Author Topic: ஓவியம் உயிராகிறது - நிழற்படம் எண் - 391  (Read 80 times)

Offline Forum

ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)

நண்பர்கள் கவனத்திற்கு ....

சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...

இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....



கவிதைகளுக்கான விதிமுறைகள்


1-இங்கே நீங்கள்  சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. (உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக)

2-தயவு செய்து  இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt  தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம்.

3-முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.

Updated on 26 Oct 2020:

4-நிகழ்ச்சி சிறப்புற தொகுத்து வழங்குவதற்கு ஏதுவாக,  உங்கள் கவிதைகள் 16 வரிகளுக்கு குறையாமலும் ,  60 வரிகளுக்கு மிகாமலும் அமையும்படி எழுத வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

விதிமுறை சேர்க்கப்பட்ட நாள் : 07-ஜூலை-2025

5-செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (Artificial Interlligence) மூலம் உருவாக்கப்பட்டு பதிவு செய்யப்படும் கவிதைகள் இந்த நிகழ்ச்சியின் பண்பலை ஒளிபரப்பில் இடம் பெறாது என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

விதிமுறை சேர்க்கப்பட்ட நாள் : 07-செப்டம்பர்  -2025

இப்பகுதியில் பதிவிடப்படும் கவிதைகள் சிறப்புற அமையும் வகையில் சில விதிமுறைகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.

6- நிகழ்ச்சி எண் 381 முதல் அடுத்து வரும் மூன்றாவது வாரம் தொடர்ச்சியாக கவிதை பதிவிடும் நண்பர்களின் பதிவு பண்பலை நிகழ்ச்சியில் இடம்பெறாது (மற்ற  8 கவிதைகள் பதிவு செய்யப்பட்டுஇருப்பின்)  என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

7-ஓவியம்  உயிராகிறது நிகழ்ச்சியின் மறு ஒளிபரப்பின்பொழுது (ஞாயிற்று  கிழமை )  அடுத்த வார நிகழ்ச்சிக்கான  நிழற்படம் கொடுக்கப்படும். ஆனால் உங்கள் கவிதைகளை அடுத்தநாள் (திங்கள்கிழமை) உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியின் பொழுது பதிவு செய்யப்படும் வகையில் இப்பகுதி திறக்கப்படும்.

நிழல் படம் எண் : 391

இந்த களத்தின்இந்த  நிழல் படம் FTC Team சார்பாக         வழங்கப்பட்டுள்ளது   ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...


உங்கள் கவிதைகளை  எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு  11:59 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்



Offline Luminous

நிலவே… நான் இன்னும் காத்திருக்கிறேன்

இந்த இரவு
மிக நீளமாக இருக்கிறது, நிலவே…
நீ வானத்தில் மெதுவாக நகர்கிறாய்,
நான் மட்டும்
ஒரே இடத்தில்
உயிரோடு உறைந்திருக்கிறேன்.

அவன் போன நாள்
நான் என் நிழலை
இழந்த நாள்.
அவன் சிரிப்பு இல்லாத
இந்த வீடு
என்னை தினமும்
அன்னியமாக்குகிறது.

போர்க்களத்தில்
அவன் எதிரியை பார்க்கிறான்…
இங்கே
நான் ஒவ்வொரு நிமிஷமும்
என் பயத்தை பார்க்கிறேன்.

ஒரு செய்தி…
ஒரே ஒரு செய்தி…
“உயிரோடு இருக்கிறேன்”
என்ற ஒரு வார்த்தைக்காக
என் உயிர்
எத்தனை இரவுகளை
தாண்டிவிட்டது தெரியுமா?

நிலவே…
நீ எல்லா வீட்டுக்கும்
ஒளி தருகிறாய்.
என் வீட்டுக்கு மட்டும்
ஏன் இப்படிப்
பார்வை தவிர்க்கிறாய்?

அவன் இல்லாமல்
என் கைகள் நடுங்குகின்றன.
அவன் இல்லாமல்
என் இதயம்
ஒவ்வொரு துடிப்பையும்
வலியோடு செய்கிறது.

