-
நண்பர்களே .......இது விடுகதைக்கான விளையாட்டு பகுதி.
நம்முடைய இனையதளத்தில் எல்லாரும் விடுகதை சொல்லாம்.
இதில் விடுகதைகளை மட்டுமே சொல்ல வேண்டும்.
குறிப்பாக விடுகதைகள் தமிழ் மொழியில் தமிழ் எழுத்துக்களிலேயே இருக்க வேண்டும்.
ஒரு விடுகதைக்கான பதில் முழுமை பெற்ற பின்பு அடுத்த விடுகதையை தொடரலாம். அதாவது புதிர் தொடுக்கபட்டவரல் மற்றவர்களால் கொடுக்கபட்ட பதில் சரியானது என்று உறுதி படுதியபின்னர் .... அவரோ அன்றி அடுத்து வருபவரோ இந்த புதிர் விளையாட்டை தொடரலாம்
தொடரலாம் முதலில் நன் ஆரம்பிக்கிறேன்.......
நல்லதை அனுப்பி விட்டு கெட்டதை எடுத்து கொள்வான் அவன் யார் ?
-
வடிதட்டு
-
மங்கை சரியான பதில்
மூன்று கண்கள் இருக்கும் இவனால் பார்க்க முடியாது?
-
தேங்காய்
நான் நானாக இருப்பேன்நான் யாரென்று தெரிந்த
பிறகு நானாக இருக்க மாட்டேன்
நான் யார்?
-
நுங்கு
-
நான் நானாக இருப்பேன்நான் யாரென்று தெரிந்த
பிறகு நானாக இருக்க மாட்டேன்
நான் யார்?
புதிர்
-
நான் நானாக இருப்பேன்நான் யாரென்று தெரிந்த
பிறகு நானாக இருக்க மாட்டேன்
நான் யார்?
ரகசியம்
ஆதி காலத்தில் அப்பனை விட்டவள் ...
அறிவுள்ள கையில் வந்து அமர்ந்தவள் ...
வெட்டுக்கும் கட்டுக்கும் கட்டுப்பட்டவள்....
வேதனையில் மேனி கிழிந்தவள்
ஏற்றி மஞ்சளும் வைப்பாள்... பொட்டும் வைப்பாள்...
ஆனால், அவள் பெண்ணல்ல. அது என்ன....?
-
பனை ஓலை
ஆடாத அழகி ஆடென்று பெயர் பெற்றாள்...
அது என்ன?
-
ஆடு
என்னை நீங்கள் பார்க்கலாம் ஆனால் பிரிக்க முடியாது?அது என்ன
-
நிழல் :-*
நம்முள்ளே இருப்பான் , நாம் தூங்கும்போது மட்டும் விழிப்பான் அவன் யார்???
-
கண்கள்
நான் இருந்ததில்லை ஆனாலும் இருப்பவனாக இருப்பேன்.
என்னை யாரும் பார்த்ததில்லை பார்க்கும் முன் பழசாயிருப்பேன்
என்னை நம்பியே இந்த உலகமும் ,மக்களும் நல்லது நடக்குமென
நான் யார்?
-
நேரம்.
-
வாயிலே தோன்றி வாயிலே மறையும் பூ அது என்ன?
-
சிரிப்பு
-
மரத்துக்கு மரம் தாவுவான் குரங்கல்ல, பட்டை
போட்டிருப்பான் சாமி அல்ல, அவன் யார்?
-
அனில்
-
உருவத்தில் சிறியவன் உழைப்பில் பெரியவன் அவன் யார்?
-
5.எறும்பு
14. ஊரெல்லாம் சுற்றும் பாய். அது என்ன பாய்?
-
ரூபாய்
நாலு கட்டையில் உருவாகி நடுச்சுவரில் குடியிருப்பான். அவன் யார்?
-
ஜன்னல்
-
மழை காலத்தில் பிடிப்பான், அவன் யார்?
-
காளான்
-
அரைச்சாண் ராணி அவளுக்குள்ளே ஆயிரம் முத்துக்கள் அது என்ன
-
மாதுளை
-
ஏறினால் வழுக்கும் இனிய கனி தரும் காயைத் தின்றால் துவர்க்கும் அது என்ன?
-
vaazhai maram
-
கடிக்கத் தெரியாதவனுக்கு உடம்பெல்லாம் பற்கள். அது என்ன?
-
சீப்பு
-
ஓயாது இரையும் இயந்திரம் அல்ல உருண்டோடி வரும் பந்தும் அல்ல அது என்ன?
-
கடல் அலை
-
ஊரெல்லாம் சுற்றும் பாய். அது என்ன
-
ரூபாய்
-
பூ கொட்ட கொட்ட ஒன்றையும் தனியே பொறுக்க முடியவில்லை?
-
மழை
-
Thana மழை தவறான் பதில்
இதற்கு சரியான பதில் தேங்காய்பூ
இரவு வீட்டிற்கு வருவான், இரவு முழுவதும் இருப்பான் காலையில் சொல்லாமல் கொள்ளாமல் போய்விட்டிருப்பான்?
-
nila
-
பாவி நிலவு தவறான் பதில்
இதற்கு சரியான பதில் தூக்கம்
கல்லிலும் முள்ளிலும் பாதுகாப்பான், தண்ணீரில் தவறிவிடுவான் அது என்ன?
-
சனா தூக்கம் என்பது எப்போது வேணாலும் வரும் இரவுன்னு இல்ல நிலவு தான் சரியான விடை யோசிச்சி பார்
செருப்பு
-
ஊசி நுழையாத கிணற்றிலே ஒரு பிடி தண்ணீர். அது என்ன?
-
இளநீர் அல்லது தேங்காய்
-
ஊரெல்லாம் வம்பளப்பான் ஓர் அறையில் அடங்குவான் அவன் யார்?
-
8) 8) நாக்கு (Tongue) 8) 8)
-
எட்டி நின்று பார்ப்பான்; பெட்டியில் போட்டுக் கொள்வான். அவன் யார்?
-
8) 8) கேமரா (Camera) 8) 8)
-
ஐந்து ஊர்களுக்கு ஒரே மந்தை. அது என்ன?
-
8) 8) உள்ளங்கை (Palm) 8) 8)
-
தரையில் தாவுவான்; தண்ணீரில் மிதப்பான். அவன் யார்?
-
8) 8) தவளை 8) 8)
-
கடுகு மடிக்க இலை இல்லை, யானை படுக்க இடமுண்டு- அது என்ன?
-
8) 8) சவுக்கு மரம் 8) 8)
-
கறுப்புக் காகம் ஓடிப்போச்சு, வெள்ளை காகம் நிற்குது- அது உன்ன?
-
8) 8) உளுந்து 8) 8)
-
கரும் வயலில் யானைகள் மேய்ச்சல்-அது என்ன
-
தலை,பேன்கள்
2) கடுகு மடிக்க இலை இல்லை, யானை
படுக்க இடமுண்டு- அது என்ன?
-
8) 8) சவுக்கு மரம் 8) 8)
-
கட்டைக்காளை குட்டைக்கொம்பு- கிட்டப்
போனால் முட்ட வருது- அது என்ன?
-
8) 8) முள் 8) 8)
-
செய்தி வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே. அது என்ன?
-
8) 8) தொலைபேசி (Phone) 8) 8)
-
கல்லுக்கும் முள்ளுக்கும் அஞ்சாதவன், பள்ளநீரைக் கண்டு பதைபதைக்கிறான். அது என்ன?
-
8) 8) நெருப்பு (Fire) 8) 8)
-
கலர்ப்பூ கொண்டைக்காரி, காலையில் எழுப்பிவிடுவாள். அது என்ன?
-
சேவல்
-
கந்தல் துணி கட்டியவன், முத்துப் பிள்ளைகளைப் பெற்று மகிழ்ந்தான். அது என்ன?
-
8) 8) சோளக்கதிர் 8) 8)
-
மழையோடு வருகின்ற மஞ்சள் புறாவை வெட்டினால் ஒரு சொட்டு இரத்தம் வராது. அது என்ன?
-
ஈசல்
காலாறும் கப்பற்கால் கண்ணிரண்டும் கீரை விதை. அது என்ன?
-
8) 8) ஈ 8) 8)
இது பேசினால் கேட்கமுடியும். ஏனென்றால், இதற்குப் பெரிய வாயுள்ளது. ஆனால் இதனால் சுவாசிக்க முடியாது. அது என்ன?
-
கோவில் மணி
கடலிலே கலந்து, கரையிலே பிரிந்து, தெருவிலே திரியும் பூ எது?
-
8) 8) உப்பு 8) 8)
-
கட்டைக்காளை குட்டைக்கொம்பு- கிட்டப்போனால் முட்ட வருது- அது என்ன?
-
முள்
ஒன்றும் இரண்டும் சேரில் செல்வம்
மூன்றும் நான்கும் சேரில் குளம்
மூன்றும் ஐந்தும் ஒன்றும் சேரில் கங்கை
மூன்றும் ஆறும் சேரில் பெருமை
ஏழும் எட்டும் சேரில் பருகு அஃது என்ன?
-
8) 8) திருவாவினன்குடி 8) 8)
-
நடைக்கு உதாரணம் சொல்வர், குறுக்கே நடந்தால் முகம் சுளிப்பர்?
