Author Topic: நீங்கள் கேட்டவை  (Read 11188 times)

Offline Gotham

Re: நீங்கள் கேட்டவை
« Reply #15 on: September 25, 2012, 01:29:10 PM »

பாகம் 4:

அந்த நாள் முதல் காதலியே அவன் கண்முன் தோன்றினாள். பார்க்கும் எதிலும் உருவமில்லா அவள் குரலே உருவமாய் தெரிந்தது. இவளாய் இருப்பாளோ அவளாய் இருப்பாளோ என பார்க்கும் பெண்களிடமெல்லாம் அவளைத் தேடினான். அவள் இயற்பெயர் என்னவாயிருக்கும். வித்யா, சித்ரா.. இல்லை இன்னும் நவநாகரிகமாக சாரா, நோரா இப்படி ஏதாச்சும். வேலையை மறந்தான். தன்னிலை மறந்தான். ஏனைய நண்பர்களை மறந்தான்.

கவிதை எழுதணும். எப்படி தொடங்குவது என தெரியவில்லை. நண்பர்களுடனும் தற்சமயம் தொடர்பில்லை. யாரைக் கேட்பது. மறுபடி இணையத்தை நாடினான். தமிழில் கடினப்பட்டு தான் தேர்வில் தேறியிருந்தான். இருந்தாலும் விடாப்பிடியாக தமிழைக் கற்க ஆர்வம் கொண்டான். கற்கும் ஆர்வமாக இல்லாமல் கவரும் ஆர்வமாக இருந்ததே பிழையாயிற்று. பார்த்திலெல்லாம் நுனிப்புல் மேய்ந்தான். கண்ணதாசன் படிக்கும் போதே வைரமுத்துவிடம் பாய்ந்தான். இடையிடையே திரைப்படப்பாடல்கள் வேறு. கவிதையின் உருவம் இப்படித் தான் இருக்குமென்று அவன் மனதில் ஒரு எண்ணம் ஆழமாய் வேரூன்றியது. வார்த்தை ஜாலங்களும் எண்ணத்தை வண்ணத்தை தெறித்தலுமே கவிதை என கொண்டான். நல் வழிகாட்டி இல்லாதது ஒன்றே குறை. நீட்டியும் முழக்கியும் ஒரே வார்த்தையினை திரும்பத் திரும்ப பயன்படுத்தும் வித்தையே கவிதைமுழக்கம் என தப்பர்த்தம் கொண்டான். இணையத்தில் பரவலாய் விரவிக்கிடக்கும் பக்கங்களும் அவனுக்கு தெம்பூட்டின. எது எழுதினாலும் கவிதை என. ஆரம்பித்தது இனி தமிழுக்கு சோதனை.

இணையத்தின் பல தளங்களுக்கும் சென்றான். தன் பெயரை பதிந்தான். அவளிடமும் சொன்னான். அவளை நினைத்து என்னெல்லாம் தோன்றிற்றோ அதெல்லாம் எழுத ஆரம்பித்தான். முதலில் அவன் வார்த்தைகளை மடக்கி எழுத பார்த்தான். சொற்றொடரை வெட்டி வெட்டி எழுதினான். பல இடங்களிலும் படித்த கவிதைகளின் சாயல் இருப்பதாய் தோன்றியது. மனதில் மகிழ்ச்சி வெள்ளம்.

'சரஸ்வதி என்னுள் வந்துவிட்டாள். கவிதை உலகம் இனி என் படைப்புகளுக்கு கெஞ்சும்.'

மனத்தினில் ஏனோ இறுமாப்பு தோன்றியது. அவளால் தான் இத்தனையும் தன்னால் சாதிக்க முடிந்தது என தோன்றியது. எழுத எழுத தன்னை மிஞ்ச யாருமிலர் என்றே நம்ப ஆரம்பித்தான். ஓவ்வொரு முறை அவளைப்பற்றிய கவிதை பதிக்கும் போதும் அவளிடம் சொல்வான். அவள்
அங்கே வந்து படிப்பாள். 'என்ன பெயரில் வருவாள் என்பது அவனுக்கு புரியாத புதிராய் இருந்தது. இணையத்தில் பல தளங்களிலும் அவள் இருக்கிறாள்.'

