அன்பே,
ஆருயிரே
கண்ணாளனே,
என்னவனே,
இனியவனே,
என் இதயமே,
என் சுவாசமே,
என் உயிர் மூச்சே,
என் உயிரே,
உன் நினைவால் வாடுகிறேன்
நீயில்லாமல் நான் இல்லை..
தனியே சிரிக்கிறேன், அழுகிறேன்..
என் வாழ்வே நீதான்...
உன்னோடு வாழாத
வாழ்வு வாழ்வே இல்லை...
உனக்காக எழுதுவது எல்லாம்
கவிதையாகிறது...
இப்படியே காதல்மொழிபேசி
அலுத்து போய்விட்டது....
புதிதாய் ஒரு வார்த்தை தேடுகிறேன்..
வா!!!
மீண்டும் காதலிப்போம்
முதலில் இருந்து...