Author Topic: ~ குட்டிக்கதை: ~  (Read 20250 times)

Offline MysteRy

~ குட்டிக்கதை: ~
« on: January 23, 2013, 07:14:07 PM »
வெள்ளம்!



திடீரென்று வீட்டுக்குள் வெள்ளம் புகுந்தது. வீட்டில் இருந்த பொருட்கள் எல்லாம் தண்ணீரில் மிதக்க, எல்லோரும் இங்கும் அங்குமாக ஓடினார்கள். குட்டீஸ் எல்லாம் தண்ணீரில் தத்தளிக்க, அவர்களை ஒரு பக்கமாக இழுத்து உட்கார வைத்தவள், ''இதுக்குதான் சொன்னேன், ஏரி ஓரமா வீட்டைக் கட்டாதீங்கன்னு... இப்பப் பாருங்க எல்லாம் நாசம்!'' என்று கத்த,

''சரி, என்ன செய்றது... ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமான பிரச்னைகள் இருக்கத்தான் செய்யுது. கவலைய விடு. எல்லாரையும் கூட்டிக்க, வேற இடத்துக்குப் போயிடுவோம்'' என்று பெருசு சொல்ல, குடும்பம் குடும்பமாக வேறு இடத்தில் புற்று வைக்கக் கிளம்பியது அந்த எறும்புக் கூட்டம்.

Offline MysteRy

Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #1 on: January 23, 2013, 07:17:27 PM »


ஒரு ஊரில் அரசன் ஒருவன் இருந்தார். அதிகாலையில் எழுந்தவுடன் சூரிய உதயத்தைப் பார்ப்பது அவரது வழக்கம்.

வழக்கம் போல் அன்றும் சாளரத்தைத் திறந்த அரசருக்கு ஏமாற்றம்! சூரிய உதயத்துக்குப் பதில் அவர் கண்களில் ஒரு பிச்சைக்காரன் தான் தோன்றினான். போயும் போயும் இவன் முகத்தில் தான் விழிப்பதா என்று கடும் வெறுப்புடன் திரும்பினார் அரசர். திரும்பிய வேகத்தில் சுவற்றில் அவரது தலை அடிபட்டு இரத்தம் கொட்டியது..வலியோ பொறுக்க முடியவில்லை. அத்துடன் கோபம் வேறு பொங்கியது...

பிச்சைக்காரனை இழுத்து வருமாறு கட்டளையிட்டார். காவலர்கள் அவனை இழுத்துக் கொண்டு வந்து மன்னர் முன்னே நிறுத்தினர். அரச சபை கூடியது. தனது காயத்துக்கு காரணமாக இருந்த அந்த பிச்சைக்காரனை தூக்கிலிடுமாறு தண்டனையும் கொடுத்தார்.

பிச்சைக்காரன் கலங்கவில்லை; கலகலவெனச் சிரிக்கத் தொடங்கினான். சபையில் இருந்தவர்கள் திகைப்புடன் விழித்தனர். அரசனுக்கோ, கோபம் கட்டுக்கடங்காமல் போய் விட்டது...பைத்தியக்காரனே! எதற்குச் சிரிக்கிறாய் என்று ஆத்திரத்துடன் கேட்டார்.

அரசே...! என் முகத்தில் விழித்ததால் உங்கள் தலையில் சிறு காயம் மட்டும் தான் ஏற்பட்டது. ஆனால், உங்கள் முகத்தில் நான் விழித்ததால், என் தலையே போகப் போகிறதே...அதை நினைத்தேன் சிரித்தேன் என்றான். மன்னன் தலை தானாகவே கவிழ்ந்து விட்டது. தவறை உணர்ந்தவன் தண்டனையை ரத்து செய்து பிச்சைக்காரனை விடுவித்தான்.

நீதி: தைரியம் என்பது தன்னம்பிக்கைக்கு மறுபெயர். அது இல்லையென்றால், சமயத்தில் உயிரைக் கூட காப்பாற்றிக் கொள்ள முடியாமல் போய்விடும்...!

Offline MysteRy

Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #2 on: January 23, 2013, 07:22:57 PM »
"புத்திசாலித்தனம்"



ஆசிரியர் வகுப்பிலே நன்றாக படிக்கும்மூன்று மாணவர்களை எழுப்பி ஆசிரியர் கேளவி கேட்டார்..