ஒருமுறை சாட்டிங்கில் கேட்டே விட்டான்.

"நான் எழுதும் கவிதைகளை படிக்கிறாயா?"

"ஓ. படிக்கிறேனே. உன் ஓவ்வொரு கவிதையையும்."

"என்ன பெயரில் வருகிறாய்?"

"அது மட்டும் சொல்ல முடியாது. ஒன்று மட்டும் சொல்வேன். பெண் பெயரில் தான் வருவேன். கவலை வேண்டா".

"இத்தனை கவிதைகளிலும் ஒன்று கூட உன்னை பாதிக்கவில்லையா? எப்போது உன் திருமுகம் காட்டுவாய்?"

கலகலவென நகைத்தாள்.

"இன்னும் காலம் ஆகவில்லை. சற்றே பொறு. உன் கவிதைகள் நல்லா இருக்கிறது. ஆனால் உருக்குவதாய் இல்லை. நீ உருகி அது என்னையும் உருக்குவதாய் இருக்க வேண்டும்."

புரிந்தும் புரியாதது போல் இருந்தது. இரண்டு விஷயங்கள் புரிந்தது. பெண் பெயரில் வருகிறாள். உருவதாய் கவிதை எழுத வேண்டும். எழுதுகிறேன் காதலியே. உன்னையும் உருக்குவேன். அன்றுமுதல் யாரெல்லா பெண் பெயரில் வருகிறார்களோ அவரெல்லாம் அவளாய் இருப்பார்களோ என சந்தேகம் கொண்டான். கருத்திட்டுவிட்டால் அவளே தான் என நம்ப ஆரம்பித்தான். ஒன்றில்லாமல் பல பெண்பெயர்கள் வந்ததால் அதிகமாய் குழம்பினான். குழப்பத்திற்கே பெருங்குழப்பம் வந்தால் என்னாகுமோ அந்நிலையில் அவன்.

'அவளுக்கு பிடித்த மாதிரி கவிதை எழுதணும். அவளைப்பார்க்கணும். அவ்வளவு தான்.' உருகி உருகி எழுத ஆரம்பித்ததன் விளைவு தமிழ் அவனிடம் உருக ஆரம்பித்தது. எதுகைகளும் மோனைகளும் என கட்டவிழ்த்துவிட்டான் தன் வார்த்தைகளை. கண்டு கேட்டு உண்டுயர்த்த
அனைத்து சொற்களும் தமிழென நம்பி பதிவிட்டான். ஐயகோ அதனால் வந்ததே வினை.

அவள் அவனிடம் எதிர்பார்த்த படி பொறுமைசாலியாக இருக்கும் நிலைக்கு தள்ளப்படும் படி அந்த செயல் நிகழ்ந்தது.

அது...

Offline Global Angel

Re: நீங்கள் கேட்டவை
« Reply #16 on: September 25, 2012, 02:51:35 PM »
ஆமா அவனுக்கு  மட்டுமா விபரீதம் ஆரம்பம் ...  அவன் கவிதையை படிச்சு தொலைக்கக் போற எல்லருகும்ல ஆரம்பம் ... சும்மா இருக்குறவன சுரண்டி மத்தவங்கள ரணகளமாக்க வைகுறதே இந்த பொண்ணுகளுக்கு பொழப்ப போச்சு ... அவ சுரண்டினதால அவசத அவளுக்க .. லூசு பொண்ணு .. கவிங்கனை காதலிக்கணும்னா .. வாலி பிரீயாதன் இருபாரு .. வைர முத்துவும் ஆகிட்டு இருகாரு அவங்கள காதலிச்சு தொலைகுரத விட்டு ... சும்மா இருந்தவன சொரண்டி இருக்குறவங்கள சவடிக்க வச்சுட்டாளே படு பாவி .. >:( ;D
                    

