Author Topic: குருதியில் தோய்த்த பள்ளியாடை  (Read 612 times)

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
கண்களால் கேட்டாள்

காளைப் பருவத்தின் கல்வி காலம்
பள்ளியில் பலகலையும் உண்டு
விளையாட்டில் திறமை
ஒழுக்கத்தில் மேன்மை
கல்வியில் முதன்மை
பண்பில்ச் சிறப்பும் கண்டிட...

கண்டவள் கொண்டாள் காதல் என்மேல்
தவறென்ன உண்டு?
நம் சமூகத்தில் சாதியும் மதமும்
உண்டு வளர்ந்தால் எப்படி சரியாகும் காதல்!


கொண்ட காதல் நெஞ்சில் வளர
அன்பால் நிலைத்தாள் மாதரசி
பதுமை நிறை குணவதியாய்
குடிபுகுந்தாள் இதயமதில்

மதங்கள் எமை பிரித்து வைக்க
வீட்டுக்காவல் மேலோங்க வதையுண்டோம்!
கொண்ட அன்பால் துவண்ட வேளை
காணமுடியா கவலையால் கொண்டகோவம்...


காணாமலே ஒதுங்கி நின்று கோதை விடு
தூதனைத்தும் கோவம்கொண்டு புறக்கணித்து!
கொடுத்தவலி கொடிது.. கொடிது கொடிது!
அதனினும் கொடிதாய் கொடுத்தாள் - என் சொல்வேன்!

எம்தேசமதில் குண்டு மழைக்காலம்
பயணமானாள் போலும் பள்ளிக்கு -
வீட்டுச் சிறை உடைத்து!
காண்கின்றேன் புன்னகைத்து  கடந்து போக
கடக்க விட்டு மெல்லத் தொடர்கிறோம்!


ஆகாய இரும்பு கழுகு பேரிரச்சலோடு
உலோகக் குண்டை அனல்மழையாக்கி கக்குகிறது!
நிற்போர் நடப்போர் சக்கரங்களில் போவோர்
விழுந்து படுக்க, விரைகின்றேன் சென்றவளிடம்!

ஆகாய இரும்பு கழுகு அள்ளிவந்த அடைமழையில்
சிலபெரும் துளிகள் வீழ்ந்திட்டதோ! ஐயோ.....!
வீழ்ந்து கிடக்கின்றாள் துளிர்த்தகொடி
வெண்நிறப் பள்ளியாடை குருதியால் தோய்த்ததுபோல்!


சற்றுமுன் கண்டேனே கண்களால் உணவூட்டி போக...
ஆவிதுடிக்க தளிர்மேனி தாவி அணைத்து
செய்வதறியாது நானணைக்க மார்போடு!

அறுந்த குரல்வளையால் மொழிமாய...
தலைவெட்டிய சாவல் உடல் துடிப்பதுபோல்-
துடிக்கையிலும்!

தன்கரத்தால் என்கரம் பிடித்து
தன் இடப்புற மார்பிலே என் கரம் அழுத்தி
கண்களால் கேட்டாள் என் அன்பு பொய்யா என்று?

வாயால் பேச உடலில் யீவன் முழுதாய்
இல்லை கண்களால் கேட்டாள்!
பதில் சொல்லுமுன் வெறித்த கண்கள்
விழித்தே இருக்க கண்மூடினாள் கண்முன்னே.


கண்ணீரை நிறுத்தவோ
நினைவை இழக்கவோ இயலவில்லை!
இதயம் துடிக்கும்வரை வலியும்
கண்கள் உள்ளவரை அழுகையும் வரமானது!


குறைகள் என்னுடையவை  நிறைவுகள் கடவுளால்
நன்றியும் மேன்மையும் கடவுளுக்கே
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
என் தாய்செய் தவத்தில்
வரமெய்திய இன்நாள்!
என் வாழ்வின் முதல் நாள்!


வாழும்வரை நினைவழியா
இன்நாளில்!


வரம்தந்து போன உனக்கு
நினைவழியா சமர்ப்பணம்!
என் கவி.
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

Offline MyNa

Romba arumaiyaana kavithai sarithan..
ezhuthukkal kooda azha vaikum nu solama solitinga..
Naan padicha kavithaigal la enaku romba pidithathil ithum onru..
Thodarnthu ezhuthunga.. vazthukal.. :)

Offline ChuMMa

வாழ்த்துக்கள் தோழா

என்ன சொல்வேன்...
உங்கள் கவிதை படித்து,
காட்சிகள் கண் முன் நின்று,
கலங்கின என் கண்கள்

வாழ்த்துக்கள்


En meethaana ungal thedal naan yaar endru ariyum varai mattume..


"Ideas are funny little things
They won't work unless we do".

Offline LoLiTa

Arumai sarithan, sarithan kavidhai elzhuthinal sariyagathan irkum

Offline SweeTie

மறக்கவொண்ணா  வலிகள்.    வாழ்த்துக்கள் 

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
வணக்கம்.

சகோதரி மைனா மீனு, நண்பர் சும்மா,
Lolita  தங்கை.

மற்றும்
கவிதையை சிரமம் தவிர்த்து
காலம் ஒதுக்கி வாசித்தோருக்கும்
பணிவான நன்றிகள்.

வாழ்க வளமுடன்.
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
BB அக்கா நன்றி
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....

Offline SwarNa

sari na  :'(  validhan kannmunna teridhu na

Offline SarithaN

  • Sr. Member
  • *
  • Posts: 468
  • Total likes: 921
  • Total likes: 921
  • Karma: +0/-0
  • Gender: Male
  • வலியுணர்ந்த மனிதன் பிறரை துன்புறுத்தான்.....
1
தங்கா இது கண்ணீரால்
உண்டான அன்புறவு.....மா.


நினைவுகள் ஊறிக்கொண்டே
இருக்கும்..... தங்கா.


2
பல வருடங்களுக்கு முன்னர்
பிள்ளையாய் பள்ளியில் கற்கையில்
எழுதும்படி கொண்ட சிந்தை.....

மார்புகள் புனிதமெனும் கவிதை.....

அதை நீண்டகால இடைவெளிக்கு
பின்னர் என்னை எழுத தூண்டியது.....
நீ பேசிய தழிம்.....


கவிதை எழுதி முடிந்ததும் சொல்வேனென
சொல்லி இருந்தேன்...

நீண்ட கால உணர்வை உயிர்பெற செய்த
உன் தமிழுக்கு தலைசாய்த்து நான் நவிழும்
நன்றிகள் தங்கையே.....
உன்னைப் போலவே...அனைவரையும் நேசி...யேசு                       ...... Thou shalt love thy neighbour as thyself. Jesus.....