தேநீர் கையில் எடுத்தால்
அவன் நினைவு.
காற்று வந்தால்
அவன் சுவாசம்.
தூக்கம் வந்தால்
அவன் முகம்.
தூக்கம் போனால்
அவன் இல்லாமை.

நிலவே…
நீ தேய்கிறாய்,
ஆனால் மீண்டும் வளர்கிறாய்.
நான் மட்டும்
ஒவ்வொரு நாளும்
உள்ளுக்குள்
சிறிது சிறிதாக
சாகிறேன்.

அவன் திரும்பி வந்தால் ....
இந்தக் கண்ணீர் எல்லாம்
புன்னகையாய் மாறும்.
இந்த உடல்
மீண்டும்
பெண்ணாகும்.

அவன் வராவிட்டாலும் ....
கேள் நிலவே…
என் வலி
தேசத்தை வெறுக்காது.
அவன் ரத்தத்தில் இருந்த
தேசப்பற்று
என் வயிற்றில் வளரும்
இந்தக் குழந்தையில்
மீண்டும் பிறக்கும்.

நாளை
அவன் போலவே
என் மகனும்
தேசத்தின் அழைப்புக்கு
போனால்,
அன்று நான் அழுவேன்…
ஆனால் தடுக்க மாட்டேன்.

ஏனெனில்
ஒரு பெண்ணின் இதயம்
உடைந்தாலும்,
ஒரு தாயின் மனம்
தேசத்துக்கு முன்
மடங்காது.

நிலவே…
நீ வானத்துக்காக
ஒளிர்கிறாய்.
நான்
இந்த நாட்டுக்காக
உயிரோடு எரிகிறேன்.
LUMINOUS 👨‍✈️💜🤰🌚

Offline Clown King

கார் மேகங்கள் வானம் முழுதும் கம்பளம் விரிக்க
அதில் வைரங்களை தெளித்தது போல நட்சத்திரங்கள் ஜொலி ஜொலிக்க
நடுவில் தேவதையாய் இராகதிராய் நீ மின்ன உன் பொலிவிற்கும் ஈடேது உண்டு

நீயும் துணை இல்லாமல் தனித்து நிற்கின்றாய்
அதேபோல் நானும் உன்னைப் பார்த்து ஆறுதல் கொண்டு உன் அழகை ரசித்து கொண்டிருக்கின்றேன்

நீ தனித்து இருப்பதை பார்த்த பின்பு தான் தனிமை மனிதனுக்கு மட்டுமல்ல இயற்கைக்கும் பொருந்தும் என்று ஆம் நாம் இருவரும் கடவுளின் படைப்பு தானே
எனக்காவது நீ இருக்கின்றாய்
உனது  அழகை பார்த்துக் கொண்டே எனது தனிமையின் வலியை போக்கிக் கொள்வேன்
நீயோ பாவம் என்னைப் பார்க்கின்றாயா உன்னால் பார்க்க முடியுமா உனது என்ன குமரல்களை
.தனித்துக் கொள்ளத்தான் முடியுமா

உன்னால் முடிந்தது எல்லாம் மற்றவரை இன்புற்று இருக்கவே
உனது குளிர்ச்சியான கதிர் அலைவு கலை கொடுக்க முடியும் நீ இன்புற்று இருக்க ஏதேனும் ஏற்க முடியுமா

தனிமை ஒற்றை பதம்  எத்தனை வலிகள் அத்தனை வலிகளையும். சகித்துக் கொண்டு நீயும் மிளிர தானே செய்கின்றாய் இது நீ பக்குவப்பட்டதின் அடையாளமோ

உன் முன்னால் அமைதியாக அமர்ந்திருந்தாலும் எனது என்ன ஓட்டங்கள் எனையும் தாண்டி செல்கின்றதே தனிமையில் விட்டு சென்ற அவனை நினைத்து நினைத்து ஏங்கிக் கொண்டு அல்லவா இருக்கின்றது எனது இதயமும்

எனது தனிமை போகுமா இல்லை
உனைத் தோழியாக்கிக் கொண்டு நீண்டு தான் செல்லுமா காத்திருக்கின்றேன் அவன் வரவுக்காக .....