Author Topic: என் மனமாலையில் இருந்து சிதறிய முத்துக்கள்  (Read 591 times)

Offline thamilan

    இருட்டு
புரண்டு புரண்டு
தூங்கத் தொடங்கியபோது
பரண் மேலேறி அமர்ந்தது இருட்டு


    கண்ணீர்
கடலோடு என்ன உறவோ
கண்ணீரும் கரிக்கிறதே
உப்பு

     மின்சாரம்
கண்களுக்கு ஆயிரம்  வோல்டேஜ்
அவள் ஒரு அழகிய
அனல் மின்நிலையம்


            குறி
ஆடை என்றும்
அடைப்புக் குறிக்குள்
அவள் ஒரு அழகிய
ஆச்சரியக் குறி


    கூண்டுப் பறவை
கூடு விட்டு கூடு  பாயும்
போலிச் சாமியார்
கூண்டு  விட்டு கூண்டு
மாற்றப்பட்டார்   

      புத்தகம்
புத்தகம் என்பது பூந்தோட்டம்
அர்த்தம் என்பது ஆணிவேர்
வாக்கியங்கள் எல்லாம் கிளைகள்
எழுத்துக்கள் எல்லாம் மலர்கள்
வாசகர் எல்லாம் வண்டுகள்
கவிதைகள் எல்லாம் தின்னத் தின்ன
திகட்டாத தேன் கூடுகள்

       
   வாழ்க்கை
இனி வாழப்போகும்
காலங்களை விட
அதிசயம்
இது வரை
வாழ்ந்து முடித்த
காலங்களே

     மனம்
எல்லா ஆசைகளையும்
கவலைகளையும்
கோபங்களையும்
சந்தோஷங்களையும்
உள்வாங்கும்
ஓர் அதிசயக் குப்பை மேடு
நம் மனம்

     பிரசவவலி
காலம் மாறி விட்டது
தாய் தந்தையருக்கு
ஆண்குழந்தை பிறந்தால்
ஆனந்தம்
பெண்குழந்தை பிறந்தால்
பேரானந்தம்
ஒவ்வொரு பிறந்தநாளன்றும்
நாம் மறக்கக் கூடாதது
தாயின் பிரசவவலி

    கண்ணீரில் மலர்ந்த பூக்கள்
உனது நினைவில்
என்னோடு சேர்ந்து
பேனாவும் அழ
காகிதத்தில்
ஈரமாய் மலர்கிறது
கவிதைப் பூக்கள்


       என் காதலி
என்னை காதலித்தவர்கள்
பலர்
இன்னும் காதலிப்பவர்
சிலர்
என்னையே நினைத்து வாழ்பவர்
சிலர்
என்னிடம் காதல் சொல்லப் பயந்தவர்கள்
பலர்
ஆனால்
நான் காதலிப்பது மட்டும்
என் காதலியை


     போட்டா போட்ட போட்டி
துடிக்கிறதே மனம் - ஆனால்
எதிர்த்துக் கொல்கிறதே
அறிவு
நாற்பதிலே  காதலா
நல்ல துணையை மறந்து
இன்னொன்றா
எப்படியாவது நாற்பதிலிருந்து
இருபதுக்குப் போக போக ஆசைபடுகிறது
மனம்
கடந்தகாலங்கள் திரும்புவதில்லை என்கிறது
அறிவு
« Last Edit: March 25, 2016, 01:55:05 PM by thamilan »

Offline PraBa

  • Sr. Member
  • *
  • Posts: 373
  • Total likes: 388
  • Total likes: 388
  • Karma: +0/-0
  • வாழிடம் வானமெனில் நனைவது சாத்தியமில்லை ....
சிந்தனை வெகுசிறப்பு
வாழ்த்துக்கள் தமிழன்..,
Palm Springs commercial photography

Offline thamilan

உனக்குச் சொந்தமான
எல்லாம் என்னிடம் இருக்கிறது
எனக்கு சொந்தமான நீ மட்டும்
என்னிடம் இல்லை