''தேர்வில் எவ்வளவு மார்க்கு வாங்குவாய்'' என்று..

முதலாமவன்'' நான் மாவட்டத்திலே முதல் மார்க்குவாங்குவேன்..'' என்றான

இரண்டாமவன்.''.நான் மாநிலத்திலே முதல் மார்க்கு வாங்குவேன்.''என்றான்..
.
ஆசிரியர் ''அவர்கள் சொல்லிவிட்டார்கள்.
.அவர்களைவிட பெரிதாய் சொல்லமுடியாது'' என்றார்..
.
மூன்றாவன் சொன்னான்.''.இந்த வகுப்பிலேயே முதல் மார்க் வாங்குவேன்..''.என்றான்...

ஆசிரியர் வாயடைத்து போனார்..

Offline MysteRy

Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #3 on: January 23, 2013, 07:24:18 PM »


முல்லா வேலையிலிருந்து வீடு திரும்பியதும்சட்டையைக் கழற்றினார்.அந்த சட்டையை வாங்கிய அவரது மனைவி அதில் ஒருநீளமான கருப்பு முடி இருந்ததைப் பார்த்ததும் அவள்மிகுந்த கோபத்துடன்,''நீ ஒரு இளம் பெண்ணுடன் தொடர்பு கொண்டுள்ளாய் என்று நினைக்கிறேன்,''என்று கூறி சண்டை பிடிக்க ஆரம்பித்தாள்.

''வழியில் ஒரு கூட்டத்தில் புகுந்து வந்தபோது யாருடைய முடியாவது ஒட்டியிருக்கும்,''என்று முல்லா கூறிய சமாதானம் எடுபடவில்லை.அழுது ஆர்ப்பாட்டம் செய்தாள்.
மறுநாள் முல்லா வேலை முடிந்து வந்தவுடன்,விரைந்து வந்து அவரது மனைவி அவருடைய சட்டையை ஆராய்ச்சி செய்யத் துவங்கினாள்.அப்போது சட்டையில் ஒரு வெள்ளை முடி இருப்பதைக் கண்டாள்.அவ்வளவுதான்..பிடி பிடிஎனப் பிடித்துக் கொண்டாள் ''நேற்று ஒரு இளம் பெண்:இன்று ஒரு வயதான பெண்.நீ சரியான காமாந்தகனாக இருக்க வேண்டும்.என் வாழ்க்கையே பாழாகி விட்டது.''என்று கூவ ஆரம்பித்தாள்.
அடுத்த நாள் முல்லா வேலையிலிருந்து வரும்போது,பிரச்சினை எதுவும் வரக்கூடாது என்று எண்ணி சட்டையை கழட்டி ,நன்றாக உதறிவிட்டு மறுபடியும் உடுத்திக் கொண்டார்.வீட்டுக்கு வந்தவுடன் அவரது மனைவி வழக்கம் போல அவரது சட்டையை பரபரவென சோதனை போட்டாள்.ஒன்றும் கிடைக்கவில்லை.முல்லா நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.

ஆனால் திடீரென உரத்த குரலில் அவர் மனைவி அழ ஆரம்பித்தாள்.
அவருக்கு ஒன்றும் புரியாமல் என்னவென்று கேட்டார்.அவள்,''செய்வதைசெய்துவிட்டு ஒன்றும் புரியாத மாதிரி நடிக்கிறீர்களா?கேவலம்,ஒரு மொட்டைத் தலைக்காரியுடன் இன்று சுற்றிவிட்டு வந்திருக்கிறீர்கள்.நான் என் தாயின் வீட்டுக்குப் போகிறேன்,''என்றாள்.பாவம்,முல்லாவால் என்ன சொல்ல முடியும?

Offline MysteRy

Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #4 on: January 23, 2013, 07:25:37 PM »


தன் பலவீனங்களை விட்டுவிட முடியவில்லை என்றபுகாருடன் ஒரு துறவியைத் தேடிப்போனார் ஓர் இளைஞர்.

“சிறிது தூரம் உலாவிவிட்டு வருவோம்” என்று துறவி அழைத்தார். வழியில் தென்பட்ட மரமொன்றை இறுகக் கட்டிக்கொண்ட துறவி, “இந்த மரம் என்னை விடமாட்டேன் என்கிறது” என்றலறி ஆர்ப்பாட்டம் செய்தார்.
அவர் கைகளை விடுவிக்க இளைஞர் முயன்றார். துறவியோ மரத்தை இறுகப் பற்றியிருந்தார்.

