Author Topic: ~ குட்டிக்கதை: ~  (Read 20866 times)

Offline MysteRy

Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #30 on: January 24, 2013, 06:46:50 PM »


ஒரு ஓவியக் கண்காட்சியில் ஒரு அழகான ஜமீந்தாரை ஒவியம் வரைந்து வைத்திருந்தார்கள்.

ஒருவன் சென்று விலை கேட்டான். 5000 ரூபாய் என்றார்கள். இவனிடம் 20ரூபாய் விலை குறைந்தது.

எவ்வளவோ பேரம் பேசியும் விலையைக் குறைக்க மறுத்து விட்டார்கள். அடுத்தநாள் 20 ரூபாயைச் சேர்த்து முழுத்தொகையை
எடுத்துக் கொண்டு போனான். ஆனால் அதற்குள் ஒவியம் விற்றுப்
போயிருந்தது. இவன் சோகமாக வீட்டுக்கு வந்தான்.
-
அடுத்த வாரம் ஒரு நண்பன் வீட்டுக்குப் போனான் , அங்கே அந்த ஒவியம் மாட்டியிருந்தது!

“இது யாருடைய படம்?” என்று இவன் கேட்டான்.

“என் தாத்தா…ஜமீன்தாராய் இருந்தவர்” என்றான் நண்பன்.

” ம்…அன்னைக்கு என் கையில் மட்டும் 20 ரூபாய் இருந்திருந்தால் இவர் என் தாத்தாவாகி இருப்பார்” என்றான் இவன்.

Offline MysteRy

Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #31 on: January 24, 2013, 06:47:54 PM »


ஒரே ஒரு காட்டிலே ஒரே ஒரு யானை இருந்ததாம். பெரீய யானை. அந்த யானை தும்பிக்கையும் தந்தமுமாக ‘அங்கிட்டும் இங்கிட்டும்’ அலைந்து கொண்டிருப்பதை அந்த காட்டிலே இருக்கும் ஒரு பூரான் பார்த்ததாம். யானை பிளிறியபோது காடு முழுக்க அது கேட்டதாம். பூரான் ‘அய்யோ நான் என்றைக்கு அந்த மாதிரி காடுமுழுக்க கேட்கிறமாதிரி கத்தப்போகிறேன்’ என்று நினைத்ததாம். சரி இந்த யானையை கடித்து வைப்போம். அது கத்தும். அந்தக் கத்தலை கேட்பவர்கள் ஏன் கத்துகிறது என்று கேட்பார்கள். அப்போது நம்மைப்பற்றி நாலுபேருக்கு தெரியும் என்று நினைத்ததாம்.

அந்தப் பக்கமாக யானை வந்தபோது பூரான் நறுக் என்று கடித்ததாம். யானைத்தோல் கூடாரத்தோல் தானே? யானைக்கு வலிக்கவில்லை. கொஞ்சம் அரிப்புதான் எடுத்தது. சொறிந்துகொண்டு சோலியைப் பார்க்கப் போயிற்றாம்

ஆனால் பூரான் விடவில்லை. தேடிப்போய் மீண்டும் கடித்ததாம். பூரான் கடிக்கக் கடிக்க யானைக்கு அந்த சொறியும் சுகம் ரொம்பப் பிடித்துப் போய்விட்டதாம். அதனாலே யானைக்கு பொழுது போகாதபோது அதுவே பூரானிடம் வந்து காலைக் காட்டி கடிவாங்கி சொறிந்து மகிழ ஆரம்பித்ததாம். பூரானுக்கும் சந்தோஷம் இம்மாம்பெரிய யானையே நம்மளை தேடிவருதே என்று. யானைக்கு காலில் கடிபடுவது அலுத்துப்போய் முதுகிலும் தும்பிக்கையிலும் எல்லாம் பூரானை பிடித்துவிட்டு கடிவாங்கும் வழக்கம் ஏற்பட்டதாம்

அப்டியே கொஞ்சநாள் போயிற்றாம். ஒருநாள் யானையிடம் அதன் ·ப்ரெண்ட்ஸ் கேட்டாங்களாம். ‘அதென்ன கையிலே வைச்சிருக்கீங்க?’ன்னு .யானை சொல்லிச்சாம்’இதுவா? இது ஒரு பூரான். காது குடையறதுக்கு வச்சிருக்கேன்..சும்மா உள்ள விட்டு குடைஞ்சா ஜிர்ரின்னு இருக்கும்’னு.

