Author Topic: கவிதை விளையாட்டு: தலைப்பை விட்டு செல்  (Read 487433 times)

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
தன்னோடு வாழ
தகுதியானவன் நீயென
தம் வாழ்வில் வளம்  சேர்த்திட
வழமையோடு உலா வந்தவள்
தனி வழி போகின்றேன்
தடுக்காதே என்றதும்
தன்னிலை மறந்து
துயருறுகிறேன்..?
 

துயர்

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline Global Angel

துயர் சுமந்த விழிகளுக்கு தெரியவில்லை
கண்ணீரின் கனம் ...
நினைவு சுமந்த இதயத்திற்கு தெரியவில்லை
காதலின் ரணம் ...
அதுதான் மீண்டும் மீண்டும்
ஆரம்ம்ப புள்ளியினை வந்தடைகின்றது



ரணம் .
                    

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
மணமாகி மனமொத்து வாழ்வோம் என்றவள்
மணமாகி செல்வதை கண்டு
ரணமான இதயம்
கனமாகி, சினமாகி
குணவதி உன்னை 
ரணமாக்குவதர்க்கு  பதில் - என்   
(ம)ரணம் மேல்...........! 

மரணம்

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline Global Angel

மரணம் மேலன்று
பெறும் ரணங்களை விட
ஜனனம் ஈன்ற ரணங்களை எல்லாம்
மரணம் அளித்துவிடுமாயின்
மரணம் மேல்தான் ...



ஜனனம்
                    

Offline Rainbow

உன் விழி பார்த்த போது
உணர்வுகள் மரணம்
உன் உதடுஅசைந்த போது
என் உரிமைகள் அர்ப்பணம்
உன் உளம் திறந்த போது
என் உறவுகள் மரணம்
மொத்தத்தில் பல மரணத்தின் விளிம்பில்
எனக்குள் காதல் ஜனனம் ..
இனிமேல் ரணங்களும் .........................



காதல்

Offline suthar

  • Hero Member
  • *
  • Posts: 630
  • Total likes: 52
  • Total likes: 52
  • Karma: +0/-0
  • Gender: Male
  • யார் மனதையும் புண் படுத்த அல்ல பண்படுத்த
காதலிக்கும் தருணத்தில்
இந்த ஜனனம் உனக்குதான்
நாம் மரனிக்கும் வரையென
ஒருவருக்கொருவர் ஒப்பந்தமிட்டு
அளவளாவி கொண்டதை மறந்து
அற்ப பணத்திற்காக நமக்குள்
அர்பணமான காதலை
அதளபாதளத்திலிட்ட மனரணத்தால்
அன்று மேற்கொண்ட ஒப்பந்தபடி...
என் மரணம்
உனக்கே உனக்காய்
சமர்ப்பணம்....!!


சமர்ப்பணம்

ஏற்புடையதை
ஏற்றுக்கொள்வேன்
அன்புடன்
- சுந்தரசுதர்சன்

Offline rajieee

ஒ,,,,,வானமே
ஏன் ?
உனக்கும் காதல் தோல்வியோ?
என்னை போலவே நீயும்
அழுகிறாய்!

மழை............

Offline Global Angel

ஹாய் ராஜி .... கொடுக்கபட்ட தலைபிற்கு கவிதை எழுதணும் இங்கே ... சுதர் சமர்ப்பணம் எனும் தலைப்பை விட்டு சென்றிருகின்றார் .. உங்கள் கவிதையில் சமர்ப்பணம் என்னும் சொல்லை காணவில்லை .... நான் இபொழுது சமர்ப்பணம் எனும் தலைபிற்கும் மழை  க்கும் சேர்த்து எழுதுகின்றேன் .. இனி தொடரும் கவிதைகளை தலைபிற்கு பொருந்த வழங்கவும் ....


