Author Topic: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்  (Read 513568 times)

Offline Gotham

மதங்களின் பிடியில்
சிக்குண்ட மனிதம்
மறந்து போனது
காலம் போனபின்
காலாகாலத்துக்கும்
மனிதன்
நேசம் கொள்ளப்போவது
மண்ணை

-----
மதம்

Offline vimal

  • Hero Member
  • *
  • Posts: 586
  • Total likes: 6
  • Total likes: 6
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
மதங்கள் சொல்லும் மனிதநேயம்
ஒன்றேன்ற போதும், மனிதன்
மட்டும் மதம் பார்பதேனோ??? ???

முடிவெடு ...மதத்தை பதம் பார்க்க
ஐந்தறிவுள்ள ஜீவனா அல்ல ஆறறிவு
உள்ள மனிதனா?

மனிதநேயம்

 

Offline Gotham

ஐயமின்னும் மிச்சமிருக்கிறது
காயங்கள் பல
நேர்ந்தாலும் உலகில்
மனிதநேயம் மரித்திடுமா
ஒரு சதவிகிதம் ஆனாலும்
இன்னும் மிச்சமிருக்கிறது
என்கிறது புள்ளிவிவரம்

-----------------
புள்ளிவிவரம்

Offline Bommi

கடவுள் கேட்காமல்
தங்ககோவில் கட்டும்
மனிதா !
அனாதை குழந்தை
அழுதும் உணவுதர
மறுக்கிறது உனது மனம் !
எங்கு செல்கிறது
மனிதநேயம்



கடவுள்

Offline vimal

  • Hero Member
  • *
  • Posts: 586
  • Total likes: 6
  • Total likes: 6
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
கடவுள் படைத்த அதிசயங்களுள்
முதன்மையானது என் இதயமாகத்தான்
இருக்க முடியும்...உன் குடியிருப்பில்!!!


அதிசயம்

Offline Bommi

இந்த உலகம் என்னை போல
உண்மையான காதலர்களை காணும் வரை
என் கல்லறை ( தாஜ்மஹால் ) என்றும்
ஓர் உலக அதிசயமே !


உண்மையான

Offline vimal

  • Hero Member
  • *
  • Posts: 586
  • Total likes: 6
  • Total likes: 6
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
உன்னையும் உலகையும் வசமாக்கும்
உண்மையான அன்பை ஆராய்ந்து
பார்க்காதே அன்பென்றாலே உண்மைதான்...

ஆராய்ந்து பார்த்திருந்தால்... அன்னை தெரேசா
இவ்வுலகிற்கு அன்னையாகி இருக்க மாட்டார்!!!

அன்னை தெரேசா

Offline Gotham

விந்தையாகி போன
வாழ்க்கையில்
அட என்னவொரு
அதிசயம்...
வீட்டுமுற்றத்தில்
ப்றந்து வந்தது
வெள்ளைப்புறா
காதல் தூதுடன்

-------------

புறா

Offline vimal

  • Hero Member
  • *
  • Posts: 586
  • Total likes: 6
  • Total likes: 6
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
தூது விடுகிறேன் உனக்கு
என் உள்ளத்தை எழுதுகோலாக்கி,
என் அன்பை காகிதமாக்கி,
என் அரவணைப்பை மையாக்கி,
என் கண்ணீரை பேரளையாக்கி,
வானமே எல்லையாய்,
என் இதயமே புறாவாய்.....

அரவணைப்பு

Offline Bommi

எத்தனை  அன்பு , அரவணைப்பு
எத்தனை அறிவுரைகள் , ஆலோசனைகள்
எல்லாம் எதற்கு
எங்கள் வாழ்வு வளம் பெறதானே



  அன்பு

Offline vimal

  • Hero Member
  • *
  • Posts: 586
  • Total likes: 6
  • Total likes: 6
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
உலக கவிதைப் போட்டியாம்,
கவிதைகள் பலவிதம் கவிஞர்கள்
எழுதினர்....நூறு வரி, இரநூறு வரி..
ஆயிரம் வரியென... வரியை வரிந்து
கட்டிய கவிதைகள் மத்தியில் ஒரு
வார்த்தை கவிதைகூட இடம் பெற்றது
                        அன்பு!!!
ஒட்டுமொத்த கவிதைக்கும் ஒரே ஒரு
அர்த்தமாய்.....

போட்டி

Offline Bommi

ஓவியப் போட்டியென்றால்
உன்னை வரைந்து அனுப்பலாம்…
காவியப் போட்டியென்றால்
நம் காதல் கதையனுப்பலாம்…
இது கவிதை போட்டியாம்!
வெற்றி பெற வேண்டுமென்றால்
உன் பெயரைத்தான் அனுப்ப வேண்டும்…


ஓவியப் போட்டி

Offline Gotham

சொர்க்கத்தில் ஓவியப்போட்டியாம்
ஆயிரம் தேவர்கள் கலந்து கொள்ள
இறுதியில் ஜெயித்தவன்
பிரம்மனாம்
அவன் வண்ணத்தூரிகையில்
வரைந்த ஓவியமாய்
நீ

--------------------

தூரிகை

Offline Bommi

ஓவியமாய் நான் உன் கண்ணுக்கு
உன் இமை தூரிகை என்பேன் நான்
"காதல் ஓவியத்தை" மிக அழகாய்
என் உள்ளே வரைந்ததற்கு


உன் கண்ணுக்கு

Offline Gotham

சாலையில் போகும்
கன்னியர் எல்லாம்
காளையன் என
எனைக்கண்டு வியக்க
உன் கண்ணுக்கு
மட்டுமென்ன
நான் தெரியாமலேயே
போனதேன்??

-------

சாலை