Offline MysteRy

Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #32 on: January 24, 2013, 06:49:01 PM »


அருகே ஏதோ ஒரு நிறுவனத்தின் விற்பனைப் பிரதிநிதி ஒருவன் இரண்டு பெரிய பெட்டிகளை சுமக்க முடியாமல் சுமந்து வந்து நின்றான்.

நின்றவன் வந்தவனிடம்,''இப்போது நேரம் என்ன?என்று கேட்டான்.

உடனே அவன் ஒரு கைக் கடிகாரத்தை.பையிலிருந்து எடுத்து ஒரு பொத்தானை அமுக்கினான்.உடனே அக்கடிகாரத்தில் நேரம் தெரிந்ததோடு ஒரு இனிமையான குரலில் நேரமும் சொல்லப்பட்டது

.நின்றவன் அதிசயத்துடன் அந்தக் கடிகாரத்தைப் பார்க்க

,வந்தவன்,''அது மட்டுமல்ல.இந்தக் கடிகாரத்தில் இன்னும் பல சிறப்புகள் உள்ளன

.''என்று கூறியவாறு இன்னொரு பொத்தானை அமுக்கினான்.உடனே ஒரு சிறிய தொலைகாட்சி திரையில் யாரோ செய்தி வசித்துக் கொண்டிருந்தான்.

பின் இன்னொரு பொத்தானை அமுக்க இனிமையான இசை ஒலித்தது.

பிரமித்துப் போய் அந்தக் கடிகாரத்தை எப்படியும் வாங்கிவிட வேண்டும் என்று எண்ணி அதன் விலையைக் கேட்டான்

.அதன் விலை ஐந்து ஆயிரம் ரூபாய் என்றதும் மறு பேச்சு பேசாமல் அந்தக் கடிகாரத்தை வாங்கிக் கையில் கட்டி கொண்டு கிளம்பினான்.

சிறிது தூரம் சென்றவுடன்,பிரதிநிதி அவனைக் கூப்பிட்டு,

''இந்த கடிகாரத்திற்குரிய பேட்டரிகளை வாங்காமல் செல்கிறீர்களே?''என்று கேட்டவுடன்,'

'அமாம்,,மறந்து விட்டேன்.எங்கே,பேட்டரிகளைக் கொடுங்கள்,'' என்று கேட்டவுடன்

அவன் தான் கொண்டு வந்த இரண்டு பெரிய பெட்டிகளைக் காண்பித்து

,''இதனுள்தான் பேட்டரிகள் உள்ளன.எடுத்துக் கொள்ளுங்கள்,'' என்றவுடன் கடிகாரத்தை வாங்கியவன் மயங்கி விழுந்தான்.

Offline MysteRy

Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #33 on: January 24, 2013, 06:50:07 PM »