Offline Gotham

Re: நீங்கள் கேட்டவை
« Reply #17 on: September 25, 2012, 03:53:38 PM »

பாகம் 5:

தனக்குத் தெரிந்த தமிழில் அர்த்தங்களும் அனர்த்தங்களும் நிறைந்த கவிதைக்கிறுக்கல்களைப் பதிக்கையிலே யார் கண் பட்டதோ தெரியவில்லை. விமர்சனங்கள் வர ஆரம்பித்தன. எப்போதும் அவனுக்கு அதிககோபம் வராது. ஆயினும் காதலின் பிடியில் சிக்கியவனுக்கு மனமும் அறிவும் மரத்தது போலிருந்தது. அவளின் நினைவாக எழுதும் கவிதைகள் கண்டவர் கண்பட்டு சின்னாபின்னாமாவதை அவன் விரும்பவில்லை.

இப்படி தான் ஒரு நாள் அவளை நினைத்து மனம் உருகி எழுதினான்.


"மணியே
தனியே
இனியே வா
என் கனியே

முன்பனியே
உன்
விரல்நுனியே
என்னை
விட்டுவிட்டான்
சனியே"

தான் எழுதியதிலேயே ஆகச்சிறந்த கவிதையென இதைக் கொண்டான். எப்படியும் அவள் வருவாள் இதை படிப்பாள் இன்முகம் காட்டுவாளென எதிர்பார்த்து ஏங்கி நின்றான்.


அப்போது தானா அவன் வரவேண்டும். எல்லாம் தெரிந்த கவிஞன் போலும். என்னைவிடவா?! வரிக்கு வரி அர்த்தம் கேட்டு நச்சரிக்க ஆரம்பித்தான். நான் எழுதிய கவிதை புரியவில்லையாம். இவர்களெல்லாம் கவிஞர்கள் என்று ஏன் வெளியே சொல்லிக் கொண்டு திரிகிறார்களோ? இத்தனை எளிதான கவிதையே புரியவில்லை. பின் சங்க இலக்கியம் எங்கே புரிய போகின்றது. பதில் எழுதினான். '

'காதலியே கண்ணின் மணி போன்றவளே, கனி போல இனிமையானவளே, உன் சுற்றத்தாரை விட்டு என்னுடன் பேச தனியே வா. முன்பனிக்காலை பொழுதில் என்னருகில் நீ இருக்கையில் உன் விரல்நுனியில் ஸ்பரிசம் படும் போது என்னை இதுவரை ஆட்கொண்டிருந்த ஏழரைநாட்டு சனியும் விட்டுவிட்டான். இனி எனக்கு நல்ல காலம் தான். நீ என்னருகில் இருக்கும்வரையில்'

புரியாத மனிதர்கள். எதற்கு புரியவைக்க வேண்டும்? அவளுக்கு மட்டும் புரிந்தால் போதும். இவர்களைப் பற்றி எனக்கென்ன கவலை. ஆனால் ஏனோ தெரியவில்லை. அவர்கள் மறுபடியும் விமர்சனம் செய்தனர்.

'காதலியை சனியுடன் ஒப்பிட்ட மாதிரி அல்லவா இருக்கிறது'

அதீத கோபம் வந்தது. தன் கவிதைகளை விமர்சித்ததாலா இல்லை காதலி அந்த விமர்சனங்களையெல்லாம் படித்துவிட்டு தன் கவிதை பிடிக்கவில்லை என சொல்லிவிடுவாளா?.கோபம் இருமடங்காகியது. வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில் தாழி உடைந்த கதையாய் யார் இவர்கள். காதலைப்பற்றி என்ன தெரியும்? இல்லை காதலியைப் பற்றி என்ன தெரியும்? முகம் காணாமல் காத்திருப்பதன் வலி புரியுமா? மனதில் இதுவரை கேட்ட கெட்ட வார்த்தையெல்லாம் உதித்தது. நாகரிகம் கருதி தவிர்த்தான்.