-
8) 8) பூனை 8) 8)
-
கழனியில் விளைந்த கதிரை, கத்தரி போட்டு வெட்டுவார்- அது என்ன?
-
8) 8) தலைமுடி (Hair) 8) 8)
-
காலில் தண்ணீர் குடிப்பான், தலையில் முட்டையிடுவான் அவன் யார்?
-
8) 8) தென்னைமரம் 8) 8)
-
சின்னத் தம்பிக்கு தொப்பியே வினை? அது என்ன?
-
8) 8) தீக்குச்சி 8) 8)
-
ஏணி, ஏணி மேலே கோணி, கோணி மேலே குண்டு,
குண்டு மேலே புல்லு, அது என்ன?
-
மனிதன்
-
ஊசி மூக்கன், உள்ளங்கை கட்டையன் , ஊருக்கு
செல்லப்பிள்ளை - அது என்ன?
-
8) 8) வெற்றிலை 8) 8)
-
செக்கச் சிவந்திருப்பாள், செட்டியார் மகள்
நாளைச்சந்தைக்கு வருவாள் நாத்தியார்
மகள்- அது என்ன?
-
8) 8) மிளகாய் 8) 8)
-
ஒன்றும் இரண்டும் சேரில் செல்வம்
மூன்றும் நான்கும் சேரில் குளம்
மூன்றும் ஐந்தும் ஒன்றும் சேரில் கங்கை
மூன்றும் ஆறும் சேரில் பெருமை
ஏழும் எட்டும் சேரில் பருகு அஃது என்ன?
-
திருவாவினன்குடி
-
பிறக்கும்போது வால் உண்டு இறக்கும்போது வால் இல்லை அது என்ன?
-
8) 8) தவளை 8) 8)
-
நூறு கிளிக்கு ஒரே வாய் - அது என்ன?
-
8) 8) வாழைப்பூ 8) 8)
-
சேலை ஊடுத்தியிருக்கும் பெண்ணல்ல; அதனுள்ளே முத்து இருக்கும்; சிப்பியல்ல, தாடியுண்டு கிழவனல்ல மக்களுக்கு உணவாகும். அது என்ன?
-
8) 8) மக்காச்சோளம் 8) 8)
-
மழையின்றி மாரியின்றி பச்சையாவதென்ன?
பூவின்றி காயின்றி பழம் பழுப்பதென்ன?
-
8) 8) கிளி 8) 8)
-
பயந்தால் விட மாட்டான். பழகினால் மறக்க மாட்டான்
அது என்ன?
-
8) 8) நாய் 8) 8)
-
பனி ஊரில் பிறந்த பழம், பார்க்கச் சிவப்புப் பழம், தினம் ஒன்று சாப்பிட்டால் மருத்துவரை விரட்டும் பழம். அது என்ன?
-
Apple
-
அண்ணனின் தயவால் ஆட்சி செய்து கொண்டிருக்கும் அழகான தம்பி அவன் யார்?
-
8) 8) சந்திரன் 8) 8)
-
ஆற்றோரம் பிறந்து அழகழகாய் விரிந்து சந்தைக்கு வந்து மாமன் வாங்கிபோனால் மங்கை நல்லாள் சிரிப்பாள் - அவள் யார் ?
-
தங்கம்
-
ஒன்று போனால் மற்றொன்றும் வாழாது?
-
8) 8) செருப்பு 8) 8)
-
இரவும் பகலும் ஓய்வில்லை. அவன் உறங்கிவிட்டால் எழுப்ப ஆளே இல்லை. அவன் யார்?
-
கடிகாரம்
-
ஒரு அரசை தன் மனைவிகளோட வெளியூர் போறாராம் ...அவருக்கு மனைவிகள் 9 பேர். 9 மனைவிகளோட பின்னாடியும் 9 குழந்தைங்க போகுதாம் ..அந்த குழந்தைங்க பின்னாடி அதோட செல்ல பிரியாணிகள் 9 நாய்கள் போகுதாம்,,,அந்த நாய்களுக்கு பின்னாடி அதோட குட்டிகள் 9 போகுது ..
அப்டினா ராஜா கூட மொத்தம் எதனை பேரு போறாங்க ?
-
45
-
thappu varun :(
-
theiryalaye shruthi
-
ஸ்ருதி விடுகதைக்கு பதில் சொல்லிவிட்டு
அடுத்த கேள்விய தொடரவும்
-
raja kooda yaarum pogala. ponavanga arasai kooda thaane poirukaanga.. 8) 8) :P :P
-
enuma entha game appdiye eruku shabba
-
18 peru
raaja kanakkula vara maataru
manaivi 9
pillaigal 9
naai ellam ahirinai .... so ethanai per endrathula varaathu
intha bathil thappunaa raaja kooda poorathu 9 manaivi matum nathu answera irukum ::)
-
நண்பர்களே விடுகதை பகுதியில்
ஸ்ருதி வராத காரணத்தினால்
அடுத்த கேள்வியை நாம் தொடலாம்
இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது
-
வெடி, மத்தாப்பு
இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. - அது என்ன?
-
சைக்கிள்
உடல் சிவப்பு, வாய் அகலம், உணவு காகிதம்- நான் யார்?
-
அஞ்சல்பெட்டி
இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?
-
Gotham intha qustion already ketachu.
ஆயிரம் பேர் அணி வகுத்தாலும் ஆரவாரம் இராது- அவர்கள் யார்?
-
எறும்பு
அண்ணனின் தயவால் ஆட்சி செய்து கொண்டிருக்கும் அழகான தம்பி அவன் யார்?
-
சந்திரன்
உடன்வருவான் உதவிக்கு
வரமாட்டான் அவன் யார்?
-
நிழல்
குண்டன் குழியில் விழுவான், குச்சியப்பன்
தூக்கி விடுவான் – அது என்ன?
-
பணியாரம்
சுற்றிச் சுற்றி வருவான், சுற்றிலும் இருப்பான். ஆனால், இவனை
உணராலாமே தவிர பார்க்க முடியாது. – அது என்ன?
-
காற்று
மேலே வெட்டவெளி, கீழே பொட்டல் வெளி, நடுவில் தண்ணீர்
பந்தல், அது என்ன?
-
வானம், பூமி, மேகம்
வெட்ட வெட்ட வருவான், ஆனால் வெட்டினால் இரத்தம் வராது இவனுக்கு.- அது என்ன?
-
நகம்
தண்ணீரில் கலக்க மாட்டான். விளக்கை எரிய வைப்பான் – அது என்ன?
-
மண்ணெண்ணெய்
அங்காடி கொள்ளப்போய் யானை கண்டேன்
அணிநகர் மன்றிலே சேனை கண்டேன்
கொங்காரும் முத்தரசர் தம்மைக் கண்டேன்
கொடித்தேரும் பரிமாவும் கூடக் கண்டேன்
அங்கிருவர் எதிர்நின்று வெட்டக் கண்டேன்
அதுகண்டு யான் தலையைத் தாழ்த்த லுற்றேன் —–நான் யார்?
-
சதுரங்கம்
வால் உள்ள பையன், காற்றில் பறக்கிறான்
- அது என்ன?
-
பட்டம்
ஒரு கிணற்றில் ஒரே தவளை – அது என்ன?
-
நாக்கு
குலை தள்ளிப்பழம் தருவேன், குழந்தைகளுக்காக
உயிர் விடுவேன் – நான் யார்?
-
8) 8) வாழை 8) 8)
-
ஆனை விரும்பும், சேனை விரும்பும், அடித்தால்
வலிக்கும், கடித்தால் சுவைக்கும் – அது என்ன?
-
கரும்பு
பச்சைத் தோல் கொண்ட மாமாவுக்கு பஞ்சுபோன்ற சதை.
அதற்குள் கடினமான எலும்பு. உடைத்தால் உள்ளமெல்லாம்
வெள்ளை நிறம். அது என்ன?
-
தேங்காய்
கையுண்டு காலில்லை, கழுத்து உண்டு தலை இல்லை, உடல் உண்டு உயிர் இல்லை அது என்ன?
-
சட்டை
அண்ணனின் தயவால்
ஆட்சி செய்து கொண்டிருக்கும் அழகான தம்பி அவன் யார்?
-
8) 8) சந்திரன் 8) 8)
-
பழகினால் மறக்காதவன் பயந்தோரை விடாதவன் அவன்
யார்?
-
8) 8) நாய் 8) 8)
-
.அழுவேன், சிரிப்பேன் அனைத்தும் செய்வேன் நான் யார்?
-
முகம் பார்க்கும் கண்ணாடி
முத்து வீட்டுக்குள்ளே தட்டுப் பலகை அது என்ன?
-
நாக்கு
கண்ணுக்குத் தெரியாது. ஆனால் உயிருக்கு உடைமை இது. யார் இது
-
காற்று
-
மண்ணுக்குள்ளே கிடப்பான் மங்கலகரமானவன் அவன் யார்???
-
மஞ்சள்
அள்ள அள்ளக் குறையாது; ஆனால் குடிக்க உதவாது. அது என்ன?
-
கடல் நீர்
-
நடைக்கு அஞ்சாது, ஆனால் தண்ணீருக்கு அஞ்சும்- அது என்ன?