அவர்கள் சமீபத்தில் திருமணமானவர்கள்.அவர்களுக்கு ஒரு கடிதம் வந்தது அதில் புதிய திரைப்படம் ஒன்றிற்கு ஊரின் சிறந்த திரை அரங்கில் உயர்ந்த வகுப்புக்கான இரண்டு டிக்கெட்டுகள் இணைக்கப்பட்டிருந்தன.மேலும் ,''இதை அனுப்பியவர் யார் என்று கண்டு பிடியுங்கள்,பார்க்கலாம்,''என்றொரு குறிப்பும் இருந்தது.இருவரும் எவ்வளவோ சிந்தித்துப் பார்த்தும் அவர்களால் யார் என்று கண்டு பிடிக்க முடியவில்லை.இருந்தாலும் அந்த திரைப்படத்தை குறிப்பிட்ட நாளில் பார்த்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினர்.வீட்டிலிருந்த விலை உயர்ந்த பொருட்கள் எல்லாம் கொள்ளையடிக்கப் பட்டிருந்தன.வீட்டில் ஒரு கடிதமும் கிடந்தது.அதில்,''இப்போது உங்களுக்கு டிக்கெட் யார் அனுப்பியிருப்பார்கள் என்று கண்டு பிடித்திருப்பீர்களே!''என்று எழுதியிருந்தது.

Offline MysteRy

Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #34 on: January 24, 2013, 06:52:18 PM »


குளிர் நிரம்பிய பொழுதொன்றில் காலணிகள் கடையின் ஜன்னல் வழியே ஏக்கத்துடன் காலணிகளைப் பார்த்துக் கொண்டிருந்த

சிறுவனின் தோளில் கரமொன்று படிந்தது.

புன்னகை முகத்துடன் பெண்மணி ஒருவர்,

“என்ன பார்க்கிறாய்” என்று கேட்டார்.

“எனக்கு ஒரு ஜோடி காலணிகள் தருமாறு கடவுளைக் கேட்டுக்

கொண்டிருந்தேன்”.

சிறுவனை உள்ளே தூக்கிச் சென்ற பெண்மணி,

புழுதி படிந்த அவனுடைய பிஞ்சுப் பாதங்களைக் கழுவி,

பொருத்தமான காலுறைகளையும் காலணிகளையும் தேர்ந்தெடுத்து அணிவித்தார்.

தான்தான் கடை உரிமையாளர் என்பதை சிறுவன் யூகித்திருப்பான் என்று நம்பி

, “நான் யார் தெரியுமா!” என்றார்.

சிறுவன் சொன்னான்.

“தெரியுமே! நீங்கள்தான் கடவுளின் மனைவி!!”

கனிவை வெளிப்படுத்தும் போதெல்லாம் கடவுளாகிறோம்.

Offline MysteRy

Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #35 on: January 24, 2013, 06:53:56 PM »


ஒரு சிறிய ஊரில் இரண்டு குறும்பான சிறுவர்கள் இருந்தனர்.ஊரில் ஏதாவது காணாமல் போனால் இவர்களைத்தான் முதலில்விசாரிப்பார்கள்.
பெற்றோர்களால் அறிவுரை கூறி அவர்களைத் திருத்த முடியவில்லை
.ஒரு சமயம் அவ்வூருக்கு ஒரு துறவி வந்தார்.பெற்றோர் அவரை அணுகி பையன்களைப் பற்றிக் கூறி அவர்களை திருத்த வழி கேட்டனர்.
அவரும் ஒரு பையனை அன்று மாலை தனியாகத் தன்னை பார்க்க அனுப்பி வைக்கச் சொன்னார்.
ஒரு பையன் அனுப்பப்பட்டான்.துறவி அந்தப் பையனை முதலில் ஐந்து நிமிடம் கண்ணை மூடி அமரச்சொன்னார்
.பின்னர் கேட்டார்,

''தம்பி,உன்னை ஒரு கேள்வி கேட்கிறேன் நீ பதில் சொல்ல வேண்டும்.கடவுள் எங்கே?சொல்,கடவுள் எங்கே இருக்கிறார்.?'
'அவன் அங்கிருந்து உடனே ஓட்டமாய் ஓடிவந்து வீடு சேர்ந்தான்.
அடுத்த பையன் அவனிடம் ஓடி வந்ததற்கான காரணம் கேட்டான்.அவன் சொன்னான்,
''நாம் பெரிய ஆபத்தில் உள்ளோம்.இப்ப கடவுளைக் காணோமாம்.
அந்த ஆள் என்னைக் கூப்பிட்டு எங்கே எங்கே என்று கேட்கிறான்.
ஏற்கனவே ஏதாவது காணோம் என்றால் நம் மீதுதான் பழி சொல்வார்கள்
இப்போது இந்தப் பிரச்சினையும் நம் தலையில் தான் விழும் போலிருக்கிறது.''

