Author Topic: ***அலுத்து போய்விட்டது***  (Read 3653 times)

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 118
  • Total likes: 118
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
***அலுத்து போய்விட்டது***
« on: November 18, 2011, 12:51:47 AM »
அன்பே,
ஆருயிரே
கண்ணாளனே,
என்னவனே,
இனியவனே,
என் இதயமே,
என் சுவாசமே,
என் உயிர் மூச்சே,
என் உயிரே,
உன் நினைவால் வாடுகிறேன்
நீயில்லாமல் நான் இல்லை..
தனியே சிரிக்கிறேன், அழுகிறேன்..
என் வாழ்வே நீதான்...
உன்னோடு வாழாத
வாழ்வு வாழ்வே இல்லை...
உனக்காக எழுதுவது எல்லாம்
கவிதையாகிறது...
இப்படியே காதல்மொழிபேசி
அலுத்து போய்விட்டது....
புதிதாய் ஒரு வார்த்தை தேடுகிறேன்..
வா!!!
மீண்டும் காதலிப்போம்
முதலில் இருந்து...


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Global Angel

Re: ***அலுத்து போய்விட்டது***
« Reply #1 on: November 18, 2011, 04:30:20 AM »
Quote
வா!!!
மீண்டும் காதலிப்போம்
முதலில் இருந்து...


shabaa arampathula irunthaa ;D
                    

Offline RemO

Re: ***அலுத்து போய்விட்டது***
« Reply #2 on: November 18, 2011, 02:22:06 PM »
yara kupidura
yarathu irukingala

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 118
  • Total likes: 118
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: ***அலுத்து போய்விட்டது***
« Reply #3 on: November 19, 2011, 07:33:52 AM »
Quote
வா!!!
மீண்டும் காதலிப்போம்
முதலில் இருந்து...


shabaa arampathula irunthaa ;D
yara kupidura
yarathu irukingala



Daily calling but varamatrangale da EMo enna panna :D


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline RemO

Re: ***அலுத்து போய்விட்டது***
« Reply #4 on: November 19, 2011, 12:57:01 PM »
phone no ena nu solu :D nan call pani vara venanu soliduren

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: ***அலுத்து போய்விட்டது***
« Reply #5 on: November 21, 2011, 03:37:15 PM »
 வெறும் வார்த்தை வர்ணிப்புகளில்
வேலையை( நேரம் ) விறையமாக்காமல்
விழி வழியாய் விசேஷ  வார்த்தையால்
மௌனமொழி  வாள் வீசுவதாய் வாக்குறுதி வழங்கு வண்ணநிலவே !
வரவேற்பே வேண்டாம் ,விலாசமும் வேண்டாம்
வீதி வீதியாய் விசாரித்து
உன் வீட்டுவாசலில் வந்து நிர்பேன்
உன்னை விரும்பும் விசனன் நான் .

Offline Global Angel

Re: ***அலுத்து போய்விட்டது***
« Reply #6 on: November 21, 2011, 05:52:03 PM »
 ;D ;D ;D ;D ;D ;D ;D
                    

Offline RemO

Re: ***அலுத்து போய்விட்டது***
« Reply #7 on: November 21, 2011, 09:24:14 PM »
onnumey puriyala forum la
enamo nadakkuthu marmama irukuthu  :D

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 118
  • Total likes: 118
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: ***அலுத்து போய்விட்டது***
« Reply #8 on: November 21, 2011, 09:38:36 PM »
aiyayoooo nan onum pannala
 da :D Emo and rose:S:D ;)

aiooo ajithh :D
« Last Edit: November 22, 2011, 11:40:17 PM by ShRuThi »


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: ***அலுத்து போய்விட்டது***
« Reply #9 on: November 22, 2011, 11:18:43 AM »
விவகாரமாய் ஏதும் விவரித்துவிட்டேனா? - இல்லை
விரசமாய் ஏதும் வெளிபடுத்திவிட்டேனா?
வில்லங்கம்  ஏதும் விலைக்கு வாங்கிவிட்டேனா?
விழி படை(டி)த்தொறேல்லாம் விளங்கிகொல்லும்ப்டி
விவரமாய்  ,விரிவாய் ,விளக்கமாய் தானே வரி வரைந்திருந்தேன் ?
விமரிசனம் ஏதும் வெளிவரவில்லை !
வெளிவந்த விமரிசனமும் விளங்கவில்லை !
வெளிப்படையாய் யாரும் விமரிசனத்தை வெளிபடுதுங்களேன் !

