பலாச் சுளைக் கறி
தேவையான பொருட்கள்.
முற்றிய பலாக்காய் சுளைகள் - 10-15
வெங்காயம் - 1
பச்சைமிளகாய் -1
மிளகாய் பொடி – ½ ரீஸ்பூன்
தனியாப்பொடி -1 ரீ ஸ்பூன்
மஞ்சள் பொடி – சிறிதளவு
உப்பு – தேவைக்கேற்ப
பூண்டு - 4 பல்லு
மிளகு – ¼ ரீ ஸ்பூன்
கட்டித் தேங்காய்பால் - 2 மேசைக் கரண்டி
தண்ணித் தேங்காய்பால் - ¼ கப்
தேசிச் சாறு - ½ ரீ ஸ்பூன்
தாளிக்கத் தேவையானவை.
எண்ணைய் -2 ரீஸ்பூன்
கடுகு - 1/4 ரீஸ்பூன்
வெங்காயம் - ½
காய்ந்த மிளகாய் -1
கறிவேற்பிலை -2 இலைகள்
ரம்பை -2 துண்டு
செய்முறை
பலாக்காய் சுளைகளை நீளவாட்டில் பாதியாகக் கீறி விதையை எடுத்துவிட்டு நாலு நீள் துண்டுகளாக வெட்டி வையுங்கள். விதைகளின் தோலை நீக்கிவிட்டு குறுக்கே பாதியாக வெட்டுங்கள். இவற்றைத் தண்ணீர் விட்டு அலசி எடுங்கள்.
வெங்காயம் மிளகாயை நீளவாட்டில் ஓர் அங்குலத் துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.
பாத்திரத்தில் அனைத்தையும் போட்டு தண்ணீர்ப் பால் ¼ கப் விட்டு உப்பு, மிளகாய்ப் பொடி, தனியாப் பொடி, மஞ்சள் பொடி போட்டுக் கலக்கி மூடி போட்டு 2 நிமிடம் அவித்து எடுங்கள்.
திறந்து பிரட்டுங்கள்.
கெட்டிப் பால் விட்டு இறுகி வர, தட்டிய பூண்டு, மிளகு சேர்த்துப் பிரட்டி ஒரு நிமிடம் விட்டு இறக்குங்கள்.
தேசிச் சாறு கலந்து பிரட்டி விடுங்கள்.
தாளித்து கலந்துவிடுங்கள்.
மிளகு பூண்டு தாளித்த வாசம் மூக்கைக் கிளறி பசி எடுக்கும். உடனேயே சாப்பிட தட்டுத் தயாராக எடுத்துவிடுவீர்கள்.