குழப்பமடைந்த இளைஞரிடம் சொன்னார். மரம் என்னைப் பற்றவில்லை என்று உனக்குத் தெரிகிறதல்லவா? உன் பலவீனங்களைக் கூட நீதான் பற்றியுள்ளாய். நீயாக அதைவிட நினைத்தால் நிச்சயம் விடலாம்” என்றார் துறவி.

Offline MysteRy

Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #5 on: January 23, 2013, 07:44:41 PM »


ஒரு தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள்.கணவன்,மனைவி இருவருமே கருப்பு.மூன்று குழந்தைகளும் கருப்பு.

இப்போது நான்காவது குழந்தை பிறந்திருக்கிறது.அந்த குழந்தை சிவப்பாக பிறந்துள்ளது.கணவனுக்கு மனைவியின் மீது கடும் சந்தேகம் ஏற்பட்டது.கணவன் மனைவியிடம் உண்மையை சொல்லுமாறு பலவாறு கேட்டான்.

மனைவி கடைசிவரைஇந்தக் குழந்தைக்குத் தகப்பன் அவன்தான்என்று கூறிக்கொண்டே இருந்தாள்.ஒரு நிலையில் அவன் கோபம் கட்டுக்கடங்காமல் போனபோது அவன் துப்பாக்கியை எடுத்து மனைவியை சுட்டுவிட்டு,''சாகும் முன்பாவது உண்மையை சொல்லிவிடு,''என்று கோபமாகக் கேட்டான்.அவள் அப்போதும் ,''இந்தக் குழந்தை உன் குழந்தை தான்,''என்று அவன் தலையில் கைவைத்து சத்தியம்செய்தாள்.கணவனுக்கு தான் தவறு செய்து விட்டோமோ என்கின்ற ஆதங்கம் வந்து விட்டது.கனிவுடன் அவளை நோக்கினான்.அப்போது அவள் அவனை அருகில் அழைத்து,''நான் சாகும் முன் நீண்ட நாட்களாக உங்களிடம் மறைத்த உண்மையை இப்போது சொல்லி விடுகிறேன்.இந்தக் குழந்தை உங்கள் குழந்தை என்பதில் உங்களுக்கு சந்தேகம் வேண்டாம்.ஆனால்முதல் மூன்று குழந்தைகளும் உங்கள் குழந்தைகள் அல்ல.''

Offline MysteRy

Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #6 on: January 23, 2013, 07:55:19 PM »
(கொஞ்சம் குசும்பு ஜாஸ்தி தாங்க)



ஒரு ஊர்ல ஒருத்தன் சாயந்தரம்வேலை முடிச்சு வீட்டுக்கு போய்ட்டு இருந்தான் .அப்ப திடீர்னு ஒரு காட்டுக்குள்ளவச்சு அவன் வந்த பைக் பஞ்சர்ஆய்ருச்சு.உடனே பக்கத்துலபார்த்தான் தூரத்துல ஒரு மடம் தெரிஞ்சது உடனே அங்க போய்எதாவது உதவி கிடைக்குமான்னு கேட்கலாம்னு போனான்.

அங்க இருந்த துறவி சொன்னாரு .தம்பி நேரம்வேறு போயிருச்சு இந்தஇருட்டுக்குள்ள நீங்கஊருக்கு வண்டியசரி பண்ணி போகனுமா ?பேசாம இங்க தங்கிட்டு காலைல போங்கன்னு .உடனே இவனும்சரின்னு ஒத்துக்கிட்டான்.அங்கேயே சாப்பிட்டு தூங்கி கொண்டிருக்கும்போது மடத்துக்கு பின்னாடி டமால்னு ஒரு பெரியசத்தம் .ஆனா ஒருத்தரும்எழும்பி என்னனு பார்க்கல .உடனே இவனும்அப்படியே படுத்து தூங்கிட்டான்.

