தமிழ் தோழர்களே,தோழிகளே
உங்கள் பொன்னான பொழுது அதில்
பாதியினை இங்கே நாதியற்ற எனக்களிப்பீரோ ?
ஆதி முதல் இல்லாது போயினும் - (FTC )
வரமாய் கிடைத்ததும் பாதியில் இணைந்தவன் நான்
இருந்தும் , நாதியற்று தான் இருக்கின்றேன்
ஆதலால் தான் அநீதி இழைக்கபடுகின்றேனோ ?
சோதியாய் சொலிக்கும் நபரொருவர் ,அவரிடம்
எதிர்சாதி என்றறிந்தும் ,எடுத்துரைத்தேன்
ஒரு கோரிக்கையை . அளவினில் சிறு கோரிக்கையை
சுருக்கென மனதினில் சுருக்கிட்டவர் அவர் .
பெயர்தான் சுருக்கமானது என்றிருந்தேன், மனதுமா ?
ஆகையால் நீதி மான்களே !உங்கள் முன்
அநீதி இழைக்கபட்டவன் இதோ , நீதி வேண்டுகிறேன்
அச்சுருக்கமான பெயர்/மனம் கொண்டவரிடம்
மீண்டும் தாழ்மையுடன் அனுமதி கேட்கின்றேன் !!