சும்மாவா சொன்னார்கள் விதி வலியது. அவள் அவன் கவிதைகளை படித்தாள். அதிலும் அதற்கு வந்த விமர்சனங்களை இன்னும் படித்தாள். அவனுடன் பேசுகையில்

"உன் கவிதையைப் படித்தேன். ஆனாலும் தெரியவில்லை. ஏனோ ஈர்க்கவில்லை"

நொறுங்கிப் போனான். ரொம்பவே கஷ்டப்பட்டு எழுதியிருந்தான் அந்த கவிதையை. இதுவும் பிடிக்கவில்லை என்கிறாளே. அவர்கள் மேல் கோபம் கோபமாக வந்தது.

"ஏன் பிடிக்கலை?"

"அங்கே எழுதியிருந்தார்களே படிக்கவில்லை. சில இடங்கள் இடறுதென்று. என்று உன் கவிதையை படிக்கும் ஒருவர் விடாமல் பாராட்டி அதிசயிக்கிறார்களோ, என்று எனக்குள்றுன் கவிதை மூலம் பூகம்பத்தை ஏற்படுத்துகிறாயோ அன்று உனைக்காண வருகிறேன்"

முடிந்தது. இனி எத்தனை கவிதை எழுத. அதிலும் அவர்கள் விமர்சனம் என்னும் பேரில் என் கவிதையை சின்னாபின்னமாக்கி வருகிறார்கள். அவர்களை விடக்கூடாது. மனத்தில் ஆத்திரத்தின் அரங்கேற்றம். காதல் போதையின் தள்ளாட்டம். மனதில் தோன்றியதையெல்லாம் கவிதையாய் கிறுக்க ஆரம்பித்தான். அவர்களுடனான போராட்டம் தொடர்ந்தது. தன் கவிதையில் பிழை என்பதை ஒப்ப மனமில்லை. அதிலும் அவர்கள் வாயை எங்கனம் மூடுவது. அதற்கு அவர்கள் வெளியேறினால் தான் உண்டு. சூசகமாக தாக்கி எழுத ஆரம்பித்தான்.

படித்த அவளுக்கு எதுவும் பிடிக்கவில்லை. அடுத்த முறை அழைக்கையில் சொன்னாள்.

"நீ என்ன எழுதிக்கொண்டிருக்கிறாய்?"

"உனக்கான கவிதைகள். ஏன்?"

"நீ எனக்காக எழுதுவதைக்காட்டிலும் அவர்களுக்காக எழுதுவது போலுள்ளது. என்மீது இன்னும் காதல் உண்டா?"

"சந்தேகமென்ன? உயிர்பிரிந்தாலும் என்காதல் இருக்கும்"

"அப்போ அவர்களே ஒத்துக்கொள்ளும் படி கவிதை எழுத ஏன் தாமதம்? இதில் நம் காதலும் நானும் சிக்கித் தவிப்பது உனக்கு தெரியவில்லையா என்ன?"

மனம் பொறிந்தது. அவர்களால் தான்.

"அது சரி, அவர்களை தாக்கி வேறு எழுதுகிறாய். உன் பொறுமை அவ்வளவு தானா?"

பொறிக்குள் சிக்கிய எலியாய் உணர்ந்தான். இப்போது என்ன தான் செய்வது? இதற்கு முடிவு தான் என்ன? பொறுமை காக்க வேண்டுமானால் அவர்களை எப்படி சமாளிப்பது?


யோசித்து யோசித்து தலைவலித்தது. முகம் தெரியா காதலியும் அவர்களும் அவனை சித்ரவதை செய்தனர். கண் இருண்டது. தலைசுற்றியது. தலையைப்பிடித்து அலறினான். கண்திறந்து பார்த்தாலும் இருட்டாய் இருந்தது. அவன் எதுவுமே புரியாத தெரியாத ஒரு வெளியில் அவன் தூக்கியெறியப்பட்டான்.
« Last Edit: September 25, 2012, 03:57:11 PM by Gotham »

