Rasitha Kavithai
காலையில் வந்தாய், கண் இமைக்கும் நேரத்தில் சென்றாய்
கனவுகள் கலைந்த கடுப்பில் நான் !
முற்பகலில் வந்தாய், மூன்றே நிமிடத்தில் சென்றாய்
முனு முனுத்துக்கொண்டே படித்தேன் நான் !
மாலையில் வந்தாய், மறுநிமிடமே சென்றாய்
மனக்கவலை கொண்டேன் நான் !
இரவிலும் வந்தாய், இறக்கமே இல்லாமல் சென்றாய்
இனியும் முடியாதென்று படுத்தேன் நான் !
--- இப்படிக்கு 10 ஆம் வகுப்பு மாணவன்.
பொதுத்தேர்வுக்கு தயாராகும் பத்தாம் வகுப்பு மாணவனின் க(தறல்)விதை.