போகிறாய் நீ, என் காதலே,
நிழலாக நீ எங்கிருந்தாலும்,
உன் நினைவுகள் மட்டும்,
என் நெஞ்சில் நிலைத்து நிற்கின்றன.
நடந்து சென்ற உன் அடிகளின் ஒலி,
என் இதயம் சிதறிய குரல்,
நீ தொலைவுக்கு சென்றாலும்,
உன் சுவடு என்னை விட்டு போகவில்லை.
உன்னின் முகம், என் கண்களில்,
விலகும் போது கண்ணீர் வழியும்,
நம்மிடையே இருந்த உறவுகள்,
உறங்காத இரவுகள் ஆகின்றன.
நினைவுகள் மட்டும் நீளும்
நாம் சேர்ந்து கொண்ட தருணங்கள்,
அருகில் இல்லாத உன்னை,
நான் தாங்க முடியாமல் தவிக்கின்றேன்.
விலகிப் போகும் உன்னைக் கண்டு ,
என் விழிகள் ததும்பி நிற்கின்றன,
உன் புன்னகை என் நினைவில் வந்து
கண்ணீர் துளிகளாய் வழிகின்றன.
உன் கைகள் என்னை விட்டுச் சென்றவுடன்,
என் உயிர் ஒரு தனிமையில் விழுந்தது,
விதியால் பிரிந்தாலும்,
உன் நினைவுகள் என்னை சுற்றிக் கொள்கின்றன.
காதல் என்னும் வார்த்தை,
உன் பெயரில் எழுந்தது,
என் நெஞ்சில் நீ வாழ்ந்தால்,
நான் உயிரோடு வாழ்வேன்.
நினைத்தால் நிமிடம் நிற்கும்,
நம் சந்திப்பு ஏன் கண்ணீரில் முடிந்தது?
விண்ணின் மேகங்கள் கூட,
என் துயரை உணர்ந்தன.
ஏன் என்னை விட்டுச் சென்றாய் உறவே
கண்ணிமை போல சேராயோ பிரிவே’
நீ சென்ற வழியில்,
நிழலாய் நான் பின்தொடர்கிறேன்,
உன் கால் அடிகளின் தடங்களில்,
என் காதலின் அடையாளம்.
காலம் இப்போது நின்று,
என் கண்ணீரை பார்த்து சிரிக்கிறது,
உன்னை இழந்து விட்டேன் என்று,
என் மனம் குமுறி அழுகிறது.
நீ திரும்பி வரும் நாளை,
என் நெஞ்சம் காத்திருக்கிறது,
காதல் அழியாததாம்
அது உண்மை எனில் மீண்டும் சேர்வோம்
என்ற நம்பிக்கையில் பயணிக்கிறேன் என் பாதையில் !