Author Topic: இளையராஜா இசை ஹிட்ஸ்  (Read 20388 times)

Offline Global Angel

Re: இளையராஜா இசை ஹிட்ஸ்
« Reply #15 on: November 08, 2012, 06:46:35 PM »
Movie name: Chandra Lekha (1995)
Music: Ilaiyaraja
Singer(s): Unni Krishnan




அல்லா உன் ஆணைப்படி எல்லாம் நடக்கும் ஓ எல்லாம் நடக்கும்
தொல்லை இல்லாத வண்ணம் நன்மை பிறக்கும் ஓர் நன்மை பிறக்கும்
உயிர் காதல் இன்று உண்டானது இரு ஜீவன் ஒன்று என்றானது
எந்த பிறப்பும் நீயும் நானும் கூட

காதலுக்கு உண்டு கல்யாண ராசி சேர்த்து வைக்கும் நம்மை அல்லாவின் ஆசி
வாடுவதோ எந்தன் மும்தாஜின் தேகம் ஓடி வந்தேன் இனி நீதான் என் தேகம்
நீ நீங்கி இருந்தால் சோலைவனம் பாலை ஆகும் எனக்கு
நீ கூட நடந்தால் வேறு ஒரு சொர்க்கம் இங்கே எதற்கு
உன்னை நான் என்னை நீ காணும் போது கண்கள் கல்யாண பண் பாடுமே

பூப்பறித்தேன் இந்த பூம்பாவைக்காக நான் தொடுத்தேன் இந்த பூமாலைக்காக
மாலையுடன் திருமாங்கல்யம் சூடி கையணைபேன் நல்ல கன்னூஞ்சல் ஆடி
கேள் காது குளிர காதல் எனும் கீதை நாளும் படிப்பேன்
நான் காலம் முழுதும் கண்ணன் தொடும் ராதை போல இருப்பேன்
அம்மம்மா கண்ணம்மா ஆசை என்னும் மழை ஓயாது ஓயாதம்மா...
                    

Offline Global Angel

Re: இளையராஜா இசை ஹிட்ஸ்
« Reply #16 on: November 08, 2012, 06:53:01 PM »
படம்: இதய கோவில்
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்


கூட்டத்திலே கோவில் புறா
யாரை இங்கு தேடுதம்மா
கொலுசுச் சத்தம் கேட்கையிலே
மனம் தந்தியடிக்குது தந்தியடிக்குது
குமரிப் பெண்ணப் பார்க்கையிலே
ஒளி மின்னலடிக்குது மின்னலடிக்குது
(கூட்டத்தில..)

நான் பாடும் ராகங்கள் யார் தந்தது
என் காதல் தேவி நீ தந்தது
என் பாடல் உன் நெஞ்சில் யாழ் மூட்டுது
என் ஆசை உன்னைத் தாளாட்டுது
பூங்குயிலே பூங்குயிலே உந்தன் பாதையிலே
ஆனந்தத் தேன் பொழிவேன்
பாவை உன்னை எண்ணிக்கொண்டு
பாடுகின்றேன் பாடலொன்று
நெஞ்சுக்குள்ளே நீயும் வந்து
வாழுகின்றாய் கோவில் கொண்டு
ஆனந்த மேடைல் பூவிழி ஜாடையில்
ஆயிரம் காவிய நாடகமாடிட
எண்ணுது என் மனமே
(கூட்டத்திலே..)

நீதானே நானாடும் பிருந்தாவனம்
நின்றாடும் தேகம் ரோஜா...
                    

Offline Global Angel

Re: இளையராஜா இசை ஹிட்ஸ்
« Reply #17 on: November 08, 2012, 06:54:20 PM »
படம்: மகாநதி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், மகாநதி ஷோபனா, உமா ரமணன்



ஸ்ரீரங்க ரங்க நாதனின்
பாதம் வந்தனம் செய்யடி
ஸ்ரீதேவி ரங்க நாயகி
நாமம் சந்ததம் சொல்லடி
இன்பம் பொங்கும் தேன் கங்கை
நீராடி தென்றல் போல நீ ஆடடி
மஞ்சல் குங்குமம் மங்கை நீ
சூடி தெய்வப் பாசுரம் பாடடி
(ஸ்ரீரங்க...)