மழையில் நனைந்த
அவள் உருவத்தைக் கண்டு
சாலையோர மரங்கள் கூட
உடல் சிலிர்த்தன

நீ என்னைக் காயப்படுத்தும்போதெல்லாம்
கண்ணீராக வடிகிறது ரத்தம்
நீ உன் புன்சிரிப்புடன்
என்னைப் பார்க்கும் போதெல்லாம்
அந்தக் கண்ணீரே கவிதையாகுகிறது

உன் இதயம் ஒரு கல்லறை
அங்கே அடக்கம் செய்யப்பட்டது
எனது காதல்
உன் கல்லறையில் பூத்த
கல்லறை மலர் நான்

முத்தத்தால் ஒவ்வொருவரும்
அன்பையும் காதல்லயும்
உறிஞ்ச எத்தனித்து
வெறும் உமிழ்நீரோடு முடிந்து போகிறார்கள்

நீ படிகள் மேலேறி
கோவிலுக்கு வரும் அழகை
ரசிப்பதற்காகவே
கோபுரத்தின் மேலேறி நிற்கின்றன
சிலைகள்

எந்த சிகரத்தையும்
வலம் வர முடியும்
என்னால்
சிறகாக நீ இருந்தால்

பெண் ஒரு அகல் விளக்கு
அணைத்திட எரியும்
அதிசய விளக்கு
 

Offline thamilan

     ஊனம்

திட்டுத் திட்டாய்
திசை திசையாய்
தவழ்ந்து செல்லும்
கால்கள் இல்லாத
மேகங்கள்

அட
ஊனத்தையும் மீறிய
உன்னத வெற்றி
என்று
ஆண்டவன் உலகுக்குக் காட்டும்
உற்சாக டானிக்


Offline thamilan

உன் காதல் கடிதங்களை
எரித்து விட்டேன்
காயங்களை என்ன செய்வது


ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னல்
ஒரு பெண் இருப்பதுபோல
ஒவ்வொரு ஆணின்
கண்ணீர் துளிகளுக்குப்  பின்னாலும்
ஒரு பெண் இருக்கிறாள்


விந்தை  உதிரமாக்கி
 உதிரத்தை கருவாக்கி
 கருவை உயிராக்கி
உயிரை உருவமாக்கி
உருவத்தை உலகுக்கு அளித்திடும்
படைப்பாளி அம்மா


மழைக்கும் வெயிலுக்கும்
ஒரே குடை
என் வாழ்வுக்கும் சாவுக்கும்
நீ

Offline thamilan

         அழகு

எதுகையும் மோனையும் கூட்டி
நான் எழுதிய கவிதைகள்
சுமாராய் இருந்தது
எதுவும் இல்லா என் குழந்தையின் கிறுக்கல்கள்
மிக அழகாய் இருந்தது


              அம்மா

அழகான உலகுக்கு
அன்பான உயிர்களுக்கு
ஆண்டவன் எழுதிய அணிந்துரை
அம்மா!!


            பிரியம்

எல்லோரிடமும் இருக்கிறது
பலசமயம்  அது
மாவோ சொன்னது போல
பன்றிகளுக்கு முன் இறைந்து கிடைக்கும்
முத்துக்களாக இருக்கிறது


              பாவ புண்ணியங்கள்

பாவம் செய்தவனுக்கு
நரகத்தில் சாத்தான்கள் கை குலுங்குகின்றன
புண்ணியம் செய்தவனுக்கு
சொர்கத்தில் தேவதைகள் சாமரம் வீசுகின்றன



                    கையொப்பம்

கையொப்பங்களே வாழ்க்கையை
தீர்மானிக்கின்றன
இரண்டு பேருடைய கையொப்பம் அவர்களை
இணைக்கிறது
அதே இரண்டு பேருடைய கையொப்பம்
அவர்களை பிரிக்கவும் செய்கிறது

Offline JoKe GuY

    இதமிழ் கவிஞர் என்பதை இந்த கவிதைகள் மூலம் நிருபித்து விட்டீர்கள் பாராட்டுக்கள் உங்களின் கவிதை பூங்காவில் இன்னும் கவிதை பூக்கள் பூக்க வேண்டும்

உன் இதயம் ரோஜாமலராயிருந்தால் பேச்சில் அதன் வாசனை தெரியும்