Offline Gotham

Re: நீங்கள் கேட்டவை
« Reply #18 on: September 25, 2012, 03:58:04 PM »
ஆமா அவனுக்கு  மட்டுமா விபரீதம் ஆரம்பம் ...  அவன் கவிதையை படிச்சு தொலைக்கக் போற எல்லருகும்ல ஆரம்பம் ... சும்மா இருக்குறவன சுரண்டி மத்தவங்கள ரணகளமாக்க வைகுறதே இந்த பொண்ணுகளுக்கு பொழப்ப போச்சு ... அவ சுரண்டினதால அவசத அவளுக்க .. லூசு பொண்ணு .. கவிங்கனை காதலிக்கணும்னா .. வாலி பிரீயாதன் இருபாரு .. வைர முத்துவும் ஆகிட்டு இருகாரு அவங்கள காதலிச்சு தொலைகுரத விட்டு ... சும்மா இருந்தவன சொரண்டி இருக்குறவங்கள சவடிக்க வச்சுட்டாளே படு பாவி .. >:( ;D
நீங்களே பொண்ணுங்கள தப்பா சொல்றீங்களே..!  :-\

Offline Global Angel

Re: நீங்கள் கேட்டவை
« Reply #19 on: September 25, 2012, 06:25:55 PM »
ஏங்க பெண் என்னும் பேரில் இருக்கும் எல்லோரும் பெண்களா ... பெண்மை கொண்டவர்கள்தான் பெண்கள் .. காதலுக்கு கண்டிசன் .. அதிலும் ஏற்கனவே ௨ காதல் அம்போ ... அப்புறம் என்ன .. ஹிஹ
                    

Offline Gotham

Re: நீங்கள் கேட்டவை
« Reply #20 on: September 25, 2012, 06:33:27 PM »
இது வரை கத நல்லாலியா என்ன?  :)

Offline Global Angel

Re: நீங்கள் கேட்டவை
« Reply #21 on: September 25, 2012, 07:00:46 PM »
 கத சூப்பர் ... அடுத்த கட்டத்துக்கு நான் காத்திருக்கேன் .. நான் நினைகின்ற போல கதை போகுதான்னு பாகோதுகு சீக்ரம் போடுங்க 
                    

Offline Gotham

Re: நீங்கள் கேட்டவை
« Reply #22 on: September 25, 2012, 07:09:30 PM »
நீங்க நினைக்கிற மாதிரி கதை கண்டிப்பா போகாது. அதுக்கு நான் கியாரண்டி.. :)


வேணும்னா ஆதிகிட்ட கேளுங்க.. :D

Offline Anu

Re: நீங்கள் கேட்டவை
« Reply #23 on: September 27, 2012, 07:37:33 AM »
oru love panna ithana kastama .
paavam avanuku love poyi tension thaan minji irukum..
ippa thaan puriyudhu love pandravanga ellam eppadi ivlo azhaga kavithai ezhudaranga endru.
kannai virtu sitthiram vaangum kathai iruku..
enaku oru doubt, nalla kavithai ezhudanumnu yosichi yosichi love panna ponna marandhu poyi kavithai ezhuditu irundha ponnu poida mataangala?


Offline Gotham

Re: நீங்கள் கேட்டவை
« Reply #24 on: September 27, 2012, 07:47:32 AM »
 லவ் பத்தி எனக்கு தெரியாது. ஆனா இவன் அப்படி மாட்டிக்கிட்டான். பாவம். என்ன செய்ய?
 அப்புறம் அக்கா கதயில வர்றது கவிதையே இல்லே.. :-[ . ஆனா இதை யோசிச்சு யோசிச்சு தான் 'அவன்' டென்சனாயிருக்கான்.

Offline Anu

Re: நீங்கள் கேட்டவை
« Reply #25 on: September 27, 2012, 07:51:05 AM »
லவ் பத்தி எனக்கு தெரியாது. ஆனா இவன் அப்படி மாட்டிக்கிட்டான். பாவம். என்ன செய்ய?
 அப்புறம் அக்கா கதயில வர்றது கவிதையே இல்லே.. :-[ . ஆனா இதை யோசிச்சு யோசிச்சு தான் 'அவன்' டென்சனாயிருக்கான்.
"மணியே
தனியே
இனியே வா
என் கனியே

முன்பனியே
உன்
விரல்நுனியே
என்னை
விட்டுவிட்டான்
சனியே"

 :o idhu kavithai illaiya..
naan kathaikum unmai kaathalukum oppittu sonen gotham.