-
செருப்பு
என்னை சத்தமாக அழைக்கும்போது காணாமல் போயிருப்பேன்
நான் யார்?
-
மவுனம்
நொடியில் ஒருமுறை வருவேன்.
வாரத்தில் இரண்டு முறைவருவேன்
மாதத்தில் வராமலே இருப்பேன்
நான் யார்?
-
E என்ற ஆங்கில எழுத்து ;D ;D ;D
உலகத்தை இணைப்பவன்.என்னை நல்லதிற்கும் பயன்படுத்துவர், தீயதிற்கும் பயன்படுத்துவர்....
நான் யார்??
-
மதம்
-
வெள்ளை மாளிகையில் மஞ்சள் புதையல், அது என்ன?
-
முட்டை
-
செண்பகவல்லி அம்மனும் பூவண்ண நாதரும் சிரித்து மகிழ்ந்து
தொடுத்த பூவைச் சிக்கில்லாமல்”அவிழ்த்தவருக்குச் சிக்கந்தா
மலை சீதனம்…அது என்ன?
-
தூக்கணாங்குருவிக் கூடு
அம்பலத்தில் ஆடும் அழகுக் கண்ணனுக்கு
அங்கமெல்லாம் தங்கக் கண்ணாடி அது என்ன?
-
மயில்
வெள்ளப் பிள்ளையார் கோவிலுக்கு விளக்கு வைக்க முடியாது
கறுத்தப்பிள்ளையார் கோவிலில் கால்வைக்க முடியாது ???
-
கண்
அக்கா வீட்டுக்குத் தங்கை போவாள்.. ஆனால், தங்கை வீட்டுக்கு
அக்கா வரமுடியாது!அது என்ன?
-
மேலுதடு ,, கீழுதடு
காம்பு இல்லாத வட்ட இலை..
-
அப்பளம்
யானைக்குப் பிடிக்கும்
அடித்தால் வலிக்கும்
வாய் வைத்துக் கடித்தால்
நுனி கசக்கும்
அடி இனிக்கும் அது என்ன?
-
கரும்பு
-
சிவப்பு ரோஜா மலர்ந்தால் வெள்ளை மலர்கள் தெரியும் அது என்ன?
-
பற்கள்!
சிவப்பு ரோஜா= உதடு!
வெள்ளை மலர்கள்= பற்கள்!
-
முதல் இரண்டை இழந்தால் ஒளி இல்லை. கடை இரண்டை ஐந்தறிவு ஜீவனுக்கு கட்டுவது யார்? இரண்டும் மூன்றும் திரும்பினால் கடைசியில் நாமும் அதுவே. முதலும் கடையும் சேர்ந்தால் கை இழந்த பெண். மொத்தத்தில் அழகிய பெயராகவும் இருக்கும் நான் யார்?
-
கை விரல்கள்
-
மரத்துக்கு மரம் தாவுவான் குரங்கல்ல, பட்டை
போட்டிருப்பான் சாமி அல்ல, அவன் யார்?
அணில்
-
ஓடையில் ஓடாத நீர் , ஓருவரும் குடிக்காத நீர்?
-
கண்ணீர்
-
ஒரு சாண் குச்சிக்குள்ளே , ஒளிந்துருக்கான் கருப்பு மனிதன் ?
-
எழுது கோல் ( பென்சில் )
-
[highlight-text]ஆகாரமாக எதையும் தந்தால் சாப்பிடுவேன், ஆனால் நீரை குடிக்க தந்தால் இறந்து விடுவேன், நான் யார்?[/highlight-text][/size]
-
[highlight-text]தீ
seriya terile...chinna guess [/ :-\ :Dcolor][/highlight-text]
-
[highlight-text]தீ என்பது சரி.... ;D ;D ;D
முட்டையிடும், குஞ்சு பொரிக்காது. கூட்டில் குடியிருக்கும், கூடு கட்டத் தெரியாது. குரலில் இனிமையுண்டு, சங்கீதம் தெரியாது! – அது என்ன?[/highlight-text][/color]
-
மயில் :D :D same just geussing
-
தலையை சீவினால் தாகம் தீர்ப்பான் .அவன் யார்?
-
இளநீர்
பல்லிருந்தும் சிரிக்கமாட்டான் ,கண்ணிருந்தும் பார்க்கமாட்டேன் அவன் யார் ?
-
seeeppu [/font] just geussing
-
சரி தான்
ராஜா ராணி உண்டு நாடல்ல, இலைகளும் உண்டு
ஆனால் மரம் அல்ல அது என்ன?
-
வாழைமரத்தில் :-\ :-\ :-\
ஆகாரமாக எதையும் தந்தால் சாப்பிடுவேன், ஆனால் நீரை குடிக்க தந்தால் இறந்து விடுவேன், நான் யார்?
-
தீ ...நெருப்புடா நெருங்குட ..பாப்போம்
தண்ணிய மட்டும் ஊத்திடாதடா
செத்துருவேன் ....
சரியா விடை ??
-
ஆமா சரியான விடை.... ;D ;D ;D
எண்ணெய் வேண்டா விளக்கு; எடுப்பான் கை விளக்கு. அது என்ன?
-
light :Dlight :Dமின்விளக்கு
-
:o :o இல்லை
எண்ணெய் வேண்டா விளக்கு; எடுப்பான் கை விளக்கு. அது என்ன?
-
torchlight :( sediya ?
-
;D ;D இல்லை
எண்ணெய் வேண்டா விளக்கு; எடுப்பான் கை விளக்கு. அது என்ன?
-
:o :osuriyano..ilaye kaile eduka mudiyathe :'( :'(clue plj
-
;D (மெ ) எழுத்தில் அரபிக்கபடும்...
எண்ணெய் வேண்டா விளக்கு; எடுப்பான் கை விளக்கு. அது என்ன?
-
:D :Dkandupidichitene ...
yes yes...
meluguvarthiமெழுகுவர்த்தி
-
correct
-
அப்பன் சொரியன்
அம்மா சடச்சி
புள்ளையோ சக்கரக்கட்டி அது என்ன...?
-
palaapaham :D
-
இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. - அது என்ன?
-
மிதிவண்டி
-
கடல் நீரில் வளர்ந்து , மழை நீரில் மடிவது என்ன ?
-
உப்பு
-
megam
-
corect > உப்பு
[highlight-text]next >[/highlight-text]இரவு வீட்டிற்கு வருவான், இரவு முழுவதும் இருப்பான் காலையில் சொல்லாமல் கொள்ளாமல் போய்விட்டிருப்பான்- அவன் யார் ?[/size]
-
NILA
-
அணில்
[highlight-text]உயிரில்லாதவனுக்கு உடம்பெல்லாம் நரம்பு அது என்ன ?[/highlight-text]
-
அணிலுக்கு உயிரில்லையா ?
-
corect na....adhu maripoachi na sorry
மேலிலும் துவாரம், கீழிழும் துவாரம், வலதிலும் துவாரம், இடதிலும் துவாரம், உள்ளிலும் துவாரம் வெளியிலும் துவாரம் இருந்தும் நீரை என்னுள் சேமித்து வைப்பேன், நான் யார்?
-
SPONGE :D :D
-
முத்து வீட்டுக்குள்ளே தட்டுப் பலகை – அது என்ன ?
-
நாக்கு
-
இதயம் போல் துடிதுடிக்கும், இரவு பகல் விழித்திருக்கும். அது என்ன?
-
கடிகாரம்
NEXT : எட்டாத வெண்ணிலா எங்க வீட்டு அடுப்பிலே காயுது. அது என்ன?
-
எட்டாத வெண்ணிலா எங்க வீட்டு அடுப்பிலே காயுது. அது என்ன?
;D தோசை
NEXT > முத்து வீட்டுக்குள்ளே தட்டுப் பலகை. அது என்ன?
-
:D நாக்கு
- இலையைச் சுருட்டும் மரம்; ஏறினால் வழுக்கும் மரம். காயோ துவர்க்கும் மரம்; கனியோ இனிக்கும் மரம். அது என்ன?
-
வாழை மரம்
முதல் இரண்டை இழந்தால் ஒளி இல்லை. கடை இரண்டை ஐந்தறிவு ஜீவனுக்கு கட்டுவது யார்? இரண்டும் மூன்றும் திரும்பினால் கடைசியில் நாமும் அதுவே. மொத்தத்தில் அழகிய பெயராகவும் இருக்கும் நான் யார்?
-
- கண்மணி
அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி, பாதிநாள் குறைவாள், பாதிநாள் வளர்வாள் அது என்ன?
-
-நிலா-
ஆயிரம் கண்ணுடைய தேவி ஆற்றிலே மூழ்கி வெயிலிலே காய்கிறாள் அவள் யார்?
-
சூரியன்....
பறந்து செல்லும் ஆனால் பறவையும் அல்ல, பால் கொடுக்கும் ஆனால் விலங்கும் அல்ல. அது எது?
-
[highlight-text]வௌவால் [/highlight-text]
விளக்கை சுமந்தபடி விடிய விடிய பறப்பான்
யார் அவன் ?
-
மின்மினிப்பூச்சி
சங்கரன் கோவில் டப்பா தாயும் மகளும் தேய்ப்பா – அவை என்ன?