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 118
  • Total likes: 118
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: ***அலுத்து போய்விட்டது***
« Reply #10 on: November 22, 2011, 11:33:55 AM »
கவிதை பல புனைந்து
கேட்கும் கேள்வி விளங்கி
விடை தெரியாமல்
மழலைப் போல்
என் மனம்  இருக்க
உன் கவிதைக்கு
ரசிகையாய் நான் :)


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline RemO

Re: ***அலுத்து போய்விட்டது***
« Reply #11 on: November 22, 2011, 09:56:07 PM »
மற்றவருக்கு விளங்காமல்
குறிப்பை குறிப்பாய் குறிப்பிட்ட
இசைக்கு மட்டும் கூற
ஆசை
படும் நீங்கள்
சொல்லும் குறிப்பை
புரிந்தும் புரியாமல் பலர்
அந்த பலரில் நான்

 

Offline Global Angel

Re: ***அலுத்து போய்விட்டது***
« Reply #12 on: November 22, 2011, 11:02:54 PM »
கவிக்கு கவி விளங்கி
பதில் கவிபாட கருத்திலயாம் ..
அந்தோ விந்தை ...
கவிதைக்கு கவி இல்லையாமே ..

விளங்கியும் விளங்காமல்
நானும் அதில் ஒருத்தியாகி
புன்னகையில் என் பதிவாக்கி உள்ளானே ...
இன்னுமா புரியவில்லை...  ;) ;D ;D ;D
                    

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 118
  • Total likes: 118
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: ***அலுத்து போய்விட்டது***
« Reply #13 on: November 22, 2011, 11:38:47 PM »
என்னை உணரா
உள்ளங்கள் போல
இக்கவிக்கு
அக்கவியின் கவிதை
புரிந்தும் புரியாமல்
இருப்பதே
நலம் அல்லவா
புன்னகை உதிர்க்கும் மலரே
புரிவாய் என நம்புகிறேன்  :) ;) ;) ;)


உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline aasaiajiith

  • Classic Member
  • *
  • Posts: 5331
  • Total likes: 307
  • Total likes: 307
  • Karma: +1/-0
  • Gender: Male
  • இனிமை,இன்பம் இரண்டும் இருக்கும் இடத்தை இல்லை, இதயத்தை பொருத்தது
    • http://aasaiajith2013.blogspot.in/
Re: ***அலுத்து போய்விட்டது***
« Reply #14 on: November 23, 2011, 03:06:23 PM »
குழலை  விஞ்சும் குரலை கொண்டவள் ,
தன் குரலில் பலருக்கு  வாழ்த்தும் வழங்கினாள்

தழலை தணிக்கும் குளிர் கவிதை வரிகளை
தளத்தில் தெளித்து  வேளிரும் குளிரினை வாரி வழங்கினாள்

சுழலை சமாளிக்க தலை சுத்தும்போதேல்லாம்,
தளத்தில் கவிதைகளை தரிசிக்க தந்தவள்

சூழலை மறந்து, மனதை திறந்து வரிகளை வைத்து
கவிதையாய் சொன்னதற்கு மலர்கொத்து தந்தவள்

மழலை மனம் தனதென்றும், கவி  ரசிகை (தா)நான்   என்பதும் ,
புரிந்தும் புரியாமலும் இருப்பதே நலம் என்றும் புன்னகை பூத்தவளுக்கு
புரியவைக்கவா ?

விழளைதான் வீணாக (கவி) நீர் இறைத்து வளர்கின்றாய்
என்பதை  விசணன் எனக்கு விரிவாய் விவரிக்கவா?