யார் அவள்... யார் அவள்... என்று நினைப்பவர் கோடி..
அவன் இன்றி ஒரு துரும்பும் அசையாது இவ்உலகில்.. அது போல
அவள் இன்றி நாம் இல்லை இவ்வுலகில், இதுவே உண்மை..
ஒவ்வொரு உயிரின் பசியிலும் அவள் இருப்பாள்..
எவ்வுயிர் வலியில் துடித்தாலும் அங்கும் அவள் இருப்பாள்..
அவளே ஒவ்வொரு உயிர்களின் இறைவி ஆவாள்...
கடவுளை காண.. கோவிலை சுற்றி சுற்றி வரும் நம்மால்..
நம்கண்முன்னே நடக்கும்.. சிரிக்கும் தெய்வம் ஒன்று...
நம்முடனே வாழும் ஓர் தேவதை.. நாம் அம்மா என்று..
நாமே அவளை மறந்தாலும்.. அவள் என்றுமே நமை மறவாள்..
அவள் பெற்ற செல்வங்களில்.. பெரும் செல்வம் நாம் மட்டுமே
என்றுமே நமக்காக வாழும் தெய்வம் அவள்..
அவளின் பாசம் போல அவளின் கோபமும் அழகு தான்..
ஆம்... அவளின் கோபத்தின் வெளிப்பாடும் அவளின்...
அன்பின் மறு வெளிப்பாடே.. அவளின் கோபமும் நமக்கு பொக்கிஷயமே..
உலகாளும் அரசனும் அன்னையின் முன்னே சிறு குழந்தையே..
பல பேர்களை வீழ்த்திய வீரனும் அவள் முன்னே குருசேயே..
அவளே இவ்வுலக உயிர்களை காக்கும் கடவுவள்...
உலகை அன்பால் ஆளும் நம் வீட்டின் மகாராணிக்கு அன்னையர் தின திருவிழா எடுப்போம்
இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்