சில நேரம்
வாழ்க்கையில்
துன்பங்களும்,
வேதனைகளும் , வருவது
நம்மை
சோதிக்க மட்டுமல்ல
நம்முடன் இருக்கும்
சில மனிதர்களின்
உண்மையான குணம்
கண்டறியவும் தான்
சில உறவுகள்
நம்முடன் சண்டையிட்டு
சில நாட்கள் பேசாமல்
நம்மை விட்டு விலகி சென்ற போதும்
"எனக்கு உன்னுடன் பேசாமல் இருக்க முடியலடா"
என்று ஏதும் நடக்கவில்லை என்றபடி
மீண்டும் பேச துவங்கும்
அவ்வுறவுகள் ஒரு வரம்
ஆரம்ப காலத்தில்
எழுதிய கிறுக்கல்கள்
எல்லாம் அவனிடம்
படிக்கச் சொல்வேன்
மச்சி சூப்பர் என்பான்
அது எனக்குள் ஒரு
தன்னம்பிக்கையை
விதைத்தது அன்று
இன்று
அதை படிக்கையில்
எனக்கே சிரிப்பு வருகிறது
எழுதி எழுதி
அடித்து திருத்தி
பின் மீண்டும் எழுதி
மெல்ல மெல்ல என் தவறுகள்
எனக்கே புரிய துவங்க
தவறுகள் குறைய துவங்கின
புதிய வார்த்தைகள் புலப்பட்டன
வாழ்க்கை அப்படி தானே
தவறுகளில் இருந்து மெல்ல
மேலேறி வர
புதிய பாதை
கண்ணுக்குப் புலப்படும்
அவ்வழியில் ஓர் பயணியாய்
தொடர வேண்டும்
நம் பயணம்
****Joker****