மறுநாள் காலைல வண்டியசரிபண்ணிட்டு போகும் போது.அந்தசத்ததுக்கானகாரணத்தை தலைமை துறவிகிட்டகேட்டான் உடனே அவரு அத உன்கிட்டசொல்லகூடாது.நீ போகலாம்அப்படின்னு சொல்லிட்டார் .இவனும்வந்துட்டான் அப்புறம் ஒரு வருடம்கழிச்சு அதே வழிய வரும்போது அதே மாதிரி வண்டி பஞ்சர்ஆகி அதே மடத்துல தங்கவேண்டி வந்தது .அன்னைக்கு ராத்திரியும் அந்த சத்தம் கேட்டது .

இவனும் மறு நாள்காரணம் கேட்டான் .ஆனா தலைமை துறவி அப்பவும்சொல்ல கூடாதுன்னு சொல்லிட்டார்மறுபடியும்மூன்றாவது தடவையும்இப்படி நடந்தப்ப அவர்கிட்ட காரணம்கேட்டான் .அவர் அப்பவும்மறுத்தார் .உடனே இவனுக்கு கோபம்வந்துருச்சு .ஒரு தரவ கூட காரணத்த சொல்ல மாட்டங்குறீங்க .ஏன்னு கொஞ்சம் கோபத்தோட கேட்டான்.அதுக்கு அவரு நீயும் என்னமாதிரி துறவி ஆனா சொல்றேன்அப்படின்னார் .

உடனே இவனும் வீட்டுக்கு போய்எல்லார்கிட்டயும் சொல்லிட்டு துறவியாகவந்துட்டான் .வந்ததும் அவரு இவனதவம் பண்ண சொன்னார் .இவனும்பண்ணினான் ஆறு மாதம் கடுமையா தவம் இருந்தபிறகு அந்ததலைமை துறவி இந்தாப்பா இந்தசாவிய வச்சு அந்த கதவ தொற அங்கதான் நீ கேட்ட கேள்விக்கு பதில்இருக்குன்னு சொல்லி ஒரு கதவ காண்பிச்சார் .

உடனே இவனும் தொறந்தான்.அங்கஇன்னொரு கதவு, பக்கத்திலஒரு சீட்டு அதில ஒரு கேள்வி .அதுக்கு பதில் கண்டு புடிச்சபிறகு அடுத்தசாவி தருவேன்னு துறவி சொன்னார்.இவனும் கண்டு பிடிச்சான்அடுத்தசாவியும் தந்தார் .இவன்தொறந்தான் . அப்புறம்இன்னொரு கதவு அதுக்கு ஒரு கேள்வி .

ஒரு வழியா அதுக்கும் பதில்கண்டுபிடிச்சி அந்த கடைசி கதவதொறந்தான் அங்க தான் இவன் அந்த சத்ததுக்கானகாரணத்தை கண்டு புடிச்சான் . . .அது என்னனு உங்களுக்கு சொல்லனும்னா நீங்கதுறவியாகனும்.

( பாவி பயலுக எனக்கும்இப்படிதாங்க அனுப்புனாங்க )

Offline MysteRy

Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #7 on: January 23, 2013, 08:06:02 PM »
தென்னாலிராமன் கதை !!!



கிருஷ்ண தேவராயரின் படைகளுள் குதிரைப் படையும் ஒன்று. குதிரைப்படையும் வலிமையுள்ளதாக இருந்தது சண்டை இல்லாத காலங்களில் குதிரைகளைப் பராமரிக்க மந்திரிகளில் ஒருவர் ஒரு யோசனை சொன்னர்.

அதாவது ஒரு வீட்டிற்கு ஒரு குதைரையையும் அதற்குத் தீனி போடுவதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையும் கொடுக்கப்பட்டு வந்தது. அத்தொகையைப் பெற்றுக்கொண்டு குதிரையை நன்கு ஊட்டளித்து வளர்த்தனர். அதே போல் தெனாலிராமனுக்கும் ஒரு குதிரை கொடுக்கப்பட்டது.
ஆனால் தெனாலிராமனோ ஒரு சிறிய கொட்டகையில் குதிரையை அடைத்து வைத்து புல் போடுவதற்கு மட்டுமே ஒரு சிறிய தூவாரம் வைத்திருந்தான். அந்த துவாரத்தின் வழியாக புல்லை. நீட்டியவுடன் குதிரை வெடுக்கென வாயால் கௌவிக் கொள்ளும். மிகவும் சிறிதளவு புல் மட்டுமே தினமும் போட்டு வந்தான். அதனால் அக்குதிரை எலும்பும் தோலுமாக நோஞ்சானாக இருந்தது. குதிரைக்குத் தீனி வாங்கிப் போடும் பணத்தில் தெனாலிராமன் நன்கு உண்டு கொழுத்தான்.

