Author Topic: உனக்குள்ளே துடிக்கும் என் இதயம்  (Read 640 times)

Offline சக்திராகவா

உயிர் போவதை அவளும் அறிவாளா?
இல்லை போனதும் எண்ணி அழுவாளா?
காரணம் தேடி அலைவாளா!
காதலே என்றால் கலைவாளா?

நேசித்து பிரிதல் நியாயமில்லை
நேற்றுபோல் இன்று நீயுமில்லை
இனி நினைவினில் வாழ்ந்திட போவதில்லை
என் இதயம் துடிக்கும் ஓய்ந்துவிடாது
உனக்குள்ளே என்று நம்பிக்கையோடு போய்விடவா ????

சக்தி ராகவா


Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4585
  • Total likes: 5312
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
~ !! வணக்கம் சகோ !! ~


உயிருக்குள் சுமந்த உயிர்....
உயிர் பிரிந்தால் ...
சுமந்தவள் எண்ணி கதற தான் செய்வாள் ....
அதுவும் காரணம் தெரியாமல் போனால் ...
காரணத்தைத் தேடி அலைய தான் செய்வாள் ....

மீண்டும் வலிகள் சுமந்த ஒரு கவிதை ....
மனதில் ரணங்களை சுமந்து எழுதுகிறீர்களா ?

~ !! ஆழமான வரிகள் !! ~
~ !! முடிவில்லாமல்  தொடரட்டும் கவிப்பயணம் !! ~


~ !! ரித்திகா !! ~

Offline SweeTie

கவிதை   சிறப்பு.  வாழ்த்துக்கள்.

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
பலரது வாழ்விலும்
வலிதரும் விடையில்லா
கேள்வியிது.....


அனுபவிக்க
கொடுமையானது.....


ஆனாலும் வெறுக்காது.....


உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....