கொள்ளிடம் நீர் மீது நர்த்தனம் ஆடும்
மெல்லிய பூங்காற்று மந்திரம் பாடும்
செங்கனி மேலாடும் மாமரம் யாவும்
ரங்கனின் பேர்சொல்லி சாமரம் வீசும்
அந்நந்நாளில் சோழ மன்னர்கள் ஆக்கி வைத்த நல் ஆலயம்
அம்மாடி என்ன சொல்லுவேன் கோவில் கோபுரம் ஆயிரம்
தேனாக நெஞ்சை அள்ளுமே தெய்வ பூந்தமிழ்ப் பாயிரம்
கன்னடம் தாய் வீடு என்றிருந்தாலும்
கன்னி உன் மருவீடு தென்னகமாகும்
கங்கையின் மேலான காவிரித் தீர்த்தம்
மங்கல நீராட முன் வினை நஞ்சை புஞ்சங்கள் தானடி
ஊர் வஞ்சம் என்ன கூருவேன் தேவ லோகமே தானடி
வேரெங்கு சென்ற போதிலும் இந்த இன்பங்கள் ஏதடி...
                    

Offline Global Angel

Re: இளையராஜா இசை ஹிட்ஸ்
« Reply #18 on: November 08, 2012, 06:55:19 PM »
படம்: சின்ன கவுண்டர்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், P சுசீலா



முத்து மணி மாலை
உன்னை தொட்டு தொட்டு தாலாட்ட
வெட்கத்திலே சேலை
கொஞ்சம் விட்டு சிட்டு போராட
உள்ளத்திலே நீ தானே
உத்தமி உன் பேர் தானே
ஒரு நந்தவன பூ தானே
புது சந்தனமும் நீ தானே
(முத்து..)

கொலுசு தான் மௌனமாகுமா
மனசு தான் பேசுமா
மேகம் தான் நிலவு மூடுமா
மவுசு தான் குறையுமா
நேசப்பட்டு வந்த பாச கோடிக்கு
காசி பட்டு சொந்தமாகாதே
வாக்குப்பட்டு வந்த வாசமலரே
வண்ணம் கலையாத ரோசாவே
தாழம் பூவில் வீசும் காத்திலா
பாசம் தேடி மாமா வா
(முத்து..)

காலிலே போட்ட மிஞ்சி தான்
காதுல பேசுதே
கழுத்துல போட்ட தாலிதான்
காவியம் பாசுதே
நெத்திச்சுட்டி ஆடும் உச்சந்தலையில்
பொட்டு வெச்சதாரு நாந்தானே
அத்தி மரப்பூவும் அச்சப்படுமா
பக்கத்துணையாரு நீதானே
ஆசை பேச்சுல பாதி மூச்சிலே
லேசா தேகம் சூடேர...
                    

Offline Global Angel

Re: இளையராஜா இசை ஹிட்ஸ்
« Reply #19 on: November 08, 2012, 06:58:30 PM »
படம்: இதயம்
இசை: இளையராஜா
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்



இதயமே இதயமே
உன் மௌனம் என்னை கொல்லுதே
இதயமே இதயமே
என் விரகம் என்னை வாட்டுதே
நிலவில்லாத நீல வானம் போலவே
உயிரில்லாமல் எனது காதல் ஆனதே
(இதயமே..)

பனியாக உருகி நதியாக மாறி
அலைவீசி விளையாடி இருந்தேன்
தனியாக இருந்தும் உன் நினைவோடு வாழ்ந்து
உயிர் காதல் உறவாடி கலந்தே நின்றேன்
இது எந்தன் வாழ்வில் நீ போட்ட கோலம்
இது எந்தன் வாழ்வில் நீ போட்ட கோலம்
கோலம் கலந்ததே புது சோகம் பிறந்ததே
நீயில்லாத வாழ்வு இங்கு காணல்தான்
(இதயமே..)

