Author Topic: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்  (Read 528458 times)

Offline User

  • Jr. Member
  • *
  • Posts: 53
  • Total likes: 2
  • Karma: +0/-0
  • ஒரு வரில சொல்ல எதுமே இல்ல
முக்குளித்த  பின்
நான் விடும் பெருமூச்சு நீ
மழலையின் சிறுபேச்சு நீ
மூன்றாம் பாற்கடலின்
திசையறியா மோக பறவையின்
கலங்கரை விளக்கம் நீ..


திசையறியா
:)

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
திசையறியா வேண்டாம் இன்னும் ஒரு நாடகம்
என் அர்த்தமற்ற வாழ்க்கை
உன்னால் அர்த்தமாகி போனதாய்
எண்ணினேன் புரிந்து கொண்டேன்
உன்னால் நானே அர்த்தமற்று போனேன் என்று



அர்த்தமாகி போனதாய்

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 36
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்


அர்த்தமாகி போனதாய்
ஊகித்திருந்த எனது சங்கேதங்கள்
புரிதற்கரிதாகி
மீள என்னிடமே திரும்பி வருகின்றன‌
கேள்விக்குறிகளாய்!!!!

எக்கேள்வி எச்சங்கேதத்தினுடையதென‌
தெரியாமல் குழம்பி உன்னை நிமிர்ந்து பார்க்கிறேன்

மிதமான மின்னலை இதழோரம் முறித்து
ஒரு பக்க புருவத்தை மேலே உயர்த்தி
மேலுமொரு சங்கேத கேள்வியை உதிர்க்கிறாய்!!!

அது ஒரு விண்மீனென‌
என் மனதிற்குள் விழுந்து சிதறி
கிளர்ந்து எரியவிடுகிறது
யுக யுகங்களின் கேள்விகளை


கிளர்ந்து எரியவிடுகிறது
« Last Edit: April 08, 2013, 11:38:02 PM by ஆதி »
அன்புடன் ஆதி

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 599
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
மெலிதாக உதிர்க்கும்
உன் புன்னகை துகள்கள்
மயங்கும் மனதுள்
எண்ணற்ற இன்ப நினைவுகளை
கிளர்ந்து எரியவிடுகிறது


துகள்கள்
                    

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
மழையாய் நீ முகிலாய் நான்
மலராய் நீ மனமாய் நான்
அலையாய் நீ கரையாய் நான்
சிலையாய் நீ உளியாய் நான்
பனியாய் நீ புல்வெளியாய் நான்
கனியாய் நீ அணிலாய் நான்
வானவில்லாய் நீ வண்ணதூரிகையாய் நான்
மூங்கில்லாய் நீ நாதமாய் நான்
நிலவாய் நீ இரவாய் நான்
என்றும் துகள்கள் உன்னகென வாழ்வேன்


 நீ அணிலாய் நான்

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 599
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
வணக்கம் நண்பர்களே, இந்த திரி கவிதையாற்றலை கூர்ப்படுத்திக் கொள்ளும் சாணைக்கல்லே என்றாலும் தலைப்பிற்கு தொடர்ப்புடையதாக கவிதைகளை வரைய முயலலாமே. சிலபல கவிதைகள் தலைப்பொடு பிணக்குற்று எழுத்தப்படுவது நெருடலாக இருக்கிறது. சிறிய கவிதையேனும் தலைப்பிற்கு உகந்த கவிதைகள் எழுத முயற்சிப்பது இந்த களத்திற்கு அர்த்தம் கற்பிப்பதாக அமையும். புரிதலுக்கு நன்றி
                    

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 599
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
ஆடும் காற்று திசையில்
அலையும் மோகதிரையில்
நீ அணிலாய் நான் பழமாய் ..
விருந்தும் மருந்துமாய் நாம் ...


