Author Topic: வாழ்க்கை !  (Read 715 times)

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1073
  • Total likes: 3612
  • Total likes: 3612
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
வாழ்க்கை !
« on: April 09, 2025, 09:44:14 PM »
நான்
தூங்கிக் கொண்டிருக்கும் போது
என்னை அறியாமலேயே
என்னிடம் வந்திருக்க வேண்டும்.   

என் விரலைத் தொடாமல்                                     
என்னைத் தழுவாமல்
சத்தமில்லாமல்
யாருக்கும் தெறியாமல்
யாரிடமும் விடை கூறாமல்
என்னை அழைத்து செல்ல வேண்டும்

இந்த வேதனை நிறைந்த பூமியிலிருந்து
அமைதி நிறைந்த கரைக்கு
காலமே
என்னை அழைத்து செல்

தொலைந்து போன
கனவுகளின்
மங்கிப்போன
நினைவுகளே
உங்களை இந்த பூமியில்
விட்டுச் செல்கிறேன்

யாரோ ஒருவர் வந்து
வாசிக்க கூடும் என்று
நூலகத்தில்
புத்தக அலமாரியில்
மேல் தளத்தில்
காத்திருக்கும்
புத்தகம் போல
சிலர் வாழ்க்கை

எளிமையான
வாழ்க்கை
வாழ தெரியாமல்
அதை
கடினமாக்கி கொள்ளும்
மனம்

நாம் தேடும் எதுவும்
நம்மை ஒருபோதும்
தேடுவதில்லை
என்பது விதி

வாழ்வில்
மகிழ்வை தந்தவர்களை
நினைக்கும் மனம்
துயரம் தந்தவர்களையும்
சேர்த்தே தூக்கி
சுமக்கிறது

சில ஆசைகள்
சில எதிர்பார்ப்புகள்
நிறைவேற தகுதியற்றவை
என தெரிந்தும்
அதை ஏற்றுக்கொள்ள
மறுக்கும் மனம்

தேவை இன்றி பேசுவது
சிலர் குணம்
தேவை இன்றி எழுதும்
என்னை போல

எனக்கு தெரிந்த
என் ரகசியம்
எனக்குள்
புதையுண்டு போகட்டும்


****JOKER****


"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline Vethanisha

Re: வாழ்க்கை !
« Reply #1 on: April 12, 2025, 10:31:07 AM »
எனக்கு தெரிந்த
என் ரகசியம்
எனக்குள்
புதையுண்டு போகட்டும்..  this line hit differently..

Nalla pathivu nanbare

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1073
  • Total likes: 3612
  • Total likes: 3612
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: வாழ்க்கை !
« Reply #2 on: April 23, 2025, 08:08:57 PM »
கண்ணீரை
மை யில் கரைத்து
ஒரு கவிதை
ஒன்று எழுதினேன்

உறைந்த மனதின்
ஆழத்திலிருந்து
வரிகள் பிறந்தன
ஏக்கத்தின்
வெளிப்பாடாக

எனினும்
நான் எழுதிய
வரிகள் யாவும்
உனக்கு வெறும்
கவிதையாகவே
தெரிந்தன

உனக்காக
எழுதப்பட்ட
வரிகள் எல்லாம்
உன்னைப் பற்றிய
கனவுகள் மட்டுமே

உயிராய்
நேசித்த
இதயம்
துடிக்கும்
துடிப்புகளில்
இருப்பது நீயே
என என்று அறிவாயோ !?

என்
நிறைந்த இரு கண்விழிகள்
மழையாய்  கண்ணீரை
கொட்டும்போதும்
நீ அறிந்தாயோ
இல்லை
காணாமல் ஒளிந்துக்கொண்டாயோ
உன்னை நினைத்து கொண்டிருக்கும்
ஒரு இதயம் இருக்கிறதென்று

உன் அழைப்பை
எதிர்பார்த்து
உன் நினைவுகளுடன்
என் இதயம்
துடித்து கொண்டிஇருப்பதை
நீ கேட்கவில்லையே

நீ சென்ற வழிகளில்
என் விழி பதித்து
காத்திருக்கிறேன்
உன் நினைவுகளுடன்
நீ
வருவாய் என

நாம் வாழ்கிறோம்
என்று உணர்வது
நம்மை ஒருவர்
தீரா அன்போடு
நேசித்துக்கொண்டிருக்கும்போது தான்

உடன் வாழ ஒருவரை
தேடுவதல்ல
என்றும் அவர் இல்லாமல்
வாழ்க்கை இல்லை
என ஒருவரை கண்டுபிடிக்கும்
தருணம்
வாழ்வு மகிழ்வுறும்



****Joker****

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "

Offline SweeTie

Re: வாழ்க்கை !
« Reply #3 on: April 25, 2025, 09:29:01 PM »
வாழ்க்கையின் தத்துவம் பலருக்கு புரிவதில்லை.   காலம் கொடுக்கும் பக்குவம் பதில் சொல்லவேண்டும். 

Offline joker

  • SUPER HERO Member
  • *
  • Posts: 1073
  • Total likes: 3612
  • Total likes: 3612
  • Karma: +0/-0
  • முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்
Re: வாழ்க்கை !
« Reply #4 on: April 30, 2025, 10:02:38 PM »
சில நேரம்
வாழ்க்கையில்
துன்பங்களும்,
வேதனைகளும் , வருவது
நம்மை
சோதிக்க மட்டுமல்ல
நம்முடன் இருக்கும்
சில மனிதர்களின்
உண்மையான குணம்
கண்டறியவும் தான்

சில உறவுகள்
நம்முடன் சண்டையிட்டு
சில நாட்கள் பேசாமல்
நம்மை விட்டு விலகி சென்ற போதும்
"எனக்கு உன்னுடன் பேசாமல் இருக்க முடியலடா"
என்று ஏதும் நடக்கவில்லை என்றபடி
மீண்டும் பேச துவங்கும்
அவ்வுறவுகள் ஒரு வரம்

ஆரம்ப காலத்தில்
எழுதிய கிறுக்கல்கள்
எல்லாம் அவனிடம்
படிக்கச் சொல்வேன்
மச்சி சூப்பர் என்பான்
அது எனக்குள் ஒரு
தன்னம்பிக்கையை
விதைத்தது அன்று

இன்று
அதை படிக்கையில்
எனக்கே சிரிப்பு வருகிறது

எழுதி எழுதி
அடித்து திருத்தி
பின் மீண்டும் எழுதி
மெல்ல மெல்ல என் தவறுகள்
எனக்கே புரிய துவங்க
தவறுகள் குறைய துவங்கின
புதிய வார்த்தைகள் புலப்பட்டன

வாழ்க்கை அப்படி தானே
தவறுகளில் இருந்து மெல்ல
மேலேறி வர
புதிய பாதை
கண்ணுக்குப் புலப்படும்
அவ்வழியில் ஓர் பயணியாய்
தொடர வேண்டும்
நம் பயணம்

****Joker****

"முகமூடி இல்லாமல் முகத்தை மட்டும் வண்ணப்பூச்சுகளால்அலங்கரித்து கொண்டவன் "