Author Topic: அம்மா..  (Read 636 times)

Offline JeSiNa

  • Hero Member
  • *
  • Posts: 504
  • Total likes: 813
  • Karma: +0/-0
  • Gender: Female
  • unmai kadhal yaar entral unai enai soluvene....
அம்மா..
« on: June 11, 2017, 07:24:17 PM »

கண்ணே ஆரரரோ கண்ணே ஆராரோ
ஆறறிவே கண்ணே என் ஆறறிவே
தென்றல் தீர்ந்துவிடும்
திங்கள் மறைந்துவிடும் என்றா அழுகிறாய்
கடல் கொண்டுவிடும்
இமயம் தின்றுவிடும் என்றா அழுகிறாய்
ஓசோன் பல ஓட்டை விழும்
உலகம் அழிந்துவிடும் என்றா அழுகிறாய்
ஆராரோ கண்ணே ஆரரரோ கண்ணே ஆராரோ
ஆறறிவே கண்ணே என் ஆறறிவே
காடு குறைந்துவிடும்
காற்றும் நின்றுவிடும் என்றா அழுகிறாய்
மாசு சூழ்ந்துவிடும்
மக்கள் என்ன செய்வார் என்றா அழுகிறாய்
சூரியன் சுட்டுவிடும் மனித
சுதந்திரம் கெட்டுவிடும் என்றா அழுகிறாய்
ஆராரோ கண்ணே ஆரரரோ கண்ணே ஆராரோ
ஆறறிவே கண்ணே என் ஆறறிவே
விஞ்ஞானம் தொட்டுவிடும்
வியாபாரத்தில் செயற்கை உலகம் கட்டிவிடும் என்றா அழுகிறாய்
பல நோய் தாக்கும்
பணபேய் தலைதூக்கும் என்றா அழுகிறாய்
சாக்கடை நீராகும் அதற்கு
சமுத்திரம் பேராகும் என்றா அழுகிறாய்
ஆராரோ கண்ணே ஆரரரோ கண்ணே ஆராரோ
ஆறறிவே கண்ணே என் ஆறறிவே
நீரில்லை வருங்காலத்திலே வாழ
நிலத்தில் மக்களில்லை என்றா அழுகிறாய்
நீ தூங்கு நிறைய கனவு சொல்லுவேன்
நிதானமாக நீ கேளு ஆராரோ கண்ணா ஆராரோ
என் ஆறறிவே கண்ணே என் ஆறறிவே
உன் ஒரு வயதில் உன் கால் பதிக்கும் அது
உழுகின்ற பெரும் ஏர் ஏழுக்கும்
பின் பல மாதத்திலே உன் பால் பல் பிடிக்கும் அது
பழுத்துவிட்டால் சில உதிர்ந்துவிடும்
உதிர்ந்த முத்துகளை நீ விதை எடுத்து
உழுகின்ற மண்ணிலே நீ முளைத்து
வருகின்ற காலத்திலே வளம் காடாக்கு
வயதுக்கு நீ படிக்கையிலே இது போலாக்கு
ஆராரோ கண்ணே ஆரரரோ கண்ணே ஆராரோ
ஆறறிவே கண்ணே என் ஆறறிவே
ஆற்று மணலிலே அள்ள அதிசயமாய் மறைஞ்ச தண்ணியிலே
மெல்ல குழிதோண்டு நீ மேக நிழல் கண்டு பின்பு
புதையல் நீராக்கு பூமி சேறாக்கு
விளையாட்டில் விஞ்ஞானம் தோற்கடிச்சு
வெற்றி பெற்றுவிடு விடுதலை இயற்கைக்கு தந்துவிடு
உன்புகழ் தாக்கத்திலே, புகை போக்கத்திலே
ஒசோனை உயர்த்திவிடு இந்த உண்மையை என்றும் கொடு
ஆராரோ கண்ணே ஆராரோ கண்ணே ஆராரோ
ஆறறிவே கண்ணே என் ஆறறிவே
வாலிப வயதினிலே, வயல் காட்டினிலே
வறுமை நீ ஒழிப்பதற்கு வாழ்கையை நட்டுவிடு
என் கண்ணே வருத்தத்தை நீ போக்கு
காலத்திலே உன் காதல் வேகத்திலே
சரித்திரம் மணந்துவிடு, பூமி சமத்துவம் கண்டுவிடு
ஆராரோ கண்ணே ஆரரரோ கண்ணே ஆராரோ
ஆறறிவே கண்ணே என் ஆறறிவே
அதிகாலை தூக்கத்திலே
செல்போன் அலார சிணுங்களிலே இந்த
ரிங்டோன் அழுகை நான் கேட்டு
ஆன்ம சுவாசத்திலே, பெரும் ஆவேசத்திலே
ஆராரோ என்னை ஆராரோ வந்து
யார் எழுப்ப வந்து யார் எழுப்ப இப்ப நீ தூங்கு
என் ஆறறிவே எப்ப நீ விழிப்ப, எப்ப நீ விழிப்ப.........

