br />
மனம் இங்கோ பிரிகிறதே : ஓர் உறவில் என்றும் தேவை அசாதாரான நம்பிக்கை மற்றும் புரிதலின் மகத்துவம்!!!
மாற்றங்கள் வரக்கூடும், கசப்புகள் வரக்கூடும், அவ்வுறவில் ஓர் வெறுமையும் வரக்கூடும் ----- வரக்கூடாதே, அவ்வுறவில் அவநம்பிக்கை மட்டும் ! 😒❤️🩹💔😒
நட்பென்னும் பொக்கிஷ பயணத்தில் சிறு துளி சந்தேக பார்வை விழின் நீடிக்குமோ அந்நட்பு... 😒💔🥲
மனம் இரண்டும் பேசுகையில் வார்த்தைகள் கூட தேவையில்லை.... ஆனால், இன்றோ இரு மனங்களிலும் சிறு விரிசல்கள் ஏற்பட்டதோ...😒💔🥹
நேரில் சந்தித்து பேசுகையில் அனைத்தும் செரியாகும் என நினைத்தே சென்ற அவ்விரு மனங்களுக்கும் விலகல் எனும் முடிவை யார் தேர்ந்தெடுத்து கொடுத்தது...

💔
அன்பு, பாசம், நேசம், பற்றுதலின் பிணைப்பு, அரவணைப்பும் கூடிய அவ்வுறவில் காயங்கள் ஏற்பட்டால் விலகல் மட்டுமே விடையா...

🥲💔🥹
என்னை விட்டு ஒரு காலும் உன் உறவு பிரியவும் நீங்கவும் கூடாது என்று கூறிய வார்த்தைகள் எல்லாம் அன்று பொய்யானதோ.... 💔💔 நான், உமை பிரிந்தலும் என் நினைவில் என்றுமே நீ குடி கொண்டு தானே
செல்கிறாய் என் கண்மணியே.... 💔❤️🩹
அனைவரும், அவரவர் இதயதுடிப்பின் கிரியாயூக்கியாக இருக்கின்ற அவர்தம் அன்பான துணையிடம் தனக்கு அது வேண்டும் இது வேண்டும் என்று ஆசை... ஆசையாக கேட்பர்.... 😒
ஆனால், என்னிடமோ நீ கேட்டது பிரிதல் எனும் பரிசிலை என் அன்பே... 😒💔
ஒரு போதும் உமை விட்டு பிரியா வரம் வேண்டும் என்றேன் என் மனதை உன்னிடம் கொடுக்கையில் 💔 தந்தாயே.... என்றுமே எம் வாழ்வில் உமை மறக்கா நினைப்பை என்னுள்... 😒💔
என் நாட்கள் செல்கிறது வெறுமையால் நீயில்லா ஓர் பயணம் தனி மரமாகவே ❤️🩹🥲💔
எண்ணி எண்ணி எனக்குள் வெம்புகிறேன்.... அன்று, உதிர்ந்த வார்த்தைகளின் கடுமை பரிசல் அளித்தது இவ்விரிசலை எமக்கு....💔
என் நினைப்பிலோ நீயே.... என் சிரிப்பிலோ நீயே... என் சிந்தனையிலோ நீயே... என் இன்பத்திலோ நீயே.... என் துயரிலோ நீயே.... என் அரவணைப்பிலோ நீயே... என் அன்பிலோ நீயே.... இன்று, என் வாழ்வின் தனிமையிலோ நீயே... நீயே... நீயே.... என் தங்கமே 🫰💔... உமை என்றும் நான் மறவேன்...🫰🥹
தீயினால் சுட்டாலும் என் கட்டை நீ இருக்கும் திசையில் மட்டுமே பயணிக்கும்.... என் அன்பே 🫰🥹