ஓர் மழை     நாளில்
உன் மனதை அறிந்தேன்
இனோர் மழை   நாளில்
நான் உன்னை அறிந்தேன்
இதோ ஓர் மழை   நாளில்
நான் என்னை இழக்கின்றேன்
என் முழுமைகள் சமர்ப்பணம்
முகில் அழும் முழு வேளையில்



முகில்
« Last Edit: December 16, 2012, 04:14:22 PM by Global Angel »
                    

Offline vimal

  • Hero Member
  • *
  • Posts: 586
  • Total likes: 6
  • Total likes: 6
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
முதல் பார்வையிலேயே,
முகிலாய் வானத்தை மறைத்த
என் காதல் தவத்தை
தவிடுபொடியாக்கினால்,
மேகமாய் நான்!!!
சூரியனாய் அவள்!!!


தவம்

Offline Global Angel

வாங்க அழகிய நிலா ..... கவிதை விளையாட்டுக்கு வருகவென வரவேற்கின்றேன் ... கவிதை நன்று cutemoon ... சின்ன வேண்டுகோள் ... உங்களுக்கு முன் கவிதை பதிவிட்டவர் தலைப்பை உள்வாங்கி அந்த வார்த்தை வரும் வகையில் கவிதைகளை எழுத வேண்டும் .. விமல் கொடுத்த தலைப்பு  தவம் .. அந்த வார்த்தையை உங்கள் கவிதையில் காணவில்லை எனவே தவம் .. அதோடு நீங்க கொடுத்த தலைப்பு பிரிவுக்கு நான் காவிதை எழுதுகின்றேன் ... தொடர்ந்து தலைப்பை உள்வாங்கி  அந்த வார்த்தைகள்  வரவேண்டும் என்பதை குறித்து கவிதை பதிவிடுங்கள்



உன்னை பிரியாத வரம் ஒன்றுக்காய்
தவம் இருந்தேன் ...
பிரிவு என்னை
மெல்ல முகர்வதை அறியாமல்



வரம்
                    

Offline CuTe MooN

வரம் இருந்து பெற்ற  உன்  தொப்புள் கொடியை அறுத்தது நம்
உறவை பிரிக்க அல்ல...
அது நம் பாசத்துக்கு வெட்ட பட்ட ரிப்பன்.


   உறவு

     
« Last Edit: January 04, 2013, 12:36:39 AM by cute moon »

Offline vimal

  • Hero Member
  • *
  • Posts: 586
  • Total likes: 6
  • Total likes: 6
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வெறுப்பது யாராக இருந்தாலும் நேசிப்பது நீயாக இரு
நினைவுகளில் தோன்றி
நித்தம் தன்னை
நினைவிழக்கச்செய்தவள்
கண்வழி உருண்டு, இதயக்
கருவறையில் காலூன்றி
கருவாய் தோன்றி பிரிக்க முடியா
உயிரின் உறவாய் நின்றாள்,
உதிரம் கொடுத்தவளுக்கு அடுத்த
உறவும் இவளே , என்
உள்ளத்தில் கலந்த உயிரும் இவளே

இவளே என் உறவு!!!

அடுத்த தலைப்பு
"நினைவு"



Offline Global Angel

நினைவுகளை ஏலமிட கூறினேன்
எவரும் வாங்குவதற்கு முன்வரவில்லை
இனாமென்றும் அறிவித்தேன்
இதுவரை எவரும் வரவில்லை
நினைவுகள் கொடுமையென்று
நினைத்திருப்பார்களோ ..?



வரவில்லை
                    

Offline Varun

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1108
  • Total likes: 18
  • Total likes: 18
  • Karma: +0/-0
  • உண்மையான காதலுக்கு ஏமாற்ற தெரியாது ஏமாற மட்டுமே தெரியும்.
நீ வரவில்லை என்றால்என் உயிரதில்
உன் நினைவுதனை தொடுத்துஉறவு அதை வளர்த்து
கற்பனைகளுக்கு உருவம் கொடுத்துஉறவாடுவேன்
என் உயிருள்ள உறவு நீதான் என்று
என் உயிருள்ளவரை.



என் உயிருள்ளவரை

தனிமை கூட ஒருவித சுகம் தான். உன் நினைவுகள்என் இதயத்தில் உயிராக வாழும்போது.[/move

Offline Global Angel

என் உயிருள்ளவரை
உன் நினைவுகளை மறவேன்
உதாசீனங்களை மறக்க
இதுவரை எவரும் கற்று தரவில்லை
இனிமேலும்  ....`?


இனிமேலும்