Author Topic: மண்ணுக்குள் விழுந்த விதை  (Read 946 times)

Offline thamilan

மண்ணுக்குள் விழுந்த விதை
முளைத்து மரமாகவில்லையெனில்
விழுந்த விதையால்
எந்த ஒருபயனும் இல்லை

அதுபோலே
உனக்குள் ஒளிந்திருக்கும் திறமைகளை
வெளிக்கொணரவில்லையெனில்
உனக்குள்ளே திறமைகள் இருந்தும்
ஏதும் பலனில்லை

தோழனே
அலட்சியங்களை தூக்கி பரண்மேல் போடு
லட்சியங்களை தட்டி எழுப்பு
உறங்கிக்கிடக்கும் உன் திறமைகளுக்கு
புத்துயிர் கொடு
நாளைய உலகம் நிச்சயம் உன்னை
திரும்பிப் பார்க்கும்

தன்னம்பிக்கை அதிகம் வை
நான் தான் என்ற நம்பிக்கை வைக்காதே
ஆணவம் அழித்துவிடும்
உனக்குள் இருக்கும் திறமைகளை அனைத்தையும்