-
;D [highlight-text]அம்மி குழவி[/highlight-text]
கோணல் எத்தனை இருந்தாலும் குணமும் குறியும் மாறாது – அது என்ன?[/size][/color]
-
;Dகரும்பு
காலில்லாதவன் வளைவான், நெளிவான் காடு மேடெல்லாம் அலைவான் அவன் யார்?
-
பாம்பு :D :D
வெளியே உள்ளதை எறிந்து உள்ளே உள்ளதை சமைத்தான்
பின்
வெளியே உள்ளதை சாப்பிட்டுவிட்டு உள்ளே உளளதை எறிந்தான்
அது என்ன ?
-
[highlight-text]சோளம் [/highlight-text]
உயிர் இல்லாத நீதிபதியிடம் ஒழுங்கான நியாயம்- அது என்ன?[/size][/color]
-
தராசு
ஆயிரம் பேர் அணி வகுத்தாலும் ஆரவாரம் இராது" அவர்கள் யார்?
-
[highlight-text]எறும்புக் கூட்டம்[/highlight-text]
எத்தனை தரம் சுற்றினாலும்
தலை சுற்றாது (thn)
அது என்ன?!!? [/size][/color]
-
[highlight-text]மின்விசிறி[/highlight-text]
யாரும் செய்யாதத கதவுவு தானே திறக்கும் தானே மூடும் அது என்ன ?[/size][/color][/color]
-
[highlight-text]கண் இமை[/highlight-text] :D :D
பல் துலக்காதவனுக்கு உடம்பெல்லாம் பற்கள் அவன் யார் ?! (thn)[/size]
-
[highlight-text]சிப்பு[/highlight-text]
மண்ணுக்குள் கிடப்பவன் மங்களகரமானவன் அவன் யார்?[/color][/color]
-
மஞ்சள்
இதயம் போல் துடிதுடிக்கும், இரவு பகல் விழித்திருக்கும். அது என்ன?
-
[highlight-text]கடிகாரம்[/highlight-text]
இங்கிருந்து பார்த்தால் இரும்புக் குண்டு; எடுத்துப் பார்த்தால் இனிய பழம். அது என்ன?[/size][/color]
-
விளாம்பழம்
ஆயிரம் தச்சர் கூடி கட்டிய அந்த அழகான மண்டபம் , ஒருவர் கண்பட்டு உடைந்ததாம் அந்த மண்டபம். அது என்ன?
-
[highlight-text]தேன் கூடு[/highlight-text]
அள்ளவும் முடியாது, கிள்ளவும் முடியாது. அது என்ன?[/size][/color]
-
காற்று
படபடக்கும்,பளபளக்கும் மனதுக்குள் இடம் பிடிக்கும் அது என்ன?
-
[highlight-text]பட்டாசு[/highlight-text] :D :D :D
தாகம் போக்கும் தண்ணீர் இல்லை
களைப்பை போகும் மருந்தும் இல்லை
சண்டைக்கு செல்லும் இது ஆயுதமும் இல்லை
இது என்ன ?
-
இளநீர்
பிறந்தது முதல் வயிற்றாலே போகிறது. அது என்ன?
-
இளநீர் ??????????
-
;D ;D ;D ;D adichi vitten joker anna ans enna :'(
-
[highlight-text]சோடா (பாட்டில் )[/highlight-text]
அடிச்சிவிட்டீங்களா நல்ல வருவீங்கம்மா நீங்க
-
;D [highlight-text]பாம்பு[/highlight-text]
நடைக்கு உவமை, நளனக்கு தூதுவன் அவன் யார்?[/size][/color]
-
[highlight-text]அன்னம் [/highlight-text]
காகிதத்தை கண்டால் கண்ணீர் வரும் அது யார் ? :D :D[/size][/color]
-
[highlight-text]பேனா [/highlight-text] ;D ;D ;D
ஐந்து அடுக்கு நான்கு இடுக்கு அது என்ன?[/size][/color]
-
ஐந்து அடுக்கு நான்கு இடுக்கு அது என்ன? ;)
விரல்கள்
தலை மட்டும் கொண்ட சிறகில்லாத பறவை தேசமெல்லாம் சுத்தும்?
-
;D ;D ;D ;D [highlight-text]தபால் தலை[/highlight-text]
சின்னத் தம்பிக்கு தொப்பியே வினை? அது என்ன?[/size][/color]
-
தீக்குச்சி :D .......
ஊரெல்லாம் சுத்துவான், ஆனால் வீட்டிற்குள் வரமாட்டான் அவன் யார்? ;)
-
செருப்பு
புதிய விடுகதை எனக்கு தெரியல
என்னை மன்னித்து யாராவது தொடருங்கள்
-
ஊரெல்லாமல் ஒரே விளக்கு. அதற்கு ஒரு நாள் ஒய்வு அது என்ன? ;)
-
Answer : நிலா
Que:
கூடவே வருவான். ஆனால் பேசமாட்டான். யார் அவன்...????
-
நிழல் :P
வந்தால் கொண்டாட்டம், வராவிட்டால் திண்டாட்டம்? ;)
-
மழை
-
ஆலமரம் தூங்க அவனியெல்லாம் தூங்க, சீரங்கம் தூங்க திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை அவன் யார்?
-
idhayam
-
Clock
-
bree baby n Achilles thavarana vidai...
-
மூச்சு (Muchu)
-
அண்டை வீட்டில் குடியிருப்போம் அக்காள் தங்கை நாங்கள்;
கிட்டகிட்ட இருந்தாலும் தொட்டுக் கொள்ள மாட்டோம் - அது என்ன?
-
kankal
-
correct mogini 8)
next-
பறிக்கப் பறிக்க பெரிதாகும் அது என்ன?
-
பள்ளம்
வெள்ளம் வெள்ளமாக கறுப்பன் கண்ணீர் விட்டானாம்
அவன் யார்?
-
மழை மேகம்
மீன் பிடிக்க தெரியாதாம் ஆனால் வலை மட்டும் பின்னுவானாம் அவன் யார்?
-
சிலந்தி
எட்டாத ராணி இரவில் வருவாள். பகலில் மறைவாள் அவள் யார் ?
-
நிலா
எதைக் கொடுத்தாலும் சாப்பிடுவேன். தண்ணீர் குடித்தால் இறந்துவிடுவேன். நான் யார்?
-
எதைக் கொடுத்தாலும் சாப்பிடுவேன். தண்ணீர் குடித்தால் இறந்துவிடுவேன். நான் யார்?
விடை-நெருப்பு
புதியது-
பாஸ்போர்ட்டும் வேண்டாம், விசாவும் வேண்டாம்,
உலகத்தையே சுத்தி வரலாம். அது என்ன?
-
கனவுல தான் சுத்தி வர முடியும் :o விடை: கனவு
அடுத்து: நடக்க முடியாது: ஆனால் நகராமல் இருக்காது. அது என்ன?
-
நடக்க முடியாது: ஆனால் நகராமல் இருக்காது. அது என்ன? கடிகார முட்கள் ;D ;D ;D ;D
கோணலாக இருந்தாலும் குணமும் சுவையும் குன்றாது. அது என்ன?
-
கோணலாக இருந்தாலும் குணமும் சுவையும் குன்றாது. அது என்ன?
விடை-கரும்பு
புதியது- ஈரேழு பதினுலு இறகு மயிலா
முந்நான்கு பன்னிரண்டு முத்து மயிலாட,
வராத பெண்களெல்லாம் வந்து விளையாட - அது என்ன?
-
ஈரேழு பதினுலு இறகு மயிலா
முந்நான்கு பன்னிரண்டு முத்து மயிலாட,
வராத பெண்களெல்லாம் வந்து விளையாட - அது என்ன? ----பல்லாங்குழி
மேலிலும் துவாரம், கீழிழும் துவாரம், வலதிலும் துவாரம், இடதிலும் துவாரம், உள்ளிலும் துவாரம் வெளியிலும் துவாரம் இருந்தும் நீரை என்னுள் சேமித்து வைப்பேன், நான் யார்
-
மேலிலும் துவாரம், கீழிழும் துவாரம், வலதிலும் துவாரம், இடதிலும் துவாரம், உள்ளிலும் துவாரம் வெளியிலும் துவாரம் இருந்தும் நீரை என்னுள் சேமித்து வைப்பேன், நான் யார்
விடை: பஞ்சு
அடுத்து:
இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. – அது என்ன?
-
இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. – அது என்ன? - மிதி வண்டி
அடுத்து:
காட்டிலே பச்சை; கடையிலே கருப்பு; வீட்டிலே சிவப்பு; அது என்ன?
-
காட்டிலே பச்சை; கடையிலே கருப்பு; வீட்டிலே சிவப்பு; அது என்ன? -மரம்,கரி, நெருப்பு..
மரத்தின் மேலே தொங்குவது மலைப் பாம்பல்ல அது என்ன?
-
விடை: விழுது
அடுத்து,
ஏரியில் இல்லாத நீர்,தாகத்திற்கு உதவாத நீர், தண்ணீர் அல்ல அது என்ன?
-
ஏரியில் இல்லாத நீர்,தாகத்திற்கு உதவாத நீர், தண்ணீர் அல்ல அது என்ன?