Offline MysteRy

Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #36 on: January 24, 2013, 06:54:53 PM »


இது நடந்தது அமெரிக்கவிலன்னு வச்சுக்கோங்க..

ஒரு நாய் படு வேகமாக ஒரு பெண்ணை துரத்திக்கொண்டு வந்தது.அது கடித்து விடும் நிலையில் அந்த நொடி ஒரு மனிதன் சடாரென உள்ளே புகுந்து நாயை வேகமாக ஒரு உதை விட்டு அந்த பெண்ணை காப்பாற்றினான்.
அதை ஒரு பத்திரிக்கை நிருபர் லைவ்வாக பார்த்து கேமராவில் பதிவு செய்து கொண்டார்.அந்த மனிதனை பாராட்டி "கண்டிப்பாக இதை நாளை பத்திரிக்கையில் பிரசுரிக்கிறேன் தலைப்பு செய்தியே இது தான்,'லோக்கல் ஹீரோ வெறி நாயிடமிருந்து பெண்ணைக் காப்பாற்றினார்.'"
ந்த மனிதன்,"நன்றி, ஆனால் நான் உள்ளூர் இல்லை" என்றான்.உடனே நிருபர்,"ஓ அப்படியா, சரி இந்த செய்தி எப்படி? 'அமெரிக்கர் வெறி நாயிடமிருந்து பெண்ணைக் காப்பாற்றினார்'"
திரும்பவும் அவன்,"இல்லை நான் அமெரிக்கனில்லை, பாகிஸ்தானி"
மறு நாள் வந்த தலைப்புச் செய்தி,
"தெரு நாயை தீவிரவாதி தாக்கினான்"

Offline MysteRy

Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #37 on: January 24, 2013, 06:56:06 PM »


கடவுளுக்கு பொழுது போகவில்லை..
தீடிரென கீழே இறங்கி வந்தார்..

யாருக்காவது வரம் கொடுக்கலாம் என்று..

அப்பொழுது எதிரே வந்தார் பஸ் கண்டக்டர் ஒருவர்..

கடவுள் அறிமுகபடுத்திகொண்டார் தான் யார் என்று.
விரும்பியவரத்தை கேட்க சொன்னார்.

கண்டக்டர்
''எனக்கு ஒரே பிரசினை..
அது .சில்லரை பிரசினை..ஆனால் இது பெரிய பிரசினை.
டிக்கெட் வாங்குபர்கள் யாரும் சில்லரை தருவதில்லை..டிக்கெட் வாங்குபவர்கள அனைவரும் சரியான சில்லரை தரவேண்டும் என தரவேண்டும்..அப்புறம் ஏதும் எனக்குபிரசினை
இல்லை.''..

''பூ..இவ்வளவுதானே...தந்தேன்..''மறைந்தார் கடவுள்..

பஸ்ஸில் டிக்கெட் போட ஆரம்பித்தார்..

அனைவருமே சரியான சில்லரையை நீட்டினர்..
கிழித்துகொடுத்த்து மட்டுமே வேலை..

கண்டக்டரக்கு மகிழ்ச்சி..
நேரம் செல்ல செல்ல அவரது பை நிரம்பி வழிந்த்த.து

ஒரு டிரிப் முடிந்த்துமே அவரது சில்லரை கணத்தால் பையை தூக்க முடியவில்லை..

அடுத்த ட்ரிப் பஸ்ஸை எடுக்கும்போதே சில்லரை வேண்டாம் நோட்டாய் கொடுங்கள என்றார்..

அனைவரும் சில்லரையை நீட்டினர்..

