Author Topic: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்  (Read 490312 times)

Offline Bommi

துன்பம் வரும்போது எனக்காக வெளிப்படும்
என் கண்ணீராக
இன்பம் வரும்போது உனக்காக வெளிப்படும்
என் கவிதைகளாக......

எனக்காக

Offline vimal

  • Hero Member
  • *
  • Posts: 586
  • Total likes: 6
  • Total likes: 6
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
எனக்காக என்று எதுவும் சேர்க்கவில்லை
உன் நினைவுகளைத் தவிர, நினைவுப்
பெட்டகமும் தீர்ந்து கொண்டே போகிறது
என் கண்ணீராய் உன் நினைவுகளும் ஓட!!!

அடுத்தத் தலைப்பு "நினைவுப் பெட்டகம்"

Offline Bommi

எங்கிருந்தோ வந்தோம்
இங்கு சந்தித்து கொண்டோம்
சாதி மதம் பேதமில்லாமல்
பழகி வந்தோம்
நினைவு பெட்டகம் என்னும்
எத்தனையோ நினைவுகள் .....நம்முள்


சாதி மதம்
   

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
சாதியாம் மதமாம்
சாதிக்க துணிந்தவனுக்கு
சாதி என்னும் சடுதி எதற்கு
சாதி சாயம் பூசி மதங்கொண்ட
சாத்திரகாரர்களே நீங்கள்
சாத்திய கூறுகளை ஆராயுங்கள்
சாதி மதம் தேவையா இல்லையா என்று..?

சாத்தியம்

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline vimal

  • Hero Member
  • *
  • Posts: 586
  • Total likes: 6
  • Total likes: 6
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
சாத்தியமாகக் கண்டேன்,மண்ணிலும்
தேவதைகள் வலம் வருமென,
பூக்கள் சிதற, உன் பொற்பாதம் எனை
நோக்கி மண்ணைப் பொன்னாக்க!!!

அடுத்தத் தலைப்பு "மண்"

Offline Bommi

நிமிர்ந்தால் வானம் தூரம்
குனிந்தால் கடல் ஆழம்
நாம்
மண்ணை நேசித்தோம்
உன்னை சுவாசித்தோம்-என் தாய் மண்

வானம்

Offline vimal

  • Hero Member
  • *
  • Posts: 586
  • Total likes: 6
  • Total likes: 6
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
கண்களால் வானம்தான் எல்லை என்று
ரசித்த எனக்கு, காதல் எல்லையை ரசிக்க
முடியவில்லை முடிவுறாமல் முற்று
புள்ளி இல்லாமல் தொடர்ந்து கொண்டுதான்
இருக்கிறது, என் வாழ்வின் வசந்தத்தில்
புயலாய், வானத்தின் நீளமாய்!!!

அடுத்தத் தலைப்பு "வசந்தம்"

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 35
  • Total likes: 35
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
வசந்தமானதாகவே இருந்தது அது

இன்ப‌ம‌ய‌மான‌தாக‌வே இருந்த‌து அது

இந்த‌ பிர‌ம‌ஞ்ச‌த்தின் எல்லாம் பூக்க‌ளையும்
அவ‌ளின் உள்ள‌த்தில் ம‌ல‌ர்த்திக் கொண்டிருந்த‌து அது

அவ‌ள் சிற‌கு விரித்தே ப‌ற‌ந்தாள்

அவ‌ள் ஆன‌ந்த‌தில் நிதமும் மித‌ந்தாள்

அவ‌ளின் ச‌ந்தோச‌ம் எல்லைய‌ற்ற‌தாக‌ இருந்த‌து

நாள்தோறும் புதுப்புது உண‌ர்வுகளிலும் உவ‌ப்பிலும்
அனுப‌வத்திலும் திளைத்தாள்

அவ‌ன் த‌ன்னை சொர்க்க‌த்திலேயே வைத்திருப்பான்
என்று ந‌ம்பினாள்

அவ‌ன் வ‌க்கிர‌ங்க‌ளெல்லாம்
தீர்த்துக்கொண்டு
அவ‌ளை வ‌ஞ்சிப்ப‌த‌ற்கு
முந்தைய‌ த‌ருண‌ம்வ‌ரை

அடுத்த தலைப்பு : துரோகம்
« Last Edit: January 31, 2013, 08:26:07 PM by ஆதி »
அன்புடன் ஆதி

Offline Bommi

உலகில் நான் சந்திக்கும்
பொய்கள் எல்லாமே
உன்னைத்தான்
நினைவு படுத்துகின்றன
அப்படியென்றால்
இதற்கு பெயர்தான்
நம்பிக்கை துரோகமா?...

சந்திக்கும்

Offline Global Angel

சந்திக்கும் தருணங்களில்
சிந்திக்க மறந்த மனதிற்கு தண்டனைதான்
வேதனை , விரக்தி , ஏமாற்றம் இன்னும் பல



விரக்தி
                    

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
விரக்தி கொண்ட என் காதல்
பாலைவனத்தில்
உன் கோப சொற்களும்
அடைமழையாக தான் உள்ளது..
என் இதயத்தை நனைத்ததால்..

என் இதயத்தை

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline vimal

  • Hero Member
  • *
  • Posts: 586
  • Total likes: 6
  • Total likes: 6
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
நான் உறங்கப் போகிறேன் என்றேன்,
என் இதயம் நீ உறங்கு நான் பார்த்துக்
கொள்கிறேன் உன்னவளின் வீட்டை
நான் உறங்காமல் இருக்கும் வரை,

இறந்த பின்புமா என்றேன்

என் இதயம் கவலை வேண்டாம்
உன்னவளைவிட உன்மேல் எனக்கு
பிரியம் அதிகம் உனக்கு முன் நான்
இறப்பேன் என்றது!!!

அடுத்தத் தலைப்பு "உனக்குமுன்"

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
இந்த உடல் உனக்குமுன்.
உடன் கட்டை ஏறும் என்று. சொன்னவளும்
 நான்தான் . நம்மை பிரிக்க
நேர்ந்தால் இருவரையும் ஒன்றாய் ...


இருவரையும்

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline Bommi

இழக்கமல் இருப்பது
உன் நினைவும் -என் காதலும்
இருவரையும் - நான்
இழந்து விட்டால்
இறந்தே போவேன்.!

காதலும்

Offline vimal

  • Hero Member
  • *
  • Posts: 586
  • Total likes: 6
  • Total likes: 6
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
மாறாத மறையாத விஷயங்கள்,
சூரியன் உதிப்பதும், மறைவதும்
கடல் அலை அடிப்பதும், ஓய்வதும்
பௌர்ணமி முழு நிலவும்,
அம்மாவாசை கருவானமும்,

அதுமட்டுமல்ல

நீ ஏற்படுத்திய காய வகிடுகள்
என் மனதில் மறையாத போதும்
நான் உன் மீது கொண்ட காதலும் கூட!!!

அடுத்தத் தலைப்பு "காய வகிடுகள்"