விடை:கண்ணீர்
அடுத்து,
எல்லா வித்தையும் தெரிந்தவன். தெரியாதவன் போல் பாவனை செய்கிறான். அவன் யார்?
-
எல்லா வித்தையும் தெரிந்தவன். தெரியாதவன் போல் பாவனை செய்கிறான். அவன் யார்?
விடை:கோமாளி
அடுத்து,
ஆயிரம் பேர் அணி வகுத்தாலும் ஆரவாரம் இராது" அவர்கள் யார்?
-
விடை: எறும்புக் கூட்டம்
அடுத்து,
உயிரில்லாதவனுக்கு உடம்பெல்லாம் நரம்பு அது என்ன ?
-
- பாய்
அடுத்து - வாயைப் பிளந்து வீதியோரங்களில் நிற்பான் அவன் யார் ?
-
விடை: தபால் பெட்டி
அடுத்து,
ஒற்றை கிண்ணத்துக்குள் இரட்டைத் தைலங்கள் அவை எவை?
-
-முட்டை
வெள்ளத்தில் போகாது, வெந்தணலில் வேகாது. கொள்ளையடிக்க முடியாது, கொடுத்தாலும் குறையாது. அது என்ன?
-
கல்வி
நாலு மூளைக்கிணறு, நாகரத்தினக்கிணறு, எட்டிப் பார்த்தால் சொட்டுத தண்ணீர் இல்லை அது என்ன?
-
அச்சு வெல்லம்
குண்டு குள்ளனுக்கு குடுமி நிமிர்ந்தே இருக்கும் அவன் யார்?
-
குண்டு குள்ளனுக்கு குடுமி நிமிர்ந்தே இருக்கும் அவன் யார்? ---> கத்திரிக்காய்
Next: பொட்டுப்போல் இலை இருக்கும், பொரிபோல் பூப் பூக்கும், தின்னக்காய் காய்க்கும்,
தின்னாப் பழம் பழுக்கும் அது என்ன?
-
- முருங்கைமரம்
அடுத்து-கண்ணில் தென்படுவான், கையில் பிடிபட மாட்டான். அவன் யார்?
-
விடை : புகை
அடுத்து -
ஆகாயத்தில் பறக்கும், அக்கம் பக்கம் போகாது?
-
கொடி
அடுத்து -அண்டமென்ற பெயரும் உண்டு, அடை காத்தால் குஞ்சும் உண்டு?
-
முட்டை
பூமியிலே பிறக்கும், புகையாய்ப் போகும். அது என்ன?
-
பெட்ரோல்
வழியெல்லாம் கூடவே வருவான்; வீட்டுக்குள் மட்டும் வரமாட்டான். அவன் யார்?
-
காலணிகள்
ஆயிரம் அறைகள் கொண்ட பிரம்மாண்டமான மிட்டாய் கடை அது என்ன?
-
தேன்கூடு
யாரும் ஏற முடியாத மரம்; கிளைகள் இல்லாத மரம். அது என்ன மரம்?
-
வாழை மரம்
ஒய்வு எடுக்காமல் இயங்கும்..! ஆனால் ஒய்வு எடுத்தால் மறுபடியும் இயக்காது அது என்ன.?
-
கடிகாரம்
அடுத்து..
தோலை உரித்தால் அழ மாட்டான். தோல் உரித்தவனை அழ வைப்பான்.அவன் யார்??
-
வெங்காயம்
கடிகாரம் - தப்பு
ஒய்வு எடுக்காமல் இயங்கும்..! ஆனால் ஒய்வு எடுத்தால் மறுபடியும் இயக்காது அது என்ன.?
-
வெங்காயம்
கடிகாரம் - தப்பு
ஒய்வு எடுக்காமல் இயங்கும்..! ஆனால் ஒய்வு எடுத்தால் மறுபடியும் இயக்காது அது என்ன.?
இதயம்??
-
சரியான விடை 👏👏
சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது அது என்ன?
-
Ishaa sis eyes?
-
சரியான விடை👏👏👏
-
எப்போதும் மழையில் நனைவான் ஆனால் ஜுரம் வராது. எப்போதும் வெயிலில் காய்வான் ஆனால் ஏதும் ஆகாது. அவன் யார்?
-
குடை
-
👏👏👏
நடந்தவன் நின்றான் கத்தியை எடுத்து தலையைச் சீவினேன் மறுபடியும் நடந்தான் அவன் யார்?
-
✏️
-
👏👏👏
ஓடையில் ஓடாத நீர், ஒருவரும் குடிக்காத நீர். அது என்ன?
-
கண்ணீர்😭
-
👏👏👏
பேசாத வரை நான் இருப்பேன். பேசினால் நான் உடைந்துவிடுவேன். நான் யார்?
-
Mounam 🤐
-
அமைதி
-
@Madhu& @Vaseegaran சரியான விடை👏👏👏
உங்களுக்கு சொந்தமானத ஒன்று ஆனால் உங்களை விட மற்றவர்களே அதிகம் உபயோகிப்பார்கள்???
-
விடை: பெயர்
மரத்தின் மேலே தொங்குவது மலைப் பாம்பல்ல அது என்ன?
-
விடை: விழுது
-
கொதிக்கும் கிணற்றில் குதித்துக் குண்டாகி வருவான். அவன் யார்?
-
Idly ;)
-
Poori 🤔🤔🤔
-
vethu ma Good try ;)
Jocky 🎉crct Ans 👏
அடுத்து: சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது அது என்ன?
-
@rithika- Dop😉
Answer- Eyes
-
bery bery good Jocky
Crct Ans....🎉👏
அடுத்து: ஓயாமல் இரையும் இயந்திரமல்ல, உருண்டோடி வரும்
பந்தும் அல்ல அது என்ன?
-
@RithiKa clock'a?
-
No baby
-
Kadal Alai🌅
-
மூன்று பெண்களுக்கும் ஒரே முகம். மூத்தப் பெண் ஆற்றிலே, நடுப் பெண் காட்டிலே, கடைசிப் பெண் வீட்டிலே! அவர்கள் யார்?
-
முதலை, உடும்பு, பல்லி.. மூணு மூஞ்சியும் ஒரே மாதிரி தான் இருக்கும். முதலை ஆத்துல இருக்கும், உடும்பு காட்டுல இருக்கும் பல்லி வீட்டுல இருக்கும் 🐊🦎
-
yes sis Correct
NEXT :
எங்க அக்கா சிவப்பு, குளித்தால் கருப்பு அது என்ன ?
-
அடுப்புக்கரி
NEXT 🌹ஒரு கிணற்றில் ஓரே தவளை! - அது என்ன? 🌹
-
answer: நாக்கு
Next: பட்டையைப் பட்டையை நீக்கி,
பதினாறு பட்டையை நீக்கி,
முத்துப் பட்டையை நீக்கி,
முன்னே வாராள் சீமாட்டி
-
Answer -வாழைப் பூ
NEXT 🌹 அம்பலத்தில் ஆடுகிற அழகுப் பொண்ணுக்கு
அங்கமெல்லாம் தங்கக் கண்ணாடி🌹
-
Answer: Mayil
NEXT: வெள்ளை நிறத்துக் கள்ளச் சாமியார்,
கரையில் நின்று கடுந்தவம் செய்கிறார்.
-
Answer -கொக்கு
NEXT 🌹பட்டு ரோஜா மலர்ந்தது;
கிட்டப் போனால் சுட்டது🌹
-
நெருப்பு
-
What are the two major weapons used by Gandhi?
Note :
If the person forgot to place a question , the next person just put another question and continue the game🙏
-
காந்தி சத்தியம் மற்றும் அகிம்சை ஆகிய இரண்டு ஆயுதங்களால் ஆங்கிலேயர்களின் வலிமையை எதிர்த்துப் போராடினார்
பூ பூக்கும், காய் காய்க்கும், ஆனால் பழம் பழக்காது அது என்ன
-
Hmmmm... Thengai or murunggai kaai 😅
Next : Poo poopathu kannuku teriyum aanal kaai kaipathu kannuku teriyathu
-
Vethanisha sis தேங்காய் சரியா சொல்லிட்டிங்க
பூ பூப்பது கண்ணுக்குத் தெரியும். காய் காய்ப்பது கண்ணுக்குத் தெரியாது. இது என்ன?
விடை. வேர்க்கடலை
அடுத்த விடுகதை
மீன் பிடிக்கத் தெரியாதாம், ஆனால் வலை பின்னுவானாம், இவன் யார்?
-
சிலந்தி
NEXT 🌹கருப்பு நிறமுடையவன், கபடம் அதிகம் கொண்டவன், கூவி அழைத்தால் வந்திடுவான், கூட்டம் சேர்த்தும் வந்திடுவான் – அவன் யார்?
-
Answer : காகம்
Next: வெளியே உள்ளதை எறிந்து உள்ளே உள்ளதை சமைத்தான். பின் வெளியே உள்ளதை சாப்பிட்டு விட்டு உள்ளே உள்ளதை எறிந்தான் அது என்ன?
-
சோளம்
அடுத்த விடுகதை
விடிய விடிய பூந்தோட்டம். விடிந்து பார்த்தால்
வெறுந்தோட்டம். அது என்ன?
