Author Topic: ***அலுத்து போய்விட்டது***  (Read 4587 times)

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 601
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ***அலுத்து போய்விட்டது***
« Reply #15 on: November 23, 2011, 03:26:01 PM »
Quote
என்னை உணரா
உள்ளங்கள் போல
இக்கவிக்கு
அக்கவியின் கவிதை
புரிந்தும் புரியாமல்
இருப்பதே
நலம் அல்லவா
புன்னகை உதிர்க்கும் மலரே
புரிவாய் என நம்புகிறேன்



நமக்கு புரிதலில் குறைவில்லை ..

இருந்து விழலுக்கு இறைத்த
வெறும் நீர்போல்
அய்யன் அகம் கொண்ட
அன்பு கவிதைகளும்
காற்றோடு கலந்து
கவி தழுவி செல்கிறதே ...

உன் அறிந்தும் அறியாமை
அங்கு புரிந்தும் புரியாமை ஆகி
தெளிந்தும் தெளியாமல்
கேள்விக் கணைகள் பார்த்தாயா ...
என்ன சொல்ல போகிறாய் ...
காத்திருக்கிறேன் ..
அக்கவிக்கு இக்கவியின்   
பதில் என்னவென்று .....ஹஹ்ஹா
                    

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 121
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: ***அலுத்து போய்விட்டது***
« Reply #16 on: November 23, 2011, 05:21:30 PM »

கவிக்கு கவி
புரியாமல் இருக்குமோ??
கவியும் புரியும்
கவியில் வினாவும்
கேள்வியும் புரியும்

அக்கவியின் கவிக்கு
இக்கவியின் பதிலை
அறிய இங்கு பல கவிகள்
கூடி கவிமழை பொழியும் பொழுது
கவிமழையை நிறுத்த மனம் இல்லாமல்
மௌனத்தை மொழியாக்கி விடவா??  :P  :P  ;)  ;)  ;)

« Last Edit: November 23, 2011, 07:34:52 PM by ShRuThi »


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 601
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ***அலுத்து போய்விட்டது***
« Reply #17 on: November 23, 2011, 08:35:13 PM »
மழை பொழிய
கார் முகில் தேவை
கவி மழை பொழிய
கவிதையின் கவிதை தேவை ..
கார் முகிலாக நீ மறுத்தல் மௌனித்தால்
கவிமழை பொழிவது எப்படியோ ..?
                    

Offline RemO

Re: ***அலுத்து போய்விட்டது***
« Reply #18 on: November 23, 2011, 09:06:06 PM »
மழை பொழிய
முகில் மட்டும் அன்றி
தென்றலாய் தீண்டும் காற்றும் தேவை
ஆசையாய் காற்றை
எதிர்நோக்கி பலர் காத்திருக்க
வீசாமல் வேலை நிறுத்தம்
செய்யும்போது
கவியின் மழை எப்படி சாத்தியம் ..?

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: ***அலுத்து போய்விட்டது***
« Reply #19 on: November 24, 2011, 11:40:19 AM »
வசந்தத்தை வரவேற்க காத்திருக்கும் வாசமலரை போல
மொட்டு மலரின் மொட்டவிழ காத்திருக்கும்  வண்டினம் போல
அலையின் அணைப்பிர்காக ஆவலோடு காத்திருக்கும் கரையை போல
ஒருமுறையானாலும் முழுபிறையாய் வெளிவர காத்திருக்கும் முழுமதி போல
கேள்வி ஒன்ன்றை கேட்டுவிட்டு பதில்கிடைக்க காத்திருக்கும் அப்பாவி ஆசை(அஜீத்) போல
 காத்திருந்தால்,தென்றல்  காற்றும் , தீண்டும் கவிதையும் கனநேரத்தில் கண்முன் காணக்கிடைக்கும் ...

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 121
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: ***அலுத்து போய்விட்டது***
« Reply #20 on: November 24, 2011, 05:09:44 PM »
மலரை மொய்க்கும் வண்டுவாய்
கரையை அணைக்கும் அலையாய்
தேய்பிறை காணாத நிலவாய்
இத்தனை உவமைக்கு
பொருள் அறிந்தும்
கவி மழை நிறுத்த இயலுமோ??
அழகு தமிழை அனுதினமும்
படித்து செல்கிறேன்
விளக்கம் புரிந்தும் புரியாமலும்
இருக்க பயின்று வருகிறேன் ;) ;) ;) ;)


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 601
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ***அலுத்து போய்விட்டது***
« Reply #21 on: November 25, 2011, 01:03:11 AM »
அந்தோ பரிதாபம்
விளக்கம் புரிந்தும்
புரியாமல் நீ
எனக்கோ மனதுள் கலக்கம்
எங்கே காந்தம்போல்
கவி எழுதும் அக்கவிஞன் நிலை ...
கானல் நீராகுமா ...
இல்லை கவிதை கிறுக்கியே 
கீழ்பாக்கம் பொய் சேருமா ...?
                    

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 121
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: ***அலுத்து போய்விட்டது***
« Reply #22 on: November 26, 2011, 11:28:07 AM »
கவிதை என்றும் அழிவதில்லை
நீங்காத நினைவுகளாய் நெஞ்சில்
நிற்கும் என்றென்றும்
காதல் கவிதை படித்தால்
படைத்தால் கீழ்பாக்கம்
ஒன்று தான் முடிவு என்றால்
கண்ணதாசன் முதல் வைரமுத்துவரை
அங்கே அனுமதிக்காக
அல்லாடியிருபார்களோ ??




உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Global Angel

  • Classic Member
  • *
  • Posts: 23906
  • Total likes: 601
  • Karma: +0/-0
  • என்றும் உங்கள் இனிய இதயம்
Re: ***அலுத்து போய்விட்டது***
« Reply #23 on: November 26, 2011, 02:15:53 PM »
கவிதை படித்தவன்
கீழ்பாக்கம் போவதில்லை
கவிதையோடு காதல்
படைத்தவன் அடிக்கடி
அங்கு தானே அனுமதிக்கப் படுகின்றான் ...
பொறுத்துதான் பார்ப்போமே
எங்குதான் அனுமதி என்று
இதயத்திலா ....
இல்லை இளவல் பாக்கத்திலா .....
                    

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 121
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: ***அலுத்து போய்விட்டது***
« Reply #24 on: November 26, 2011, 03:09:59 PM »
காதலும் உணர்வுதான்
கவிதையில் சொல்ல
கவிதையில் சொல்லும்
காதல் எல்லாம்
என் கண்ணில்
கவிதையாகவே தெரிய
இதயத்தில் இடம்
எங்கனம் சாத்தியமாகும்?  ;) ;) ;) ;)


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 121
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: ***அலுத்து போய்விட்டது***
« Reply #25 on: December 01, 2011, 12:49:51 PM »
நினைக்க மறந்த இதயம்
துடிக்க மறந்தால்
நினைக்கும் வேலை
மிச்சம்.. ;) ;) ;) ;)



உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: ***அலுத்து போய்விட்டது***
« Reply #26 on: December 02, 2011, 12:08:34 AM »
மறக்க நினைக்காத இதயம்
நினைக்க மறந்தால்
இதயம்  , துடிக்கும் வேலை
மீதம் ...
« Last Edit: December 02, 2011, 08:07:05 AM by aasaiajiith »

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 121
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: ***அலுத்து போய்விட்டது***
« Reply #27 on: December 02, 2011, 08:52:33 PM »
உதிரம் வர மறுக்கிறது
உதிர்ந்த போன
வார்த்தைகளால்...
மரித்த இதயத்துக்கு
மறுவாழ்வா... ;)





உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்