Offline Gotham

Re: நீங்கள் கேட்டவை
« Reply #26 on: September 27, 2012, 10:10:23 AM »
Itha kavithainu ninga nenachaa kavithai.. :)


Aana ithu verum vaarththai korvaiye thavira.. kavithainu sollikara thaguthi antha vaarthaigalukku ille.!

Offline Gotham

Re: நீங்கள் கேட்டவை
« Reply #27 on: September 27, 2012, 10:26:43 AM »

பாகம் 6:

படித்து முடித்ததும் அந்த கோப்பை மூடினார் அவர். பெரிய வார இதழ் ஆசிரியர்.

"ம்ம். சொல்லுங்க மதி. என்ன பண்றீங்க?"

எதிரில் பவ்யமாய் நான். என்னருகில் அவரின் நெருங்கிய நண்பர். இவரின் மூலமாக தான் ஆசிரியரை சந்திக்க முடிந்தது. நாங்கள் இருந்தது வேளச்சேரி பைபாஸ் ரோட்டில் இருந்த காஃபி டேயில். அந்த வெயிலில் குளிரூட்டப்பட்ட அறை இதமாய் இருந்தது. ஆனாலும் எனக்கு வியர்த்தது.

'கடவுளே நல்லபடியாக முடியவேண்டுமே'

"நான் ஒரு எம்.என்.சில வேலை பாக்குறேன். இந்த கத..." இழுத்தேன்.

"நல்ல வேலை தானே பாக்குறீங்க." சிரித்தார். இவர் கேட்ட கேள்விக்கே பதில் சொல்ல மாட்டேங்கறாரே?

"ஆமா சார். நல்ல வேலை தான். இத பத்தி என்ன சார் நெனக்கிறீங்க?" எங்கள் இருவருக்கும் பொதுவான நண்பர் அமைதியாக உட்கார்ந்திருந்தார். காஃபி லத்தே சூடே இல்லாமல் இருந்தது.

"உங்களுக்கு கத எழுத வருது. ஆனாலும் நிறைய புரியல. இவன் எதுக்கு அவள பாக்கணும்னு துடிக்கிறான். அவ சொன்னத அப்படியே கேக்குறான்."

"காதல் சார். அது தான் அவன அப்படி பாடாபடுத்துது. ஏன் அது புரியற மாதிரி இல்லியா?"

"ம்ஹூம். அவ்ளோ இம்ரஸிவா இல்லே." மனம் உதற ஆரம்பித்தது.

"மிஸ்டர். மதி ஃப்ராங்க்கா சொல்லணும்னா என் நண்பர் வற்புறுத்தி தான் இங்கேயே வந்தேன். எனக்கு க்ளோஸ் ப்ரண்ட். ஆனாலும் என் பிசினஸில் தலையிட மாட்டார். பட் எனக்கு உங்க கதை அவ்வளவா புடிபடல். இத எப்படி எங்க மேகஜின்ல பப்ளிஷ் பண்றது. இத டச்சப் பண்ணனும்னா நானே ஒரு கதை எழுதணும்." அழுத்தம் திருத்தமாக சொன்னார் அவர். எனக்கு அழுகையே வந்துவிடும் போலிருந்தது. என்னை கூட்டி வந்தவரை பார்த்தேன். பரிதாபமாக என்னை பார்த்தார்.

"எந்த இடத்துல பிரச்சனைன்னு சொன்னீங்கன்னா சரி பண்ணிடறேன் சார்"

அவர் முகம் மாற ஆரம்பித்தது. "தன்மையா சொன்னா புரிஞ்சிக்க மாட்டீங்களா. நீங்க வெறுமனே அவன் அவள்னு எழுதறீங்க. படிக்கற ஆடியன்ஸுக்கு பேர் இருந்தா தான் அதுக்கு ஒரு முகம் வச்சு பாப்பாங்க. அதுவுமில்லாம பழைய படம் மாதிரி பாக்காமலேயே காதல் வேற. எப்பவோ காதல் கோட்டை எடுத்துட்டான். நடுவுல அவ கவித பிடிக்கும்னாளாம். இவன் தமிழ் படிச்சனாம்.