என் ஜீவ ராகம் கலந்தாடும் காற்று
உன் மீது படவில்லை துடித்தேன்
அரங்கேரும் பாடல் உலகெங்கும் கேட்டும்
உன் நெஞ்சை தொடவில்லை ஏன் சொல்லம்மா
இசைக்கின்ற கலைஞன் நானாகி போனேன்
இசைக்கின்ற கலைஞன் நானாகி போனேன்
ஜீவன் நீயம்மா என் பாடல் நீயம்மா
நீயில்லாத வாழ்வு இங்கு காணல்தான்...
                    

Offline Global Angel

Re: இளையராஜா இசை ஹிட்ஸ்
« Reply #20 on: November 08, 2012, 07:00:42 PM »
படம்: சின்ன மாப்பிள்ளை
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மனோ, S ஜானகி



காதோரம் லோலாக்கு கதை சொல்லுதய்யா
காத்தாடும் மேலாக்கு உனை பின்னுதையா
காதோரம் லோலாக்கு கதை சொல்லுதடி
காத்தாடும் மேலாக்கு உனை பின்னுதடி
உன் முகத்தை பார்க்கையில என் முகத்தை நான் மறந்தேன்
(காதோரம்..)

நான் விரும்பும் மாப்பிள்ளைக்கு
நாள் கணக்கா காத்திருந்தேன்
(நான் விரும்பும்..)
வந்தாயே நீயும் வாசலை தேடி
கண்டேனே நானும் எனக்கொரு ஜோடி
உன்னாட்டந்தான் தங்கத்தேரு
கண்டதில்லை எங்க ஊரு
காதல் போதை தந்த கள்ளி
கந்தன் தேடி வந்த வள்ளி
நீ தொடத்தானே நான் பொறந்தேனே
நாளொரு வண்ணம் நான் வளர்ந்தேன்
(காதோரம்..)

வானவில்லை விலை கொடுத்து
வாங்கிடத்தான் காசிருக்கு
(வானவில்லை..)
என் கூட உன் போல் ஓவியப் பாவை
இல்லாமல் போனால் நான் ஒரு ஏழை
என்னாளும் நான் உங்க சொத்து
இஷ்டம் போல அள்ளி கட்டு
மேலும் கீழும் மெல்லத் தொட்டு
மேளம் போல என்னை தட்டு
நான் அதுக்காக காத்திருப்பேன்
நீ வரும் பாதை பார்த்திருப்பேன்...
                    

Offline Global Angel

Re: இளையராஜா இசை ஹிட்ஸ்
« Reply #21 on: November 08, 2012, 07:02:12 PM »
படம்: பணக்காரன்
இசை: இளையராஜா
பாடியவர்: மனோ / S ஜானகி


நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணுதான்
பேரு விளங்க இங்கு வாழணும்
சோல வனத்தில் ஒரு ஜோடிக்குயில் போலத்தான்
காலம் முழுக்க சிந்து பாடணும்
ஒன்னுக்கொன்னு பக்கத்திலே
பொண்ணு புள்ள நிக்கையிலே
கண்ணுபடும் மொத்தத்திலே
கட்டழகன் அம்மாடி என்ன சொல்ல
(நூறு வருஷம்..)

உசில மணியாட்டம் ஒடம்பத்தான் பாரு
தெருவில் அசைஞ்சாடும் திருவாரூர் தேரு
ஓம குச்சிப்போல் புடிச்சாரு தாரம்
தாவி அணைச்சாக்கா தாங்காது பாரம்
இவரு ஏழு அடி
நடக்கும் ஏணியடி
நிலவை நின்னுக்கிட்டே தொட்டுடுவார் பாரு
மனைவி குள்ளமணி
உயரம் மூனு அடி
இரண்டும் இணைஞ்சிருந்தா கேளி பண்ணும் ஊரு
ரெட்ட மாட்டு வண்டி வரும்போது
நெட்டை குட்டை என்றும் இணையாது
இந்த ஒட்டகந்தான்
கட்டிக்கிட குட்ட வாத்தை புடிச்சான்
நூறு வருஷம் ஹே ஹே..
(நூறு பருஷம்...)

