இருட்டு
புரண்டு புரண்டு
தூங்கத் தொடங்கியபோது
பரண் மேலேறி அமர்ந்தது இருட்டு
கண்ணீர்
கடலோடு என்ன உறவோ
கண்ணீரும் கரிக்கிறதே
உப்பு
மின்சாரம்
கண்களுக்கு ஆயிரம் வோல்டேஜ்
அவள் ஒரு அழகிய
அனல் மின்நிலையம்
குறி
ஆடை என்றும்
அடைப்புக் குறிக்குள்
அவள் ஒரு அழகிய
ஆச்சரியக் குறி
கூண்டுப் பறவை
கூடு விட்டு கூடு பாயும்
போலிச் சாமியார்
கூண்டு விட்டு கூண்டு
மாற்றப்பட்டார்
புத்தகம்
புத்தகம் என்பது பூந்தோட்டம்
அர்த்தம் என்பது ஆணிவேர்
வாக்கியங்கள் எல்லாம் கிளைகள்
எழுத்துக்கள் எல்லாம் மலர்கள்
வாசகர் எல்லாம் வண்டுகள்
கவிதைகள் எல்லாம் தின்னத் தின்ன
திகட்டாத தேன் கூடுகள்
வாழ்க்கை
இனி வாழப்போகும்
காலங்களை விட
அதிசயம்
இது வரை
வாழ்ந்து முடித்த
காலங்களே
மனம்
எல்லா ஆசைகளையும்
கவலைகளையும்
கோபங்களையும்
சந்தோஷங்களையும்
உள்வாங்கும்
ஓர் அதிசயக் குப்பை மேடு
நம் மனம்
பிரசவவலி
காலம் மாறி விட்டது
தாய் தந்தையருக்கு
ஆண்குழந்தை பிறந்தால்
ஆனந்தம்
பெண்குழந்தை பிறந்தால்
பேரானந்தம்
ஒவ்வொரு பிறந்தநாளன்றும்
நாம் மறக்கக் கூடாதது
தாயின் பிரசவவலி
கண்ணீரில் மலர்ந்த பூக்கள்
உனது நினைவில்
என்னோடு சேர்ந்து
பேனாவும் அழ
காகிதத்தில்
ஈரமாய் மலர்கிறது
கவிதைப் பூக்கள்
என் காதலி
என்னை காதலித்தவர்கள்
பலர்
இன்னும் காதலிப்பவர்
சிலர்
என்னையே நினைத்து வாழ்பவர்
சிலர்
என்னிடம் காதல் சொல்லப் பயந்தவர்கள்
பலர்
ஆனால்
நான் காதலிப்பது மட்டும்
என் காதலியை
போட்டா போட்ட போட்டி
துடிக்கிறதே மனம் - ஆனால்
எதிர்த்துக் கொல்கிறதே
அறிவு
நாற்பதிலே காதலா
நல்ல துணையை மறந்து
இன்னொன்றா
எப்படியாவது நாற்பதிலிருந்து
இருபதுக்குப் போக போக ஆசைபடுகிறது
மனம்
கடந்தகாலங்கள் திரும்புவதில்லை என்கிறது
அறிவு