Author Topic: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்  (Read 430018 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 117
  • Total likes: 117
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
என் வாழ்கையின் முழு அர்த்தம் நீ
என் வாழ்கையின் விடி விளக்கு நீ
ஒரு முறை வந்து
என் வாழ்கைக்கு ஒளியேற்ற வா


அர்த்தம்





உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline JS

என் சொல்லில் அர்த்தம் சேர்ந்தது
நீ சொன்ன ஒரு சொல்லால்
என் வாழ்க்கைக்கு அர்த்தம் வந்தது
உன்னை நான் கண்டதால்...



பொறுமை
JS
நம்பிக்கையே வாழ்வின் அடிப்படை

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 117
  • Total likes: 117
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
பொறுமை இழந்தேன்
பேசாமல் நீ காட்டும்
மௌனம் என்னை மரிக்க செய்கிறது
பேசிவிடு  என் ஆயுள் நீண்டுவிடும்



ஆயுள்


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Global Angel

என்று முடியும்
என் துன்பம்
ஆயுள் முடியும் போதா
இன்றே முடியட்டும் துன்பம் ..



துன்பம் 
                    

Offline thamilan

காதல்
இன்பத்திலும் துன்பம்
துன்பத்திலும் இன்பம்

பார்த்தாலும்
கண்ணீர் வரும்
பார்க்கா விட்டாலும்
கண்ணீர் வரும்




கண்ணீர்

Offline Global Angel

உன்னை பார்க்கும் வரை
என் கண்ணீரில் அர்த்தமில்லை
உன்னை பார்த்தபின் அர்த்தமில்லாமல்
கண்ணீரும் இல்லை


அர்த்தம் 

                    

Offline thamilan

அர்த்தமில்லாமல் பேசுவது
அர்த்தமில்லாமல் சிரிப்பது
அர்த்தமில்லாமல் அந்தரத்தை பார்ப்பது
அர்த்தமில்லாமல் கனவில் மிதப்பது
இது தான்
அர்த்தமுள்ள காதலின்
இலக்கணம்




இலக்கணம்

Offline Global Angel

நல்ல நட்புக்கு இலக்கணம் நம்பிக்கை
நல காதலுக்கு இலக்கணம் பிரியாமை
அர்த்தமில்லாமல் நினைவுகள் அலைந்தாலும்
அந்தரத்தில் ஆடினாலும் ...
இலக்கணம் தவறாமல் வாழ்ந்திட்டால்
இனித்திடுமே என்றும் காதல்


அந்தரத்தில்

                    

Offline thamilan

அந்தரத்தில் பறக்கும்
காற்றாடி
எத்தனை தூரம் பற‌ந்தாலும்
அதன் நூலின் நுனி
தரையில் இருப்பவன்
கையில் தான் இருக்கும்


காற்றாடி

Offline Global Angel

காற்றாடியாய் பிறந்திருக்கலாம்
உன்னை தேடி சுதந்திரமாய் வந்திருப்பேன்
மனிதனாய் பிறந்து மரபுக்குள் கட்டுண்டு
மரமாகி போகின்றேனே
...

மரம்

                    

Offline thamilan

வீட்டுக்கொரு பிள்ளை
பெறுவதை விட‌
வீட்டுக்கொரு மரம் வளர்தால்
நாடும் செழிக்கும்
நல்ல கனிகளும் கிடைக்கும்



செழிக்கும்

Offline Global Angel

வீட்டுக்கு ஒரு பிள்ளை தன்னும் இல்லையேல்
நாடு எங்கு இருக்கும் ...?
மக்கள் எங்கிருப்பார்கள் ...?
கனிகள்தான் கிடைத்து என்ன ?
நாடுதான் செழித்து என்ன ..?


கனி

                    

Offline pEpSi

முயற்சி: வளர்ச்சி:முதிர்ச்சி
முக்கனியாய் உன்
காரியசித்திக்கு மூலதனமாய்
இவை உன் கையில்
இப்போது
கொய்யும் கனியாய்



முக்கனி

Offline JS

நீ தீண்டினால் என் தேகம் முக்கனி ஆகிறது
வாய் பேசாமல் ஓடுகிறேன்
உன் கனல் தாங்காமல்...



கனல்
JS
நம்பிக்கையே வாழ்வின் அடிப்படை

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 117
  • Total likes: 117
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
கனல் தெறிக்கும்
வார்த்தைகளால் கொன்றுவிடதே
நான் இறந்தால் இறப்பது
நான் மட்டும் அல்ல
என்னுள் இருக்கும் நீயும் தான்


அலை


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்