புருஷன் பொஞ்சாதி பொருதந்தான் வேணும்
பொருத்தம் இல்லாட்டி வருத்தம்தான் தோணும்
அமைஞ்சா அது போல கல்யாணம் பண்ணு
இல்ல நீ வாழு தனியாழா நின்னு
முதல்ல யோசிக்கணும்
பிறகு நேசிக்கணும்
மனசு ஏத்துக்கிட்டா சேத்துக்கிட்டு வாழு
உனக்கு தகுந்தபடி குணத்தில் சிறந்தபடி
இருந்தா ஊரறிய மாலை கட்டி போடு
சொத்து வீடு வாசல் இருந்தாலும்
ஹே சொந்தம் பந்தம் எல்லாம் அமைஞ்சாலும்
அட உள்ளம் ரெண்டும் ஒட்ட விட்டால்
கல்யாணம்தான் கசக்கும்...
                    

Offline Global Angel

Re: இளையராஜா இசை ஹிட்ஸ்
« Reply #22 on: November 08, 2012, 07:03:13 PM »
படம் : செண்பகமே செண்பகமே
இசை : இளையராஜா
குரல் : ஜானகி , மனோ



வாசலிலே பூசணிப்பூ வச்சிப்புட்டா வச்சிப்புட்டா
நேசத்திலே என் மனசை தச்சிப்புட்டா தச்சிப்புட்டா
பூவும் பூவும் ஒன்னு கலந்தது இப்போது
தேனும்பாலும் பொங்கி வழியுது இப்போது

வாசலிலே பூசணிப்பூ வச்சதென்ன வச்சதென்ன
நேசத்திலே என் மனசை தச்சதென்ன தச்சதென்ன

பிரிச்ச போதும் பிரியவில்லையே சொந்தம் நானே
வழிய மறந்த குயிலும் சேர்ந்தது
கோலம்போட்டு சாடை சொன்னது நானே
கோடு நமக்கு யாரு போட்டது..
நெஞ்சுக்குள்ளே நெஞ்ச வச்சு உள்ளதெல்லாம் கண்டுகிட்டேன்..
நெத்தியிலே பொட்டுவச்சு உங்களைத்தான் தொட்டுக்கிட்டேன்..
நானும் நீயும் ஒன்னாசேந்தா நாளும் நாளும் சந்தோஷம்..
ராகம் தாளம் சேரும் நேரம் ஆனந்தம் பாடும் சங்கீதம்..

வாசலிலே பூசணிப்பூ...

மீண்டும் மீண்டும் கூடி சேருது பொன்னிஆறு
மோகத்தோடு கூடி பாடுது ஆஆஅ
கேட்டுகேட்டு கிறங்கத்தோணுது உங்க பாட்டு..
கேள்வி போல என்னை வாட்டுது
ஆத்து வெள்ளம் மேட்ட விட்டு
பள்ளத்துக்கு ஓடிவரும்
ஆசையிது தேடிக்கிட்டு ஆனந்தமாய் பாடிவரும்
ஏதோ ஒன்னை சொல்லிச்சொல்லி
என்னை இப்ப கிள்ளாதே
போதும் போதும் கண்ணால்
என்ன கட்டி இழுக்கற செண்பகமே!

வாசலிலே பூசணிப்பூ...
                    