மேலேயிருந்த கடவுள் குரல் கொடுத்தார்..''நீ வாங்கி வந்த வரம் அப்படி..எல்லோரும் சில்லரை தான் கொடுப்பார்கள...''என்று.

அன்று மாலைக்குள் தூக்கமுடியாத அளவு சில்லரை சேர்ந்த்து..
எவ்வளவுதான சில்லரையை சுமப்பது..

கண்டக்டருக்கு வேலையே அலுத்து போனது.

..''.நான தவறு செய்துவிட்டேன்..கொடுத்த வரத்தை திரும்ப பெற்றுக்கொள்ளவும்..''அழைத்தார்..கடவுளை..

''புரிந்துகொண்டேன்..புரிந்துகொண்டேன்..சில்லரை கொடுக்கிறார்களோ நோட்டு கொடுக்கிறார்களோ இன் முகம் காட்டவேண்டும்..ஏன் என்றால் இரண்டும் தேவைதான் என்று..''என்றார் கடவுளிடம்

Offline MysteRy

Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #38 on: January 30, 2013, 02:47:30 PM »
ஒரு பணக்காரன், வந்தான். அவன் வாழ்க்கையில் ஒரு கஷ்டம்.



''என் வாழ்க்கையில் இப்படி நடந்துவிட்டதே. ஊரில் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். என்னென்னவோ காரியங்களயெல்லாம் செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் இந்தக் கஷ்டம் வரவில்லை. ஆனால், இறைவன் ஏன் எனக்கு இந்தக் கஷ்டத்தைக் கொடுத்திருக்கிறார்?'' என்று புலம்பினான்.

''அப்படியா, உன் ஊரில் மொத்தம் எத்தனை பேர் இருப்பார்கள்?'' என்று கேட்டார்.

''ஏன் ? நிறைய பேர் இருப்பார்கள்.''

''அவர்களில் எத்தனை பேர் சொந்தமாய் வீடு வத்திருக்கிறார்கள்?''

''கொஞ்சம் பேர்தான் வத்திருக்கிறார்கள்.''

''சரி, எத்தனை பேர் சொந்தமாய் கார் வத்திருக்கிறார்கள்?''

பணக்காரன் யோசித்தான்.

''அதுவும் ரொம்பக் கொஞ்சம் பேர்தான்.''

''ஊரில் உன்னைப்போல; எத்தனை பேரிடம் பணம் இருக்கிறது?''

''என்ன கேள்வி இது ? ஊரிலேயே பெரிய பணக்காரன் நான்தான்!''

''உன் ஊரில் அத்தனை பேர் இருந்தும் நீ ஒருவன்தான் பெரிய பணக்காரனாய் இருக்கிறாய். இவ்வளவு பேர் இருந்தும் எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு பணம் கொடுத்தாய் என்று இறைவனை கேட்டிருக்கிறாயா?''

இந்தக் கேள்விக்கு பணக்காரனிடம் பதிலில்லை.

சிரிக்க மட்டும் அல்ல சிந்திக்க !!!

Offline MysteRy

Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #39 on: January 30, 2013, 02:48:46 PM »


ராமசாமி வயலலில் விளைந்தகாய்கறிகளை மூட்டையில் கட்டி அதனை தனது கழுதையி ல் எற்றி வைத்துகொண்டு தானும் உடகார்ந்து கொண்டுதான் சந்தைக்கு போவார்

அன்றைய தினம் அவரது கழுதை மிகவும் சோர்ந்து உடல் நலமில்லாமல் இருந்த்து...

ராமசாமீக்கு கழுதையை பார்த்து கஷ்டமாக இருந்த்து..

