பாகற்காய் - ஒன்று
பூண்டு - 10 பல்
புளி - எலுமிச்சை அளவு
வெல்லம் - சிறிது
தனி மிளகாய் தூள் - 2 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
கடுகு, வெந்தயம், தனியா, சீரகம் - தலா அரை தேக்கரண்டி
கடுகு, சீரகம், நல்லெண்ணெய், பெருங்காயம் - தாளிக்க
தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைக்கவும். பாகற்காயை விதை நீக்கி நறுக்கிக் கொள்ளவும். பூண்டினை தோல் நீக்கி வைக்கவும். புளியை கெட்டியாக கரைத்து வைக்கவும்.
அரை தேக்கரண்டி அளவுள்ள கடுகு, தனியா, சீரகம், வெந்தயத்தை நன்கு சிவக்க வறுத்து ஆற வைத்து பொடிக்கவும்.
நல்லெண்ணெயில் கடுகு, சீரகம், பெருங்காயம் தாளித்து பூண்டை சேர்க்கவும்.
அதில் பாகற்காயை சேர்த்து வேகும் அளவிற்கு வதக்கவும்.
புளி தண்ணீர், உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
நன்கு சுண்டி எண்ணெய் மேலே வரும் போது பொடித்து வைத்துள்ள பொடி, மேலும் சிறிது பெருங்காயம், வெல்லம் சேர்க்கவும்.
ஒட்டாதவாறு நன்கு கிளறி ஆற வைக்கவும்.
சுவையான பாகற்காய் தொக்கு தயார். கண்ணாடி அல்லது பீங்கான் பாத்திரத்தில் வைத்து குளிர் சாதன பெட்டியில் வைக்கவும்.
ஆறு மாதம் வரை வைத்து சாப்பிடலாம். ப்ரீஸ் செய்தால் ஒரு வருடம் கூட வைக்கலாம். அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப காரம், புளிப்பு சேர்க்கலாம். புது புளியில் செய்தால் நல்ல நிறம் கிடைக்கும்.