Author Topic: எனது கிறுக்கல்கள்...,  (Read 2880 times)

Offline PraBa

  • Sr. Member
  • *
  • Posts: 373
  • Total likes: 388
  • Total likes: 388
  • Karma: +0/-0
  • வாழிடம் வானமெனில் நனைவது சாத்தியமில்லை ....
Re: எனது கிறுக்கல்கள்...,
« Reply #45 on: April 19, 2016, 08:16:05 PM »
கதவு தட்டப்படுகிறது
கடவுள் வந்திருக்கிறேனென்ற அறிவிப்போடு....

எழத்திராணியின்றி
நீர் பருகிப்படுத்திருக்குமவன்

நீ
எந்த மதத்தின் கடவுளென்று
எதிர் கேள்வி
கேட்கப்போவதில்லை....

மீண்டுமொரு தட்டப்படுகிறவரை
எழுவதற்கான பிரயத்தனமென்று
எதையுமே செய்யப்போவதுமில்லை...
மறுமுறையும் தட்டாதவன்
கடவுளாக இருக்கப்போவதில்லை...
தட்டப்படுமாவென்று

பார்த்தபடியிருக்கிறான் அவன்
திறக்கப்படுமாவென்று
கவனித்தபடியிருக்கிறான் கடவுள்
மௌனமாயிருக்கிறது கதவு...
கதவுகள் அப்படித்தான் ...

கடவுளேயானாலும்
மூடியவன் திறக்கும்வரை
உண்மை சொல்வதில்லை..

Offline PraBa

  • Sr. Member
  • *
  • Posts: 373
  • Total likes: 388
  • Total likes: 388
  • Karma: +0/-0
  • வாழிடம் வானமெனில் நனைவது சாத்தியமில்லை ....
Re: எனது கிறுக்கல்கள்...,
« Reply #46 on: April 19, 2016, 08:22:50 PM »




எனக்கான
காற்றுவருமென்று
ஜன்னல் திறந்து
காத்திருக்கிறேன்

எதிர்த்திசை
காற்றொன்று வந்து
அதை மூடிவிட்டு போகிறது
விரக்தியும் வெறுப்புமாய்

விழிகள் மூடுகிறேன்

இடித்துத்திறந்த ஜன்னலின்
இடுக்கு வழியே தெரிகிறது
கடந்து போகும்
உனதுருவம்....

என்திசைக்காற்று வந்து
ஜன்னல் திறக்கிறது ...

எனக்கான
காற்றென்றதை
இப்போது
சொல்ல முடியாது தான் ....

ஒரு துரோகம்

ஒரு வலி

ஒரு பிரிவு

இவைகளையெல்லாம்
இடுக்கு வழியே
மறைத்துக்கொண்ட
ஒரு
குரூரதிருப்தியை தவிர
எதுவும் கிடைத்துவிடப்போவதில்லை
எனக்கு ...

என்னைப்போலவே
எத்தனை துரோகங்கள்
ஜன்னலுக்குப்பின்னால்
ஒளிந்திருக்கிறதோ....!

யாரறிந்து சொல்ல முடியும் ....

துரோகங்கள்
வாசலுக்கு வருவதில்லை

அவை
ஜன்னலுக்கு பின் மட்டுமே
வாசம் செய்கின்றன
திறந்துகொண்ட ஜன்னலை
திரும்பிப்பார்க்கமாட்டாய் நீ
ஆனாலும் கூட
காற்று வீசியபடியிருக்கிறது
ஜன்னல் திறந்தபடியிருக்கிறது
படபடக்கிறது
ஒரு துரோகம் ....!

Offline PraBa

  • Sr. Member
  • *
  • Posts: 373
  • Total likes: 388
  • Total likes: 388
  • Karma: +0/-0
  • வாழிடம் வானமெனில் நனைவது சாத்தியமில்லை ....
Re: எனது கிறுக்கல்கள்...,
« Reply #47 on: October 22, 2016, 07:16:42 PM »
நான்
நதி வரைந்து
முடித்திருக்கிறேன்
அவன்
அணை வரைந்து
முடித்திருக்கிறான்...
நதியை
பத்திரப்படுத்த வேண்டும்
இப்போது நான்..!

Offline ரித்திகா

  • Forum VIP
  • Classic Member
  • ***
  • Posts: 4584
  • Total likes: 5309
  • Total likes: 5309
  • Karma: +0/-0
  • Gender: Female
  • ‘தமிழன் என்று சொல்லடா.. தலை நிமிர்ந்து நில்லடா..’
Re: எனது கிறுக்கல்கள்...,
« Reply #48 on: October 24, 2016, 11:43:05 AM »

தங்களின் கிறுக்கல்கள்
அனைத்திலும் மெய்சிலிர்ந்தேன் ......
அருமையான கிறுக்கல்கள் ....
தொடரட்டும் கிறுக்கல் .....
வாழ்த்துக்கள் .....!!!
நன்றி ....!!!!!


~ !! ரித்திகா !! ~

Offline PraBa

  • Sr. Member
  • *
  • Posts: 373
  • Total likes: 388
  • Total likes: 388
  • Karma: +0/-0
  • வாழிடம் வானமெனில் நனைவது சாத்தியமில்லை ....
Re: எனது கிறுக்கல்கள்...,
« Reply #49 on: October 24, 2016, 04:13:28 PM »
தமிழனாய்
ஒருமுறை அவதரித்துவிட்டு
போதியுங்கள் இயேசுவே
மறுகன்னம் காட்டும்
உங்கள் போதனையை