Author Topic: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்  (Read 474881 times)

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
ஏற்று கொள்ளாமல் இல்லை
ஏற்று கொள்கிறேன் கூறியது நீ என்பதால்....
உன் விருப்பம் எதுவோ?
என் விருப்பமும், அதுவே.
கருவின்றி பொருள் நீங்கி
கவி பதிக்க விருப்பம் இல்லை
கவி எழுதி அச்சில்
கோர்த்தால் குறை இருக்காது.....
கணினியில் முயன்றாலும் இருக்காது....
கைபேசியில் முயற்சிப்பதால் வரும்
குறைகள்...
அக்குறைகள்.....?
அவசியம் பதிக்க மனம் விரும்புவதும்
வேலை பளுவினால்
வந்த அவசரமும் காரணம் ....
வருகின்ற காலங்களிலாவது
குறைகளின்றி பதித்திட
முடிந்த வரை முயற்சிக்கிறேன்....!

அடுத்த தலைப்பு முயற்சிக்கிறேன்

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline Bommi

துரு துருத்த என் படைப்புகள்
துக்கமில்லா இரவுகள்
தவி தவிக்கும் என் கற்பனையில்
நான் இங்கே பதிக்க இருக்கும்
கவிதைகள்  என்னுள் உறைந்து கிடந்த
கற்பனை கோட்டை தகர்த்தெறிய
முயற்சிக்கறேன்


அடுத்த கவிதை:தவி தவிக்கும்



Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
துரு துருத்த படைப்புகள்
துக்கமில்லா இரவுகள்
தவி தவிக்கும் கற்பனையில்
இங்கே பதிக்க இருக்கும்
கவிதைகள் உள் உறைந்து கிடந்த
கற்பனை கோட்டை(கோடு ) தகர்த்தெறிய
கற்பனை கோட்டை (கோட்டையை) தகர்த்தெறிய
முயற்சிக்கறேன்.
இரண்டில் எது என்று அறியாமல்
புரியாமல் தவிதவிக்கும் என்
நிலையை யாரிடம் சொல்ல ...

அடுத்த தலைப்பு

யாரிடம் சொல்ல ?


Offline Bommi

உன்  நலனுக்காக கத்திகத்தி
மாண்டவர் பல பேர்
யாரிடம் சொல்வது
நானும் முடியும் வரை கத்திவிட்டு
கல்லறையில் படுத்து விடுவேன்
எப்போதாவது புத்தி வந்தால்
கல்லறைக்கு  கடிதம் எழுது
மிண்டும் வந்து பிறப்பேன்
கவிதைகளாக....

அடுத்த கவிதை : புத்தி வந்தால்





Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
சித்தனாக இருந்தவன் நான்
புத்தனானேன் உனக்காக.
 நீ பிரிந்த பின்னால் முழு
பித்தனாக ஆகிடுவேன். பின்
புத்தி வந்தால் என்ன ,பெரும்
சக்தி வந்தால் தான் என்ன ?
கடிதம் வரைவேன் கண்டிப்பாக
இருக்கும் வரை தான் உன்
கரிசனம் இல்லை ,இறந்த
பின்னாவது கரிசனமோ, கனவில்
தரிசனமோ தரமாட்டாயா ?

அடுத்த தலைப்பு

கரிசனம்

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
என் மீது கரிசனம்  கொள்ளும்
இனிய நட்பே....!
இணை நட்புக்கு நிகரான
இணைய நட்பே.....!
ஒரு முறை....
ஒரே ஒருமுறை
தரிசனம் தருவாஎனில்...
சாதிசனமென்ன...?
மீதிசனமென்ன...?
உன் தரிசனத்திற்கு
முன் அத்தனை சனமும்......
சரிசமம்.........!

அடுத்த தலைப்பு சரிசமம்

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
அடடா!
தகவல் தரும் வேகத்தில்
விலாசம் மாற்றி அனுப்ப பட்ட
விஷேஷமான தந்தியோ?

