தாயிடம்
நிரூபியுங்கள்,
கடைசி வரை
அன்பாக
இருப்பேன் என்று...
தந்தையிடம்
நிரூபியுங்கள்,
கடைசி வரை
உங்கள் பெயரை
காப்பாற்றுவேன் என்று...
மனைவியிடம்
நிரூபியுங்கள்,
கடைசி வரை
என் காதல்
உனக்கானது மட்டும் என்று...
சகோதரனிடம்
நிரூபியுங்கள்,
கடைசி வரை
உனக்கு உற்ற
உறுதுணையாய்
இருப்பேன் என்று...
சகோதரியிடம்
நிரூபியுங்கள்,
கடைசி வரை
உனக்குச் செய்யும்
சீர் ஒரு சுமையே
இல்லை என்று...
மகனிடம்
நிரூபியுங்கள்,
கடைசி வரை
உலகமே
எதிர்த்தாலும்
நான் உன் பக்கம்
இருப்பேன் என்று...
மகளிடம்
நிரூபியுங்கள்,
கடைசி வரை
உன் கண்ணில்
நீர் வழிந்தால்
என் கண்ணில்
இரத்தம் வரும் என்று...
வேறு எவருக்கும்,
நீங்கள் எதை
நிரூபித்தாலும்,
அது கடலில்
கொட்டிய பெருங்காயமே...