மனைவியிம் ..''.இன்னைக்கு நான தான் மூட்டையை சுமக்கவேண்டும் ''என்று சொல்லியவாறு மூட்டையை தலையில் வைத்துக்கொண்டு கழுதையின் முதுகில் அமர்ந்து சந்தைக்கு புறப்பட ஆரம்பித்தார்

Offline MysteRy

Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #40 on: January 30, 2013, 02:52:29 PM »


தன் முன்னாள் வந்து நின்ற ஓநாயை கோபமாக பார்த்து தன் முட்களைச் சிலிர்த்து நின்றது முள்ளம் பன்றி. ஓநாய் உடனே பதற்றத்துடன், பயப்படாதே முள்ளம் பன்றி, உன் அழகை ரசிக்கத்தான் வந்திருக்கேன் என்றது.

என்னது? நான் அழகா?

ஆமாம். நீ செம அழகு. ஆனா உன் உடம்புல இருக்கிற முல்லுதான் உன் அழகை கெடுக்குது, என்றது ஓநாய்

ஆனா, அதுதானே என்னைப் பாதுகாக்குது என்றது முள்ளம்பன்றி,

உண்மைதான். ஆனா, அதை எடுத்துட்டினா, நீ இன்னும் அழகாயிடுவே, யாருக்கும் உன்னை கொல்லனும்னு மனசே வராது.
ஓநாயின் பசப்பு வார்த்தையில் மயங்கிய முள்ளம்பன்றி, தன் முட்களை எல்லாம் மழித்துவிட்டு ஓநாய் முன் வந்து நின்றது.

இப்போ நான் இன்னும் ஆழகாயிருக்கேனா? என்று கேட்டது.
அழகாய் மட்டும் இல்லை, அடிச்சு சாப்பிடுவதற்கு வசதியாகவும் இருக்கு, என்றபடி முள்ளம்பன்றி மேலே பாய்ந்தது ஓநாய்.

நீதி: "வீண் புகழ்ச்சிக்கு மயங்காதே".

Offline MysteRy

Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #41 on: January 30, 2013, 02:53:34 PM »


வழக்காடு மன்றத்தில் ஒரு வழக்கு நீதிபதி முன் வந்தது. ஒரு மூதாட்டி, சாட்சி கூண்டுக்கு அழைக்கப்பட்டார்.

வழக்கறிஞர், மூதாட்டியை நோக்கி, "திருமதி.மரகதம், என்னை உங்களுக்குத் தெரியும் தானே?"

மூதாட்டி, "உன்னைத் தெரியாமல் என்ன, பிரகாஷ் ? சின்ன வயதிலிருந்தே உன்னைத் எனக்கு தெரியும், ஆனால் சிலாக்கியமாக ஒன்றுமில்லை! நீ பொய் சொல்கிறாய், மனைவியை ஏமாற்றுகிறாய், பிறரை உபயோகப்படுத்திக் கொண்ட பின் அவர்களை தூற்றுகிறாய், உன்னை பெரிய மேதாவி என்று நீயே நினைத்துக் கொண்டிருக்கிறாய்! ஆகவே, உன்னை எனக்கு மிக நன்றாகவேத் தெரியும்!" என்றார்.

மூதாட்டியின் பதிலில் வழக்கறிஞர் ஆடிப்போய் விட்டார்! எப்படி வழக்கைத் தொடர்வது என்று புரியாத குழப்பத்தில், அவர் எதிர்தரப்பு வக்கீலை சுட்டிக் காட்டி, "திருமதி.மரகதம், இவரை உங்களுக்குத் தெரியுமா?" என்று வினவினார்! அதற்கு அம்மூதாட்டி,"ஏன், ரமேஷை பல வருடங்களாக எனக்குத் தெரியும்! அவன் ஒரு சோம்பேறி, நல்லது சொன்னால் கேட்க மாட்டான், நிறைய குடிப்பான். அவனுக்கு யாரிடமும் நல்லுறவு கிடையாது. சட்டத்தை பற்றி ஒரு எழவும் தெரியாமலேயே வக்கீலாகி விட்டவன்! அவனுக்கு மூன்று பெண்களிடம் தொடர்பு இருக்கிறது. அதில் ஒருத்தி உன் மனைவி!?!" என்று கூறியதில் ரமேஷ் என்ற அந்த எதிர்தரப்பு வக்கீல் மூர்ச்சையாகும் நிலைக்கு போய் விட்டார்!

