வணக்கம் நண்பர்களே, இந்த திரி கவிதையாற்றலை கூர்ப்படுத்திக் கொள்ளும் சாணைக்கல்லே என்றாலும் தலைப்பிற்கு தொடர்ப்புடையதாக கவிதைகளை வரைய முயலலாமே. சிலபல கவிதைகள் தலைப்பொடு பிணக்குற்று எழுத்தப்படுவது நெருடலாக இருக்கிறது. சிறிய கவிதையேனும் தலைப்பிற்கு உகந்த கவிதைகள் எழுத முயற்சிப்பது இந்த களத்திற்கு அர்த்தம் கற்பிப்பதாக அமையும். புரிதலுக்கு நன்றி