Author Topic: ஆதலினால் காதல் செய்வீர்  (Read 480 times)

Offline thamilan

விண்ணும் மண்ணும்
 காதலிப்பதனால் தான்
வானம் மழையைப் பொழிகிறது

நீரும் நெருப்பும்
காதலிப்பதனால் தான்
நெருப்பை நீர் அணைக்கிறது

காற்றும் கடலும்
காதலிப்பதனால் தான்
கடல் அலைகள் தோன்றுகின்றன

முள்ளும் மலரும்
காதலிப்பதனால் தான்
முள்ளோடு ரோஜா மலர்கிறது

நீயும் நானும்
காதலிப்பதனால் தான்
கவிதைகள் பிறக்கின்றன