இயல் மகளோ இவள்: இயற்கையின், இன்றைய காலகட்டத்தில்
இயல் சூழ் பூமியை காண்பது அரிதாகி விட்டது.... செயற்கையின் இயற்கை ஆகவே இன்று பூமி சுழன்று கொண்டுள்ளது.
ஆகையால், மாந்தர் தம் நிலத்தை விட்டு நிலாவிற்கு அவர்தம் வாழ்வியல் பயணத்தை தொடங்கி அங்கே வாழவும் இப்போது முற்படுகிறார்கள்....
இந்நிலை, நீடித்தால் நம் பூமியெங்கும் வெறும் நிலையில்லா கட்டிடங்களும் காகிதங்களும் மட்டுமே காற்றில் உலாவும்.... மாந்தர், தம் ஸ்வாசம் எங்கு தேடியும் கிடைக்காது....!!
நமது, பாரத சுதந்திர போராட்ட காலங்களில் ஓர் வாசகம் நமையும் நம் ரத்தத்தையும் தூண்டி இழுத்தது....
"என்று தணியும் இந்த சுதந்திர தாகம் - என்று மடியும் இந்த அடிமையின் மோகம்" ஆனால், இன்றோ நான் அதை மருவி கூற விழைகிறேன்....
"என்று தனியும் இயல் மகளின் தாகம்,என்று மடியும் இந்த செயற்கையின் மோகம்"ஏன்னெனில், இயல் இல்லையேல் நாம் இப்பூமியில் வாழ்ந்தும் வாழா பொம்மைகளே....!!!
இயற்கை அன்னையை தேடி தேடி பச்சை பசேல் என்ற நிலத்தை நோக்கி நீண்ட பயணம் ஒன்றை மேற்கோள்கிறாள் இயல் மகளானவள்....!
அவள், இயல் சூழ் இடத்தை எங்கு தேடியும் காண கிடைக்கா எட்டா கணியா அமைகிறது.... செயற்கையின் வளம் எவ்வளவு ஆபத்து என்று இப்போது புரிகிறதா.... இயற்கையை அழித்து செயற்கையை வளப்படுத்த யார் அதிகாரம் கொடுத்தது என்று வெம்புகிறாள் இயல் மகள்....!
இயற்கை அன்னையின் மடியில் படுத்து உறங்க நினைக்கும் அவள் தேடி அலைந்தும் தான் உறங்கும் தருவாயில் தன்னை வருடி தன் மேல் படற ஓர் இன்பம் தரும் தென்றல் இல்லையே என்று வருந்தும் நிலையே தொடர்கிறது....!
இயலை அழித்து இயங்கும் ஓர் சாதனம் நமக்கு தேவையா.... அப்படியென்றால், நாம் அனைவரும் நம் சுயத்தை அழித்து வாழும் வெறும் சவங்களே....!!!
நம் பூமியில், இயல் மகளே இயற்கையை தேடி அலைகின்ற அவல நிலை ஏற்பட்டடுள்ளது என்று கூறினால் அது மிகையாகாது...!
இயலை காப்போம்.... இயல் சூழ் பூமியை நாடுவோம்.... செயற்கை பயன்பாட்டை குறைத்து இயற்கை பயன்பாட்டில் செழித்து இன்னுயிர் காப்போம் என்று சூள்ளுரைப்போம்....!!!
செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல். (குறள் 636)“புறந்தூய்மை நீரான் அமையும், அகந் தூய்மை
வாய்மையால் காணப் படும்” (குறள்– 298) "எங்கே பூக்கள் பூக்கின்றனவோ அங்கே நம்பிக்கையும் பூக்கும். இயற்கையுடனான ஒவ்வொரு நடையிலும், ஒருவர் தேடுவதை விட அதிகமாகப் பெறுகிறார்." இயல் மகளை நம் இரு கரங்கள் விரித்து வரவேற்போம் வாருங்கள்... 🙏🙏🙏
என்று கூறி வாய்ப்பளித்த அனைத்து அன்பர்களுக்கும் இவ்விடத்தில் நன்றி சொல்லி விடைபெறுகிறேன் வணக்கம் 🙏🙏🙏
உங்கள் அன்பன்,
நீல கடல் எனும் Blue Sea