உன் சமாளிப்புத் திறனின் வெளிப்பாட்டில்
சின்னச் சின்னத் திருத்தங்களில்
நியாயங்களைப் பட்டியலிட்டுப் படையலிடாதே..!!
நிலைக்காது நின் தவறு.
ஒப்புக் கொள்ளாமையால்
நாளையே நீ நன்மை செய்தாலும்
நாள்போக்கில் அவை மறைந்து
நீ செய்த சிறு தீங்கே நிலைத்து விடக் கூடும்..!!