ஒற்றை குறுஞ்செய்திக்காக பலமுறை
பார்க்கப்படும் அலைப்பேசி உணர்த்துகிறது...
காய்ந்த சறுகில் பூத்த மலராயினும்
அதன் ஆயுட்காலம் குறைவு தானே...
நினைவுகளை மாற்றும் நிஜமாயினும்
இவையும் நாளைய நினைவுகள் தானே...
இன்று கண்கள் தேடும் கனவாகினும்
இவையும் நாளைய காணல்நீர் தானே...
தீரா காதல் பிம்பங்களும்
நாளை கலைந்து போகும் கனவுகள் தானே...
காலோட்டத்தில் எழும் உணர்வுகள் எல்லாம்
நாளை வற்றி போகும் ஓடை தானே..
இதில் நீயும் நானும்
மட்டும் விதி விலக்கா???
தேடப்படும் ஒவ்வொரு தேடலிலும்
ஏனோ தொலைந்து போகிறோம்...