அவசர அவசரமாக, இரண்டு வழக்கறிஞர்களையும் தன்னருகே வருமாறு அழைத்த நீதிபதி, மெல்லிய குரலில், "உங்கள் இருவரில் எந்த ராஸ்கலாவது அந்த கிழவியிடம் 'என்னைத் தெரியுமா' என்று கேட்டால் நிச்சயம் அந்த ஆளை தூக்கு மேடைக்கே அனுப்பி விடுவேன்!" என்றார்.

Offline MysteRy

Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #42 on: January 30, 2013, 02:59:14 PM »
எதற்கும் கவலை கொள்ளாதே..!



ஒரு ஊரில் பல ஆண்டுகளாக வயல்களில் ஒரு வயது முதிர்ந்த விவசாயி வேலை செய்து கொண்டிருந்தார். அவர் தனது வீட்டில் ஒரு குதிரையை வளர்த்து வந்தார். ஒரு நாள் அந்த குதிரை எங்கேயோ ஓடி போய்விட்டது. அந்த விஷயத்தை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரிடம் சென்று, "என்ன ஒரு கெட்ட அதிர்ஷ்டம்!" என்று கனிவோடு பேசினர். அதற்கு அந்த விவசாயி "இருக்கலாம்" என்று சொன்னார்.

மறுநாள் காலையில் ஓடிப் போன அந்த குதிரை திரும்ப வந்துவிட்டது. ஆனால் வரும் போது மூன்று குதிரைகளோடு வந்தது. அதை அறிந்தவர்கள், அவரிடம் "எவ்வளவு அற்புதம்" என்று ஆச்சரியத்தோடு வந்து பேசினர். அதற்கும் அவர் "இருக்கலாம்" என்று கூறினார்.

அடுத்த நாள் அந்த விவசாயி மகன் அந்த குதிரையின் மீது சவாரி செய்ய ஆசைப்பட்டு, குதிரையின் மீது ஏறினான். ஆனால் அந்த குதிரையோ அவனை கீழே தள்ளிவிட்டது. அதனால் அவனது கால் உடைந்துவிட்டது. உடனே பக்கத்து வீட்டுக்காரர்கள், அவரிடம் மறுபடியும் கனிவோடு பேசினர். அதற்கும் அவர் "இருக்கலாம்" என்று சொன்னார்.

மறுநாள் இராணுவ அதிகாரிகள் அந்த கிராமத்திற்கு இளைஞர்களை அழைத்து செல்ல வந்தனர். அப்போது கால் உடைந்த அந்த இளைஞனை பார்த்து, சென்றுவிட்டனர். உடனே அக்கம்பக்கத்தினர் அந்த அவரிடம் வந்து "என்ன பாக்கியம் செய்தீர்களோ உங்கள் மகனை விட்டு சென்றுவிட்டனர்" என்று கூறி வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதற்கும் அந்த விவசாயி "இருக்கலாம்" என்றே கூறினார்.

ஆகவே "எது வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நடக்கும். எனவே எதற்கும் கவலை கொள்ளாமல் எல்லாம் நன்மைக்கே என்று ஏற்று கொள்ள வேண்டும்" என்பது நன்கு இக்கதையின் மூலம் புரிகிறது..

Offline MysteRy

Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #43 on: January 30, 2013, 03:00:29 PM »



ஊருக்கு வெளியே வனப்புறத்தில் இடத்தை தேர்ந்து எடுத்து கெளசிகர் கடும் தவம் புரிந்துவந்தார்..

இவர் தியானத்தில் இருக்கும்போது மேலே பறந்த பறவை எச்சமிட்டது இவர் மேல் விழுந்துவிடுகிறது..
கோபத்துடன் பறவையை அண்ணாந்து பார்க்கிறார்...

இவர் பார்வை பட்டவுடன் எரிந்து கீழே விழுந்துவிடுகிறது...