-
Answer -நட்சத்திரங்கள்
NEXT 🌹அடித்தால் விலகாது அணைத்தால் நிற்காது அது என்ன?🌹
-
தண்ணீர்
அடுத்த விடுகதை. கேடயமுள்ள வீரனுக்கு வாள் இல்லை...
-
ஆமை
NEXT 🌹ஊசி போல் இருப்பான், ஊரையே எரிப்பான் அவன் யார்? 🌹
-
தீக்குச்சி
அடுத்த விடுகதை. வெட்டிக்கொள்வான் ஆனாலும் ஒட்டிக்கொள்வான் அவன் யார்?
-
Answer -கத்தரிக்கோல்
NEXT 🌹ஆயிரம் தச்சர் கூடி அழகான மண்டபம் கட்டி ஒருவன் கண்பட்டு உடைந்ததாம் மண்டபம் அது என்ன?🌹
-
Answer - தேன்கூடு
யாரும் செய்யாத கதவு தானே திறக்கும் தானே மூடும். அது என்ன?
-
கண் இமை
அடுத்த விடுகதை. ராகத்துடன் பாடி வருவார், ராத்தூக்கம் கெடுப்பார். யார் இவர்?
-
Ans-கொசு
Next 🌹உடம்பில்லா ஒருவன் பத்து சட்டை அணீந்திருப்பான்? அவன் யார்?🌹
-
வெங்காயம்
Aduthu
வெள்ளை ஆடை உடுத்திய மஞ்சள் மகாராணி -அவள் யார்?
-
Ans-முட்டை
NEXT 🌹மரத்தின் மேலே தொங்குவது மலைப் பாம்பல்ல அது என்ன?🌹
-
விழுது
அடுத்த விடுகதை
🍨 வெள்ளை ராஜாவுக்குக் கருப்புச் சட்டை...🍦
-
உளுந்து
இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. அது என்ன?
-
சைக்கிள்
அடுத்த விடுகதை
🪷 உயிர் இல்லாத நீதிபதியிடம் ஒழுங்கான நியாயம்- அது என்ன? 🪷
-
தராசு
அடுத்த புதிர்
அம்மா சந்தைக்கு போகும் முன்னே மகள் சந்தைக்கு போய்விடுவாள் அவை என்ன
விடை: வாழை இலை மற்றும் வாழை குழை
-
சூரியன் மற்றும் சந்திரன்
அடுத்த புதிர்
அச்சு இல்லாத சக்கரம்.. அழகு காட்டும் சக்கரம்..!
இது என்ன ?
-
வளையல்
அடுத்த விடுகதை.
🪷 உடம்பெல்லாம் பச்சை புடவை சுற்றியவள்
மூக்குக்கு மட்டும் பவளக்கல் மூக்குத்தி
போட்டவளாம், – அவள் யார்? 🪷
-
கிளி
NEXT 🌹வெளியே உள்ளதை எறிந்து உள்ளே உள்ளதை சமைத்தான். பின் வெளியே உள்ளதை சாப்பிட்டு விட்டு உள்ளே உள்ளதை எறிந்தான் அது என்ன?🌹
-
சோளம்
அடுத்த விடுகதை
🪷 விடிய விடிய பூந்தோட்டம். விடிந்து பார்த்தால்
வெறுந்தோட்டம். அது என்ன? 🪷
-
நட்சத்திரங்கள்
🌹கண் சிமிட்டும் ஒன்று மணி அடிக்கும் மற்றொன்று:
கண்ணிர் வடிக்கும் இன்னொன்று.🌹
-
மின்னல், இடி, மழை
அடுத்த விடுகதை
🪷 வெளிச்சத்துடன் வருவான். இருட்டில் வரமாட்டான். அவன் யார்? 🪷
-
ans : நிழல்
அள்ள அள்ளக் குறையாது; ஆனால் குடிக்க உதவாது. அது என்ன?
-
அள்ள அள்ளக் குறையாது ஆனால் குடிக்க உதவாது அது என்ன ?
கடல்நீர்
அடுத்த விடுகதை
🪷மழைக்கேற்ற குடைதான், ஆனால் ஆள் நிற்கத்தான் இடமில்லை.. 🪷
-
கடல்நீர்
NEXT 🌹வெள்ளை ஆளுக்கு கறுப்புத் தலைப்பாகை. அது என்ன ?🌹
-
தீக்குச்சி
மீன் பிடிக்கத் தெரியாதாம், ஆனால் வலை
பின்னுவானாம்... இவன் யார்
-
சிலந்தி
அடுத்த புதிர் :
அடைக்கும் வடிவத்தை ஏற்பேன்.
கோபம் வந்தால் அனைத்தின் வடிவத்தையும்
சிதைத்து விடுவேன்.
-
நீர்
அடுத்து
கத்தி போல் இலை இருக்கும்
கவரிமான் பூ பூக்கும்
தின்ன இலை இருக்கும்
தின்னாத காய் காய்க்கும்
-
Water ah🤔
-
-வேம்பு
NEXT 🌹ஓர் அரண்மனையில் முப்பத்திரெண்டு காவலர்கள் – அது என்ன?🌹
-
வாய் அதில் இருக்கும் பற்கள்
வெள்ளை ஆடை உடுத்திய மஞ்சள் மகாராணி? அவள் யார்?
-
முட்டை
-
எனக்கு 6 முகங்கள், 21 கண்கள் உள்ளன. ஆனால் என்னால் பார்க்கவே முடியவில்லை. நான் யார்?
-
பகடைக்காய்
அடுத்த விடுகதை
🪷 எட்டாத உயரத்தில் இனிப்புப் பொட்டலம் 🪷
-
தேன் கூடு
NEXT 🌹நீரில்லா குளத்திலே நீண்ட கொடிகள் உண்டு, வாடாது, வதங்காது, பூக்காது, காய்க்காது, அது என்ன?🌹
-
🐍 பாம்பு
Next❣️
ஒரே வயிற்றில் பிறந்தாலும் ஒருவன் ஓடுவான், ஒருவன் நடப்பான் அவன் யார்?
-
கடிகார முள்கள்,
அடுத்து:
தலை மட்டும் கொண்டு ஊரெல்லாம் சுற்றும், ஆனால் சிறகில்லை...
-
தலை மட்டும் கொண்டு ஊரெல்லாம் சுற்றும், ஆனால் சிறகில்லை.
தபால் தலை
அடுத்த விடுகதை
🪷உருளும் வீட்டைச் சுற்றி கருப்பு வேலி! அது என்ன?🪷
-
விடை : கடிகாரம்
அடுத்த புதிர் :
யாரும் செய்யாத கதவு தானே திறக்கும் தானே மூடும். அது என்ன ?
-
யாரும் செய்யாத கதவு தானே திறக்கும் தானே மூடும். அது என்ன ?
கண் இமை
அடுத்த விடுகதை
🪷 [ஆனை விரும்பும் சேனை விரும்பும், அடித்தால் வலிக்கும், கடித்தால் இனிக்கும். இது என்ன? 🪷
-
விடை : கரும்பு
நீரை ஊற்றவும் இல்லை சேமிக்கவும் இல்லை. ஆனால் மடை திறந்தால் அருவி கொட்டும். அது என்ன?
clue : ஐந்துறுப்புகளில் ஒன்று
-
விடை : கண்ணீர் 😭😭😭
அடுத்த புதிர் :
இடி இடிக்கும் மின்னல் மின்னும் ஆனால் மழை பெய்யாது அது என்ன.?
vidai : milagai ::)
-
இடி இடிக்கும் மின்னல் மின்னும் ஆனால் மழை பெய்யாது அது என்ன
பட்டாசு
அடுத்த விடுகதை
🪷 பாலாற்றின் நடுவே கறுப்பு மீன் தெரியுது – அது என்ன? 🪷
-
விடை - கண்கள்
Next:- உடல் சிவப்பு, வாய் அகலம், உணவு காகிதம்.. அது என்ன?
-
விடை: தபால் பெட்டி
அடுத்த புதிர்:
அடித்தாலும் உதைத்தாலும் அழமாட்டன். அவன் யார்?
-
விடை :- பந்து
Next:-
தாடிக்காரன், மீசைக்காரன்... கோயிலுக்குப் போனால் வெள்ளைக்காரன் அது என்ன?
-
தேங்காய்
அடுத்த விடுகதை
🪷ஒரு கிணற்றில் ஒரே தவளை அது என்ன ?🪷
-
விடை : நாக்கு
அடுத்த புதிர் :
வானில் பறப்பான் ஆனால் சிறகு இல்லை. மோதிக்கொண்டால் அழுவான் ஆனால் கண்கள் இல்லை. அவன் யார்? 🤔🤔🤔
-
விடை - மேகம்
அடுத்து புதிர் :
இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?
-
விடை: பட்டாசு
அடுத்த புதிர்:
அம்மா பரட்ட. மகள் மினுக்கி. யார் அவங்க...🤔
Clue : 🪴
-
அன்பே அன்னாசி யா
-
answer correct ta than irukum
Supera kandu pedichitinga sis
Adutha விடுகதை sollunga sis
-
Tambhi bro sonna sari than
ஆலமரம் தூங்க அவனியெல்லாம் தூங்க, சீரங்கம் தூங்க திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை அவன் யார்?