ஒரு நாள் குதிரைகள் எப்படி இருக்கின்றன என்று காண அனைவருக்கும் செய்தி அனுப்பி குதிரைகளை அரண்மனைக்கு வரவழைத்தார் மன்னர். அதன்படி குதிரைகள் அனைத்தும் அரண்மனைக்குக் கொண்டு வரப்பட்டன மன்னர் குதிரைகளைப் பார்வையிட்டார். குதிரைகள் அனைத்தும் மிக திருப்திகரமாக இருந்ததால் மன்னர் மகிழ்ச்சியடைந்தார்.

அங்கிருந்த தெனாலிராமனை அழைத்து "உன் குதிரையை ஏன் கொண்டு வரவில்லை" என மன்னர் கேட்டார். அதற்கு தெனாலிரானோ "என் குதிரை மிகவும் முரட்டுத்தனமாக இருக்கிறது. அதை என்னால் அடக்க முடியவில்லை. அதனால் தான் இங்கே கொண்டு வர வில்லை." என்றான்.
"குதிரைப்படைத் தலைவரை என்னுடன் அனுப்புங்கள். அவரிடம் கொடுத்தனுப்புகிறேன்" என்றான் இதை உண்மையென்று நம்பிய மன்னர் குதிரைப்படைத் தலைவனை தெனாலிராமனுடன் அனுப்பினார்.

குதிரைப்படைத்தலைவருக்கு நீண்ட தாடியுண்டு குதிரைப் படைத்தலைவரும் அந்த துவாரத்தின் வழியாக குதிரையை எட்டிப் பார்த்தார். உடனே குதிரை அது புல்தான் என்று நினைத்து அவரது தாடியைக் கவ்விப் பிடித்துக் கொண்டது. வலி பொறுக்கமாட்டாத குதிரைப் படைத்தலைவர் எவ்வளவோ முயன்றும் தாடியை குதிரையிடமிருந்து விடுவிக்க முடியவில்லை. இச்செய்தி மன்னருக்கு எட்டியது. மன்னரும் உண்மையிலேயே இது முரட்டுக் குதிரையாகத்தான் இருக்கும் என்று எண்ணி தெனாலிராமன் வீட்டுக்கு விரைந்தார்.

அங்கு குதிரையின் வாயில் குதிரைப்படைத் தலைவரின் தாடி சிக்கி இருப்பதை அறிந்து அந்தக் கொட்டகையைப் பரிக்கச் செய்தார். பின் குதிரையைப் பார்த்தால் குதிரை எலும்பும், தோலுமாக நிற்பதற்குக் கூட சக்தியற்று இருந்ததைக் கண்டு மன்னர் கோபங்கொண்டு அதன் காரணத்தைத் தெனாலிராமனிடம் கேட்டார்.

அதற்குத் தெனாலிராமன் "இவ்வாறு சக்தியற்று இருக்கும் போதே குதிரைப் படைத்தலைவரின் தாடியை கவ்விக்கொண்டு விடமாட்டேன் என்கிறது. நன்கு உணவு ஊட்டி வளர்த்திருந்தால் குதிரைப் படைத் தலைவரின் கதி அதோகதிதான் ஆகி இருக்கும் " என்றான்.
இதைக் கேட்ட மன்னன் கோபத்திலும் சிரித்து விட்டார். பின்னர் தெனாலிராமனை மன்னித்து விட்டார்.

Offline MysteRy

Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #8 on: January 23, 2013, 08:19:37 PM »
(கதைய முழுசா படிக்காம நீங்களா முடிவு பண்ணகூடாது



ஊரில் ஒரு பெரிய மனுஷன்.

புத்திசாலித்தனம் என்றால் என்னவென்று தெரிந்து கொள்ள...தன் மகன்களுக்கிடையே ஒரு போட்டி வைத்தாராம்.

ஆளுக்கு ஒரு ஆயிரம் ரூபாயைக் கொடுத்து, அதில் ஏதாவது ஒரு பொருளை வாங்கி... தன் வீட்டின் ஒரு அறையை பூராவும் நிறைக்க வேண்டும் என்பதே அந்தப் போட்டி.

