பாழடைந்த இல்லமும், பகுத்தறிவில்லா உள்ளமும்!
பாழடைந்த வீடும், மனிதம் இல்லா மனதும் ஒன்றே!
பராமரிப்பு இல்லையேல் வீடு பாழடைந்து போகும், பக்குவம் இல்லாமல் போயின், மனம் மரக்கட்டயாய் மாறும்.
உறவுகளுடன் ஒன்றி வாழ்வின், வீடு வசந்த சோலைவனமாகும், உறவினில் வலிமை இல்லையேல் அது வறண்ட பாலைவனம் ஆகும்.
அதே போல் தான் மனித மனமும்.
மனிதம் என்ற மாணிக்கம் மதிப்பு பெற, பக்குவம் எனும் வைரம் மிகவும் அவசிசம் ஆனதே, மனதை வார்த்தெடுக்க.
உறவுகளே! பிறப்புக்கும், இறப்புக்கும் இடையில், இழைப்பாரும் சிறு நேரம் தான் வாழ்க்கை.
இதில் ஏன் வன்மமும்,வஞ்சகமும் வசதியாய் வாழ்கின்றது?
சிறிதும் சிந்திக்க வேண்டாமா?
படைத்த இறைவன் கோடான கோடி படைப்பினங்களை படைத்திருப்பினும், மனித படைப்பை தான் சிறந்த படைப்பு என்று சொல்கின்றான் இறைவன்.
அதற்கு காரணம் நன்மை தீமையை பிரித்து ஆராய கூடிய அறிவை நமக்கு தந்தமையே...
உடல் அமைப்பு ஒன்றே, உணர்வுகள் ஒன்றே, உடலில் உருண்டோடும் குருதியும் ஒன்றே...
இதில் எங்கு கண்டாய் ஏற்ற, தாழ்வை?
தாய்மை என்பது ஒன்றே, தவிப்பு என்பதும் ஒன்றே. இதில் எங்கு கண்டாய் தராதரத்தை?
பிறப்பும், இறப்பும் மனித குலத்தின் மீது மட்டும் அல்ல அணைத்து உயிர்களின் மீதும் படைத்த இறைவன் நிர்ணயித்து தீர்மானித்த விதி. இதில் மீண்டவன் யாரடா 🤨
படைத்ததவன் படைப்பை, பங்கிடும் உரிமையை கொடுத்தது எவனடா 🤨.
இப்பூவுலகம் படைத்த இறைவனால் படைக்க பட்ட கோடான கோடி ஜீவராசிகளுக்கும் சொந்தமானதே.
இங்கு உயர்ந்தவன், தாழ்தந்தவன் என்பது தூய்மையான, உள்ளத்தையும், துரோகம் செய்யா செயல்பாட்டினையும் கொண்டே தீர்மாணிக்க படவேண்டும், பிறப்பின் அடிப்படையில் அல்ல.
பிறப்பின் அடிப்படையில் பிரிவினை பார்க்கும் கூட்டமே, தாயின் வயிற்றில் இருந்து சேய் அது பிரிந்து வருவதில் என்ன மாற்றத்தை கண்டாய்?
படைத்த இறைவனின் பார்வையில் சிறந்தவர் யார் எனில்.
மக்களுக்கும், மற்ற உயிர்களுக்கும் உபயோகமான வாழ்க்கையை எவர் வாழ்வாரோ? அவரே சிறந்தவர், உயர்ந்தவர்...
எவர் இதை ஏர்பினும், மறுப்பினும் இதுவே நிதர்சனமான உண்மை......
எம் உள்ளம், பிரிவினையால் பாழடைந்த வீடாக கிடக்க வேண்டுமா? அல்லது பகுத்தறிவின் பெயரால் வெள்ளி மாளிகையாக ஜொலிக்க வேண்டுமா?
சிந்தியுங்கள் 🌹🌹🌹
உறவுகளே! அனைவரும் ஒரு தாய் வயிற்று பிள்ளைகள் தான் என்பதில் மாற்றம் இல்லை. சகோதர்களாய் வாழ்வோம், சகோதரத்துவத்துடன் வாழ்வோம் 🌹🌹🌹🌹.
இப்படிக்கு
வஞ்சிக்கப்படுவோரின் வாய்மை குரலாய்.
𝘔𝘕 - 𝘈𝘏𝘈𝘔𝘌𝘋 𝘈𝘈𝘙𝘖𝘕...........
☝️என்னை பாதுகாக்க என் இறைவன் போதுமானவன் ☝️