-
விடை: பட்டாசு
அடுத்த புதிர்:
அம்மா பரட்ட. மகள் மினுக்கி. யார் அவங்க...🤔
Clue : 🪴
யாழினி NK
நான் யூகிக்கும் விடை
அம்மா - வேர்
மகள் - செடி அல்லது மரம்
-
Tambhi bro sonna sari than
ஆலமரம் தூங்க அவனியெல்லாம் தூங்க, சீரங்கம் தூங்க திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை அவன் யார்?
வேதனிஷா mappie
விடை - மூச்சு
அடுத்த புதிர்
மனிதனால் உட்கொள்ளப்படும் , பலரால் பரிமாறப்படும் , பலரால் வளர்க்கப்படும் , பனி போல வெண்மையானது அது என்ன?
-
Mappie oru wild guess
Cotton milk , cotton, plant
-
Vethanisha mappie no no ithu namba daily use pandra onnu mappie
-
Apo answer அரிசி ya maapie 😅
-
Vethanisha mappie crrt ! next Q kelunga neenga than ipo kekanum :D
-
வெளிச்சத்தில் உடன் இருப்பவன், இருளிலே தனியே விட்டு செல்வான் .
-
நிழல்
அடுத்து 🪷வாயிலே தோன்றி வாயிலே மறையும் பூ. அது என்ன? 🪷
-
விடை:- சிரிப்பு
Next:- இவன் இறக்கை இல்லாமல் பறப்பான், கண் இல்லாமல் அழுவான், அவன் யார்?
-
மேகம்
அடுத்த விடுகதை
🪷கடைசி வார்த்தையில் மானம் உண்டு, முதல் வார்த்தையின் மென்மைக்காக இறந்தன பூச்சிகள். காஞ்சியில் நான் யார்? 🪷
-
பட்டுத்துணி
NEXT 🌹அடர்ந்த காட்டின் நடுவே ஒரு பாதை அது என்ன🌹
-
தலைவகிடு
அடுத்த விடுகதை
🪷 வட்ட வட்ட பாய்; வாழ்வு தரும் பாய்; ஊர் சுற்றும் பாய். அது என்ன? 🪷
-
ரூபாய்
NEXT 🌹 கண் சிமிட்டும் ஒன்று:
மணி அடிக்கும் மற்றொன்று:
கண்ணிர் வடிக்கும் இன்னொன்று🌹
-
மின்னல், இடி, மழை
அடுத்த விடுகதை
🪷 அப்பா கொடுத்த தட்டிலே தண்ணீர் விட்டேன். நிற்கலே…
அது என்ன? 🪷
-
விடை: தாமரை இலை🌊
அடுத்த புதிர்:
கருப்பு யானையும் வெள்ளை யானையும் குளிக்க போனது. கருப்பு யானை தண்ணியோட போக வெள்ளை யானை மட்டும் கரை வந்தது... அது என்ன🤔
-
எனக்கு தெரியும் விடை உளுந்து
அடுத்தது :
கால் இல்லை ஆனால் ஓடும்
வாய் இல்லை ஆனால் பேசும்
அது என்ன ?
-
என்னோட guess - கடிகாரம்
Next :- எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல், அது என்ன?
-
விக்கல்
அடுத்த விடுகதை
🪷முத்தான முத்துகள் முற்றத்திலே காயுது, படி போட்டு அளக்கத்தான் ஆளில்லை அது என்ன? 🪷
-
நட்சத்திரங்கள்
NEXT 🌹அழகான பெண்ணுக்கு அதிசயமான வியாதி, பாதிநாள் குறைவாள், பாதிநாள் வளர்வாள் அது என்ன?🌹
-
🌝 🌙 நிலா
இவனுக்கு ஏற தெரியுமே தவிர இறங்க தெரியாது .. இவன் யார்
-
Thanks vethanisha sis
வயது
அடுத்த விடுகதை
🪷ஓடுமாம் சாடுமாம் ஒற்றைக் காலில் நிற்குமாம். அது என்ன ? 🪷
-
ஓடுமாம் சாடுமாம் ஒற்றைக் காலில் நிற்குமாம். அது என்ன ? கதவு
Next:- உயிர் இல்லாப்பறவை ஊர் விட்டு ஊர் செல்லும் அது என்ன?
-
கடிதம்
NEXT 🌹ஐந்து அடுக்கு நாலு இடுக்கு.🌹
-
விரல்கள்
அடுத்த விடுகதை
🪷இளஞ்சிவப்பு ராணி… இரு பதினாறு சிப்பாய் காவல்… இது என்ன? 🪷
-
விடை - நாக்கு
அடுத்த விடுகதை:-
கழுத்தை வெட்டினால் கண் தெரியும்... அது என்ன?
-
நுங்கு
அடுத்த விடுகதை
🪷 அட்டைக்கு ஆயிரம் கண்;
முட்டைக்கு மூன்று கண் . 🪷
/color]
-
சல்லடை, தேங்காய்
NEXT 🌹வண்ணான் வெளுக்காத வெள்ளை,
குயவன் பண்ணாத பாண்டம்,
மழை பெய்யாத தண்ணிர்.🌹
-
விடை:- தேங்காய்
Next:- பள்ளிக்குச் செல்வான்; பாடம் படிக்க மாட்டான். அவன் யார்?
-
புத்தகப் பை
அடுத்த விடுகதை
🪷கழற்றிய சட்டையை மறுபடியும் போடமாட்டான் அவன் யார்? 🪷
-
விடை : பாம்பு 🐍
அடுத்த புதிர்:
தாய் குப்பையிலே, மகள் சந்தையிலே அவை என்ன?
-
வாழை மரம்
அடுத்த விடுகதை
🪷 பச்சை பொட்டிக்குள் வெள்ளை முத்துகள்? 🪷
-
விடை : வெண்டைக்காய்
அடுத்த புதிர் :
உயிரில்லாதவனுக்கு உடம்பெல்லாம் நரம்பு. அது என்ன ?
-
பாய்
அடுத்த விடுகதை
🪷 மரத்துக்கு மரம் தாவுவான் குரங்கல்ல, பட்டை போட்டிருப்பான் சாமி அல்ல
அவன் யார்?🪷
-
அணில்
கடையெழுத்து மாறிடில் தின்னலாம், முதலும் கடையும் சேர்ந்தால் குளிரும், மொத்தத்தில் முருகன் இடம். கண்டுபிடியுங்கள்
-
கடையெழுத்து மாறிடில் தின்னலாம் பழம் முதலும் கடையும் சேர்ந்தால் குளிரும். பனி
மொத்தத்தில் முருகன் இடம். பழனி
அடுத்த விடுகதை
🪷 முள்ளுக்குள்ளே முத்துக்குவலயம்
அது என்ன? 🪷
-
பலாப்பழம்
தொடர்மொழியில் ஆற்றை குறிக்கும் இச்சொல் தனிமொழியாக வேறு அர்த்தம் படும். கடைச் சொல் உடல் உறுப்பை குறிக்கும். அது என்ன சொல் .
-
வைகை
தொடர்மொழியில்
ஆற்றை குறிக்கும் வைகை
இச்சொல் தனிமொழியாக
வேறு அர்த்தம் படும் வை கை
கடைச் சொல்
உடல் உறுப்பை குறிக்கும் கை
அது என்ன சொல் வைகை
அடுத்த விடுகதை
சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது அது என்ன?
-
விடை : கண்
அடுத்த புதிர் :
ஒற்றை கண்ணன். ஓடும் இடமெல்லாம் அடைப்பான். அவன் யார் ?🤔
-
அன்பே இது ஊசி சரியா?😅
இரட்டையன் நான் , ஒருத்தர் இன்றி மற்றோருவர் குப்பையிலே ..
-
செருப்பு
அடுத்த விடுகதை
🪷 கடல் நீரில் வளர்ந்து ,
மழை நீரில் மடிவது என்ன ? 🪷
-
விடை : உப்பு🧂🧂🧂
அடுத்த புதிர் :
ஓடுவான் சாடுவான் ஒத்த காலுல நிற்பான். அவன் யார்? 🤔
-
ஒற்றை கதவு
அடுத்த விடுகதை
🪷 [காலையிலும் மாலையிலும் நெட்டை மதியம் குட்டை நான் யார்? 🪷
-
விடை : நிழல்
அடுத்த புதிர் :
பெருந்தீணிகாரன். அனைத்தையும் உண்பான் ஆனால் நீர் அருந்த மாட்டான். அவன் யார்? 🤔
-
நெருப்பு
அடுத்த விடுகதை
🪷கந்தல் துணி கட்டியவன், முத்துப் பிள்ளைகளைப் பெற்று மகிழ்ந்தான். அது என்ன? 🪷
-
விடை: சோளம்
அடுத்த புதிர்:
காற்றில் பறப்பான். ஒன்று கூடினால் முழக்கமிட்டு அழுவான். அவன் யார்? 🤔🤔🤔
-
மேகம் ☁️
அடுத்த விடுகதை
🪷 ஓடையில் ஓடாத நீர், ஒருவரும் குடிக்காத நீர் அஃது என்ன. 🪷/color]
-
விடை : கண்ணீர் மற்றும் கானல்நீரும் பொருந்தும் சகோ😅😅
அடுத்த புதிர் :
உடம்பில்லாதவனுக்கு பத்து சட்டை . அவன் யார் ? 🤔
-
வெங்காயம்
அடுத்த புதிர் :வண்ணன் வெளுக்காத வெள்ளை
குயவன் செய்யாத பாண்டம்
மழை பெய்யாத தண்ணீர்
அது என்ன ?