ஒரு மகன் விவசாயி.

ஆயிரம் ரூபாய்க்கும் வைக்கோலாய் வாங்கிக் கொண்டு வந்து அறை நிரப்பினாராம்.

ஆனால் பாவம், அறை கால்வாசிகூட நிரம்பவில்லை.

அடுத்த மகன் வியாபாரி.

ஆயிரம் ரூபாய்க்கும் பஞ்சு வாங்கிக் கொண்டு வந்து அறை நிரப்பினாராம்.

ஆனால் பரிதாபம், அறை அரைவாசிகூட நிரம்பவில்லை.

கடைசி மகனோ அரசியல்வாதி.

அவன் ஒரு ரூபாய்க்கு ஒரு மெழுகுவர்த்தி அறையில் ஏற்றினானாம்.

அறை முழுவதும் ஒளியால் நிரம்பியது.

பெரியவர் மற்ற இரு மகன்களைப் பார்த்து பெருமையாய் சொன்னாராம்.

"புரிந்ததா புத்திசாலித்தனம் என்றால் என்னவென்று.?"

கேட்டதும் மகன்கள் இருவரும் தலையைக் குனிய, அரசியல்வாதி மகனின் பிஏ தனக்குள் முணுமுணுத்தானாம்.

"ஆமாமா... எந்த லூஸாவது 'மீதி தொள்ளாயிரத்து தொண்ணூதொம்பது ரூபா எங்கே'னு கேட்டுச்சா பாரு.!!!".
.
.

அந்த லூசுங்க நாம் தானா ???

Offline MysteRy

Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #9 on: January 23, 2013, 08:37:25 PM »


கணவனும் மனைவியும்
ரோடில் சென்று கொண்டிருந்தார்கள்...

அப்போது அந்த மனைவியின் கழுத்தில் கிடந்த செயினை ஒரு திருடன் அறுத்துகொண்டு ஒடினான்..

அவளின் கணவன் விடவில்லை...அவனை விடாமல் துரத்தி அருகில் வந்துவிட்டான்..

''நில்லுப்பா..உன்னிடம் முக்கியாமான ஒன்று சொல்லவேண்டும்..'' கத்தினான் கணவன்..

திருடன் கேட்பற்காக வேகத்தை குறைத்தான்..

''அது கவரிங்..செயின்..உனக்கு ஒன்றுக்கும் உதவாது..''என்றான் இவன்.
.
அப்போதுதான் பார்க்கிறான்..கவரிங் செயின்..திருடன்
திரும்ப விட்டெறிகிறான்.
..
''ரொம்ப நன்றிப்பா..பவுன் செயின் வேனும்னு கேட்டுகிட்டு இருந்தால் என் மனைவி..இனிமேல் கேட்கமாட்டாள்..''என்றான் கணவன்..

எல்லாம் நல்லதறக்கே..

Offline MysteRy

Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #10 on: January 23, 2013, 08:40:17 PM »


ஓவியப் போட்டி ஒண்ணு நடந்தது. சின்னப் பசங்க நிறையப்பேரு படம் வரைஞ்சு கொடுத்தாங்க. ஒரு பையன் கொடுத்த பேப்பர் மட்டும் வெள்ளையா இருந்தது.

மாஸ்டருக்குப் பயங்கர கோபம்.

என்னடா இது ?னு கேட்டார்.

ஒரு ஆடு புல் திங்கற ஓவியம் சார். னான் பையன்.

மாஸ்டருக்குக் குழப்பமாயிடுச்சு, ஆடு, புல் எல்லாம் எங்கேடா ? னார்.

புல் எப்படி இருக்கும் சார் ? அதுதான் ஆடு தின்னுடுச்சேன்னான் பையன்

அப்படின்னா ஆடாவது இருக்கணுமே.. .? னார் மாஸ்டர்.

புல் இல்லாத இடத்தில் ஆட்டுக்கு என்ன சார் வேலை ? அதனால் ஓடிப் போயிடுச்சுன்னான் பையன்.

Offline MysteRy

Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #11 on: January 23, 2013, 08:43:52 PM »


ராம்லால் சேட் அடகுகடைக்கு ரமாசாமியும் , குப்புசாமியும் ஒரு மோதிரத்தை விற்ப்பதற்காக வந்தார்கள்..

