கோபம் ஒன்றும் சாபமில்லை
பொன்மகளே, சாந்தமாய் இரு,
சிந்தித்து முடிவெடு, கோபம்
விடுத்து மோகம் கொள் அவனிடம்,
பின் தூவிய விதை துளிர்விட்டதோடு
தளிர்விட்டு மரமாய் வளர்ந்து
நிழல் தரும் உன் காதலுக்கு,
நிழல்தரும் மரத்தை பாய்மரம்
செய்ய வெட்ட வேண்டிய
அவசியமில்லை, ஆயிரம்
கணைகள் தொடுத்தாலும்,
பின் உன் காதல் கடந்துவிடும்
கணைகளை காவியக்காதலாய்!!!
தளிர்விட்டு...