Offline Global Angel

Re: இளையராஜா இசை ஹிட்ஸ்
« Reply #23 on: November 08, 2012, 07:04:07 PM »
படம்: எங்க ஊரு பாட்டுக்காரன்
இசை: இளையராஜா
பாடியவர்: மனோ, சித்ரா


மதுர மரிக்கொழுந்து வாசம் - என்
ராசாத்தி உன்னுடைய நேசம்
மானோட பார்வை மீனோட சேரும்
மாறாம என்னைத் தொட்டுப் பேசும் - இது
மறையாத என்னுடைய பாசம்


பொட்டுன்னா பொட்டு வச்சு
வெட்டு வெட்டுன்னு வெட்டிப்புட்டு
பட்டுனு சேலையைக் கட்டி
எட்டு வச்சு நடந்துகிட்டு

கட்டுன்னா கட்டிப்புட்ட
நெஞ்சக் கொஞ்சம் தட்டிப்புட்ட
வெட்டும் இரு கண்ணை வச்சு
என்னைக் கட்டிப் போட்டுப்புட்ட

கட்டு அது உனக்கு மட்டும்தானா
இந்த சிட்டும்கூட சிக்கியது ஏனா
எப்போதோ விட்டக்குறை மாமா
அது இரு உசிரை கட்டுதய்யா தானா
இது இப்போது வாட்டுதுன்னு
பாட்டு ஒன்னை அவுத்துவிடு

(மதுர மரிக்கொழுந்து)

மெட்டுன்னா மெட்டு கட்டி
இட்டு கட்டி பாடிக்கிட்டு
கட்டுனா ராகம் என்னும்
மாலை ஒன்னை கட்டிப்புட்டு

சுத்துனா சுத்தி அதை
என் கழுத்தில் போட்டுப்புட்ட
ஒன்ன மட்டும் விட்டுப்புட்ட
தாலி கட்ட மறந்துப்புட்ட

நீதானே என்னுடைய ராகம்
என் நெஞ்செல்லாம் உன்னுடைய தாளம்
ஏழேழு ஜென்மம் உன்னைப் பாடும்
உன்னோட பாட்டுக்காரன் பாட்டும்
என் மனசேனோ கிறங்குதடி
சிறகடிச்சுப் பறக்குதடி...
                    

Offline Global Angel

Re: இளையராஜா இசை ஹிட்ஸ்
« Reply #24 on: November 08, 2012, 07:05:02 PM »
படம்: ராசாவே உன்னை நம்பி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: மனோ, P சுசீலா



ராசாத்தி மனசுல என் ராசா உன் நெனப்புத்தான்
இந்த ராசாத்தி மனசுல என் ராசா உன் நெனப்புத்தான்
புது நேசம் உண்டானது
இரு நெஞ்சம் கொண்டாடுது
புது நேசம் உண்டானது
இரு நெஞ்சம் கொண்டாடுது

ராசாவின் மனசுல என் ராசாத்தி நெனப்புத்தான்
இந்த ராசாவின் மனசுல என் ராசாத்தி நெனப்புத்தான்

முள்ளிருக்கும் பாதை நீ நடந்த போதும்
முள்ளெடுத்து போட்டு நீ நடக்கலாகும்
வீதியிலே நீ நடந்தா கண்களெல்லாம் உன் மேலேதான்
முள்ளு தச்சா தாங்கும் நெஞ்சம்
கண்கள் தச்சா தாங்காதையா
நெதமும் உன் நெனப்பு
வந்து வெரட்டும் வீட்டில
உன்னை சேர்ந்தாலும் உன் உருவம்
என்னை வாட்டும் வெளியிலே
இது ஏனோ அடி மானே
அத நானோ அறியேனே..
(ராசாத்தி மனசுல..)

செங்குருக்க கோலம் வானத்துல பாரு
வந்து இந்த நேரம் போட்டு வச்சதாரு
சேறும் இள நெஞ்சங்களை
வாழ்த்து சொல்ல கோர்த்தார்களா?
ஊருக்குள்ள சொல்லாததை
வெளியில் சொல்லித் தந்தார்களா?
வானம் போடுது
இந்த பூமி பாடுது
ஊரும் வாட்டுது இந்த உலகம் வாட்டுது
தடை ஏதும் கிடையாது
அதை நானும் அறிவேனே...
                    