இப்பல்லாம் யார் தமிழ் படிக்கறா. எல்லாரும் கான்வென்ட்ல படிக்கறாங்க. அதுவுமில்லாம இதுல ஜனரஞ்சகமா வார்த்தைகளே கம்மியா இருக்கு. மாத்த ஆரம்பிச்சா உயிர் போயிடும். கவிதை..ல்லாம் ஒரு கம்மியான செக்ட் மக்கள் மட்டும் தான் படிக்கறாங்க. இந்த மாதிரி கரு அவங்களுக்கு வேணா புடிக்கலாம். இது கோடிக்கணக்கான காப்பி விக்கற மேகஜின். உங்க கதையால எங்களுக்கு ஆட்ஸ் வரணும்ல"

வியாபாரம் பேச ஆரம்பித்துவிட்டார் அவர். மனம் சுக்குநூறாய் உடைய ஆரம்பித்திருந்தது.

"சரி.. தெரியாம தான் கேக்கறேன். எதுக்கு நீங்கள் கேட்டவைன்னு பேர் வச்சீங்க?"

"அது வந்து.. மக்களை ஈர்க்கற தலைப்புன்னு"

"சுத்த தமிழ்ல இருந்தா எவன் சார் படிப்பான்? காஃபிடே கப்பில்ஸ், டெல்லியில் பேஷன்ஷோ.. இப்படி இருந்தா தலைப்ப பாக்கறவன் உள்ள வந்து படிப்பான். தலைப்புக்கும் கதைக்கும் சம்பந்தமேயில்லை. அதுவுமில்லாம கடைசியில என்ன எழவு முடிவுன்னே தெரியல. அவன் ஏதோ வெளியில் போறான். அது இதுனு இருக்கு. காதல் கதையில ஒன்னு அவங்க சேரணும். இல்லே பிரியணும். இது என்ன ரெண்டுங்கெட்டானா நிக்குது. அவனுக்கு உண்மையிலேயே பைத்தியம் புடிச்சிடுச்சா என்ன?"

"இல்லே சார். அது அவன் தலை வெடிக்கற மாதிரி இருக்கு. அப்புறம் தெளிஞ்சு நல்ல கவித எழுதி அவள பாக்கறானா இல்லே காதல்ல தோக்கறானான்னு படிக்கறவங்க விருப்பத்திற்கே விட்டுவிட்டேன்."

"புல்ஷிட்.." என் கதைக்கான மொத்தவிமர்சனமும் அந்த ஒத்த வார்த்தையில் அடங்கியிருந்தது. என்னை கூட்டி வந்தவரை பார்த்தேன். அடிபட்ட தெருநாயை பார்ப்பது போலிருந்தது பரிதாபமாக இருந்தது அவர் பார்வை. ஏதும் செய்ய வழியின்றி இருந்தார். ஆசிரியர் அவரிடம் திரும்பி,

"நீங்க கூப்பிட்டீங்கன்னு தான் வந்தேன். சாரி. ப்ரண்ட்ஷிப் வேற தொழில் வேற. இனிமே இந்த மாதிரி விஷயங்கள என்கரேஜ் பண்ணாதீங்க."

பின் என்னிடம் திரும்பி,
"மதி. கதை எழுத முயற்சி பண்றீங்க. ஆனா இன்னும் முயற்சி வேணும். ஹார்ஷா பேசறேனு தப்பா நெனக்காதீங்க. ஆஃப்டரால் இது பிஸினஸ். அடுத்து ஏதாச்சும் எழுதனீங்கன்னா சுருக்கம் மட்டும் என் மெயில் ஐடிக்கு அனுப்புங்க. நல்லா இருந்தா கூப்பிட்டு அனுப்பறேன்."