-
தேங்காய்
அடுத்த விடுகதை
🪷 சுடும்போதும் சாகாதவன்; ஆனால் தடுக்கி விழுந்தால் இறந்து விடுவான். அவன் யார்? 🪷
-
மண்பானை 🏺
அடுத்த புதிர்:
பிச்சிப்பூ உதிர்ந்து கிடக்கு பறிக்க ஆளில்ல. காற்றுப்பை கிழிஞ்சு கிடக்கு தைக்க முடியல.. என்ன அது🤔🤔
விடை: நட்சத்திரம், மேகம்
-
மேகம், நட்சத்திரம்
அடுத்த விடுகதை
🪷 இரு கொம்புகள் உண்டு மாடு அல்ல, வேகமாய் ஓடும் மான் அல்ல, கால்கள் உண்டு மனிதனல்ல. – அது என்ன? 🪷
-
சைக்கிள்
NEXT 🌹உருவத்தில் சிறியவன், உழைப்பில் பெரியவன்...🌹
-
எறும்பு
அடுத்த விடுகதை
🪷 உருவத்தில் பெரியவன்; ஊருக்கு உயர்ந்தவன். அவன் யார்? 🪷
-
கோபுரம்
NEXT 🌹ஐந்து ஊர்களுக்கு ஒரே மந்தை. அது என்ன?🌹
-
கை ( hand )
NEXT - யாரும் செய்யாத கதவு தானே திறக்கும் தானே மூடும். அது என்ன?
-
கண் இமை
NEXT 🌹ஆனை விரும்பும் சேனை விரும்பும், அடித்தால் வலிக்கும், கடித்தால் இனிக்கும். இது என்ன?🌹
-
புளி (Tamarind)
NEXT - காலையில் வந்த விருந்தாளியை மாலையில் காணவில்லை. அது என்ன?
-
விடை:- சூரியன்
அடுத்து :-
பச்சைக் கீரை சமைக்க உதவாது வழுக்க உதவும்... அது என்ன?
-
விடை: பாசி
அடுத்த புதிர்:
சொல்வதை திருப்பி சொல்வான் கிளிப்பிள்ளையும் இல்லை உருவமும் இல்லை. அவன் யார்?
-
Ans - எதிரொலி (Echo)
Next - ஆலமரம் தூங்க அவனியெல்லாம் தூங்க, சீரங்கம் தூங்க திருப்பாற்கடல் தூங்க, ஒருவன் மட்டும் தூங்கவில்லை அவன் யார்?
-
மூச்சு
அடுத்த விடுகதை
🪷 கல்லும் கரடும்,
முள்ளும் முரடும்,
வேரும் விறகும் 🪷
-
கற்கண்டு
பலாப்பழம்
கரும்பு
Next : விதை இல்லாமல் முளைப்பது
வெட்டினால் உயிர் தந்து உயிர் விடுவது
-
நதி
இவன் இறக்கை இல்லாமல் பறப்பான், கண் இல்லாமல் அழுவான், அவன் யார்?
-
விடை: மேகம்
அடுத்த புதிர் :
ஒற்றைக் கால் சுப்பனுக்கு தலைக்கணம் அதிகம். அவன் யார்?🤔
-
பம்பரம்
அடுத்த விடுகதை
🪷 ஊசியிலைக் காட்டிலே, ஊசலாடுதே உருத்திராட்சம். என்ன இது? 🪷
-
விடை:- சவுக்கு மரம்
முயல் புகாத காடு எது?
-
(https://i.postimg.cc/sBWKvvJy/IMG-20250510-200743.jpg) (https://postimg.cc/sBWKvvJy)
முக்காடு சரியா? தவறா? Sis. Sarina nextu illana restu🤔
-
@Yazhini sis crct dhan முக்காடு dhan ans😂
-
(https://i.postimg.cc/ppgvxkMG/IMG-20250510-211931.jpg) (https://postimg.cc/ppgvxkMG)
Apo nextu😁
அடுத்த புதிர்:
ஒன்றும் இரண்டும் கலப்பு. உள்ளங்கையால் பிடிப்பு. ஆவியிலே நடப்பு. ஆண்டவனுக்குப் படைப்பு. அது என்ன🤔
-
கொழுக்கட்டை
அடுத்த விடுகதை
🪷அப்பா கொடுத்த தட்டிலே தண்ணீர் விட்டேன். நிற்கலே…
அது என்ன? 🪷
-
(https://i.postimg.cc/grCJxyDS/lotus-leaf-2420205-1280.jpg) (https://postimg.cc/grCJxyDS) தாமரை இலை
அடுத்த புதிர் :
யானை படுக்க இடமுண்டு. கடுகு மடிக்க இலை இல்லை. அது என்ன☺️
-
சவுக்கு மரம்
அடுத்த விடுகதை
🪷 கண்ணுக்குக் கருப்பழகி, நாவுக்கு இனிப்பழகி... 🪷
-
விடை:- நாவல்பழம்
அடுத்த விடுகதை:-
ஆடும் வரை ஆட்டம் ஆடிய பின் ஓட்டம் ...அது என்ன?
-
இதயம்
அடுத்த விடுகதை
🪷 கழனியில் விளைந்த கதிரை, கத்தரி போட்டு வெட்டுவார்- அது என்ன? 🪷
-
முடி
Next: இந்த ஊரிலே அடிபட்டவன் , அடுத்த ஊர் போய் சேர்கிறான். யாரோ அவன்
-
தபால்
அடுத்த விடுகதை
🪷நடைக்கு உவமை நளனுக்கு தூதுவன் – அது என்ன? 🪷
-
விடை:- அன்னம்
அடுத்த விடுகதை:-
கால் நான்கு நடக்காது கண் ஆயிரம் இமைக்காது..அது என்ன?
-
நார்க்கட்டில்
அடுத்த விடுகதை
🪷பகலில் துயிலுவாள்,இரவில் அலறுவாள்- அது என்ன? 🪷
-
விடை:- ஆந்தை
அடுத்த விடுகதை:-
பெட்டியைத் திருந்தால் பூட்ட முடியாது...அது என்ன?
-
தேங்காய்..
சுடாத நெருப்பு, இருட்டில் உதவுவான் - அவன் யார்?
-
விடை:- டார்ச் லைட்
அழுவான், சிரிப்பான் அனைத்தும் செய்வான்...அவன் யார்?
-
முகம் பார்க்கும் கண்ணாடி
ஒத்தைக்கால் கோழிக்கு வயிறு நிறைய முட்டை. அது என்ன?
-
மிளகாய்
அடுத்த விடுகதை
🪷எல்லா இடத்திலும் இருப்பேன்; ஆனால் என்னைப் பிடிக்க முடியாது. நான் யார்? 🪷
-
விடை:- காற்று
அடுத்த விடுகதை:-
இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது...அது என்ன?
-
விடை : பட்டாசு 🧨
அடுத்த புதிர் :
ஒருவரிடம் இருப்பேன்.. மற்றவரிடம் சென்றால் நான் இருக்க மாட்டேன். நான் யார்
-
இரகசியம்
அடுத்த விடுகதை
🪷 கொதிக்கும் கிணற்றில் குதித்துக் குண்டாகி வருவான். அவன் யார்? 🪷
-
விடை:- பூரி🤔
அடுத்த விடுகதை:-
மழையில் பிறந்து வெயிலில் காயுது அது என்ன ?
-
காளான்
அடுத்த விடுகதை
🪷நீண்ட உடம்புக்காரன்,
நெடுந்தூரப் பயணக்காரன்? 🪷
-
தொடர்வண்டி
Next
முயற்சி இல்லாமல் ஏறும்,
முன்னால் வந்தால் மறையும்,
பின்னால் வந்தால் தொடரும்,
எனை வெல்ல யாராலும் முடியாது...
நான் யார்?
-
நிழல்
அடுத்த விடுகதை
🪷இளமையில் உயரமாக இருக்கும்... வயது ஆக ஆக உயரம் குறைந்துகொண்டே போகும். இது என்ன? 🪷
-
மெழுகுவர்த்தி
கீழே வரும் ஆனால் மேலே போகாது... இது என்ன
-
மழை
அடுத்த விடுகதை
🪷இதற்கு கைகள் இருக்கும். ஆனால் கை தட்ட முடியாது. இது என்ன? 🪷
-
கடிகாரம்
NEXT 🌹வாயிலே தோன்றி வாயிலே மறையும் பூ. அது என்ன?🌹
-
சிரிப்பூ,
அடுத்த விடுகதை
🪷முதலில் காற்றைக் குடிப்பான், பின்னர்
காற்றிலே பறப் பான்... 🪷
-
பலூன்
அடுத்த விடுகதை
தொடாமல் அழுவான், தொட்டால் பேசுவான். அவன் யார்?
-
தொலைபேசி
அடுத்த விடுகதை
🪷 முதுகிலே சுமை தூக்கி முனகாமல் அசைந்து வரும் அது என்ன? 🪷