Offline Global Angel

Re: இளையராஜா இசை ஹிட்ஸ்
« Reply #25 on: November 08, 2012, 07:06:32 PM »
படம்: இதயத்தை திருடாதே
இசை: இளையராஜா
பாடியவர்: மனோ


ஓ பாப்பா லாலி
கண்மணி லாலி
பொன்மணி லாலி
பாடினேன் கேளடி

நான் தொடைகளில் தாங்கியே தாலாட்டிட
காதலன் குழந்தைதான் காதலி
செவ்விழி கலந்தது பூந்தென்றலில்
கொதித்ததா குளிர்ந்ததா கூறடி
தலை சாய்த்திட மடிபாய் மேல்
திருமேனிக்கு சுகமோ
எந்த நாளிலும் வாடாத
இளந்தாமரை முகமோ
இதைக் காப்பது என்றும் பார்ப்பது
இந்த தாய் மனமே

(ஓ பாப்பா லாலி)

மேகமே ஓரமாய் நீ ஒதுங்கிடு
இரைச்சலோ இடிகளோ வேண்டுமோ
குயிலியே பாடிவா என் பாடலை
நல்லிசை இதயத்தின் நாதமோ
எழும் சந்தமும் இனிதாக
அதன் ஓசைகள் சுகமோ
இந்த நாளொரு அலைபாய
வரும் ஆசைகள் கனவோ
எந்த ஆசையும் நிறைவேறிட
நல்ல நாள் வருமே...
                    

Offline Global Angel

Re: இளையராஜா இசை ஹிட்ஸ்
« Reply #26 on: November 08, 2012, 07:08:16 PM »
படம்: இதயத்தை திருடாதே
இசை: இளையராஜா
பாடியவர்: மனோ, சித்ரா




ஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா
ஏழை காதல் வாழுமோ
இருளும் ஒளியும் சேருமோ
நீயோர் ஓரம் நான் ஓர் ஓரம்
கானல் நீரால் தாகம் தீராது


ஓ ப்ரியா ப்ரியா உன் ப்ரியா ப்ரியா
இணைந்திடாது போவதோ
வானம் பூமி ஆவதோ
காலம் சிறிது காதல் மனது
தேவன் நீதான் போனால் விடாது


தேடும் கண்களே தேம்பும் நெஞ்சமே
வீடும் பொய்யடி வாழ்வும் பொய்யடி


அன்பு கொண்ட கண்களும் ஆசை கொண்ட நெஞ்சமும்
ஆணையிட்டு மாறுமோ பெண்மை தாங்குமோ
ராஜ மங்கை கண்களே என்றும் என்னை மொய்ப்பதோ
வாடும் ஏழை இங்கு ஓர் பாவி அல்லவோ
எதனாலும் ஒரு நாளும் மறையாது பிரேமையும்
எரித்தாலும் மரித்தாலும் விலகாத பாசமோ
கன்னி மானும் உன்னுடன் கலந்ததென்ன பாவமோ
காதல் என்ன காற்றிலே குலைந்து போகும் மேகமோ
அம்மாடி நான் ஏங்கவோ நீ வா வா


ஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா
ஓ ப்ரியா ப்ரியா உன் ப்ரியா ப்ரியா


காளிதாசன் ஏடுகள் கண்ணன் ராசலீலைகள்
பருவமோகம் தந்தது பாவம் அல்லவே
ஷாஜகானின் காதலி தாஜ்மஹால் பூங்கிளி
பாசம் வைத்த பாவம்தான் சாவும் வந்தது
இறந்தாலே இறவாது விளைகின்ற பிரேமையே
அடி நீயே பலியாக வருகின்ற பெண்மையே
விழியில் பூக்கும் நேசமாய் புனிதமான பந்தமாய்
பேசும் இந்த பாசமே இன்று வெற்றி கொள்ளுமே
இளங்கன்னி உன்னுடன் கூட வா வா


ஓ ப்ரியா ப்ரியா என் ப்ரியா ப்ரியா
ஓ ப்ரியா ப்ரியா உன் ப்ரியா ப்ரியா

ஏக்கம் என்ன பைங்கிளி
என்னை வந்து சேரடி
நெஞ்சிரண்டு நாளும் பாட
காவல் தாண்டி பூவை இங்காட
காதல் கீர்த்தனம் காணும் மங்களம்
பிரேமை நாடகம் பெண்மை ஆடிடும்...
                    