விருந்தும் மருந்துமாய்
                    

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
என் கனவுகளும் இனித்தன என் கற்பனைகள் சுவைத்தன
என் நினைவுகள் மலர்ந்தன கவிதைகளும் காட்டாறாய் வந்தன
அத்தனையும் நிகழ்ந்தது விருந்தும் மருந்துமாய் என்னுள் நுழைந்தாய்


என் கனவுகளு

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline PiNkY

  • Full Member
  • *
  • Posts: 243
  • Total likes: 25
  • Karma: +0/-0
  • Gender: Female
  • If Nothing Lasts 4ever..!! Will U Be My Nothing..?
என் கனவில் நுழைந்து..
என் தூக்கத்தை பறித்து..
என் வாழ்கையை நிஜமாகினாய்..
இன்று அதை ஏன் அடி .? கனவாக்கினாய்..
அடி என்னவளே.. !!


"அடி என்னவளே.. !!"

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
உனக்காக காத்துக் கொண்டிருக்கும் எனக்காக
அடி என்னவளே நீ வருவது எப்பொழுது!
நான் அழுகிறேன் என்று நீ அழுது விடாதே
அதைவிட மரணவலி வேறெதுவும் எனக்கில்லை



காத்துக் கொண்டிருக்கும்

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline PiNkY

  • Full Member
  • *
  • Posts: 243
  • Total likes: 25
  • Karma: +0/-0
  • Gender: Female
  • If Nothing Lasts 4ever..!! Will U Be My Nothing..?
உனக்காக நான் காத்து கொண்டிருக்கவில்லை..
உனக்காக நான் என்னை உன்னில் தொலைக்கவில்லை..
உனக்காக நான் வாழவில்லை..
ஆனால்.,
நீ இல்லாமல் எனக்கு வாழ்வு இல்லை..

வாழவில்லை ..

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
நீ என்னை புரிந்து கொள்ள பல முயற்சிகளை எடுத்தேன்
அனைத்தையும் பாழாக்கி விட்டு மீண்டும் என்னை
தனிமையில் விட்டு சென்றாய் மனது வலிக்கிறது.ஒவ்வொருநாளும்
உன்னை நினைக்காம ல்வாழவில்லை தொடர்கிறது என் தனிமை.



தனிமையில்

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline PiNkY

  • Full Member
  • *
  • Posts: 243
  • Total likes: 25
  • Karma: +0/-0
  • Gender: Female
  • If Nothing Lasts 4ever..!! Will U Be My Nothing..?
தனிமையில் இனிமை காண்கிறேன்..
உன்னை நினைக்கும் தனிமையில் மட்டுமே..!

பூவாய் நான் இருக்க..
இன்னும் உன் கூந்தலை ஏன் தனிமையில் வதைக்கிறாய்..
ம்ம் என்று சொல்..
அடுத்த நொடி நான் உன் கூந்தலை அலங்கரிப்பேன் ..

தனிமையில் இனிமை

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
தேன் கூடுகளில் சுவைகள் மறைந்து
நீர் மட்டும் நிறைந்து கிடக்கின்றன
மனதுகள் தடம் பிரண்டு தவம் கிடக்கின்றன
தனிமையில் இனிமை எல்லாமே ஒரு மாயையாகவே
உணர்வும் வந்து உண்மை சொல்லிப் போகின்றதே
எதிர் பார்த்தேன் என்னவென்று புரியாமலேயே எதிர் பார்க்கின்றேன்..



எதிர் பார்க்கின்றேன்

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline PiNkY

  • Full Member
  • *
  • Posts: 243
  • Total likes: 25
  • Karma: +0/-0
  • Gender: Female
  • If Nothing Lasts 4ever..!! Will U Be My Nothing..?
சுழல் போல வந்தாய்..
பூகம்பமாய் தோன்றினாய்..
என்னுள் பல மாற்றங்கள்..
உன் அசைவுகளால்..

பெண்ணே..
உன்னில் இன்னும் எதிர் பார்கிறேன்..
என்னுள் நீ நிகழ்த்த இற்கும் பல மாற்றங்களை..


பெண்ணே..