Author Topic: காதல் நாடி  (Read 764 times)

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 35
  • Total likes: 35
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
காதல் நாடி
« on: August 06, 2012, 09:24:40 AM »
சாவுக்கும் வாழ்வுக்கும் - இடை
சதுரங்கம் ஆடுகிற
பூவுக்கு புரியாத - பெரும்
புதிராஎன் காதல்

பாட்டுக்கு சொல்தந்து - என்
பார்வைக்கு உயிர்தந்து
தீட்டுகிற எழுத்துகளில் - நீ
தீராமல் இருக்கின்றாய்

பொன்னாடிச் சிலைப்போல - உன்
பொலிவான நினைவுகள்
வினாடிச் செடியில் - வந்து
விண்மீனாய் பூக்கிறது

சின்னஇதழ் விரித்து - நீ
சிரிக்கின்ற பொழுதில்விழும்
கன்னக்குழியில் குதித்து - ஒரு
கடவுள்நிலைக் அடைகின்றேன்

காணாதக் கனவுவந்து - என்
கண்ணிமையில் இறங்கிநின்று
நானாக இருந்தஎனை - உன்
நாணத்தில் கரைக்கின்றேன்

முன்னெழிலின் முற்றுகையில் - என்
முழுதவமும் முறித்துவிட்ட
பின்விழைவின் காரணமாய் - உன்
பெயரையே முணுமுணுத்தேன்

காதல்நாடி வந்து - இதயத்தின்
கரை உடைக்க
காதல்நாடி ஒன்று - என்
கண்ணீராய் வழிகிறது

ஈரநெருப்பால் உன்றன் - வெறும்
இதழ்கள் எரித்தாலும்
மாறவிருப்பம் இன்றி - மனம்
மரணம் போலாகிறது
அன்புடன் ஆதி

Offline ! SabriNa !

Re: காதல் நாடி
« Reply #1 on: August 06, 2012, 10:03:05 AM »
aadhi..so nice poem..romba  feeling la ezhudhirukeenga pola..


Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 35
  • Total likes: 35
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
Re: காதல் நாடி
« Reply #2 on: August 06, 2012, 10:13:29 AM »
உணர்வுகளின் நடனம் தானே கவிதை

பின்னூட்டத்துக்கு நன்றி
அன்புடன் ஆதி

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: காதல் நாடி
« Reply #3 on: August 06, 2012, 10:22:32 AM »
வணக்கம் ஆதி !

ஓரிரு சிறு எழுத்து பிழை நீங்கலாக, மிக அற்புதமான உணர்வுப்பூர்வமான  வரிகள் !!


வாழ்த்துக்கள் !!!

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 35
  • Total likes: 35
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
Re: காதல் நாடி
« Reply #4 on: August 06, 2012, 10:31:42 AM »
எழுத்து பிழைகளை சுட்டினால் திருத்தி கொள்வேன்

நன்றி தோழரே
அன்புடன் ஆதி

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: காதல் நாடி
« Reply #5 on: August 06, 2012, 10:37:44 AM »
முன்னெழிலின் முற்றுகையில் - என்
முழுதவமும் முறித்துவிட்ட
பின்விழைவின் காரணமாய் - உன்
பெயரையே முணுமுணுத்தேன்


பின் விளைவினை குறிக்கும் பொருள் தானே அது ??

என் கணிப்பு தவறில்லை என்றால் .

Offline ஆதி

  • Hero Member
  • *
  • Posts: 532
  • Total likes: 35
  • Total likes: 35
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நிறைந்த குடம் நீர் தழும்பும்
    • அன்பென்னும் ஜீவ நீர்
Re: காதல் நாடி
« Reply #6 on: August 06, 2012, 10:39:59 AM »
இல்லை

விழைவு விருப்பத்தை குறிக்கும்
அன்புடன் ஆதி

Offline Anu

Re: காதல் நாடி
« Reply #7 on: August 06, 2012, 01:16:23 PM »
சாவுக்கும் வாழ்வுக்கும் - இடை
சதுரங்கம் ஆடுகிற
பூவுக்கு புரியாத - பெரும்
புதிராஎன் காதல்


பொன்னாடிச் சிலைப்போல - உன்
பொலிவான நினைவுகள்
வினாடிச் செடியில் - வந்து
விண்மீனாய் பூக்கிறது

காணாதக் கனவுவந்து - என்
கண்ணிமையில் இறங்கிநின்று
நானாக இருந்தஎனை - உன்
நாணத்தில் கரைக்கின்றேன்

ஈரநெருப்பால் உன்றன் - வெறும்
இதழ்கள் எரித்தாலும்
மாறவிருப்பம் இன்றி - மனம்
மரணம் போலாகிறது
very Nice kavithai aadhi..