" யோவ் சேட்டு ...இது என் பேமிலி மோதிரம் ..விக்கலாம்னு வந்திருக்கேன் .வச்சிகிட்டு ஒரு அஞ்சாயிரம் குடு.."
மோதிரத்தை வாங்கி பார்த்தார் சேட்டு ,
" இந்த மோதிரத்துக்கு அஞ்சாயிரம் குடுக்க முடியாது..வேண்ணா சேட்டு ஆயிரம் குடுக்குறான்.. " என்றார்
" ஒங்கிட்ட உள்ள கெட்ட பழக்கம் இதுதானே..எவனாவது கஷ்டத்துல விக்க வந்தா அடிமாட்டு விலைக்கு கேப்பே ..சரி சரி..குடுய்யா? "
சேட்டு குடுத்த ஆயிரம் ரூபாயை வாங்கிவிட்டு வெளியே வந்தார்கள் ராமசாமியும் குப்புசாமியும்..
அப்போது குப்பு சாமி கேட்டார் ..
" மாப்பிளை ..பத்தாயிரம் ரூபா மோதிரத்தை ஆயிரம் ரூபாய்க்கு வித்திருக்கியே ..ஒனக்கு அறிவு இருக்காய்யா ? "
அதற்கு ராமசாமி, " மச்சான்..அது நேத்துதான் என் பொண்டாட்டி ஐநூறு ரூபாய்க்கு வாங்குன கவரிங் மோதிரம்..அது தெரியாம அந்த கூமுட்டை ஆயிரம் குடுத்து வாங்கிருக்கான்..அதனால எனக்கு ஐநூறு ரூவா லாபம் " என்றார் ..

சேட்டு வீட்டில்.. சேட்டிடம் அவர் மனைவி கேட்டார் ,
" அதை பாத்தாலே கவரிங் நகைன்னு தெரியுது..அதுக்கு போயி ஆயிரம் ரூவா குடுத்துருக்கீங்களே ..ஒங்களுக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா? "

" அப்படி இல்லை சீதா..அவன் குடுத்தது கவரிங் நகைன்னு எனக்கும் தெரியும்..ஆனா நான் குடுத்தது ஆயிரம் ரூபாயோட கலர் ஜெராக்சுன்னு தெரியாம வாங்கிட்டு போறான் அந்த கூமுட்டை ..அதனால எனக்கு ஐநூறு ரூவா லாபம் " என்றார் சேட்டு ..

Offline MysteRy

Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #12 on: January 23, 2013, 09:53:21 PM »
சிங்கத்துடன் தான் மோதுவேன்..!!



நல்லதம்பி ஒரு நாள் சர்க்கஸ்
பார்க்க போயிருந்தார். கூட்டம்னாலும் கூட்டம் பயங்கர கூட்டம். நம்மூரு
அரசியல்வாதிகளை விட நல்லா வித்தை காட்டிக்கிட்டிருந்தாங்க. அப்ப
பாத்தீங்கனா பயங்கர பில்டப்போட ஒரு சிங்கம் வந்துச்சு. பின்னாடியே
ஒரு பொண்ணும் வந்துச்சு. சிங்கம் வாயில ஒரு சாக்லேட் வச்சுக்கிட்டு நிக்க, அந்த பொண்ணு தன் வாயேலே அந்த சாக்லேட்ட எடுத்துட்டா.
பயங்கர கைத்தட்டல்.

இப்ப அங்க நின்னுக்கிட்டு இருந்த ரிங் மாஸ்டர் கூட்டத்தை பார்த்து 'யாருக்காவது இப்படி செய்ய தில் இருந்தா மேடைக்கு வாங்க' னு கூப்பிட்டார். நல்லதம்பி படார்னு எந்திரிச்சு மேடை ஏறிட்டார்.

ரிங் மாஸ்டர் நல்லதம்பியை ஒரு லுக் விட்டுட்டு சிங்கம் வாயில
இன்னொரு சாக்லேட்ட வச்சுட்டு இப்ப எடுங்க அப்படின்னார்.
ரிங் மாஸ்டரை முறைச்சு பார்த்த நல்லதம்பி

'என்னைய என்னா நினைச்சீங்க? சிங்கம் செய்யறத நான் செய்கிறேன். அந்த பொண்ண வந்து எடுக்க சொல்லுங்க' அப்படின்னாரு.
எப்புடி ??