இவருடைய தவ வலிமை இவருக்கே பெருமைகொள்ளவைக்கிறது...

மதிய உணவுக்காக ஊருக்குள் வருகிறார்...
முனிவர்கள் உணவை பிச்சை கேட்டு உண்பதுதான் அந்த காலத்தில் மரபாக இருந்தது.

கெளசிகர் ஒருவீட்டீன் முன் பிச்சை இடுமாறு குரல்
கொடுக்கிறார்..

''கணவனுக்கு உணவு பரிமாரிக்கொண்டிருக்கிறேன்..காத்திருங்கள்.''.எனவீட்டின் உள்ளே இருந்து பதில் அளிக்கிறார் வீட்டில் இருந்த பெணமணி..

கெளசிகருக்கு என்னை காத்திருக்க சொல்கிறாயா...கோபம் வருகிறது..

மறுபடியும் குரல் கொடுக்கிறார் முனிவர்..
பெணமணியோ எதற்கும் அசை
யவில்லை..தனது வேலையை முடித்துவிட்டு உணவுடன் வருகிறார்
..
கெளசிகர்'' பெண்ணே..நான் யார் என்று தெரியுமா என்னையே காக்க வைக்கிறாயா..? '' எனகிறார்..

''நீங்கள கெளசிகர் என்று தெரியும்..ஆனால் நான் பறவை அல்ல உங்கள் பார்வை பட்டதும் எரிந்து போவதற்கு.''.எனகிறார் பெண்மணி..

முனிவர் அதிர்ந்துபோகிறார்..வீட்டில் உள்ிள பெணமணீக்கு இவவளவு சக்தியா...?

'' நான் இல்லறத்தில் முழுமையாக இருக்கிறேன்..நீங்கள் தவத்தில் முழுமையே நோக்கி உள்ளீர்கள்..அவ்வுளவுத்தான்..கணவனுக்கு நான் முக்கியத்துவம் அளிக்கிறேன் ..அதில் முழுமையாக உள்ளேன்..அதன் பலம்தான இந்த ஞானம்''..எனகிறார்..
வியந்து போய் நீதான் எனகுரு என விழுகிறார்...
................................................................................................

புரணக்கதை தான ..ஆனாலும் ஒரு செயலில் முழுமையாக ஈடுபடவேண்டும் எனபதை மட்டும் சொலகிறது..

கணவனாயிருந்தாலும் சரி..
மனைவியாய் இருந்தாலும் சரி.
இந்த உறவில் அர்பணிப்பாக இருங்கள்.
வெளியே நடப்பதை பற்றி கவலை இல்லை..
மழையே பெய் என்றால் கூட பெய்யும்..
« Last Edit: January 30, 2013, 03:07:11 PM by MysteRy »

Offline MysteRy

Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #44 on: January 30, 2013, 03:05:56 PM »



வீடு வீடாய் சென்று புத்தகங்கள் விற்பவன் அந்தச் சிறுவன்.

ஒரு வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினான்.

கடுகடுப்பாய் கதவைத் திறந்த பெரியவர்,

“இங்கே யாரும் இல்லை! வீணாகத் தொந்தரவு செய்யாதே!” என்று கத்தினார்.

சற்றே திறக்கப்பட்ட கதவின் வழியாய் பத்துப் பதினைந்து நாய்கள் தெரிந்தன.

மறுநாள் மீண்டும் கதவைத் தட்டினான் சிறுவன்

கதவைத் திறந்து கத்த வாய் திறந்த பெரியவர் கண்கள் மலர்ந்தன.

சிறுவன் கைகளில் சின்னச் சின்ன நாய்க்குட்டிகள் இரண்டு.

பெரியவருக்குக் கிடைத்தது இரண்டு நாய்க் குட்டிகளும் ஒருபேரனும்..

தேவைகள் அறிந்து துணையாய் இருந்தால்

சேவைகள் அதைவிட எதுவும் இல்லை