பிஸினஸ்கார்டை கொடுத்தார். 'இது எனக்காக அல்ல. அவர் நண்பருக்காக என நல்லாவே புரிந்தது.' தலையாட்டிவிட்டு இருவரிடமும் விடைபெற்றுக் கொண்டு திரும்பினேன். மனம் முழுக்க விரவிக் கிடந்த சோர்வு. அவள் சொன்னது இன்னமும் காதில் கேட்டுக் கொண்டிருந்தது.

"கண்டிப்பா நீங்க பெரிய ஆளா வருவீங்க. வரணும். ஒரு நல்ல கதாசிரியரா ஏதாச்சும் புத்தகத்துல உங்க கதையெல்லாம் பிரசுரமாகணும். என்னிக்கு பிரசுரமாகுதோ அன்னிக்கு நான் உங்களை பாக்க நேரிலே வருவேன். அதுவரை இப்படி தான் நம் பேச்செல்லாம்". தெளிவாய் சொல்லிவிட்டாள். மாட்டிக்கொண்டது நான் தான். நன்றாக கதை எழுதத் தெரியுமென்று வீண்ஜம்பத்தால் வந்த வினை. அவளுக்காக தான் கதையின் தலைப்பையும் 'நீ கேட்டது' என பொருள்படும்படி "நீங்கள் கேட்டவை"னு வைத்திருந்தேன்.

'இனி எப்போது பிரசுரமாகி எப்போது பார்ப்பது. அவள் உண்மையான பேர் கூட தெரியாதே.'

வீட்டிற்குள் நுழைந்ததும் பரபரப்பாக கணினி முன் வந்தமர்ந்தேன் நான். மதி. கணினியில் சாட் விண்டோ ஒளிர்ந்தது.

-சுபம்-

Offline ஸ்ருதி

  • Classic Member
  • *
  • Posts: 5778
  • Total likes: 117
  • Total likes: 117
  • Karma: +0/-0
  • நேசித்த இதயத்தில்...சுவாசிக்க வைத்த இதயம் நீ.
Re: நீங்கள் கேட்டவை
« Reply #28 on: September 27, 2012, 07:19:03 PM »
"மணியே
தனியே
இனியே வா
என் கனியே

முன்பனியே
உன்
விரல்நுனியே
என்னை
விட்டுவிட்டான்
சனியே"


இது நல்லா இருக்கே :த

கதை முடிவு சூப்பர் :D ... நான் இன்னும் கொஞ்சம் போகும் என்று நினைத்தேன்...


"கண்டிப்பா நீங்க பெரிய ஆளா வருவீங்க. வரணும். ஒரு நல்ல கதாசிரியரா ஏதாச்சும் புத்தகத்துல உங்க கதையெல்லாம் பிரசுரமாகணும். என்னிக்கு பிரசுரமாகுதோ அன்னிக்கு நான் உங்களை பாக்க நேரிலே வருவேன். அதுவரை இப்படி தான் நம் பேச்செல்லாம்". தெளிவாய் சொல்லிவிட்டாள். மாட்டிக்கொண்டது நான் தான். நன்றாக கதை எழுதத் தெரியுமென்று வீண்ஜம்பத்தால் வந்த வினை. அவளுக்காக தான் கதையின் தலைப்பையும் 'நீ கேட்டது' என பொருள்படும்படி "நீங்கள் கேட்டவை"னு வைத்திருந்தேன்.


இது நிசமா இல்லை கற்பனையா?? ??? ???

நன்றிகள்






உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும்

Offline Gotham

Re: நீங்கள் கேட்டவை
« Reply #29 on: September 27, 2012, 07:30:07 PM »
ஹாஹா நிஜம்ங்கற அளவுக்கு என் கதை இருக்கா???

ஒருவேளை இடப்பெயர் பாத்து முடிவுக்கு வந்துட்டீங்களோ?

இன்னும் ஒரு மேட்டர்.. கதை இன்னும் ம்முடியல.. :D