Author Topic: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்  (Read 528242 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
மறக்க மனம் இல்லை
மறக்க நினைத்து
எடுக்கும் முயற்சிகள்
எல்லாமே தோல்வியில்


குறும்பு



உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline thamilan

சினனக் குழந்தைகளின்
செல்லக் குறும்புகளை ரசியுங்கள்
அதட்டாதீர்கள்

பெரியவர் நாம்
தொலைத்து விட்ட‌
அந்த குறும்புகள் செய்த‌
பருவத்தை அடிக்கடி நினைத்து
பார்த்து வருந்துகிறோம் தானே
[/color]



பெரியவர்

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 599
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
அதட்டுவது பெரியவற்குரிய பண்பு
அடம் பிடிப்பது சிறியவர்க்கு உரிய பண்பு
அழுவதும் அணைப்பதும் அன்புக்கு உரிய பண்பு
அனால் பிடிவாதம் பிடிபதுமட்டும் உன் பண்பு


பண்பு

                    

Offline thamilan

கணவன்
பிற பெண்களுடன் பழ‌கும்
காமுகனாக இருந்தாலும்
கொடுமை படுத்துவதில்
அரக்கனாக இருந்தாலும்
அவன் தலையில்
கல்லை தூக்கிப் போடாமல்
கல்லானாலும் கணவன் என்று
பூஜிப்பது தமிழ் பெண்களின்
பண்பு



காமுகன்

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 599
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
ஒரு ஆடவன்
நல்ல கணவனாவதும்
கண்ணியவானவதும்
கமுகனவதும்
பெண்களின் கையிலே...
நல்ல பாவை ஆக்குவதும்
பாவம் செய்ய வைப்பதும்
பெண்ணாலே பெண்ணாலே
பெண் நினைத்துவிட்டால்
காமுகன் கூட கண்ணியவான் ஆகலாம்


 .
கண்ணியவான்
                    

Offline thamilan

இந்த காலத்திலும்
இப்படி ஒரு பதிலா
கிளி போல‌
மனைவி இருந்தாலும்
திருப்தி அடையாமல்
குரங்கு போல இன்னொருத்தியை
தேடும்
கண்ணியவான்கள் நிறைந்த
உலகம் இது



குரங்கு

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 599
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
என்ன செய்வது
மனிதன் தன்
மூதாதையர்  குணம் கொண்டுதான்
குரங்குபோல் மரத்துக்கு மரம் தாவுவதை
மனத்துக்கு மனம் தாவிகின்றார்கள்
இதுதான் குரங்கில் இருந்து
மனிதனின்  பரினாமமாம்..


பரிணாமம்

                    

Offline thamilan

குரங்கில் இருந்து பிறந்ததாக‌
சொல்லப்படும் மனிதன்
பரிமாண வளர்ச்சி அடைவதற்கு
முன்னர்
கட்டுப்பாடற்ற காமம் நிறைத்தவன்

கட்டுப்பாடு உள்ள இந்த‌
நவநாகரீக உலகில்
இன்னும் மனிதன் அதே
கட்டுப்பாடற்ற காமம் நிறைந்திருப்பின்
அந்த பரிணாமத்தின்
பரிதாபத்தை அன்றோ
காட்டுகிறது



பரிதாபம்

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 599
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
பரிணாமம் பெற்று விட்டோம் என்று
மார்தட்டி கொள்ளும் மானிடனே
அந்தோ பரிதாபம்
உன் பரிணாம வளர்ச்சியில்
காமம் பரிணாம வளர்ச்சியல்ல
பரிதாப வளர்ச்சிதான் அடைந்துள்ளது


காமம்

                    

Offline thamilan

காதலும் காமமும்
கூடப் பிறந்தவை
காமம் இல்லாத காதலும் இல்லை
காதல் இல்லாமல் காமமும் இல்லை




கூடப்பிறந்தவை

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 599
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
காதலுடன் காமம் மடும்மல்ல
சந்தேகமும் கூட பிறந்தது
இலையேல் காதல் பிரிவுகள்
சகஜமாகி இருக்காது ...



சகஜம்

                    

Offline thamilan

இதெல்லாம் சகஜமப்பா
நாட்டுல ந‌டக்கிறது தானே
உறவு என்றொரு சொல் இருந்தால்
பிரிவு என்றொரு சொல் இருக்கும்




சொல்

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 599
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
ஒருமுறை சொல்
என்னை உனக்கு பிடிக்கும் என்று
இறுதி மூச்சுவரை  இணைந்திருப்பேன்
உன் நினைவுகளுடன்


முறை

                    

Offline pEpSi

  • Full Member
  • *
  • Posts: 178
  • Total likes: 12
  • Karma: +0/-0
  • Gender: Male
  • Nan Manithan Alla........
ஒவ்வொரு முறையும் நினைப்பேன்
உன்னுடம் இருக்கும் இந்த நிமிடம்
நீடிக்காதா என்று..


நிமிடம்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
உன்னை காணாத நிமிடம்
என் இதய துடிப்பானது
இருமடங்காகி துடித்து தவிக்க
நிமிடங்கள் நாட்களாகி
நாட்கள் மாதங்களாகி
துடிக்க வைப்பாயோஎன
அச்சத்தில் நான்


நாட்கள்


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்