Offline Global Angel

Re: இளையராஜா இசை ஹிட்ஸ்
« Reply #27 on: November 08, 2012, 07:09:22 PM »
படம்: நாயகன்
இசை: இளையராஜா
பாடியவர்: மனோ, சித்ரா



நீ ஒரு காதல் சங்கீதம்
வாய்மொழி சொன்னால் தெய்வீகம்

வானம்பாடி பறவைகள் ரெண்டு
ஊர்வலம் எங்கோ போகிறது
காதல் காதல் எனுமொரு கீதம்
பாடிடும் ஓசை கேட்கிறது
இசை மழை எங்கும்
இசை மழை எங்கும் பொழிகிறது
எங்களின் ஜீவன் நனைகிறது
கடலலை யாவும் இசை மகள் மீட்டும்
அழகிய வீணை சுரஸ்தானம்
இரவும் பகலும் ரசித்திருப்போம்

(நீ ஒரு காதல் சங்கீதம்)

பூவைச் சூட்டும் கூந்தலில்
எந்தன் ஆவியை நீ ஏன் சூட்டுகிறாய்?
தேனை ஊற்றும் நிலவினில் கூட
தீயினை நீ ஏன் மூட்டுகிறாய்?
கடற்கரைக் காற்றே
கடற்கரைக் காற்றே வழியை விடு
தேவதை வந்தாள் என்னோடு
மணல்வெளி யாவும் இருவரின் பாதம்
நடந்ததைக் காற்றே மறைக்காதே
தினமும் பயணம் தொடரட்டுமே...
                    

Offline Global Angel

Re: இளையராஜா இசை ஹிட்ஸ்
« Reply #28 on: November 08, 2012, 07:10:30 PM »
படம்: அரங்கேற்ற வேளை
இசை: இளையராஜா
பாடியவர்: மனோ



குண்டு ஒன்னு வச்சிருக்கேன்
வெடி குண்டு ஒன்னு வச்சிருக்கேன்
கன்னி வெடி வச்சிருக்கேன்
என் கண்ணில் திரி வச்சிருக்கேன்
தொட்டால் சிதறிவிடும் தோட்டா வெடிச்சிவிடும்
குண்டு தொலைஞ்சிவிடும் பட்டா தெரிச்சிவிடும்
ஹோ ஹோ ஹோ ஹோய்
(குண்டு ஒன்னு..)

தாய்ப்பாலும் கெட்டுப்போச்சு என்ன பண்ணும் குழந்தை
வாய்காலில் தண்ணி இல்ல தண்ணியிலே மனுஷன்
சுட்டுப்புட்ட ஹீரோ நீதான் தட்டுக்கெட்டா ஜீரோதான்
வெட்டுக்குத்து நீயும் போட்டால் கட்சிக்குள்ள கோட்டாதான்
வீராப்பா மெரட்டி உருட்டும் ஊரெல்லாம் திருட்டு பயக
கெட்டாலும் சுட்டாலும் எல்லோரும் ராஜாங்கதான்
(குண்டு ஒன்னு..)

நெல்லு விளையும் நிலம் வீணாகிப்போச்சு
ஊரில் ஜனம் இருந்தும் காடாகி போச்சு
கெட்ட வேலையானா கூட துட்டு வந்தா தப்பே இல்ல
இஷ்ட்டப்படி விட்டா போதும் அப்பன் போல புள்ளயில்ல
குளிரெல்லாம் விலகிப்போச்சு எல்லாமே பழகிப்போச்சு
வெள்ளைக்கும் சொள்ளைக்கும் அண்ணான்னு சொல்வீங்களே...
                    

