Author Topic: செல்லவிடு  (Read 468 times)

Offline NiYa

  • Hero Member
  • *
  • Posts: 540
  • Total likes: 1064
  • Total likes: 1064
  • Karma: +1/-0
  • Gender: Female
  • உணர்வுகள் உணரப்படுவதுதான்.. உணர்த்தப்படுவது இல்லை.
செல்லவிடு
« on: May 28, 2017, 12:43:20 AM »
விழிகளிரண்டும்
உரசிக்கொண்ட பொழுதுகளில்
வெளிவந்த வார்த்தைகள் - இப்படி
என்னை மௌனங்களில்
புதைத்து விடுமென  எண்ணவில்லை
என்றுமே

தொலைதூரம் இனணந்து வந்து
சிறு நொடியில் பிளவுபடும் எம்
நகர வீதிகள் போல
நகர்கிறது எம் வாழ்வும்

அழகான வார்த்தைகள்
யாரும் அறிய பார்வைகள்
விரல் தீண்டும் ஸ்பரிசங்கள்
விழிமூடும் கனவுகள்
எதுவும் இருந்ததில்லை
எங்கும் உனக்கும் இடையில்

ஆனாலும் நிஜமாவே
கனவுகளில் பயணித்த என்னை
நிஜங்களின் நடுவே
இழுத்து வந்தது நீ தான்

பிரியாவிடை நாளில் போடும்
ஆட்டோகிராப் கையெழுத்துக்கள் - போல
கனக்கிறது மனம்

காரணம் தெரிந்தால் சொல்லிவிடு
இல்லையேல் காலத்தை  கனவுகளின்
பாதையில் செல்லவிடு

Offline VipurThi

  • Hero Member
  • *
  • Posts: 879
  • Total likes: 1615
  • Total likes: 1615
  • Karma: +0/-0
  • Gender: Female
  • அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு...
Re: செல்லவிடு
« Reply #1 on: May 28, 2017, 10:15:28 AM »
Hi niya sis ;D rmba azhagana kavithaigal :D but ellame pirivula iruku :(  unga 3 kavithailayum oru continuous theriyuthu  :) reality life a apdiye patha mathiri iruku :) read panum bothu mind la aazhamana oru thaakam varuthu :) keep writing :)

Offline SunRisE

Re: செல்லவிடு
« Reply #2 on: May 29, 2017, 01:17:25 PM »
Niya  தோழி,
உங்களின் கவிதை நடை மிகவும் அருமை

கனவுலகில் வாழ்ந்த என்னை
நிஜ உலகில் அழைத்து வந்தது நீ

அருமை தோழி. வாழ்த்துக்கள்.

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: செல்லவிடு
« Reply #3 on: May 31, 2017, 01:21:11 PM »

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
Re: செல்லவிடு
« Reply #4 on: May 31, 2017, 10:57:06 PM »
வணக்கம் தங்கச்சி 

கவிதை மனித வாழ்வின்
பருவ மாற்றத்தின் அவலம்
பலருக்கும் ஒரே அநீதி தியதி

எப்போது நிலைக்குமோ
உண்மை அன்பு உலகில்


எங்கும் எதிலும் பிரிவும் பிளவும்
யார்செய் பாவமோ ஏன் இந்த சாபமோ
மானிடனே


விதைப்பவர் நிட்சயம் அறுக்கவே வேண்டும்

திடம் பெறுக கவிதைவாழ்வு
 
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....