Offline MysteRy

Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #13 on: January 23, 2013, 10:08:31 PM »


தனது வருமானத்தில் பெரும்பகுதியை ஆடம்பரமாக செலவு செய்யும் ஒரு மனிதனுக்கு வாய்த்த மனைவியோ கடும் சிக்கனக்காரி.

அந்த மனிதன் எதை செய்தாலும் சிறப்பாக செய்ய வேண்டும் என்று எண்ணுபவர்.தான் இறந்தபின் தன் கல்லறை கூட சிறப்பாக இருக்க வேண்டும் என்று விரும்பினார்.ஆனால் தான் இறந்து விட்டால் தன் மனைவி நன்கு செலவு செய்து தனது விருப்பப்படி கல்லறையை அமைக்க மாட்டார் என்று திடமாக நம்பினார்.எனவே அவர் உயிருடன் இருக்குபோதே ஒரு சிறந்த கட்டடக் கலைஞரை வைத்து நிறைய செலவு செய்து தனக்கென்று ஒரு கல்லறையை அமைத்தார்.அந்தக் கல்லறையில் ''அமைதியாக ஓய்வெடு ''என்றும் கல்லிலே அழகாக எழுத ஏற்பாடும் செய்தார்.சில மாதங்களில் அவர் இறந்து போனார்.அவர் உயில் எடுத்து வாசிக்கப்பட்டது.உயிலில் அவர்,''வாழ்க்கையை நான் நன்கு அனுபவித்தேன்.நான் எதுவும் சேமிக்கவில்லை. நான் யாருக்கும் எந்த சொத்தையும் விட்டுச் செல்லவில்லை.''என்று குறிப்பிட்டிருந்தார்.அதைக் கேட்டவுடன் அவர் மனைவிக்கு வந்ததே கோபம்!அவர் நேரே கல்லறைக்கு சென்றார்.''அமைதியாக ஓய்வெடு ''என்று எழுதப்பட்டிருந்ததை வாசித்தார்.

உடனே ஒரு ஆளை வரவழைத்து அந்த வாக்கியத்துக்கு முன்,''நான் வரும்வரை''என்பதனை சேர்த்து விட்டார். .

# டுமீல்.... டுமீல்....

Offline MysteRy

Re: ~ குட்டிக்கதை: ~
« Reply #14 on: January 23, 2013, 10:12:32 PM »


ஒரு கப்பலில் மேஜிக் நிபுணர் எப்போதும் நிகழ்ச்சி நடத்துவார்...
அவருடன் எப்போதும் ஒரு கிளி கூடவே இருக்கும்...

மேஜிக் நிகழ்ச்சியை அந்த கிளி கூடவே இருந்து பார்த்து நிகழ்ச்சிகளை பார்த்து அலுத்து போனது..

ஒரு அளவுக்கு பொருள்களை மறையவைத்து மீண்டும் கொண்டு வந்துவிடுவார்..அந்த மேஜிக் நிபுணர்..

.ஒரு எல்லைக்கு மீறி நிகழ்ச்சிகளை நடத்துவது இல்லை என அந்த கிளிக்கு ஆதங்கம்..

ஒரு நாள் இரவு நிகழ்ச்சி மேஜிக் நிபுணர் நடத்தி கொண்டிருந்த போது அந்த கப்பல் பாறையின் மீது மூழ்கிவிடுகிறது..
அந்த கிளியும் அந்த மேஜிக் நிபுணர் மட்டுமே தப்பிக்கிறார்கள்..

அந்த மேஜிக் நிபுணர் ஒரு தீவில் மயக்கத்துடன் ஒதுங்குகிறார்...மயக்க நிலையில் இருந்த நிபுணரை கிளி பறந்து வந்து அருகில் உட்கார்ந்து பார்துகொண்டேஇருக்கிறது...

மயக்கம் தெளிந்த மேஜிக் நிபுணரை பார்த்து கேள்வி கேட்கிறது..கிளி
''நான் தோல்வியை ஒப்புக்கொள்ளுகிறேன் ...கப்பலை எங்கே மறைத்து வைத்திருக்கிறாய் ''என்று கேட்டது..
நடந்த்து என்ன என்று தெரியாமல்..