாடுறேன் பாருங்க..

வைகை நதியோரம் பொன்மாலை நேரம் காத்தாடுது
கள்வடியும் பூக்கள் காத்தோடு சேர்ந்தே கூத்தாடுது
இது அன்பின் வேதம்
அதை நாளும் ஓதும்
இது அன்பின் வேதம் நாளும் ஓதும் காத்தே

வைகை நதியோரம் பொன்மாலை நேரம் காத்தாடுது
ஆமா..
கள்வடியும் பூக்கள் காத்தோடு சேர்ந்தே கூத்தாடுது
கரெக்ட்டு.. இது கரெக்ட்டு..

மாலை மழை மேகம் தன்னை மெதுவாய் அழைத்தேன்
துணை வர வேண்டுமென்று தூது சொல்லத்தான்
மூண்டு வரும் மோகம் தன்னை மடலாய் வரைந்தேன்
நினைவுகள் பூத்த வண்ணம் நானும் மெல்லத்தான்
ஓர் சோலை புஷ்பம்தான்
திரு கோயில் சிற்பம்தான்

இதன் ராகம் தாளம் பாவம் அன்பை கூறும்


யாரின் மனம் யாருக்கென்று இறைவன் வகுத்தான்
இரு மனம் சேர்வதிங்கு தேவன் சொல்லித்தான்
பூஜைக்கிது ஏற்றதென்று மலரை படைத்தான்
தலைவனும் மாலையென்று சூடிக்கொள்ளத்தான்
ஓர் நெஞ்சின் ராகம்தான்
விழி பாடும் நேரம்தான்
                    

Offline Global Angel

Re: இளையராஜா இசை ஹிட்ஸ்
« Reply #13 on: November 08, 2012, 06:43:35 PM »
படம்: நாடோடி பாட்டுக்காரன்
பாடியவர்கள்:டாக்டர்.எஸ்.பி.பி. ஸ்வரணலதா
இசை:இளையராஜா


காதலுக்கு கண்களில்லே மானே
கண்ணுக்குள்ள உன்னை வெச்சேன் நானே
காதல் ஒரு துன்பக் கதையோ
காலம் தந்த மாயவலையோ
கங்கை வெள்ளம் கண்ணில் கொண்டேன் நானே
காதலுக்கு கண்களில்லே மானே
கண்ணுக்குள்ள உன்னை வெச்சேன் நானே

என் ராகம் எல்லாம் இங்கே நீ தானே
உன்னை எண்ணாத நாளேது பூ மானே
அடி உன்னோடு நானும் வந்து சேராது
என் தேகம் மண்ணில் இங்கே சாயாது
கங்கைக்கு ஒரு கரைக் கட்டலாம்
காவிரிக்கும் அணை கட்டலாம்
காதலுக்கு வேலி கட்டலாமா
ஏ மண்ணில் வெச்சு மூடும் விதை யாவும் பயிராகும்
மழை மேகம் நெருப்பாகி போகாதம்மா

காதலுக்கு கண்கள் இல்லை ராசா
கண்ணுக்குள்ள உன்னை வெச்சேன் ரோசா
காதலுக்கு கண்கள் இல்லை ராசா

தண்ணீரில் நீந்திச் செல்லும் மீன் ஒன்று
சுடு வெண்ணீரில் விழுந்தாலே என்னாகும்
இளம்?? தண்ணீரில் ஆடும் இந்த ரோஜாப்பு
அது முள் மீது விழுந்தாலே பொல்லாப்பு
எப்பவுமே மனசில் ஒன்னு
எண்ணி எண்ணி நிறுத்தும் என்னை
கவிதை?? செய்வார் இங்கு யாரு
நல்ல துள்ளி வரும் காற்று தடைக் காற்று தயங்காது
எந்நாளூம் என் நேசம் மாறாதய்யா

காதலுக்கு கண்களில்லே மானே
கண்ணுக்குள்ள உன்னை வெச்சேன் நானே
காதல் ஒரு துன்பக் கதையோ
காலம் தந்த மாயவலையோ
கங்கை வெள்ளம் கண்ணில் கொண்டேன் நானே
காதலுக்கு கண்களில்லே மானே
கண்ணுக்குள்ள உன்னை வெச்சேன் நானே
காதலுக்கு கண்களில்லே மானே...
                    

Offline Global Angel

Re: இளையராஜா இசை ஹிட்ஸ்
« Reply #14 on: November 08, 2012, 06:45:26 PM »
இசை : இளையராஜா
பாடல் : கவிஞர் வாலி
குரல்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம் - ஜானகி
வருடம் : 1993




நிலவே முகங்காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு
அலை போல் சுதி மீட்டு இனிதான மொழி பேசு
இளம் பூங்கொடியே இது தாய் மடியே

நிலவே முகம் காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு
அலை போல் சுதி மீட்டு இனிதான மொழி பேசு
அணைத்தேன் உனையே இது தாய் மடியே

( நிலவே முகங்காட்டு...

பனி போல நீரின் ஓடையே கலங்கியதென்ன மாமா
இனிதான தென்றல் உன்னையே
ஊரும் குறை சொல்லலாமா

காலம் மாறும் கலக்கம் ஏனம்மா
இரவில்லாமல் பகலும் ஏதம்மா
நான் உன் பிள்ளை தானம்மா

நானும் கண்ட கனவு நூறய்யா
எனது தாயும் நீங்கள் தானய்யா
இனி உன் துணை நானய்யா

எனை சேர்ந்தது கொடி முல்லையே
இது போலே துணையும் இல்லையே
இனி நீ என் தோளில் பிள்ளையே

நிலவே முகங்காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு
அணைத்தேன் உனையே இது தாய் மடியே

சுமை போட்டு பேசும் ஊரென்றால்
மனம் தவித்திடும் மானே
இமை நீரும் கண்ணின் நீரென்றால்
தினம் குடிப்பவன் நானே

மாலையோடு நடக்கும் தேரைய்யா
நடக்கும் போது வணங்கும் ஊரைய்யா
உன்னை மீற யாரைய்யா

மாமன் தோளில் சாய்ந்த முல்லையே
மயங்கி மயங்கி பேசும் கிள்ளையே
நீ என் வாழ்வின் எல்லையே

இதை மீறிய தவம் இல்லையே
இனி எந்தக் குறையுமில்லையே
தினம் தீரும் தீரும் தொல்லையே

நிலவே முகங்காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு
அலை போல் சுதி மீட்டு இனிதான மொழி பேசு
இளம் பூங்கொடியே இது தாய் மடியே

நிலவே முகங்காட்டு எனைப் பார்த்து ஒளி வீசு...