அந்தி நேர தென்றல் ஒன்றிற்கு
முந்தி செல்லவேண்டிய
அவசர தந்தி, சற்றே முந்தி
என்னை வந்து சேர்ந்தது
வெந்த புண்ணில் வேலினை
பாய்த்துவதற்கு சரிசமம்

அடுத்த தலைப்பு
பாய்த்துவதற்கு

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
சரியான விலாசத்தில்
சேர்ந்த  தந்திக்கு
தந்தி போல் பாவித்து
பதில் தந்தி  வந்ததே
விஷேஷேமான தந்திக்கு சிறப்பு...
தந்தி முந்தி வந்ததும்
முந்திக்கொண்டு வந்ததும்
அந்தி நேர தென்றலக்கு அல்ல..
தென்றலோடு சேர்ந்த தமிழ் தென்றலுக்கு.
விந்தி... விந்தி..
முந்தி வந்த தந்தியை
தவறான தந்தி என  கணக்கிட்டதே
வெந்த புண்ணில்
வேல் பாய்த்துவது......


அடுத்த தலைப்பு தவறான
« Last Edit: April 17, 2012, 09:49:46 PM by suthar »

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
தவறான அர்த்தத்தை தவறாய் புரிந்துகொண்டேன்
என்று தவறாமல்,தவறாய் கருதிவிட வேண்டாம் !
தரிசனத்திற்கு , அதுவும் என் தரினத்திற்கு
இத்தனை கரிசனமா ?? ஊருசனம்,சாதிசனம்
அத்தனையையும் சரிசமம் என்று
ஆக்கவேண்டிய அவசியம் என்ன ? என
எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு தான்
என் கருத்தில் பதித்தேன் நன்று
புண்ணில் வேல் பாய்ச்ச அன்று

அடுத்த தலைப்பு

கருத்தில்

Offline Global Angel

என் கண் வழி விழுந்து
கருத்தினை கவர்ந்தவனே
கடுகதியில் வந்துவிடு
கணநேர தாமதமும்
காலனுக்கு வசதியாகலாம் 



வந்துவிடு
                    

Offline supernatural

கருத்தால்  உள்ளம் ...
கவர்ந்த கல்வனே...
உன் தரிசனம் வேண்டி...
காத்திருக்கும் இதயம் தேடி...
வந்துவிடு....

தரிசனம்


 
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQdMq57K4XtAqY3Ae5pj_6NBM-UYsBslmHF6iA1cIzV4OAOA4qw
supernatural

நேசத்தை உணர்ந்தேன்....
      உன் இதயத்தில் ..!!!!!

Offline Bommi

பார்த்தால் போதை தரும்
மது உன் விழிகள்
சிரித்தால் ஒளி தரும்
பவளம் உன் பற்கள்
உன் தரிசனம் என்
என்றென்றும்  என்
இதயத்தில் ......


அடுத்த தலைப்பு :விழிகள்

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
இணையத்தின் வழியே
உன் கெஞ்சல் பேச்சிலும்
கொஞ்சல் பேச்சிலும்
மனம் மயங்கியவன்....
மதி மயக்கும்  உன் விழிகளை
காண்பது எப்போது
கனவு தோழியே......?

அடுத்த தலைப்பு  மயக்கும்
« Last Edit: April 18, 2012, 09:31:16 PM by suthar »

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
கொஞ்சல் பேச்சிற்கே மருளி
மனம் மயங்கியவன் ,மதி
மயக்கும் உன் விழிகளை
காண வேண்டாம் !
ஓர விழி பார்வையினை
தூர நின்று பார்த்தாலே
பய தேறுவானோ தேற
மாட்டானோ, தெரியவில்லை
ஊரை பார்த்து  போயி சேர ட்டும் .
வேற யார்க்கும் ,வாய்ப்பு தரும்
எண்ணம் எதுவும் இருந்தால்
நேர என்ன முகவரிக்கு மின்
அஞ்சல்  தர மறந்திடாதே !

அடுத்த தலைப்பு
 மறந்திடாதே !

Offline Global Angel

என் மரணத்துகாவது வந்து சேர்
மறந்து விடாதே
உன் மலர் விழிகள்தான்
என் மரண ஊர்வலத்தில்
மகத்தான மலர்கள் ...
உன் பார்வைகள் ஒவொன்ரும்தான்
எனக்கு மலர் வளயங்கள்
மகிழ்வுடன் என் ஆத்மா
சாந்தி அடையும்



 மகத்தான