Author Topic: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்  (Read 528119 times)

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
உறவுகள் ஒரு போதும் இறப்பதில்லை
நீ வாழும் வரை வாழும்
உரிமை கொண்டு நிலைக்கும் இது
வாழ்வு நிலையும் தாழ்வும் !


வாழ்வு

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline Gayathri

வாழ்வு

என்று எதுவுமில்லை  என்னிடம்

நீ வந்தாய் .....பிறகு

இனி எது வேண்டும் எனக்கு



எனக்கு


Offline Gayathri

எனக்கு
பிரிந்தவுடன்   தான்
தெரிகிறது
உன்னுடன்
சேர்ந்திருந்து
சண்டை போடுவதன்
சுகம்....



சுகம்

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
உனக்காக காத்திருப்பதிலும் சுகம்..
என்றேன் அதற்காக வாழ்நாள் முழுவதும்
காத்திருக்க வைத்துவிட்டாயே...


உனக்காக

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 599
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
உனக்காக எழுதும்
ஒவ்வொரு வரிகளின் விளிம்பிலும்
கசிந்து வழிகிறது
விரக்தியின் குருதி ..


விரக்தி
                    

Offline sameera

அவரவர் பிரச்சினை
ஆயிரம் இருக்க
எனக்கு மட்டும்
ஏன்... அவை
கோடிகளாய்....
நிம்மதியாய் இருந்த நாள்
நிச்சயமாய்...
நினைவில் இல்லை!
முதன் முறையாய்
கடவுளை வேண்டி...
மறந்தும்கூட
மனிதனாய் எனக்கு
மறுபிறவி வேண்டாம் என்றேன்!!





உயிர்

Offline sameera


காரணமே இல்லாமல் பிரிந்ததால் -

என் இதயம் வலிக்குதடி

காரணத்தை கூறு

நியாயமாக இருந்தால் -நானே

உன் முகத்திலேயே முழிக்க மாட்டேன்

என்னவளே இன்றும்

என் இதயம் வலிக்குதடி

உன்னை எண்ணியே!!

நீ தான் என்னுயிர் என்பதனாலோ!!!

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 599
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
சமீரா கொடுக்கப் பட்ட தலைப்பு விரக்தி நீங்கள் அதற்கு கவிதையே கொடுக்கவில்லையே ? அதற்கு கவிதையை கொடுங்கள்
                    

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
காதலில் வலியும் சுகமே இருப்பது தன அதிகம்
உன்னிடம் நான் கொண்டு காதலே சுகமே
உன்னை ஒருநாள் பர்கவிடலும் அதுவே வலி ஆகும்
காதலில் விரக்தியின் குருதி  வலி சுகம்



 காதலே சுகமே

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline Gayathri

காதலே சுகம் என்று 

இருந்துவிட்டேன் ..... இனி

நீ முறைத்தால் என்ன...?

நீ மறுத்தால் என்ன..?

நீ தடுத்தால் என்ன...?

நீ போனால் என்ன...?

நான் காத்திருப்பேன்...

நீ தந்த காயங்களை,

தாங்கிய இதயமுடன்...

ஆனால்  ஒன்று மட்டும் 

சொல்லஆசைப்படுகிறேன் .....

உண்மையாக  நேசித்தவர்கள்

மீண்டும் கிடைபதில்லை ....




உண்மை  காதல் எங்கே ?




Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
உண்மை  காதல் எங்கே என்று   காணமல்
 மேகத்தோடு சேர்ந்து நானும் தேடுகிறேன்
என் தேவதையே நீ மழையாய் எங்கு மறைந்திருக்கிறாய்.


என் தேவதையே

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline Gayathri

என் தேவதையே என்னை
பிரிந்து போ என்று சொல்லாதே
பிரிவு என்ற சொல்லுக்கு என்னால்
ஈடு கொடுக்க  முடியவில்லை ....
உன் நிழல் கூட
உன் உருவத்தில் வாழ்கிறதே ...
ஏன் என் கனவுகள்
உன்னருகில் இருப்பதை மறுக்கிறாய் ??



மறுப்பு

Offline sameera

மறுப்பு 
பெண்ணே !

நீ என்னை காதலிக்க மறுப்பு

சொல்லி இருந்தால் கூட

வாழ்ந்து இருப்பேன் சில நிமிடம்.....

ஆனால்!

என்னை காதலித்து மறுப்பு

சொன்னதால் தான் என் உயிர்

பிரிந்தது அடுத்த நிமிடம் !.....



இயற்கை

Offline Gayathri

இயற்க்கை

அனுமதி கேட்கவுமில்லை ....
அனுமதி வழங்கவுமில்லை...

ஆனால்...

வலுகட்டாயமாக
ஒரு முத்தம் ....

மண்ணில் மழைத்துளி



மழைத்துளி

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 599
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்

சிதறும் ஒவ்வொரு மழை துளியிலும்
சிந்தனையின்றி படரும்
விழிகளின் திரையில்
தெரிவது ஏனோ
உன் முகம் தான் .


திரை