Author Topic: படித்ததில் பிடித்தது..!  (Read 3773 times)

Offline Thooriga

Re: படித்ததில் பிடித்தது..!
« Reply #15 on: January 28, 2025, 05:34:21 PM »
தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்
« Last Edit: February 22, 2025, 01:54:36 PM by Thooriga »

Offline Thooriga

Re: படித்ததில் பிடித்தது..!
« Reply #16 on: February 02, 2025, 08:41:06 PM »
சிலரை சந்தோஷப்படுத்த ரொம்ப சிரமப்பட தேவையில்லை. நம்ப கஷ்டத்தைச் சொன்னாலே போதும்
« Last Edit: February 22, 2025, 01:55:26 PM by Thooriga »

Online KS Saravanan

Re: படித்ததில் பிடித்தது..!
« Reply #17 on: February 22, 2025, 01:12:48 PM »
இரு பக்கமும் கூர்மையான கத்தியை கவனமாக பிடிக்க வேண்டும்..!

அதுபோல, எந்தப் பக்கமும் சாயக்கூடிய மனிதர்களோடு கவனமாக பழக வேண்டும்..!



படித்ததில் பிடித்தது..!
« Last Edit: February 22, 2025, 04:51:43 PM by KS Saravanan »

Online KS Saravanan

Re: படித்ததில் பிடித்தது..!
« Reply #18 on: March 02, 2025, 11:27:58 PM »
ஒரு ஆணின் அன்பு கிடைக்கும் வரை தான்
ஒரு பெண் போராடுகிறாள்..!

பின்பு அதை தக்க வைத்துக்கொள்ள
ஆண் போராட துவங்குகிறான்..!


படித்ததில் பிடித்தது..!

Online KS Saravanan

Re: படித்ததில் பிடித்தது..!
« Reply #19 on: November 13, 2025, 04:37:04 PM »
ஏமாற்றம்..!

ஏமாற்றம் ஒன்றும்
புதிதல்ல
ஏங்கிதவிக்கும்
இதயத்திற்கு
ஏமாற்றும் விதம்
தான் புதிது :)


படித்ததில் பிடித்தது..!

Online KS Saravanan

பிரியாணி

ஞாயிற்றுக்கிழமை என்றாலே
எல்லா வீடுகளிலும் பிரியாணி வாசம்…
அது அசைவம் என்ற எல்லையைத் தாண்டி,
ஒரு உணர்வு, ஒரு குடும்ப வழக்கம்,
ஒரு மனதுக்குள் பிறக்கும் மகிழ்ச்சி
விருந்தாக இருந்தாலும்,
விழாவாக இருந்தாலும்,
“பிரியாணி இல்லாம எப்படிங்க?”
என்று கேட்கும் அளவுக்கு
அது வாழ்க்கையோடு கலந்துவிட்டது
அப்படிப்பட்ட பிரியாணி சாப்பிடாமலும்,
தூங்காமலும், பசியோடு இருக்கிற
என்னைப் பார்த்து,
“பிரியாணி கவிதை எழுது”
என்று சொல்வது நியாயமா சொல்லுங்க?
வாசத்திலேயே வயிறு நிரம்புது,
வார்த்தை தேடும் மனசு
பசியாலே தடுமாறுது.
முதலில் பிரியாணி… அப்புறம் கவிதை!
இதுதான் பசியால் வாடும்
கவிஞனின் நியாயமான கோரிக்கை..!


Nama Chat user Luminous eluthiya kavithi ithu..!

Biriyani..! ;D ;D

படித்ததில் பிடித்தது..!