Offline Global Angel

Re: இளையராஜா இசை ஹிட்ஸ்
« Reply #29 on: November 08, 2012, 07:11:07 PM »
படம்: உடன்பிறப்பு
இசை: இளையராஜா
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், மனோ


ஏ சாமி வருது சாமி வருது வழியை விடுங்கடா
ஒரு பாட்டு படிச்சு ஆடி குதிச்சு வேட்டு வெடிங்கடா
(ஏ சாமி..)
ஒரு சூடம் ஏத்தி சூரக்காயை போட்டு உடைங்கடா

கணபதி டிங் டிங் டிங் டிங்
கணபதி டிங் டிங் டிங் டிங்
கணபதி டிங் கணபதி டிங்
கணபதி டிங் டிங் டிங் டிங்
(ஏ சாமி..)

அன்னாடந்தான் காத்து மழை
அச்சுறுத்தும் ஆத்தங்கரை
முன்னாலதான் வீற்றிருக்கும் சாமி இவந்தான்
கண்ணாலந்தான் கட்டிக்கலை
பிள்ளை குட்டி பெத்துக்கலை
எல்லாருக்கும் காவல் நிற்கும் ஈசன் மகந்தான்
சின்னஞ்சிறு மூஞ்சூறு
மன்னவனின் பூந்தேரு
பூலோகம் கொண்டாடும் ஒத்த கொம்பந்தான்
செய்யும் தொழில் வாடாமல்
தங்கு தடை வாராமல்
நாம் வாழ காப்பாத்தும் ஆனை முகம்ந்தான்
கொண்டுங்கள் மேளம் தட்டுங்கள் தாளம்
வந்தது பொன்னாளு
நீ தும்பிக்கை மேலே நம்பிக்கை வைச்சா
எப்பவும் நன்னாளு
ஒரு சூடம் ஏத்தி சூரக்காயை போட்டு உடைங்கடா

கணபதி டிங் டிங் டிங் டிங்
கணபதி டிங் டிங் டிங் டிங்
கணபதி டிங் கணபதி டிங்
கணபதி டிங் டிங் டிங் டிங்
(ஏ சாமி..)

விக்னம் தீர்க்கும் விக்னேஷ்வரா
கண கண கண கணபதி
இன்பம் சேர்க்கும் நம்போதரா
கண கண கண கணபதி
சங்கர சுக சங்கடஹரா
கண கண கண கணபதி
கொஞ்சிடும் எழில் கொஞ்சுர முக
கண கண கண கணபதி
பாலகன் வடிவேலவன் அவன் மூத்தவன் எங்கள் கணபதி
காலடி தொடும் சீலறை தினம் காப்பவன் எங்கள் கணபதி

அன்னாளிலே போட்டியிட்டு அம்மையப்பன் காலைத்தொட்டு
சுத்தி வந்து மாம்பழத்தை வாங்கிய சாமி
பின்னாளிலே வேல்முருகன் வள்ளியைத்தான் காதலிச்ச
கல்யாணம்தான் கட்டிவச்சு வாழ்த்திய சாமி
குட்ட குட்ட குனிஞ்சவனும் குட்டிக்கிட்டு கேட்டாக்கா
நாம் வேண்டும் ஆனந்தம் அள்ளிக்கொடுப்பான்
உச்சத்தில உசந்தவனும் முக்கிகளை போட்டாக்கா
மென்மேலும் முன்னேற பாதை வகுப்பான்
மந்திரம் போலே மன்னவன் பேரை நித்தமும் சொன்னாலே
உன் சங்கதியெல்லாம் நிம்மதிக் கொண்டு வாழ்ந்திடும் தன்னாலே
ஒரு சூடம் ஏத்தி சூரக்காயை போட்டு உடைங்கடா

கணபதி டிங் டிங் டிங் டிங்
கணபதி டிங் டிங் டிங் டிங்
கணபதி டிங் கணபதி டிங்
கணபதி டிங் டிங் டிங் டிங்...