காரிருளையும் மிஞ்சும் ஓர் இருள்!
மீண்டும் அமர முடியாத சிம்மாசனம்!!
பசிக்காமல் புசித்தோம்!
உழைக்காமல் ஓய்வு எடுத்தோம்!!
தாயின் கருவறையில் !!!!!!

இந்த உலகத்திலேயே
விலை கொடுத்து வாங்க முடியாத ஒன்று
முதன் முதலில் என் உச்சி நுகர்ந்து
என் அம்மா இட்ட முத்தம் மட்டுமே.

உனக்காய் துடித்த ஓர் இதயம்
உனக்காய் மட்டுமே துடித்த ஓர் இதயம்
ரத்தத்தை உணவாய் மாற்றிய ஓர் இதயம்
அதை உனக்காய் பரிமாறிய ஓர் இதயம்
நீ கேட்டதெல்லாம் கொடுத்த ஓர் இதயம்
செய்த சேட்டை எல்லாம் பொறுத்த ஓர் இதயம்
இன்று துடிக்கிறது!
இன்றும் கூட துடிக்கிறது முதியோர் இல்லத்தில்!
என் மகன் எப்படி இருக்கிறானோ என நினைத்து?

"அ"ன்பின் நாயகியாய்
"ஆ"திமூலத்தின் பிறபிடமாய்
"இ"ல்லறத்தின் தலைவியாய்
"ஈ"கையில் கொடைவள்ளாய்
"உ"ண்மையின் உறைவிடமாய்
"ஊ"ட்டி வளர்ப்பதில் அமுதசுரபியாய்
"எ"ண்ணங்களின் பிறப்பிடமாய்
"ஏ"ற்றத்தில் ஏணியாய்
"ஐ"யங்களின் ஆசானாய்
"ஒ"ழுக்கத்தில் உன்னதமாய்
"ஓ"வியங்களின் உயிராய்
"ஔ"டதங்களின் சிகரமாய்
"அக்கு" என்னும் இறுகிய மனமுடன் வளர்ப்பவளே
அன்னை என்னும் அன்போவிய அம்மா...

ஜெஸினா!!!

Offline NiYa

  • Hero Member
  • *
  • Posts: 546
  • Total likes: 1077
  • Karma: +1/-0
  • Gender: Female
  • உணர்வுகள் உணரப்படுவதுதான்.. உணர்த்தப்படுவது இல்லை.
Re: அம்மா..
« Reply #1 on: June 11, 2017, 10:04:21 PM »
நண்பி வணக்கம்
 அழகான வரிகள்,

"பின் பல மாதத்திலே உன் பால் பல் பிடிக்கும் அது
பழுத்துவிட்டால் சில உதிர்ந்துவிடும்"


இப்படி பல அழகான வரிகள்
அருமையான கவி

உயிர் கொடுத்தவளுக்கு உயிர் எழுத்துக்களில் கவி
அற்புதம்

Offline SunRisE

  • Full Member
  • *
  • Posts: 179
  • Total likes: 408
  • Karma: +0/-0
  • Gender: Male
  • நம் வாழ்க்கை நம் கைகளில்
Re: அம்மா..
« Reply #2 on: June 12, 2017, 01:06:57 AM »
Thozhi Jesina,

Arumaiyana kavithai
Vazhthukkal

Offline JeSiNa

  • Hero Member
  • *
  • Posts: 504
  • Total likes: 813
  • Karma: +0/-0
  • Gender: Female
  • unmai kadhal yaar entral unai enai soluvene....
Re: அம்மா..
« Reply #3 on: June 12, 2017, 01:10:46 AM »
En Kavithaiya padika neram Othiki Athuku Coment Panna En Chella Thozhi Niyakum En Nanbam Sunrisekum Nantri ;D ;D

Offline ChuMMa

Re: அம்மா..
« Reply #4 on: June 12, 2017, 11:31:06 AM »
சகோ ,,

உனக்காய் துடித்த ஓர் இதயம்
"உனக்காய் மட்டுமே துடித்த ஓர் இதயம்
ரத்தத்தை உணவாய் மாற்றிய ஓர் இதயம்
அதை உனக்காய் பரிமாறிய ஓர் இதயம் "

இன்று முதியோர் இல்லத்தில்

பெற்றோரை அவரவர் இல்லத்தில் வைக்க
தவறுபவன் வாழ தகுதி இல்லாதவன்

வாழ்த்துக்கள் சகோ
அழகான வரிகள் கொண்ட கவிதை
En meethaana ungal thedal naan yaar endru ariyum varai mattume..


"Ideas are funny little things
They won't work unless we do".

Offline JeSiNa

  • Hero Member
  • *
  • Posts: 504
  • Total likes: 813
  • Karma: +0/-0
  • Gender: Female
  • unmai kadhal yaar entral unai enai soluvene....
Re: அம்மா..
« Reply #5 on: June 12, 2017, 03:50:35 PM »
chumma na thnx na...