Author Topic: எல்லாமே தலைகீழாய் எனக்கு மட்டும்  (Read 841 times)

Offline Tamil NenjaN

தன்கையே தனக்குதவி
அனுபவத்தில் அறிந்தேன்
தன்னந்தனியனாய் உலகில்
தவிக்கிறேன் நான்

துடைத்துவிட யாருமின்றி
கன்னங்களில் வழியும் கண்ணீர்
அனைத்துக் கொள்ள ஆறுதலின்றி
விம்மித் தணியும் இதயம்
ஆறுதல் வார்த்தைகளுக்காய்
நெடுநாளாய் ஏங்கும் செவிகள்

யார் யாரோ செய்த துரோகம்
கவிழ்ந்தது நான் மட்டும்தானே
உதவிய நண்பர்கள் எல்லாம்
துரோகிகளாய் ஆனது என்னே

முட்கள் நிறைந்த புதராய்
சொற்கள் குத்தியது
துரோகங்களின் அடியில்
சுக்குநூறாய் இதயம் உடைந்தது

பலநாட்களாய் உணவின்றி
பசிகிடந்த சிறுத்தையாய்
குதறக் காத்திருந்த எதிரிகள்
குட்டி முயலாய் அஞ்சி
ஓடி நான் வந்தேன்

குற்றமற்ற மனிதர்களென்று
இங்கு யாருமி்ல்லை
நன்றி கெட்ட உலகோர்
இன்றளவும் அதை உணரவில்லை

கட்டிய கோட்டைகள்
மூழ்கிய கப்பலாய்
கனவுகள் கலைந்தது
வானத்து மேகங்களாய்

நினைவுகள் எல்லாம் வலியாய்
தவித்து அழுகிறேன்
தனிமையாய் இங்கே

அலையில்லாமல் கடல் இல்லை
மனதில் வலியில்லாமல்
வாழ்க்கையும் இல்லை
உணர்ந்தேன் நானின்று

துரோகங்கள் மட்டும்
மறக்காது எனக்கு
வலிகளை மறந்திடுவேன்
ஆனால் வடுக்களை மறவேன்

வீழ்ந்துவிட்டாலும் நான்
எழுந்திருப்பேன்
மீண்டுமொரு நாளில்
ஓர்மமாய் உழைத்து
நேர்மையாய் வெல்வேன்

எள்ளி நகையாடியோரை
தள்ளிவைத்து
வெற்றி மாலைகள் நான்சூடிட
ஒருநாள் வரும் மீண்டும்
அன்றே என் வாழ்வின் திருநாள்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 120
  • Total likes: 120
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Quote
துடைத்துவிட யாருமின்றி
கன்னங்களில் வழியும் கண்ணீர்
அனைத்துக் கொள்ள ஆறுதலின்றி
விம்மித் தணியும் இதயம்
ஆறுதல் வார்த்தைகளுக்காய்
நெடுநாளாய் ஏங்கும் செவிகள்


Nijamana varigal...


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Anu

தன்கையே தனக்குதவி
அனுபவத்தில் அறிந்தேன்
தன்னந்தனியனாய் உலகில்
தவிக்கிறேன் நான்

அலையில்லாமல் கடல் இல்லை
மனதில் வலியில்லாமல்
வாழ்க்கையும் இல்லை
உணர்ந்தேன் நானின்று

எள்ளி நகையாடியோரை
தள்ளிவைத்து
வெற்றி மாலைகள் நான்சூடிட
ஒருநாள் வரும் மீண்டும்
அன்றே என் வாழ்வின் திருநாள்

very nice lines...
idhe thanambikaiyoda muyarchi seiyunga
vetri adaiyum naal viraivil varum.
en vaazthukkal tamil nanjan..


Offline kanmani

arthamula varigala iruku ash unga kavithaigal nice ...

Offline Tamil NenjaN

மனம் நிறைந்த நன்றிகள் கண்மணி.

சிறப்பான கவிதைகளை எழுதும் அளவுக்கு எனக்குள் திறமைகள் இல்லாவிட்டாலும் உங்கள் ஊக்கம் தான் என்னை இங்கே எழுத தூண்டியது. அதே போல என்னை ஒருநல்ல கவிஞனாக வளர்த்தெடுக்கும் பணியிலும் உங்கள் ஆக்கபூர்வமான விமர்சனத்தை எதிர்பார்க்கிறேன்.

Offline Global Angel

Quote
யார் யாரோ செய்த துரோகம்
கவிழ்ந்தது நான் மட்டும்தானே
உதவிய நண்பர்கள் எல்லாம்
துரோகிகளாய் ஆனது என்னே


அனுபவபூர்வமான வரிகள் ... நன்று கவிதை தமிழ் .....